நூல் மதிப்புரை: இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்புடென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ”விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.

“இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

தமிழ்  ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

வணக்கம் நண்பர்களே…. தமிழ் ஸ்டுடியோவின் ஐந்திணை மிகப் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருகிறது. திரைப்படம் பார்ப்பதையே ஒரு கலையாக மாற்றும் முயற்சியாக ஐந்திணை செயல்படவிருக்கிறது. மேலும் திரைப்படம் சார்ந்து நுணுக்கங்கள், திரைப்படம் இலக்கியம் இரண்டிற்கும் இடையேயான தொடர்பு, வெகுவாகக் குறைந்து வரும் மனித உறவு போன்றவற்றை உங்களுக்கு மீட்டுக் கொடுக்கும் களமாக இந்த ஐந்திணை செயல்படவிருக்கிறது.

Continue Reading →

சிறுகதை: இரண்டு மனமில்லை

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)என்னைக்கும் அப்படிப் பார்த்ததே இல்லை. குனிஞ்ச தலையோடுதான் காலடி வீட்ல படும். நேரா சமையக்கட்டுதான்.அங்கே வச்சிருக்கிற காசைப்பார்த்ததும் இன்னைக்கு என்ன சமைக்கிறதுங்கிறது முடிவாயிடும். மொவத்துல ஒரு அப்பாவிக் களையிருக்கும். சிரிச்ச மொவத்தோடு வீட்டுக்குள் வருவதும் போவதும் நடக்கும். ஒரு அலுப்புமில்லாம சலிப்புமில்லாம  வேலைசெய்யிற ஜீவன்தான் பாக்கியம். எவ்வளவுதான் வருத்தமிருக்கட்டுமே அதை மொவத்தில காட்டுனதேயில்லை. நானும் பாத்ததுமில்ல. முனு வருசமா பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்.

Continue Reading →

சிறுகதை: சிவப்பு விளக்கு எரியும் தெரு

டேசன்(அவுஸ்திரேலியா)“உலகம் சுருஙகிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டை சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு  பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால் எப்பொழுதும் மகாநாடுகள் கருத்தரங்குகள் என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள்நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கி நாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி பொறியிலாளர் சம்பந்தமூர்த்தி. அவரது நாக்குக்கு திருப்தியில்லை.

Continue Reading →

Particles faster than light

Particles faster than light: Revolution or mistake?

By Brian Vastag

Albert Eintein

In science, revolutions take time. Eu­reka moments can stretch into noggin-scratching years. And so, the day after news broke of a possible revolution in physics — particles moving faster than light, violating Einstein’s ultimate speed limit — a scientist leading the European experiment that made the discovery calmly explained it to a standing-room-only crowd at CERN, the giant particle accelerator straddling the Swiss-French border.  The physicist, Dario Auterio, made no sweeping claims. He did not try to explain what the results might mean for the laws of physics, let alone the broader world. After an hour of technical talk, he simply said, “Therefore we present to you today this discrepancy, this anomaly.” But what an anomaly it may be. From 2009 through 2011, the massive OPERA detector buried in a mountain in Gran Sasso, Italy, recorded particles called neutrinos generated at CERN arriving a smidge too soon, faster than light can move in a vacuum. If the finding is confirmed by further experiments, it would throw more than a century of physics into chaos.

Continue Reading →

கிரீஸ் யக்கா எனும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியின் சாத்தியமான ஒரே விளக்கம் இனவாதம் என்பதுதான்

இந்தக் கட்டுரையில் நான் விவாதிக்க விரும்புவது கிரீஸ் யக்கா (பூதம்) எனும் ஆராய்ச்சிக்குரிய நிகழ்ச்சி பார்க்கப்படவேண்டியது கட்டுரையில் நான் விவாதிக்க விரும்புவது கிரீஸ் யக்கா (பூதம்) எனும் ஆராய்ச்சிக்குரிய நிகழ்ச்சி பார்க்கப்படவேண்டியது இனவாதம் எனும் உதாரணத்தின் வகையிலேயே ஆகும். மேலும் சாதாரண சட்டங்களின் குறைவின் காரணமாக ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையிலே இதனைப் பார்க்கக்கூடாது. மற்றும் இந்த கிரீஸ் பூதங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததை, மக்கள் சாதாரணமாக சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள் என்கிற நோக்கில் பார்க்காமல் மாறிவரும் உலகப்புரட்சியின் ஒரு மேற்கோள் என்ற வடிவத்தில் இதனைப் பார்க்க வேண்டும் என்பதனையே. எல்லாவற்றுக்கும் முதலில், நான் சொல்லவேண்டியது இந்த கிரீஸ் பூதங்களைப்பற்றிய பிரதிபலிப்புகளின் ஒரு பகுதிக்கு காரணம் வெறும் மனப்பிராந்தியும் மிகைப்படுத்தலுமே ஆகும், ஆனால் அடிப்படையில் அதில் உண்மையான காரணங்கள் உள்ளன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

