வெகுசன இலக்கியம் பற்றி…..

எழுத்தாளர் அ.யேசுராசாஎழுத்தாளர் யேசுராசா அவர்கள் அண்மையில் தனது முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’, ‘பொன்விலங்கு’, போன்ற நாவல்களை எனது பதின்ம வயதில் விருப்புடன் வாசித்திருக்கிறேன். ஒழுக்க விழுமியங்களையும் இலட்சிய நோக்குகளையும் எம்மனதில் விதைத்தவை அவை (மு. வரதராசனின் படைப்புகளும் அவ்வாறான வையே!). தற்போது எமது விமர்சகர் பலர், இவர்களது படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இன்றைய நிலையில் அவை இலக்கியமாக என்னைக் கவருமா என்பதை, மறுபடி வாசித்த பின்னர்தான் கூற முடியும்.”

இதற்கான எனது எதிர்வினை: நிச்சயமாகக் கவராது. ஆனால் அவை உங்கள் வாசிப்பின் ஒரு காலகட்டத்தை நினைவூட்டுவதால் நிச்சயம் அவற்றைக்கையிலெடுத்ததும் மகிழ்ச்சியைத்தரும். இன்றைய நிலையில் அவை இலக்கியமா என்று பார்க்கக்கூடாது. அன்றைய நிலையில் ,உங்களது இளமைபருவத்தில், அவை உங்களைக் கவர்ந்ததா என்பதுதான் முக்கியம்.ஏனென்றால் இன்று நீங்கள் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் அன்று நீங்கள் குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற வெகுசனப்படைப்புகளை வாசித்து, வாசிப்பதில் ஆர்வம்கொண்டு வளர்ந்ததால்தான். அவையெல்லாம் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத படிக்கட்டுகள்.

Continue Reading →

பத்து நாட்கள் பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (5 ) – அகிர குரோசாவாவின் (Akira kurosawa) ‘டேர்சு உசாலா’ (Dersu Uzala – 1975)

இயக்குநர் அகிரா குரோசாவாஜப்பானியத் திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்  ‘டேர்சு உசாலா’ திரைப்படம் இவ்வரிசையில் என் அடுத்த  தேர்வு. ‘டேர்சு உசாலா’ (Dersu Uzala) ருஷ்யாவின் தூரகிழக்குபகுதியான பனி சூழ்ந்த சைபீரிய வனப்பகுதியில் ஆய்வுப்பணிகளைச் செய்த ஆய்வாளர் விளாமிடீர் ஆர்செனியேவ் (Vladimir Arsenyev) தன் அனுபவங்களைப் பயண நூல்களாக வெளியிட்டுள்ளார். அவ்விதமான ஆய்வுப் பயணங்களிரண்டை மூலக்கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமே ‘டேர்சு உசாலா’. திரைப்படம் இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதற்பகுதி முதற்பயணத்தில் அவருக்கு அறிமுகமாகிப் பயணத்தின் முடிவில் மீண்டும் தன் வனப்பகுதிக்கே திரும்பும் அப்பகுதி வேட்டக்காரனான பூர்வீக மனிதன் ஒருவனைப் பற்றி விபரிக்கின்றது. அவனது பெயர்தான் டேர்சு உசாலா. திரைக்கதை ஆய்வாளரின் பயணங்கள் பற்றிய நனவிடை தோய்தலாக ஆரம்பமாகின்றது.

