வாசிப்பும், யோசிப்பும் 104 : தகுதரம், தகுந்த தரம், உரிய தரம், த(மிழ்) கு(றியீட்டுத்) தரம் பற்றிச் சில கருத்துகள்….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

திஸ்கி தகுதரம் என்று கூறுகிறோமல்லவா? ஆனால் பலருக்கு இந்தத்தகுதரம் என்பதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லையென்பது வியப்பினை அளிக்கிறது. யூனிகோட், திஸ்கி, அஸ்கி இவையெல்லாமே தகுதரங்கள்தாம். உண்மையில் தகுதரம் என்பதற்கான சரியான விளக்கமாக உரிய தரம் அல்லது தகுந்த தரம் என்று கூறலாம்.ஆங்கிலத்தில் Standardட் என்பதற்கான தமிழ் மொழிபெயர்ப்பாக இதனைக்கருத முடியும். ஆனால் உண்மையில் தகுதரம் என்பது இந்த அர்த்தத்தில்தானா தமிழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டது?

திஸ்கி (TSCII: TSCII  – Tamil Standard Code for Information Interchange. ) என்ற எழுத்துருவினை ஆக்கியவர்கள் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான ‘தமிழ் குறியீட்டுத் தரம்’ என்பதிலுள்ள முதல் இரு சொற்களின் முதன் எழுத்துகளான ‘த’, ‘கு’ ஆகியவற்றை உள்ளடக்கி ‘தகுதரம்’ எனச்சுருக்கி அழைத்ததாகத் தெரிகிறது.

ஆனால் தமிழ் குறியீட்டுத் தரம் என்பதிலிருந்து தகுதரம் வந்ததாக இருப்பினும் தகுந்த தரம் அல்லது உரிய தரம் என்னும் அர்த்தத்தில் பாவிப்பதே மிகவும் பொருத்தமாகத் தெரிகின்றது.

இவ்விதம் அழைப்பதன் மூலம் இதனை அஸ்கி, திஸ்கி, யுனிகோட் ஆகிய தகுதரங்கள் என்று அழைக்கலாம். இல்லாவிடில் திஸ்கி என்னும் எழுத்துருவுக்கு மட்டுமே அழைக்க முடியும்.

தகுதரம் பற்றிப் பலர் போதிய விளக்கமின்றி அறிய முடிந்ததால்தானிந்தப் பதிவு ஒரு தெளிவுக்காக மற்றும் மேலதிகப் புரிதலுக்காக.

Continue Reading →

‘இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை’

– 25.07.2015 அன்று ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற ‘கணினித்தமிழ் வரலாறும், வளர்ச்சியும்’  என்ற  நிகழ்வில் ‘இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிது. சுருக்கமாக மேற்கூறிய விடயங்களை ஆராய்கிறது. நிகழ்வில் நேரம் காரணமாகச்சில விடயங்களை முழுமையாக வாசிக்க முடியவில்லை. வாசித்த கட்டுரையின் முழு வடிவம் இங்கு ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றது. – வ.ந.கி –

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

கணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா? பாவித்துப் பயனடைகின்றார்களா? என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள்? இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள்? இன்று விண்டோஸ் போன்ற ‘இயங்கு தளம் (ஒபரேட்டிங் சிஸ்டம்’) எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் மென்பொருள்களில் (‘அப்ளிகேசன்களி’ல்) தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும்? இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.

Continue Reading →

‘இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை’

– 25.07.2015 அன்று ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற ‘கணினித்தமிழ் வரலாறும், வளர்ச்சியும்’  என்ற  நிகழ்வில் ‘இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிது. சுருக்கமாக மேற்கூறிய விடயங்களை ஆராய்கிறது. நிகழ்வில் நேரம் காரணமாகச்சில விடயங்களை முழுமையாக வாசிக்க முடியவில்லை. வாசித்த கட்டுரையின் முழு வடிவம் இங்கு ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றது. – வ.ந.கி –

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

கணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா? பாவித்துப் பயனடைகின்றார்களா? என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள்? இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள்? இன்று விண்டோஸ் போன்ற ‘ஒபரேட்டிங் சிஸ்டம்’ எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும்? இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.

Continue Reading →

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?  17 ஜூலை 2015 –  பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

அறிமுகம்
பாராளுமன்றத்; தேர்தல்களில்தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் – பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும்- தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்?

தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் சனநாயக ஆணையாக வெளிக் கொணர்வதற்கும் அந்நிலைப்பாட்டிலிருந்து தமிழர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டிய தேவை இன்று உண்டு. ஆகவே இங்கு அதிமுக்கியமானது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதல்ல எத்தகைய கொள்கைக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்பதே.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 103: முகநூல் குறிப்புகள் சில.

   ‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கத்தின் மாதாந்தக் கலைந்துரையாடல்: கணினித்தமிழ் ‘வரலாறும் வளர்ச்சியும்’.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

இவ்விதமானதொரு நிகழ்வை நடாத்தியதற்காக எழுத்தாளர் அகில், வைத்திய கலாநிதி லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் மற்றும் இவர்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுபவர்கள் அனைவரும பாராட்டுக்குரியவர்கள்.  இச்சங்கத்தினர் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதிச்சனிக்கிழமை அன்று இது போன்று கலை, இலக்கிய மற்றும் அறிவியல் நிகழ்வொன்றினை நடத்துவது வழக்கம்.

இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு வருவதாகவிருந்த ஐந்து பேச்சாளர்களில் மூவரே வந்திருந்தனர். எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளையில் ஆரம்ப உரையினைத்தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம பேச்சாளரான திரு.குயின்றஸ் துரைசிங்கம் ‘கணினித்த்மிழின் வளர்ச்சி,  குறிமுறை, தகுதரம், ஒருங்குறி இன்னும் இன்னோரன்ன’ என்னும் தலைப்பில் நீண்டதொரு உரையினை ஆற்றினார். கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துகள் பற்றிய சிக்கல்கள் பற்றியதாகவே அவரது உரை பெரும்பாலுமிருந்தது. ஒருங்குறி எழுத்துரு வந்துவிட்ட இந்நிலையிலும் கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துருக்கான முழுமையான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. ஒருங்குறி ஓர் ஆரம்பமே என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. ‘தமிங்கிலிஸ்’ பாவித்துக் கணினியில் தட்டச்சு செய்வதைப்பற்றியும் அவரது உரை விமர்சனப்பார்வையுடன் அமைந்திருந்தது. அவர் transliteration என்பதைத்தான் ‘தமிங்கிலிஸ்’ என்று கூறிவிட்டாரென்று நினைக்கின்றேன்.   ‘ட்ரான்ஸ்லிடெரேஷன்’ என்பது ஆங்கில எழுத்துகளைப்பாவித்துத் தமிழை அல்லது ஒரு மொழி எழுத்துக்களைப்பாவித்து இன்னுமொரு மொழியினை எழுதுவதாகும். ஆனால் ‘தமிழிங்கிலிஸ்’ ஆங்கிலத்தைத்தமிழில் பேசுவதைக்குறிக்கும். இவரது பயனுள்ள நீண்ட உரையானது கணினியில் பாவிக்கப்படும் எழுத்துருகள், அவை ஏற்படுத்தும் சிரமங்கள், அவை பற்றிய ஆய்வுகள் பற்றியதாகவே அமைந்திருந்தது.

Continue Reading →

அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களை தமிழ்மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும்!

– உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். –

- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும்  தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும்  எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம்  அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும்   வலுப்படுத்த   முடியும்.
       
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த  சனாதிபதி தேர்தல்  இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.  வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள்.  அந்தத் தேர்தல் முடிவு,  எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல  மாற்றங்களைக்  கொண்டுவந்தது.  முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான  இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம்  பேச்சுச் சுதந்திரம் மற்றும்  சட்டத்தின்  ஆட்சி மற்றும்  சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு  உலக நாடுகளால்  வரவேற்கப்பட்டன.  எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள்  மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது  பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள்  தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.

Continue Reading →

’ரிஷி’யின் கவிதைகள்!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

Continue Reading →

’ரிஷி’யின் கவிதைகள்!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

Continue Reading →

‘கறுப்பு ஜூலை’ 83 நினைவுச்சிறுகதை: நங்கூரி

'கறுப்பு ஜூலை' 83 நினைவுச்சிறுகதை: நங்கூரி‘ என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண்    முன்னாலேயே…’

இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது.

அது கொழும்பு துறைமுகம்…

ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அவர்களின் சிரித்த முகத்தையும், அந்த அன்பான உபசரிப்பையும் பார்த்ததும் மருண்டு போயிருந்த எங்கள் மனசுக்குச் சற்று ஆறதலாக இருந்தது மட்டுமல்ல, பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியும் அந்தக் கணமே ஏற்பட்டது. சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்தபடி அருகே நின்ற அக்காவின் முகத்தைப் பார்த்தேன், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற கவலை அவள் முகத்தில் படர்ந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தின் பாதிப்பால், உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் அக்காவின் பாதியுயிரே போயிருந்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் வரிசையாக இருந்த படுக்கைகளில் அக்காவிற்கு ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுத்து, நிம்மதியாகப் படுக்கச் சொன்னேன். தூக்கமில்லாத இரவுகளாலோ என்னவோ படுத்த உடனேயே அக்கா அயர்ந்து தூங்கிவிட்டாள்.

