தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!

(தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர்.  அன்னாரது 115 ஆண்டு பிறந்த நாள் நினைவாக இக் கட்டுரை வெளியாகிறது)

தந்தை செல்வநாயகம்தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.  இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 3 ஆண்டுகளாக சாத்வீகப் போராட்டம்.  தொடக்கப் புள்ளியில் மீண்டும் வந்து நிற்கிறோம். சாத்வீகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவால் கொண்டு வந்து நிறேவேற்றப்பட்ட 18 ஆம் இலக்கக் குடியுரிமை சட்டம் அதே ஆண்டு நொவெம்பர் மாதம் 15 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்து வாக்களித்தவர். அப்போது தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.  அதன் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார்.  1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,000 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றி பெற்றவர் பொன்னம்பலம். “கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக” என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது.  ஆனால் 1948  இல் அதே அய்க்கிய கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயக்காவோடு அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசினார்.  பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.  அவர்களது வாக்குரிமை பறிபோவதைப் பற்றி அவர் எண்ணிப்பார்க்கவில்லை. தமிழர்களது வாக்குப் பலத்தை சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டி.எஸ. சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது.  ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை.

Continue Reading →

சனவரி 30, 2013: ஊடக அறிக்கை – ஜேர்மன் தலைநகர் பேர்லின் மாநகரில் நடைபெற்ற கலந்துரையாடல்

சனவரி 30, 2013: ஊடக அறிக்கை – ஜேர்மன் தலைநகர் பேர்லின் மாநகரில் நடைபெற்ற கலந்துரையாடல்எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால்  நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான தொடர்ச்சியாக நடைபெறுகின்ற கலந்துரையாடல் ஜேர்மனியின் தலைநகரமான பேர்லின் மாநகரில் கடந்த 26, 27 திகதிகளில் நடைபெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக் கலந்துரையாடல் நவம்பர் 2012 இல் ஆரம்பமானது. இக் கலந்துரையாடல்களில்,  தாயகத்திலிருக்கும் அரசியல் அமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் அமைப்பான தமிழ் சிவில் சமூகம்,  மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களது அமைப்புக்களான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை,  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,  உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.

Continue Reading →

மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !

மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13: பாரதி இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் ”மூன்றாம் மரபு”  இலக்கிய மாநாடு 13; இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; நாள்:  பிரவரி 4, 5 திங்கள் செவ்வாய்; 2 நாட்கள், 4 அரங்குகள், 20 அமர்வுகள் 40 படைப்பாளிகள், 50 ஆய்வுக் கட்டுரைகள்’ தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியக் கவிஞர்கள். மூன்றாம் மரபு- படைப்பு வெளி; மூன்றாம் மரபு- ஊடகத் தடங்கள்; மூன்றாம் மரபு- விவாதக் களம்; மூன்றாம் மரபு- கவிதைச் சிந்தனைகள்; கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள்; நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின் வாசிப்பில் வாழ்வு, தெலுங்கு மலையாளம், கன்னடக் கவிதைகளின் போக்கும் கவிஞர்களின் தடங்களும், கேள்வியும் விவாதமுமாக மாணவர்கள்…..இன்னும் இன்னமுமாக…