இரண்டாம் பகுதி அடுத்த பயணத்தை மையமாகக்கொண்டது. ஏழு வருடங்கள் கழிந்து மீண்டும் அவர் அப்பகுதிக்கு நில அளவை ஆய்வுக்காகச் தன் குழுவினருடன் செல்கையில் மீண்டும் அம்மனிதன் எதிர்ப்படுகின்றான். பயணத்தின் முடிவில் டேர்சு உசாலா பார்வைக்குறைபாட்டினை உணர்கின்றான். அக்குறைபாட்டுடன் தனித்து அவ்வனப்பகுதிக்குள் தன்னால் தப்பிப்பிழைக்க முடியாதென்று உணர்கின்றான். அதன் காரணமாக இம்முறை அப்பயண முடிவில் அவன் ஆர்னிசேவுடன் அவருடைய இல்லத்துக்குத் திரும்பச் சம்மதிக்கின்றான். இவ்விதம் திரும்பும் அவன் நகரம் தன் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்புடையதல்ல என்பதை உணர்கின்றான். இதற்கிடையில் அவன் ஆர்செனியேவின் குடும்பத்துடனும் குறிப்பாக அவரின் பால்ய வயதுப்பையனுடனும் நன்கு பழகி விடுகின்றான். இறுதியில் நகர் அவனது வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையென்பதால் காடு நோக்கித் திரும்புகின்றான். திரும்பும் வழியில் அவனுக்கு என்ன நடக்கின்றது? என்பதை நாவல் விபரிக்கின்றது. அதுதான் நாவலின் கிளைமாக்ஸ்.

Continue Reading →

‘கழுகும் குழந்தையும்’ ஓவியமும், புகைப்படக் கலையும் பற்றி…

கழுகும் குழந்தையும்அண்மையில் எழுத்தாளரும், ஓவிய, காணொளிக் கலைஞருமான தமயந்தியின் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா எழுதியிருந்த பதிவொன்றில் காணப்பட்ட வசனனங்கள்  என் கவனத்தை ஈர்த்தன. அது இதுதான்:  “ஒரு புகைப்படம் என்பது ஒரு புகைப்படக் காரனுக்கு தொழில் அல்ல. அது அவனது அரசியலைப் பேசுபவை” உண்மையில் நான் அறிந்த புகைப்படக் கலைஞர்கள் பலர் சிறந்த புகைப்படக் கலைஞர்கள். அவர்களில் பலருக்குப் புகைப்படம் என்பது தொழில். இது ஓவியர்களுக்கும் பொருந்தும்,  இவர்களெல்லாரும் தம் கலையை விற்றவர்கள்; விற்பவர்கள்.  இவர்கள் எல்லாரும் சிறந்த புகைப்படக் கலைஞர்கள்; ஓவியர்கள்.  இந்த வசனங்களைப்பார்த்ததும் முதலில் என் நினைவுக்கு வந்தவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த , வெள்ளையினத்தவரான கெவின் கார்ட்டர். உலகின் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர். உலகின் பல பகுதிகளிலும், தென்னாபிரிக்காவிலும் நடந்த மானுட துயரம் மிகுந்த மோதல்கள் பலவற்றின் மானுட துயரங்களைப் புகைப்படங்களாக்கியவர்.

Continue Reading →

கொரொனாக் கால முகநூற் குறிப்புகள் !

மொன்ரியால் மைக்கல்மொன்ரியால் மைக்கல்பதிவுகள் இணைய இதழ், திண்ணை இணைய இதழ் போன்றவை ஒரு காலகட்டத்தில் (முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் தோன்றியிராத காலத்தில், வலைப்பூக்கள் உருவாகாத காலத்தில்) உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பற்றும் முக்கிய களங்களாகவிருந்தன. அக்காலகட்டத்தில் இலக்கிய ஆளுமைகள் பலரின் தொடர்புகள் ஏற்பட்டன. மொன்ரியால் மைக்கல் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் ஜீவன் கந்தையா, சதுக்கபூதம் என்னும் புனைபெயர்களில் வந்து விவாதங்களில் பங்கு பற்றியிருக்கின்றார். பதிவுகள் இதழில் பல படைப்புகளை எழுதியுள்ளார். ‘ஏழாவது சொர்க்கம்’ என்றொரு நாவல் எழுதியுள்ளார். 

