பயணியின் பார்வையில் – அங்கம் 18: கிண்ணியா பளிங்கு கடற்கரையில் குவியும் தென்னிலங்கை மக்கள்! தம்பலகாமத்தில் குறிசொல்லும் பெண்களையும் மதம் மாற்றும் சமய அரசியல்!

எழுத்தாளர் முருகபூபதிமாத்தளையிலிருந்து புறப்பட்டு கண்டிவந்து, அங்கிருந்து நீர்கொழும்பு வந்து இறங்கியதும், நண்பர் நுஃமானுடன் தொடர்புகொண்டு சுகமாக வந்து சேர்ந்துவிட்டதாகச்சொன்னேன். அவர்தான் முதல்நாள் என்னை பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து கண்டி பஸ்நிலையத்திற்கு அழைத்துவந்தவர். துரைமனோகரனும் உடன் வந்து கண்டி பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அங்கிருந்து இரவு மாத்தளையில் உறவினர்களை பார்க்கச்சென்று, மறுநாள் அதிகாலை புறப்பட்டு, ஊர் திரும்பியதும் வழியனுப்பியவருக்கு சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நுஃமானைத்தொடர்புகொண்டதும், அவர் ” எங்கள் நாடு முன்னேறவில்லை என்று யார் சொன்னது…? நேற்றுக்காலை கொழும்பில் மாலையில் கண்டியில், மறுநாள் காலை நீர்கொழும்பில், ஆகா…. இலங்கையில் பொதுப்போக்குவரத்தின் வேகம் அசத்துகிறது” என்றார். அவர் சொல்வதும் உண்மைதான். அகலப்பாதைகளுடன் போதியளவு போக்குவரத்து வசதிகளும் இருப்பதனால் நாம் போகவேண்டிய ஊர்களுக்கு துரிதமாகச்செல்ல முடிகிறது.

நீர்கொழும்புக்கு வந்ததும், ” அடுத்து எங்கே அண்ணா..?” என்று தங்கை கேட்டாள்.

” இன்று இரவு திருகோணமலைக்கு” என்றேன்.

” ஊரெல்லாம் சுத்துகிறீர்கள். யார் யாரையெல்லாமோ சென்று பார்க்கிறீர்கள். எங்கள் ஊரில் குடியிருக்கும் தெய்வங்களையும் ஒரு எட்டில் வந்து பாருங்களேன்.” என்றாள் தங்கை.

” அவர்களுக்கு என்ன குறை….? எந்தக்குறைவுமின்றித்தானே திருவிழாக்கள் செய்கிறீர்கள். மேலும் மேலும் அவர்களுக்கு இருப்பிடங்கள் கட்டுகிறீர்கள்.” என்றேன்.

” இன்று எங்கள் பிள்ளையார் கோயிலில் வைகாசி விசாகம் பூசைக்கு சொல்லியிருக்கிறோம். அங்கிருக்கும் அண்ணனையும் தம்பியையும் பார்த்துவிட்டுப்போங்கள்”