Continue Reading →

கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013

கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013க‌விஞ‌ர் திரைப்ப‌ட‌ப்பாட‌லாசிரிய‌ர் நெப்போலிய‌னின் க‌விதை , சிங்க‌ப்பூர் தேசிய‌ க‌லைக‌ள் ம‌ன்ற‌ ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ரும் தி ச‌ப் ஸ்டேஷ‌ன் ‍ ல‌வ் லெட்ட‌ர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இட‌ம் பெற்றுள்ள‌து. காத‌லின் ( ந‌ட்பின் சினேக‌த்தின் ) பிரிவின் வ‌லியின் சுவையைச் சொல்லும் வ‌ரிக‌ளைக் க‌ருப்பொருளாய் கொண்ட‌ சிங்க‌ப்பூரின் 12 க‌விஞ‌ர்க‌ளின் க‌விதைக‌ள் இந்த‌ வ‌ருட‌த் தொகுப்பில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. சீன‌ம், ம‌லாய், ஆங்கில‌ம், த‌மிழ் என‌ நான்கு மொழிக‌ளிலும் அத‌ன் ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புட‌ன் இட‌ம் பெற்றுள்ள‌து . 2010ம் ஆண்டு முத‌ல் ந‌டைபெற்று வ‌ரும் இந்த‌ ப்ராஜெக்ட்ல் ஒவ்வொரு மாத‌மும் புக‌ழ்பெற்ற‌ சிங்க‌ப்பூர் க‌விஞ‌ரும் அவ‌ரின் க‌விதையும் ச‌ப்ஸ்டேஷ‌ன் ல‌வ் லெட்ட‌ர்ஸ் ப்ராஜெக்ட் தொகுப்பில் இட‌ம் பெறுவ‌துட‌ன் , இணைய‌ப் ப‌க்க‌த்திலும் வெளியிட‌ப்ப‌டும். அது ம‌ட்டும‌ன்றி அழ‌கிய‌ ஓவிய‌த்துட‌ன் வ‌ண்ண‌ போஸ்ட் கார்டுக‌ளாக‌ ஆர்மினிய‌ன் சாலையில் அமைந்திருக்கும் ச‌ப் ஸ்டேஷ‌ன் அலுவ‌ல‌க‌த்திலும், சிங்க‌ப்பூரின் பிர‌ப‌ல‌ புத்த‌க‌க் க‌டைக‌ளிலும் பொதும‌க்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். இதுவ‌ரை இந்த‌த் தொகுப்பில் இட‌ம் பெற்றுள்ள‌ மூன்று த‌மிழ் க‌விதைக‌ளில் க‌விஞ‌ர் நெப்போலிய‌னின் க‌விதையும் ஒன்று என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. ம‌ற்ற‌ இர‌ண்டும் சிங்க‌ப்பூரின் பிர‌ப‌ல‌ ந‌வீன‌ எழுத்தாளரும் ப‌டைப்பாள‌ருமான‌ இள‌ங்கோவ‌ன் ம‌ற்றும் த‌மிழ்முர‌சு ஞாயிறு ப‌திப்பின் ஆசிரிய‌ரும் சிங்கையின் முற்போக்கு க‌விஞ‌ருமான‌ ல‌தா அவ‌ர்க‌ளுடைய‌து.

Continue Reading →

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்குக் கண்டனம்!

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்[எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் உடல்ரீதியான குறைபாட்டை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்த தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீனின் அந்த அறிக்கையினை இணையத்தில் வாசிததோம். மதமொன்றினைப் பிரதிநிதிப்படுத்துபவர் மற்றவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்விதமாக இருக்க வேண்டிய ஒருவரிடமிருந்து இவ்விதமாக ஒருவரின் உடல்ரீதியிலான குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி, வன்முறையினைத் தூண்டும் வகையிலான அறிக்கை வெளிவந்திருப்பது துரதிருஷட்டமானது. மனிதரின் பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களைக் கொண்ட மண்ணில் வாழ்ந்துகொண்டு, ஒருவரின் கருத்து தனக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக இவ்விதம் கீழத்தரமாக அறிக்கை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. தர்க்கத்தை தர்க்கரீதியில் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. இது பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை  மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறிக்கை ஆகியன ஒரு பதிவுக்காக  இங்கு மீள்பிரசுரமாகின்றன.  – பதிவுகள் –

Continue Reading →

சிகாகோவில் கிறித்தவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

சிகாகோவில்கிறித்தவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா!“ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விட‌லாம். ஆனால் அவருள் உள்ள  நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது.” வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் திருப்பலியுடன் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சன. 20ம்தேதி 2013 அன்று குழுமியபோது மேற் குறிப்பிட்ட வாசகங்கள் சாலப் பொருந்துவ‌தாக‌ இருந்த‌து. தமிழ் நாட்டிலிருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் இருக்கிறோம். ஆனால் தமிழும் செழுமையான நமது மரபுகளும் பண்பாடும் நாங்கள் அமெரிக்காவிலிருந்தாலும் நாங்கள் யார் என்ற அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளன. நமது தமிழ் பாரம்பரியத்தையும் கத்தோலிக்கர் என்ற நம்பிக்கையையும் பொங்கல் திருப்பலியோடு கொண்டாட ஒரே கடவுளின் தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் சேர்ந்து வந்தோம். எங்களின் ஆன்ம வழிகாட்டியும் தலைவருமாக உள்ள அருட்திரு. பெஞ்சமின் சின்னப்பன் எங்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.