தற்போது மொன்ரியாலில் வயோதிபர்களுக்கான முதியோர் இல்லமொன்றில் தலைமைச் சமையற்காரராக (Chef)வேலை பார்க்கின்றார். கொரோனாவின் தாக்கத்தால் உலகே அலறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் இவரைப்போன்ற முன்னிலைப்பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது. முதலில் அதற்காக இவர்களுக்கு எம் நன்றியைத்தெரிவிப்போம். அவர் தற்போது தனது கொரோனா அனுபவங்களைச் சிறு சிறு முகநூற் குறிப்புகளாகப்  பதிவு செய்து வருகின்றார். அவை வெறு ம் குறிப்புகள் மட்டுமல்ல. இலக்கியத்தரமான குறிப்புகளும் கூட. அக்குறிப்புகள் கொரொனா மானுடர் மேல் ஏற்படுத்தும் உளவியல்ரீதியிலான தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதால் மேலும் முக்கியத்துவம் மிக்கவையாகவுள்ளன. அவற்றில் அண்மையில் அவர் எழுதிய குறிப்புகளை இங்கு தொகுத்துத் தருகின்றேன். அவை ஒரு  குறிப்பிட்ட கால மானுட அனுபவங்களாக இன்னுமொரு காலத்தில் விளங்கும் என்பதாலும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


உயில்(1): பெரு மழை.

இந்த இடர்க்கால வாழ்க்கையை நான் எழுத விரும்புகிறேன் . நான் வேலை செய்யும் geriatric centerஇல் உண்மையான இடர் வெளிவரமுடியாது. ஆங்கு, 99வீதமாமான வயோதிபகர்கள் யூதர்கள். நிர்வாகம் ஏதோவொரு காரணத்திற்காக எல்லா உண்மைகளையும் மறைக்கிறார்கள். இன்று நான் பகிர்ந்தளித்த 564 சாப்பாடுகளுக்குள், முப்பத்தியாறு சாப்பாடுகள் தனிமைப்படுத்தியவை. அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதாக நம்புகிறேன்.

Continue Reading →

யாதும் ஊரே !யாவரும் கேளிர்!

முள்ளிவாய்க்கால் நினைவாக...

முள்ளிவாய்க்காலின் துயரம்

மடிந்தவர்தம் துயரம்

மட்டுமன்று. இம்

மண்ணின் துயரம்!

மணிபல்லவத்தின் துயரம்.

மாநிலத்தின் துயரம்.

மானுடரின் துயரம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: பவானியின் ‘சில கணங்கள்’ கவிதைத் தொகுப்புப் பற்றி…

பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் சிந்தனைகள் பரிணமிக்கின்றன. கருத்தின் மீது ஆத்மா போய் உட்காந்து கொண்டு மனிதனின் மனதை விசாலிக்கும் ஒரு அழகியற்கலையாகக் கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. கவிதை என்பது எந்த வகைமைக்குள்ளும் அடங்காத உணர்வாக எண்ணுகின்றேன். கவிதையை வாழ்க்கையின் அனுபவங்கள் என்று வகுத்துக்கொண்டாலும் மனம் நிறைய சமூகத்தின்மீது பேரன்பு கொண்டவர்களால்தான் கவிதைகளைப் படைத்துவிட முடியும் என்று கருதுகின்றேன். கவிதை ஒரு பயணம். அந்த வகையில் பவானியின் ‘சில கணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கால ஓட்டத்தில் கிறுக்கி வைத்திருந்ததை தொகுப்பாக்கியிருக்கிறேன்’ என்கிறார் பவானி. ஈழத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பவானி நெதர்லாந்துக்கு வந்த பின்னர்; டச்சு மொழியிலும் ஆளுமை பெற்று மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வருபவர். ஈழத்தின் பிரபல கவிஞர் சேரனின் கவிதைகள் சிலவற்றை தெரிந்தெடுத்து ‘கடலின் கதை’ , ‘அன்பு திகட்டாது’ போன்ற நூல்களை டச்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.