Continue Reading →

மலைகள் சொரிந்த சடுதி மழை

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இருபதாம் நூற்றாண்டின் மத்திய இரு தசாப்பத்தங்களின் காலம். ஈழத்தின் கைதடி-நுணாவில் கிராமத்தில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையின் எட்டாங் கட்டையடியில் ஒரு வீதியோரக் கல்வீடு.  ஊரார் அதை வெற்றிப் பரியாரியார் வீடென அழைப்பர்.

அவர் ஒரு பிரபலமான சித்த ஆயுள்வேத வைத்தியர். பெயர், இராமநாதர் அப்பா வெற்றிவேலு. மனைவி, கந்தர் வேலாயுதர் நாகமுத்து. மக்கள் இருவர். மகன் கந்தசாமி. மகள் இரத்தினம். இவர்களுடன் தன்மனைவியை 1938-இல் இழந்த கோபாலரும்; மகன்மார் தில்லை, துரை, சின்னத்துரை என வீட்டில் அழைக்கும் பையன்களும் வாழ்ந்தனர். கோபாலர், நாகமுத்துவின் அண்ணர். அவரின் மனைவி (இறந்த பொன்னம்மா) வெற்றியரின் தங்கை. இரு மாற்றுச்-சடங்குகளின் மூலம் எண்மரும் பிறப்பிலேயே இனத்தவர்கள். ஒன்றாகப் பல ஆண்டு வாழ்ந்து வந்தனர்.

வெற்றியர் தன்னுடைய றலி சைக்கிள் வண்டியில் உழக்கிச் சென்று சாவகச்சேரி நகரத்தின் பழைய சந்தையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து வாரத்தில் ழூன்று நாட்கள் முற்பகலில் தன் வைத்தியத் தொழிலை நடத்தி வந்தார். சந்தையில் தன் மதிய உணவை அருந்தி விட்டுப் பிற்பகலில் இடைஇடைக் கிராமங்களில் வதியும் வீட்டு-நோயாளிகளைப் பார்த்துத் தன்னுடன் என்றும் எடுத்துச் செல்லும் மருந்துப் பெட்டியிலிருந்து மருந்தும் கொடுத்து ஆலோசனையும் வழங்கி விட்டுப் பின்னேரம் ஆறுமணிக்கு எல்லாம் வீடு திரும்பி விடுவார். கடுமையான நோயாளிகள், இருவர் இருவராக அவர் வீட்டில் தங்கி வாரக் கணக்கில் வைத்தியம் பெறுவதும் உண்டு. தன் நடை-மருந்துகளுக்கு மட்டும் நியாயமாகப் பணம் முன்னரே கேட்டுப் பெறுவார். தன் பெட்டிப்-பேதி மருந்துகள், பயணம், ஆலோசனை முதலிய சேவைகளுக்கு நோயாளர் தாமாக விரும்பிக் கொடுப்பதையே பெற்றுக் கொள்வார். அத்துடன் வீட்டில் ஒரு பசு, இரு எருதுகள், ஒரு மாட்டு-வண்டிலுடன், குடும்பத்து வயல், தோட்டங்கள், ஒரு மரக்-கடை, சிலநேரம் புகையிலை வியாபாரம் எல்லாம் செய்வார். அவ்வூர் கிராமசபையின் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர். மேலும் தன் செலவிலேயே கைதடிநுணாவில்-மட்டுவில்தெற்கு கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப பள்ளியை நிறுவி, நடாத்தியும் வந்தார். இந்த எல்லா வேலைகளுக்கும் வீட்டில் உள்ள எல்லோரும் நாளாந்தம் இரவுபகலாக உதவிசெய்து வந்தனர். கோபாலர் மட்டும், அவ்விரு கிராமங்களுக்கென ஒரு கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி நடாத்தி வந்து, காலை சென்று இரவு திரும்பி, தங்கை கொடுக்கும் உணவை அருந்திப் படுத்துவந்து, தன் மனைவி பிரிந்த ஆறாம் ஆண்டில் கசநோயால் இறந்துவிட்டார்.  

Continue Reading →