ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் முல்லைத்திணை அகமாந்தர்கள்

   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -முன்னுரை
பழந்தமிழர் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இதில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இலக்கியமாகும். எட்டுத்தொகையில் நூல்களில் அகம் சார்ந்த நூல்களுள் ஒன்றான அகநானூறு மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 13 அடி முதல் 31 அடி வரை அமைந்த 400 அகப்பாடல்களின் தொகுப்பாகும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவாகப் பாகுபாடு செய்துள்ளனர். வேறு நூல்களில் காணமுடியாத ஒரு வரையறையை இந்நூல் காணலாம். நான்காம் எண் முல்லை என்ற முறையில் இந்நூல் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தலைவன் தலைவி மீது கொண்ட காதலும், தலைவி தலைவன் மீது கொண்ட காதலும் இவ்விருவரும் அன்பைப் பயிரினச் காட்சி உவமைகள் வாயிலாகவும், பயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் நிலைகளைக் கூட்டுப் பயிரினக் காட்சிகள் வாயிலாகக் காட்டி அகமாந்தர்கள் உள்ளத்தில் அன்பின் நிலைபேற்றினை உறுதிப்படுத்தும் உணர்வுகளைப் புலவர்களின் குறிப்பின் சுட்டிக்காட்டுவதை இக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்துவதை அறியலாம்.

தலைவனின் கூற்று
வினையின் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே முல்லைத்திணையில் மிகுதியான கூற்று நிகழ்த்துகிறான். வினையை முடிந்து மீண்டும் வரும் சூழலில் தலைவனானவன் தன்னோடு வரும் தேர்ப்பாகனிடம் தன்னுணர்வை வெளிப்படுத்துகிறான். தலைவனுக்குரிய கிளவிகளையெல்லாம் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர் பாகனைக்குறிப்பிடும்போது,

பேரிசை ஊர்தீப் பாகர் பாங்கினும்     (தொல்.பொருள்.நூ:144)

என்று நூற்பாவின் மூலமாகக் கூறுகிறார்.

தலைவியைப் பிரிந்திருக்கும் போது பாகன் ஒருவனே தலைவனுடன் நெருங்கிப் பணிபுரிபவனாக, நெருங்கியத் தொண்டனாக இருப்பதால் பாகனிடம் மட்டுமே தலைவன் தன் கடமைகளை இனிதே முடித்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் புலப்படுத்துவான். இதனை,

.   .   .   .   .   .   முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையிலும் (தொல்.பொருள்.நூ:44)

என்ற நூற்பாவின் மூலமாகச் சுட்டுகிறது.

முல்லைத்திணையில் தலைமகன் தேர்ப்பாகன் கூறுவதாகப் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாசறையில் இருக்கும்போது தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக ஒரு பாடலும், வினையை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக பதினான்குப் பாடல்களும், தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக மூன்று பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர வினைமுற்றியத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பது போல் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக இரு பாடல்களும், பாசறையில் இருந்த தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதாக நான்கு பாடல்களும், தலைவன் பாசறையிலிருந்து தனக்குத் தானே சொல்லியதாக ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.

Continue Reading →

ஆசிரியம் ஒரு ஆச்சரியம்!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அன்பெனும் வழியெடுத்து
அறிவெனும் உளியெடுத்து
சிறந்த சிற்பங்கள் செய்யும்
செம்மையான சிற்பிகள் நீங்கள் !

நாளைய சமுதாயத்தை
நயம்பட படைக்க வேண்டி
நாளும் தவமிருக்கும்
நவயுக பிரம்மாக்கள் நீங்கள் !

தாம் பெற்றதனத்தும்
கசடறக் கற்றதனைத்தும்
தம்மக்கள் பெறவேண்டி
தவங்கிடக்கும் ஏணிப்படிகள் நீங்கள் !

Continue Reading →

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள் மூன்று!

கவிதைகள் படிப்போமா?

1. சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
காற்றின் இருத்தலைப் போல காமம்
வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைத்தேடி
கனவுகளோடு நானும்

தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
பண்பாட்டுப்பாறையின் சுமையில்
நிறம் மாறிய ஓவியமாக மனம்

துணையின் தேவையில் கண்டடைந்த
வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
முதல் காமமுத்தத்திற்காக!

Continue Reading →

யாழ்ப்பாணத்தில் முருகபூபதியின் நூல்கள் அறிமுக நிகழ்வு

எழுத்தாளர் முருகபூபதி

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான அவுஸ்திரேலியாவில் வதியும் லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக அரங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் நாவலர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும். ‘சொல்லவேண்டிய கதைகள்’ – யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை இலக்கிய மாத இதழின் வெளியீடாகும்.  யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழ் உட்பட பல இணைய இதழ்களிலும் வெளியான ‘சொல்லத்தவறிய கதைகள்’ கிளிநொச்சி மகிழ் பதிப்பக வௌியீடாகும்.