‘சில கணங்கள்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பில் எண்பது கவிதைகள் எண்பத்தியேழு பக்கங்களில் அடக்கமான அழகான நூலாக வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதைக்கும் பவானி தான் எண்ணுவது போன்ற புகைப்படங்களுடன் இணைத்திருப்பது வாசிக்கத்தூண்டும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

Continue Reading →

பத்து நாட்களில் பத்துப் படங்கள் (4) – பாலு மகேந்திராவின் ‘வீடு’

இயக்குநர் பாலு மகேந்திராதமிழ்த்திரையுலகில் சத்யஜித் ரே போன்று யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணிப்பார்த்தால் முழுமையாக அவரைப்போன்றில்லாவிட்டாலும், ஒரளுக்காவது அவரைப்போன்ற ஒருவர் இருக்கின்றார். யார் அவர் என்று நீங்கள் கேட்கலாம். அவரும் சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். சத்யஜித் ரே இயக்கம், திரைக்கதை, கதை, இசை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் சில படங்களுக்கு இயக்கத்துடன் இசையினையும் வழங்கியிருக்கின்றார். இவரும் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். இயக்கம், ஓளிப்பதிவு, ‘எடிட்டிங்’, திரைக்கதை, கதை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர்தான்.


இருவருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளுள்ளன. இருவருமே எழுத்தாளர்கள். அது தவிர இருவருமே ‘பைசிக்கிள் தீவ்’ திரைப்படத்தைப்பார்த்து விட்டு , அதன் தூண்டுதலால் தரமான சினிமாவை எடுக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்கள். இப்பொழுது உங்களுக்கு அவர் யாரென்பது புரிந்திருக்கும். அவர்தான் பாலு மகேந்திரா. ஏன் பாலு மகேந்திராவை நூற்றுக்கு நூறு வீதம் சத்யஜித் ரேயுடன் ஒப்பிட முடியாது என்று கேட்கலாம். அதற்குக் காரணம்: ரே ஒருபோதுமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுத்தவரல்லர். ஆனால் பாலு மகேந்திரா விட்டுக்கொடுத்தவர். அதனால் அவரது திரைப்படங்கள் பல ரேயின் படங்களைப்போன்று உன்னத நிலையினை அடையவில்லை. அவரே இதனை உணர்ந்திருக்கின்றார். அதனால்தான் அவர் தான் எடுத்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்கள் வீடு மற்றும் சந்தியாராகம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார். இவையிரண்டிலுமே குறைந்தளவு விட்டுக்கொடுப்புகள் செய்ததாகவும் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

Continue Reading →

பத்து நாட்கள் – பத்து திரைப்படங்கள் திரைப்படம் -3 – சத்யஜித் ரேயின் ‘அபுர் சன்சர்’ , 1959, (The World of Apu – அபுவின் உலகம்)

இயக்குநர் சத்யஜித் ராய்திரைப்படம் – 3- சத்யஜித் ரேயின் ‘அபுர் சன்சர்’ , 1959, (The World of Apu – அபுவின் உலகம்)

வங்கநாவலாசிரியர் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் நாவலை வைத்து மூன்று திரைப்படங்கள் எடுத்துள்ளார் இயக்குநர் சத்யஜித் ராய். முன்றுமே அபு என்னும் சிறுவனின் வாழ்க்கையை வளர்ந்து பெரியவனாகி அவன் எதிர்கொள்ளும் மானுட வாழ்வுச் சவால்களை விபரிப்பது. முதலாவது பதேர் பாஞ்சாலி. மிகுந்த புகழை அவருக்குப் பெற்றுத்தந்தது. அடுத்தது அபராஜிதா. மூன்றாவது அபுர் சன்சர் ( அப்புவின் உலகம் – The World of Apu ). இத்திரைப்படம் இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதினைப்பெற்றுள்ளதுடன், சர்வதேச நாடுகளின் விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தி டைம்ஸ் சஞ்சிகை அபுவின் வாழ்வை விபரிக்கும் இம்மூன்று திரைப்படங்களையும் உலகளாவிய மிகச்சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் சேர்த்துள்ளதும் மேலும் பல ஊடகங்களும் இவ்வாறே இப்படத்துக்குக் புகழ்மாலை சூடியுள்ளதும் குறிப்பிடத்தக்கவை. தவிர பல மேலைத்தேயத்திரைப்படங்கள் சிலவற்றில் இதன் தாக்கமிருப்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான் பார்த்த சத்யஜித் ராயின் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எதுவென்றால் (அனைத்துமே பிடித்தவை என்றாலும்) இதனையே குறிப்பிடுவேன். .வேலையில்லாப்பட்டதாரியான இளைஞன் அபுவின் கல்கத்தா நகர வாழ்க்கையை படத்தின் ஆரம்பம் மிகவும் தத்ரூபமாக விபரிக்கின்றது. எனக்கு கொழும்பு, நியூயார்க் என்று மாநகர்களில் வாழ்ந்த இளம்பருவத்து நகர் வாழ்வினை நினைவூட்டியது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய புகழ்பெற்ற நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் நாயகனின் மாஸ்கோ நகர வாழ்க்கையை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எனக்கு இப்படத்தைப் பார்க்கும்போது அந்நாவலின் நினைவுகள் தோன்றின.