Continue Reading →

‘மக்கள் எழுத்தாளர்’ விந்தன் நினைவாக ……

எழுத்தாளர் விந்தன்[எழுத்தாளர் விந்தன் (இயற்பெயர் : கோவிந்தன்) தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாதவர். அவரது ‘பாலும் பாவையும்’ நாவல் வெளிவந்த காலத்தில் முக்கிய கவனத்தினைப் பெற்றது. அவரது  ‘பாலும் பாவையும்’ நாவலினை நான் முதன் முதலில் வாசித்தது என் மாணவப் பருவத்தில். அப்பொழுதுதான் ‘ராணிமுத்து’ என்னும் பெயரில் ஆதித்தனாரின் தினத்தந்தி நிறுவனம் மாதமொரு நாவலென நாடறிந்த எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிட்டு வந்தது. அவ்விதம் வெளியிட்டு வந்த முதல் பத்து அல்லது பன்னிரண்டு நாவல்களை அப்பா வாங்கியிருந்தார் – தமிழகத்திலிருந்து வெளிவரும் வார, மாத சஞ்சிகைகளான ‘விகடன்’, ‘கல்கி’, ‘கலைமகள்’, ‘அம்புலிமாமா’, ‘தினமணிக்கதிர்’, ‘மஞ்சரி’, ‘ராணி’ ஆகியவற்றுடன் ‘தினமணி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற பத்திரிகைகளையும் அவர் வாங்கிக் கொண்டிருந்தார். ‘பொன்மலர்’ , ‘பால்கன்’ போன்ற காமிக்ஸ் சஞ்சிகைகள் அச்சமயத்தில் மாதாமாதம் மிகவும் அழகாக வெளிவந்து கொண்டிருந்தன. அத்துடன் ‘இந்திரஜால் காமிக்ஸ்’ வேறு.  அவற்றையும் எங்களுக்காக அவர் வாங்கித் தந்தார். இவற்றையெல்லாம் நாட்டுச் சூழல் பின்னர் அழித்துவிட்டது. இது தவிர அவர் ஆங்கில நூல்களைக் கொண்ட சிறியதொரு நூலகத்தையும் வைத்திருந்தார். அவற்றில் ‘கிரகாம் கிறீன்’, ‘பி.ஜி.வூட் ஹவுஸ்’, ‘ருட்யார்ட் கிப்ளிங்’, ‘டால்ஸ்டாய்’, ‘இர்விங் ஸ்டோன்’, ‘தோமஸ் ஹார்டி’, ‘சேக்ஸ்பியர்’, டி.எச்.லாரன்ஸ், ‘ஏர்னஸ்ட் ஹெமிங்வே’, ஆர்.கே.நாராயணன் …. எனப் பலரின் நாவல்களும் அடங்கியிருந்தன. ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்த அவர் நன்கு எழுதும் ஆற்றல் மிக்கவராகவிருந்தும் வாசிப்புடன் நின்று விட்டார். அன்றைய காலகட்டத்தில் விகடன், தினமணிக்கதிரில் வெளிவந்த ஜெயகாந்தனின் எழுத்துகளை மிகவும் விரும்பிப் படிப்பார்.  – இவ்விதமாக ஆரம்பத்தில் வெளிவந்த ‘ராணிமுத்து’ நாவல்களிலொன்றுதான் விந்தனின் ‘பாலும் பாவையும்’. அப்பொழுதுதான் முதன் முறையாக விந்தனை நான் அறிந்து கொண்டது. அன்றைய காலகட்டத்தில் ஆரம்பத்தில் வெளியான ராணிமுத்து நாவல்களில் சில இன்னும் ஞாபகத்திலுள்ளன: அறிஞர் அண்ணாவின் ‘பார்வது பி.ஏ’, ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்’, அநுத்தமாவின் ‘கேட்டவரம்’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, மாயாவியின் ‘வாடாமலர்’, கலைஞரின் ‘வெள்ளிக்கிழமை’, அறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’, சி.ஏ.பாலனின் ‘தூக்குமர நிழலில்’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார் கதைகள்’ …  இதனைத் தொடர்ந்து விந்தனை நான் அறிந்து கொண்டது தினமணிக்கதிர் வாயிலாக. தினமணிக் கதிரில் அவர் ‘பாகவதர் கதை’, ‘கிட்டப்பாவின் கதை’ மற்றும் ‘விக்கிரமாதித்தன் கதைகள்’ ஆகிவற்றைத் தொடராக எழுதியிருந்தார். தமிழ் சினிமாத் துறையிலும் கால்பதித்த எழுத்தாள முன்னோடிகளில் விந்தனும் முக்கியமான ஒருவர். விந்தனின் பிறந்த தினம் செப்டெம்பர் 22. இச்சமயத்தில் அவரை ‘பதிவுகள்’ நினைவு கொள்கிறது. அதன் விளைவாக அவ்வப்போது இணையத்தில் வெளியான எழுத்தாளர் விந்தன் பற்றிய கட்டுரைகள் சிலவற்றை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. –  ஆசிரியர், ‘பதிவுகள்’]

Continue Reading →

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்

முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைகவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது.  தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.  இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.

Continue Reading →

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்

முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைகவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது.  தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.  இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.

Continue Reading →

வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை நூல் வெளியீடு

“வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை” என்ற நினைவு நூல் 05.09.2011 அன்று காலை தொண்டைமானாற்றில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. கிருஷ்ணபிள்ளையின் 31 வது நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற…

Continue Reading →