Continue Reading →

எமிலி ஸோலாவின் ‘நானா’!

அத்தியாயம் ஒன்று: முதலிரவு!

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.  எமிலிசோலாவின் நாவலான ‘நானா’வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’ சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் ‘முதலிரவு’ என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் ‘போலிஸ்’ என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் ஒரு கடிதம் எழுதியிருகின்றார். ‘நானா’ பற்றி வெளிவந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

Continue Reading →

காது மந்தமாதலென்னும் நிசப்த நோய்….

ஆரவாரத்துடன் உடலுக்கு வேதனையுடன் வரும் நோய்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஏனெனில் வேதனையைத் தாங்க முடியாத நோயாளி உடனடியாகவே மருத்துவரை நாடுவார். வேதனைக்கான அடிப்படை நோயை மருத்துவர் துரிதாக இனம் காணுவார். குணமாக்குவது சுலபம். ஆனால் உடலுக்கு வேதனை கொடுக்காது அசுமிசமின்றி வரும் நோய்களைப் பற்றி நோயாளிகள் அக்கறை எடுப்பதில்லை. நோய் படிப்படியாக முற்றி, பிரச்சனை பூதாகரமாகும் நேரத்தில்தான் மருத்துவரை நாடுவார்கள். காலம் கடந்ததால் மருத்துவத்தின் மூலம் பூரணை பலனை பெறுவது சிக்கலாகியிருக்கும்.  அப்படியான நோய்களில் ஒன்றுதான் காது மந்தமாதல். வயசு போனால் காது மந்தமாகும்தானே எனக் கிணடலடித்து அசட்டை பண்ணாதீர்கள். - 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -ஆரவாரத்துடன் உடலுக்கு வேதனையுடன் வரும் நோய்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஏனெனில் வேதனையைத் தாங்க முடியாத நோயாளி உடனடியாகவே மருத்துவரை நாடுவார். வேதனைக்கான அடிப்படை நோயை மருத்துவர் துரிதாக இனம் காணுவார். குணமாக்குவது சுலபம். ஆனால் உடலுக்கு வேதனை கொடுக்காது அசுமிசமின்றி வரும் நோய்களைப் பற்றி நோயாளிகள் அக்கறை எடுப்பதில்லை. நோய் படிப்படியாக முற்றி, பிரச்சனை பூதாகரமாகும் நேரத்தில்தான் மருத்துவரை நாடுவார்கள். காலம் கடந்ததால் மருத்துவத்தின் மூலம் பூரணை பலனை பெறுவது சிக்கலாகியிருக்கும்.  அப்படியான நோய்களில் ஒன்றுதான் காது மந்தமாதல். வயசு போனால் காது மந்தமாகும்தானே எனக் கிணடலடித்து அசட்டை பண்ணாதீர்கள். அந்த வரிசையில் நிற்பவர்களில் நீங்களும் ஒருவராயிருக்கலாம். ஏனெனில் காது மந்தமாவதது மூப்படைவதால் மட்டுமல்ல எந்த வயதிலும் நேரலாம். காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வயதாவது முக்கிய காரணம் என்பதை அறிவோம். அத்துடன் பரம்பரை அம்சம், ஒலிகள், வைரஸ் தொற்று நோய்கள், ஏன் பல மருந்துகளும் கூடத்தான்.  ஆனால் அண்மைகாலங்களில் கவனத்தை ஈர்த்திருப்பது நீரிழிவு நோயாளிகளின் காது மந்தமாவது எனலாம்.