Continue Reading →

அறிமுகம்: கலைஞர் டிலிப்குமாரும், ‘தாய்வீடு’ பத்திரிகையும் பற்றி….

திலிப்குமார்பொதுவாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து நூற்றுக்கணக்கில் இலவசப்பத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றின் அடிப்படை நோக்கம் பணம் சம்பாதிப்பது. அதனையே அடிப்படையாகக்கொண்டு வெளியாவதால், எனக்குத்தெரிந்து கொள்கைகப்பிடிப்புள்ள எழுத்தாளர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சிலர் கூட இவ்விதப்பத்திரிகைகளை வெளியிடத்தொடங்கியதும் வியாபாரிகளாக உருமாறியதைக் கண்டிருக்கின்றேன். இவ்விதமான இலவசப்பத்திரிகைகளில் எனக்குத்தெரிந்து ஒரு பத்திரிகை மட்டுமே இலவசப்பத்திரிகையாக வெளிவரும் அதே சமயம் தரமான சமூக, கலை, இலக்கியப் பத்திரிகையாகவும் வெளியாகின்றது. அதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது கொள்கைப்பிடிப்புள்ள கலைஞர் , எழுத்தாளர் ஒருவரிடமிருந்து அப்பத்திரிகை வெளியாவதுதான். இவரை நான் முதலில் அறிந்து கொண்டது நாடக நடிகராக. டொராண்டோ, கனடாவிலுள்ள தேடகம் போன்ற அமைப்புகளின் நாடகங்களில் நடித்த , நடிப்புத்திறமையுள்ள நடிகர்களிலொருவராகவே அறிந்திருக்கின்றேன். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒருவராகவே அறிந்திருந்தேன். அவர்தான் தாய்வீடு மாதப்பத்திரிகையின் ஆசிரியரும் , வெளியீட்டாளருமான டிலிப்குமார் ஜெயரட்ணம். ஆரம்பத்தில் எழுத்தாளர் ‘அசை சிவதாசன்’ வீடுவிற்பனை முகவராக உருமாறியபோது வெளியிட்ட ‘வீடு’ பத்திரிகை நின்றுபோனபோது அதனைப்பொறுப்பெடுத்து “தாய்’வீடு'” மாதப்பத்திரிகையாக வெளியிடத்தொடங்கினார். இவரும் எனக்குத்தெரிந்த ஏனைய சிலரைப்போல் பணம் சம்பாதிப்பதையே அடிப்படையாகக் கொண்டு வழி மாறிச் சென்று விடுவாரோ என்று ஆரம்பத்தில் எண்ணியதுண்டு. ஆனால் அவ்விதமில்லாமல் தாய்வீடு பத்திரிகையைத் தரமானதொரு கலை, இலக்கிய, சமூக, அரசியல் பத்திரிகையாகவும் வெளியிட்டுக்கொண்டும், அதே சமயம் அதனையொரு வருமானம் ஈட்டும் சாதனமாகவும் நிலைநிறுத்திக்கொண்டு இன்றுவரை வெளியிட்டு வருகின்றார் டிலிப்குமார்.

Continue Reading →

கவிதை: மரணத்தின் உரையாடல்

வாசிப்போம்

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.

Continue Reading →