Continue Reading →

ஆய்வு: தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இந்திய அளவில் சில மாநிலங்களில் திரெளபதியம்மன் வழிபாடு காணப்படுகிறது. அதனுடைய தொடர்ச்சி தமிழ் நாட்டின் தொண்டைமண்டலப் பகுதியிலும் காணப்படுகிறது. தொண்டைமண்டலப் பகுதியில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன் சமணசமயமும் பெளத்தசமயமும் வேராகவும் தலைமையிடமாகவும் கொண்டு பக்திநிலையை உருவாக்கி மக்களிடத்தில் பெரும்பான்மை பெற்றுத் திகழ்ந்து விளங்கியது. அப்போது அப்பகுதி மக்கள் பெரும்பான்மையோர் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களில் இருக்கின்ற கடவுள்களை இறைவனாக வழிபட்டுவந்தனர். இப்பகுதியில் முதலில் சமணம் ஆதிக்கம்பெற்றும் இரண்டாவதாகப் பெளத்தம் ஆதிக்கம் பெற்றும் சிறந்து விளங்கியது. தமிழ் இலக்கியங்களைக் கூர்ந்துநோக்கிப்பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் சில பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. சங்கம்மருவிய இலக்கியத்தில் பெருபான்மையான நூல்களின் பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. காப்பிய இலக்கி யத்தில் பெரும்பான்மையாகச் சமணப்புலவர்கள் இயற்றிய நூல்களாகும்; சில பெளத்தப்புலவர்கள் இயற்றிய நூல்களும் அறியப்படுகின்றன. மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றிய பாடல்களும் இலக்கியங்களும் ஆகும். ஆனால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின் பக்தி இலக்கிய நிலை உருவாகி சைவம், வைணவம் என்ற இருபெரும்பக்தி நிலைகள் தோன்றியதன்மூலம் சமணமும் பெளத்தமும் அழிந்து, சைவமும் வைணமும் இங்கு வேர் ஊன்றத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையில் சைவமும் வைணமும் மக்கள் இடத்தில் சிறப்புற்று விளங்குகின்றன. இம் மதங்களுக்குத் தலைமையிடமாக விளங்கியது தொண்டை மண்டப்பகுதியே ஆகும். கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சித் தொண்டைமண்டலத்தில் நிலவியிருந்தது. அப்போது, பல்லவமன்னர்கள்மீது வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்துள்ளனர். அதில் குறிப்பாகச் சாளுக்கிய மன்னர்களான முதலாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் ஆகியோர் படையெடுத்து வந்துள்ளனர். அக்காலங்களில் போர்கள் மிகுதியாக இருந்த காரணங்களால், பாரதக்கதைகள் கோவில்களில் படிக்கப்பட்டுள்ளன. பாரதக்கதைகளில் குறிப்பாகப் பாண்டவர்கள் போர்த்திறத்தைப் பற்றியும் திரெளபதியின் ஆற்றலைப்பற்றியும் மிகுதியாகப் படிக்கப்பட்டன.