ஒரு மாம்பழத்திற்காக சண்டை பிடித்த சகோதரர்களையும் தங்கையின் வேண்டுகோளினால் தரிசிக்கச்சென்றேன். அன்று இரவே திருகோணமலைக்கு புறப்படுவதற்காக கொழும்புக்குச்சென்றேன். திருகோணமலைக்கு முன்னரும் சில தடவைகள் சென்றிருந்தாலும், தம்பலகாமம் செல்லவேண்டும் என்ற எனது நெடுநாள் ஆசையை இந்தத்தடவை பயணத்தில் பூர்த்தி செய்வதற்கு விரும்பியிருந்தேன். எமது கல்வி நிதியத்தின் ஊடாக உதவிபெற்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராக பணியாற்றும் செல்வி நாகராணி மனோகரலிங்கம் தம்பலகாமத்தைச்சேர்ந்தவர். இந்தப்பயணத்தில் என்னை வந்து பார்த்தவர். வெள்ளப்பெருக்கு அநர்த்தத்தில் இவரது குடும்பமும் பெரிதும் பாதிப்புற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத் துணைவேந்தராக இருந்த காலப்பகுதியில் அவரால் தெரிவுசெய்யப்பட்ட பல மாணவர்களில் இவரும் ஒருவர். இம்மாணவர்களுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவியது. அவர்கள் அனைவரும் பட்டதாரிகளாகிவிட்டதுடன், தொழில் வாய்ப்புகளும் பெற்றனர். நான், இந்தத்தடவை திருகோணமலை, சம்பூர், தம்பலகாமம் முதலான பகுதிகளுக்கு செல்லவிருந்தமையால், செல்வி நாகராணியே தொடர்புகொண்டு கொழும்பிலிருந்து செல்லும் பஸ்ஸில் எனக்கு ஆசனம் பதிவுசெய்து தந்தார். வார விடுமுறையில் அவருக்கு ஓய்வு இருந்தமையால், என்னுடன் பயணித்தார். அவர் வெள்ளப்பெருக்கினால் மாத்திரம் பாதிப்புற்றவர் அல்ல. அவரது மூன்று சகோதரர்களும் நோய்வாய்ப்பட்டு குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். அவ்வாறு அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்த அவரது பெற்றோர்கள் தாம் நம்பியிருந்த கடவுளுக்கு நேர்த்தி வைத்து பிறந்தமையால் தனக்கு நாகராணி என்றபெயரை சூட்டியதாக அவர் சொன்னபொழுது நெகிழ்ந்துவிட்டேன்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 260 : ஆங் சான் சூகியே விழித்தெழு! ஆகஸ்ட் 30: சர்வதேசக் காணாமற் போனோர் நாள்! – வ.ந.கிரிதரன் –

ஆங் சான் சூகியே விழித்தெழு!

உனக்கு ராஃப்டோ விருது தந்தார்கள்
உனக்கு சாக்கரோவ் விருது தந்தார்கள்.
அமைதிக்கான நோபல் விருதும் தந்தார்கள்.
இந்திய அரசினரும் தம் பங்குக்கு
சவர்கலால் நேரு விருது தந்தார்கள்.
உன்னை மனித உரிமைகளின்
நாயகி என்றார்கள்.
உன் மண்ணில், உன் காலுக்குக் கீழ்
மதத்தின் பெயரால்,
இனத்தின் பெயரால்,
ஓரினத்து மக்கள் ,
ரொகின்யா இன மக்கள்,
உரிமைகளிழந்து
உடல்ரீதியாக, உளரீதியாக
வாதைகள் அடைகின்றார்களே!
உயிரிழக்கின்றார்களே!
மனித உரிமைகளின் செயல் வீராங்கனையே!
ஜனநாயகமும், விடுதலையும்
ஒருபோதும் கைவிடப்படாத கனவுகள் என்றாயே!
எங்கே உன் உரிமைக்குரல்?

Continue Reading →

ஆர். தாரணியின் கவித்துளிகள்! (1)

- ஆர். தாரணி -

மொழிபெயர்ப்பு 1

வனப்புடன் வளைய வருகிறாள் அவள்
முகிலற்ற காலம் போலும், விண்மீன்கள் மலர்ந்த வான் போலவும்
உன்னத இருளும் ஒளியும் ஒருங்கே சந்திக்கும்
அவளின் தோற்றமும், கண்மலர்களும்;
சுவர்க்கம் பகட்டான நாளுக்கு மறுத்த
மென்மை ஒளி கனிகிறது இவ்விதம்

– லார்ட் பைரன் ( 18 -ம் நூற்றாண்டு ஆங்கிலக்கவிஞர் ) –

She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies,
And all that’s best of dark and bright
Meets in her aspect and her eyes;
Thus mellow’d to that tender light
Which Heaven to gaudy day denies.

– Lord Byron –

Continue Reading →

தொடர் நாவல்: புதிய பாதை (‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ ) (7 – 9)

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் ஏழு: ‘டீச்சரி’ன் கடந்த காலம்!