Continue Reading →

(1) சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் கையில் அகப்பட்டது. செல்லப்பா என்ற பெயரும் எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லை. அதில் சிறுகதைகள் உண்டு படிக்க வேண்டும் என்றும் அதை நான் கையிலெடுக்கவில்லை. எதாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தால் படிக்கத் தொடங்கிவிடும் ஆர்வமும் சுபாவமும் ஐந்தாறு வருடங்களாகவே இருந்து வந்தது. அனேகமாக அது தான் நான் படிக்கும் முதல் சிறு கதைத் தொகுப்பாக இருக்க வேண்டும். அதில் எனக்கு இப்போது நினைவில் இருப்பது ஒரே ஒரு கதை தான்.  ஒரு தாசில்தார் அவருடைய மனைவி, பின் வீட்டுக்கு வந்து போகும் ஒரு பண்ணையார்.. தாசில்தார் தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. ஏக்கத்தில் என்னென்னவோ வேண்டுதல்கள் பிராயச்சித்தங்கள் பலன் இருக்கவில்லை. இடையே ஒரு ஜோஸ்யர் எதிர்ப்படுகிறார். அவர் சொன்ன தோஷப் பரிகாரம், ”ஒரு ஏழை பிராமணனுக்குக் கோ தானம் ஒன்று செய்தால், தோஷம் நிவர்த்தியாகும், தானம் செய்த பலன் அந்த வருஷ முடிவிற்குள் தெரியும்” என்று சொல்கிறார். வீட்டுக்கு வரும் பண்ணையாரிடம்  தாசில்தார் மனைவி தன் வழக்கமான புலம்பல்களுக்கிடையில் இதையும் சொல்லி தானம் செய்ய ஒரு பசுவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பண்ணையாரும் ஒரு பசுமாட்டை ஒட்டிவந்து தாசில்தார் வீட்டில் கட்டி விடுகிறார். பின் என்ன? பசு தானம் ஏற்க ஒரு ஏழைப் பிராமணனுக்கும் ஏற்பாடு செய்து பசுவும் தானம் செய்யப்பட்டு விடுகிறது. தாசில்தாரும் அவர் மனைவியும் அந்த நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறார்கள். நாட்கள், மாதங்கள் கடந்து ஒரு நாள் பண்ணையார் ஒரு தட்டில் பட்டுப்புடவை வேஷ்டி, பழம் பாக்கு வெத்திலை சகிதம் தாசில்தாரையும் அவர் மனைவியையும் பார்த்து நமஸ்கரித்துச் சொல்கிறார். “ ”ஆசீர்வாதம் செய்யுங்கள். ரொம்ப காலம் கழித்து எனக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது ஆண்டவனோட  அனுக்கிரஹம். இப்பவாவது அவனுக்கு கண் திறந்ததே”

Continue Reading →

Citizenship and Immigration Canada: Historic New Immigration Program to Attract Job Creators to Canada

Citizenship and Immigration Canada: Historic New Immigration Program to Attract Job Creators to CanadaCitizenship and Immigration Canada: Historic New Immigration Program to Attract Job Creators to CanadaToronto, January 24, 2013 — Canada will launch a brand new program on April 1 to recruit innovative immigrant entrepreneurs who will create new jobs and spur economic growth, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced today. “Our new Start-Up Visa will help make Canada the destination of choice for the world’s best and brightest to launch their companies,” said Minister Kenney. “Recruiting dynamic entrepreneurs from around the world will help Canada remain competitive in the global economy.” The Start-Up Visa Program will link immigrant entrepreneurs with private sector organizations in Canada that have experience working with start-ups and who can provide essential resources. The Program is part of a series of transformational changes to Canada’s immigration system that will make it faster, more flexible and focused on Canada’s economic needs. As a way to help these in-demand entrepreneurs fulfil their potential and maximize their impact on the Canadian labour market, they will require the support of a Canadian angel investor group or venture capital fund before they can apply to the Start-Up Visa Program. Initially, Citizenship and Immigration Canada (CIC) will collaborate with two umbrella groups: Canada’s Venture Capital & Private Equity Association (CVCA) and the National Angel Capital Organization (NACO). These groups will identify which members of their associations will be eligible to participate in the Program. CIC is also working with the Canadian Association of Business Incubation to include business incubators in the list of eligible organizations as soon as feasible.

Continue Reading →