கவிதை: வாழ்க்கைன்னா இதுதான்

கவிதை வாசிப்போமா?

தாயாரின் வலியிலே தாரணியில் வீழ்வதும்
தவழ்வதும் வளர்வதும் தானாகி நிமிர்ந்திட
ஓயாது கற்பதும் உழைப்பதும் உயர்வதும்
ஒருத்தியை மணப்பதும் உறவினில் கலப்பதும்
தீயாக இருப்பதும் தேனாகி சுவைப்பதும்
தீராத மோகத்தில் திரிவதும் திடீர்
நோயாகி வீழ்வதும் நொடிக்குள் மறைவதும்
நீதானே! வாழ்வின் நிசமும் இதுதானே..

meiyannadaraj@gmail.com