அன்று அவனுக்கு நிறைய வேலைகளிருந்தன. “மான் பவரிற்கு போனான். வேலை ஏதாவது கிடைக்குமா என நோட்டம் விட்டான். ‘போஸ்ட் ஒபிஸ்”க்கு சென்றான். வீட்டிற்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை போஸ்ட் பண்ணினான். பெல் கனடாவிலிருந்து றெட் நோட்டிஸ் வந்திருந்தது. ஜெராட் ஸ்குயரில் உள்ள பெல் கனடாவில் போய் பணம் கட்டினான். இவ்விதமாக நாள் முழுக்க பரபரப்பாக இருந்தான். நேற்று இரவு மாமா மகனும் மற்றவர்களும் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அவளது கடந்த கால வாழ்வு பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியிருக்கிறவர்கள் சும்மா இருக்கப் போவதில்லையே. அவன் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஏற்கனவே ஓராயிரம் பிரச்சனைகள் அவனைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவனால் அவளுக்கு பிரச்சனைகள் வருவதை அவன் விரும்பவில்லை. அவளது சூழ்நிலைகள் புரியாமல் அவள் வாழ்வில் குறுக்கிடுவதையும் மனம் ஏற்கவில்லை.

இதற்கு ஒரே வழி? அவளிடமே எல்லாவற்றையமே கேட்டு விட வேண்டியது தான். இவ்விதம் எண்ணினான். பிரச்சனையில் கனம் குறைந்தது போல் உணர்ந்தான். சில வேளைகளில் பிடிக்காதவற்றையும் செய்வதன் மூலம் பிரச்சனைகள் தீரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவ்விதம் தனக்குள் எண்ணிக் கொண்டான். இதுவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றே”.

இவ்விதமான முடிவுகளுடன் அன்று ‘பார்க்கில் அவன் காத்திருந்தான். வழமையாக ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுபவள் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படித்தான் ஒரு விசயத்தை வேண்டுமென்ற ஆவலுடன் செய்யும்போதுதான் தடங்கல்கள் ஏமாற்றங்கள் சம்பவித்து விடுகின்றன. ஏனைய சமயங்களில் தாராளமாக கிடைக்கும் பொருள் தேவைப்படும் சமயங்களில் தான் காணாமல் போய் விடுகிறது என்று எண்ணிக் கொண்டான். அன்று அவளைச் சந்திக்க வேண்டுமென ஒரு வித எதிர்பார்ப்புடன், ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அவளோ வரவில்லை. நெடுநேரம் தனிமையில் அமர்ந்திருந்து விட்டு ‘அப்பாட்மென்ட் திரும்பும் போது அவளிருப்பிடம் செல்வோமா’ என ஒரு கணம் நினைத்தான். மறுகணமே இவ்விதமாகவொருவித நினைவு கூட எழுந்தது. “அவள் வருவதாயிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். அவள் வராமலிருப்பதற்கு ஏதாவது தவிர்க்கக் முடியாத காரணம் இருக்க வேண்டும். இந்நிலையில் அவளைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல”

ஆனால் அவள் அன்று மட்டுமல்ல தொடர்ந்தும் வராமலே இருந்தாள். அதுதான் அவனுக்கு புதிராகப் பட்டது. வியப்பைத் தந்தது. எங்கேயோ ஏதோ ஒன்று பிழைத்திருப்பது புரிந்தது. தொடர்ந்தும் இப்படியே தொடர்வது சரியாகப்படவில்லை. அன்று அவளிடம் செல்வதாக தீர்மானித்தான். இதே சமயம் பிறந்த மண்ணிலோ மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன. குடாநாட்டைச் சுற்றி வர அரசபடைகள் சுற்றி வளைத்திருந்தன. இம்முறை நிலைமை மக்களுக்குப் பாதகமாக இருப்பதாகவே பட்டது. தமக்குள் ஒற்றுமையின்மை, அயல்நாட்டின் ஆதரவின்மை. எதிர்காலம் பயங்கரமாகத் தெரிந்தது. நடப்பதைக் கண்டு கொள்ள வேண்டியது தானென எண்ணினான். அம்மாவின், தங்கச்சியின் ஞாபகம் எழுந்தது. ஒன்றாக இருந்த காலங்களை எண்ணி நெஞ்சு சிலிர்த்துக் கொண்டது. கூடவே அவளது குடும்ப நிலைமையையும் நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம். போலவும் பட்டது. எல்லாவற்றுக்கும் அவளைப் பார்ப்பதே சரியானதாகவும் தோன்றியது.

Continue Reading →

தொடர் நாவல்: புதிய பாதை (‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ ) (7 – 9)

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் ஏழு: ‘டீச்சரி’ன் கடந்த காலம்!

அன்று அவனுக்கு நிறைய வேலைகளிருந்தன. “மான் பவரிற்கு போனான். வேலை ஏதாவது கிடைக்குமா என நோட்டம் விட்டான். ‘போஸ்ட் ஒபிஸ்”க்கு சென்றான். வீட்டிற்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை போஸ்ட் பண்ணினான். பெல் கனடாவிலிருந்து றெட் நோட்டிஸ் வந்திருந்தது. ஜெராட் ஸ்குயரில் உள்ள பெல் கனடாவில் போய் பணம் கட்டினான். இவ்விதமாக நாள் முழுக்க பரபரப்பாக இருந்தான். நேற்று இரவு மாமா மகனும் மற்றவர்களும் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அவளது கடந்த கால வாழ்வு பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியிருக்கிறவர்கள் சும்மா இருக்கப் போவதில்லையே. அவன் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஏற்கனவே ஓராயிரம் பிரச்சனைகள் அவனைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவனால் அவளுக்கு பிரச்சனைகள் வருவதை அவன் விரும்பவில்லை. அவளது சூழ்நிலைகள் புரியாமல் அவள் வாழ்வில் குறுக்கிடுவதையும் மனம் ஏற்கவில்லை.

இதற்கு ஒரே வழி? அவளிடமே எல்லாவற்றையமே கேட்டு விட வேண்டியது தான். இவ்விதம் எண்ணினான். பிரச்சனையில் கனம் குறைந்தது போல் உணர்ந்தான். சில வேளைகளில் பிடிக்காதவற்றையும் செய்வதன் மூலம் பிரச்சனைகள் தீரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவ்விதம் தனக்குள் எண்ணிக் கொண்டான். இதுவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றே”.

இவ்விதமான முடிவுகளுடன் அன்று ‘பார்க்கில் அவன் காத்திருந்தான். வழமையாக ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுபவள் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படித்தான் ஒரு விசயத்தை வேண்டுமென்ற ஆவலுடன் செய்யும்போதுதான் தடங்கல்கள் ஏமாற்றங்கள் சம்பவித்து விடுகின்றன. ஏனைய சமயங்களில் தாராளமாக கிடைக்கும் பொருள் தேவைப்படும் சமயங்களில் தான் காணாமல் போய் விடுகிறது என்று எண்ணிக் கொண்டான். அன்று அவளைச் சந்திக்க வேண்டுமென ஒரு வித எதிர்பார்ப்புடன், ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அவளோ வரவில்லை. நெடுநேரம் தனிமையில் அமர்ந்திருந்து விட்டு ‘அப்பாட்மென்ட் திரும்பும் போது அவளிருப்பிடம் செல்வோமா’ என ஒரு கணம் நினைத்தான். மறுகணமே இவ்விதமாகவொருவித நினைவு கூட எழுந்தது. “அவள் வருவதாயிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். அவள் வராமலிருப்பதற்கு ஏதாவது தவிர்க்கக் முடியாத காரணம் இருக்க வேண்டும். இந்நிலையில் அவளைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல”

ஆனால் அவள் அன்று மட்டுமல்ல தொடர்ந்தும் வராமலே இருந்தாள். அதுதான் அவனுக்கு புதிராகப் பட்டது. வியப்பைத் தந்தது. எங்கேயோ ஏதோ ஒன்று பிழைத்திருப்பது புரிந்தது. தொடர்ந்தும் இப்படியே தொடர்வது சரியாகப்படவில்லை. அன்று அவளிடம் செல்வதாக தீர்மானித்தான். இதே சமயம் பிறந்த மண்ணிலோ மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன. குடாநாட்டைச் சுற்றி வர அரசபடைகள் சுற்றி வளைத்திருந்தன. இம்முறை நிலைமை மக்களுக்குப் பாதகமாக இருப்பதாகவே பட்டது. தமக்குள் ஒற்றுமையின்மை, அயல்நாட்டின் ஆதரவின்மை. எதிர்காலம் பயங்கரமாகத் தெரிந்தது. நடப்பதைக் கண்டு கொள்ள வேண்டியது தானென எண்ணினான். அம்மாவின், தங்கச்சியின் ஞாபகம் எழுந்தது. ஒன்றாக இருந்த காலங்களை எண்ணி நெஞ்சு சிலிர்த்துக் கொண்டது. கூடவே அவளது குடும்ப நிலைமையையும் நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம். போலவும் பட்டது. எல்லாவற்றுக்கும் அவளைப் பார்ப்பதே சரியானதாகவும் தோன்றியது.

Continue Reading →

சிறுகதை: கனிவு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -‘ஆனைவாழை குலை போட்டிருக்கு!”

வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் ‘அட! அப்படியா..” என்றொரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றினாலும் நிதானமாக நின்று உடைகளை மாற்றினான்.

‘கேட்டுதே? ஆனைவாழையெல்லே குலை போட்டிருக்கு எண்டு சொல்லுறன்!”

‘ஓம்! ஓம்! பாப்பம்..” என அவன் மனைவியைப் பார்த்துச் சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

‘ஓமடா தம்பி!… நல்ல பெரிய குலை..!” என அம்மா சொன்னாள்.

‘ஆனைவாழை பெரிசாத்தான் குலைபோடும்..” என முற்றும் தெரிந்தவன்போல அவன் கூறினான். ஆனால் ஆனைவாழை பெரிசாகவா சிறிசாகவா குலை போடும் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனை வாழைப்பழம் பெரிசாக இருப்பதால் ஆனைவாழைக்குலையும் பெரிசாக இருக்குமென ஊகித்திருந்தான். அல்லது ஏன்தான் அந்த வாழைக்கு ஆனைவாழை எனப் பெயர் வந்தது என்பதும் புரியவில்லை.

சிறு பிராயத்தில் பாடசாலையின் ஒரு விடுமுறைக் காலத்தில் அப்பாவோடு கொழும்பு கண்டி போன்ற வெளியூர்களுக்குச் சுற்றுலா போயிருந்தபோதுதான் முதலில் ஆனை வாழையைப்பற்றி அறிந்துகொண்டான். அப்போது சாப்பாட்டுக் கடையொன்றில் சாப்பிடப் போயிருந்தபொழுது வாழைப்பழம் கொண்டு வரும்படி அப்பா ஓடர் கொடுத்தார். வெயிட்டர் ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பைக் கொண்டுவந்து வைத்தான். அவன் அதைப் பார்த்துவிட்டு “பழுக்கயில்ல.. காய்..!” என்றான்.

‘இல்லை… அது நல்ல பழம்!” என்றார் அப்பார்.

Continue Reading →

அதிகாலை மல்லிகையின் வரவு!

இன்றென் அதிகாலையினெழில் தோட்டத்து மல்லிகையின் இதழ் விரிப்பினால் சிறிது கூடிற்றென்பேன். காலை தன் இன்னொலிகளுடன் கலந்து கிடந்தது. கொட்டிக் கிடந்தது பேரின்பமங்கே. நன்றி. இதயத்தோட்டத்தில் இதழ் விரிக்கும்…

Continue Reading →

முல்லைஅமுதன் கவிதைகள்!

முல்லை அமுதன்

1.
இரவு வாங்கி வந்த
சொற்களை
மேசை மீது
பரப்பிவைத்திருந்தேன்.
மாலை வந்து தேடிய போது
காணவில்லை..
மனைவி முழித்தாள்.
பேச முடியவில்லை..
தொடரூந்துப்
பயணத்தின் போதோ,
மிதிவண்டியில்
போகும் போது
நிறையவே தொலைந்தே
போயிருக்கின்றன.
மூலையில்
குழந்தைகள்
என்
சொற்களை வைத்து
விளையாடிக்கொண்டிருந்தனர்.

Continue Reading →

ஆய்வு: ஏலாதி காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்

பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்களின் அடி அளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டியுள்ளது.

ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால்  ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.

ஏலாதி ஆசிரியர்
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இது இவரது இயற்பெயர்ப் போல் தெரியவில்லை. கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு எளிதில் அறியமுடிகிறது.

பதிப்பு வரலாறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் சமண சமயத்தவர்கள் செய்தது. சுமார் 19ஆம் நூற்றாண்டில்தான் கீழ்க்கணக்கு நூல்கள் பதிக்கப்பட்டன. பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்களுக்கு பழைய உரைகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கப் பெறாத உரைகளுக்கு, பின்னாளில், பதிப்பித்தவர்கள் மற்ற புலவர்களை வைத்து உரையெழுதி வெளியிட்டார்கள். அவர்களுக்கு, சமண நூற்களில் பயிற்சியின்மையால், சில சொற்றொடர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டு உரையெழுதினார்கள். அவற்றுள் அறுநால்வர் என்பது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நூல் கருத்து
சிறப்புப் பாயிரம் இல்லறத்தையும், துறவறத்தையும் போற்றி, கணிமேதாவியார் நூல் செய்திருப்பதாகக் கூறுகிறது. சமணம் இல்லறத்தை வெறுத்தது என்று தூற்றுவோர்கள் கவனிக்கவும். இல்லறம், துறவறம் என்று அறத்தைப் பகுப்பதுச் சமண சமயக் கொள்கை. இந்நூலில் நாற்பொருளுள் முதலான அறத்தைக் கலந்துக் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணத்தகும்.

Continue Reading →

பயணியின் பார்வையில் அங்கம் — 17: எழுபத்தியைந்து வருடப்பூர்த்தியை கொண்டாடும் பேராதனை பல்கலைக்கழகமும் – தமிழ்த்துறை மாணவர்களும் – வாசிப்பு அனுபவமும்

எழுத்தாளர் முருகபூபதிசமகாலத்தில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி, ” இறுதியாக படித்த நூல் எது…? ” சற்று யோசிப்பார்கள். உடனடியாக பதில் வராது. ஆனால், தமது முகநூலில் என்ன வந்திருக்கிறது..? யார்… யாருடன் விவாதித்தோம் முதலான விவகாரங்கள் பற்றி உற்சாகத்துடன் அல்லது சோர்வுடன் சொல்வார்கள். என்னிடத்தில் முகவரிதான் இருக்கிறது. முகநூல் இல்லையென்பதனால், அவ்வாறு முகநூல்காரர்கள் சொல்லும்போது சகிப்புடன் கேட்டுக்கொள்வேன். மாணவர்களையும் இந்த முகநூல் ஆக்கிரமித்துள்ளது. இம்முறை இலங்கைப்பயணத்தின்போது தகைமைசார் பேராசிரியர், எனது நீண்ட கால நண்பர் எம். ஏ. நுஃமான், பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்றுமாறு அழைத்தார். அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியிலிருக்கும் பேராசிரியர் வ. மகேஸ்வரனும் தொடர்புகொண்டு அழைத்தார். கடந்த 2015 இலும் இவ்வாறு இவர்கள் அழைத்து சென்றிருக்கின்றேன். அந்தப்பயணம் பற்றியும் முன்னர் பதிவுசெய்துள்ளேன்.

” மாணவர்களிடம், அதுவும் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களிடம் என்னதான் பேசுவது…?” என்ற ஆழ்ந்த யோசனையுடன் அன்று பேராதனைக்குப்பயணமாகி, பேராசிரியர்கள் சொன்னவாறு கலகா சந்தியில் இறங்கினேன். மகேஸ்வரன் அங்கு வந்து என்னை அழைத்துச்சென்றார். அங்கு நண்பர்கள் ஶ்ரீபிரசாந்தன், துரைமனோகரன் உட்பட சில விரிவுரையாளர்களுடன் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு மாணவர்களை சந்திக்கச்செல்லும்வேளையில் நுஃமானும் வந்து சேர்ந்தார்.

” தொடர்பாடலும் சமகால இலக்கிய அனுபவங்களும்” என்ற தலைப்பில் பேசவேண்டியிருந்தது. தமிழ்த்துறை மாணவர்கள் கணிசமாக வந்திருந்தார்கள். அவர்களிடம் புன்னகையும் ஆழ்ந்த மௌனமும்தான் காணப்பட்டது. அந்த மெளனத்தை கலைப்பதற்கு பெருமுயற்சி மேற்கொள்ளவேண்டியிருந்தது. எனது தலைப்பு அவ்வாறு அமைந்ததுதான் காரணமோ என்றும் யோசித்தேன். எனது வருகையை பற்றி குறிப்பிட்டுப்பேசிய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன், ” ஏற்கனவே இரண்டு தடவை அங்கு வந்து நான் உரையாற்றியிருப்பதை” நினைவுபடுத்தினார்.

Continue Reading →