தொண்டைமண்டலத்திலுள்ள கூரம் சிவன் கோவில் முதல் கற்கோவிலாகும். பரமேசுவரவர்மன் சிறந்த ஒரு சிவபக்தன் ஆவான். இவர் தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்; பலவற்றைப் புதுப்பித்தார். இவர் கூரம் என்ற சிற்றூரில் சிவன் கோவில் ஒன்றைக் கல்லாற் கட்டினார்; அதற்கு இவ்வரசன் பரமேசுவர மங்கலாம் எனத் தன் பெயர்பெற்ற சிற்றூரை மானியமாக விட்டார். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ பரமேசுவர க்ருகம் எனப் பெயர் பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதல் கற்கோவிலாகும். இப்போது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவர் காலத்தில் நடந்துவந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். இவர் கோவிலில் பாரதம் படிக்கச் செய்த அரசனாவார். கூரம் பட்டயம் முதல் இரண்டு சுலோகங்கள் பரமேசுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன என்பதை சி. சீனிவாச சாஸ்திரி எழுதிய பல்லவ வரலாறு எனும் நூலில் குறிப்பிட்ட செய்தியை மா.இராசமாணிக்கனார் (2008:153) தான் எழுதிய பல்லவ வரலாற்றில் கூறியுள்ளார். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் தான் பல்லவர் – சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது. அப்போராட்டம் இவருக்குப்பின் 150 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்தது (இராசமாணிக்கனார்,2008:98). பரமேசுவரவர்மன் கி.பி.670-685 வரையில் அவருடைய காலக்கட்டமாகும். இவருடைய வரலாற்றைப் படித்தால் சாளுக்கிய மன்னர்களுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் அவர்கள் பாரதக்கதைகள் படிப்பதற்கு நிலங்கள் மானியமாகக் கொடுக் கப்பட்டதைக் காணலாம் (இராசமாணிக்கனார்,2008:142-156). பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலம் தொடங்கி பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் காலம் வரையில் நீண்ட போர்கள் நடைபெற்றன. அதில் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மனுக்கும் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும் நீண்ட காலங்கலாகப் (நாட்களாகப்) போர்கள் நடைபெற்றன. பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்ற போர்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்றும் போரில் நிரந்தரமாக வெற்றி பெறவேண்டும் என்றும் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் தன் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாரதக்கதைகளை நாள்தோறும் படிக்கும்படியும் நாள்தோறும் கூறும்படியும் செய்தான். இதனால் அவர் காலத்தில் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் பாரதக்கதைகளைக் கூறுவோருக்கும் பரமேசுவரவர்மன் நிலங்களை வழங்கினார் என்று கூரம் செப்பேட்டிலும் தண்டன் செப்பேட்டிலும் காணக்கிடக்கின்றன (முத்தையா,1988:29). பாரதவிருத்தி எனும் நூலில் சோழமன்னர்கள் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் கூறுவோருக்கும் நிலங்களை மானியமாகக் கொடுத்துள்ளனர் என்பதைக் காணமுடியும். இன்றும் தமிழகத்தில் உள்ள கோவில் களுக்கு நிலங்கள் மானியங்களாக இருப்பதைப் பல கோவில்களின் வாயிலாக அறியலாம் (சதாசிவப் பண்டாரத்தார்,2008:90). தமிழ் நாட்டில் பல ஊர்களில் பாரதக்கதைகள் கூறப்பட்டதையும் பாடப்பட்டதையும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் காணக்கிடக்கின்றன (நாகசாமி,1990:3). செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள கருங்குழி என்ற ஊரில் அவ்வூர் மக்கள் எட்டு ஏக்கர் நிலத்து வருவாயைப் பாரதக்கூத்து நடத்துவதற்கு மானியமாக வழங்கி வருகிறார்கள். இது கூத்திரு மானியம் என்றும் கூத்தியர் மானியம் என்றும் வழங்கப்படுகிறது (துளசி இராமசாமி,2000:69). பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் மக்களிடம் போர்வேட்கையைத் தூண்டுவதற்காகப் பாரதக்கதையினைக் கூத்தின் மூலம் பரப்ப நினைத்துக் கூத்து நடத்துவதற்கு என்று கோவில் ஒன்றைக் கட்ட எண்ணினான். அது திரெளபதி கோவிலாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதினான். அதன் காரண மாகத் தோன்றியதுதான் திரெளபதியம்மன் கோவில் என்று துளசி. இராமசாமி கருதுகிறார் (2000:70).

Continue Reading →

நூல் அறிமுகம்: வாழும் சுவடுகள்

நூல் அறிமுகம்: வாழும் சுவடுகள்எழுத்துத்துறையில் இயங்கிவரும் பலரும் தமிழில் ‘இளையோர் இலக்கியம் வளரவில்லை’ என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். எந்தவோர் இலக்கியமும் வளர்வதற்கு அது சார்ந்த அடிப்படைத் தரவுகள், மேலதிகத் தகவல்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அவை பெரும்பாலும் அபுனைவு (Non-fiction) எழுத்துகளில்தான் நிரம்பிக்கிடக்கின்றன, அபுனைவு எழுத்திற்கும், புனைவுகளின் எண்ணிக்கைக்கும் உள்ளார்ந்த தொடர்பிருக்கிறது. உதாரணமாக, கடந்த நாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ், தமிழ் அரசர்கள், அவர்களின் ஆட்சிமுறை குறித்த ஆய்வுசுள் பெருமளவு நடைபெற்றன. அந்த ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டறிந்த தகவல்களைப் படைப்புகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே கல்கியும், சாண்டில்யனும், பூவண்ணனும், ஏனைய பல முன்னோடிகளும் புனைவுகளை எழுதினர். இன்னொருபுறம் வெகுஜனத்தளத்தில் பண்டைய தமிழக வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றிபெற்றன.

ஏதோவொரு துறையின் ஆராய்ச்சித் தகவல்களால் சர்க்கப்படும் ஒருவர்தான் அதுபற்றிய புனைவை எழுத இயலும். கடந்த பல பதிற்றாண்டுகளாகத் தமிழில் துறைசார்ந்த அனுபவங்கள் பகிரப்படுவது குறைந்தது நமது துரதிர்ஷ்டமே. அறிவியலும் தொழில்நுட்பமும் வேறெப்போதும் இல்லாத அளவில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் அவை சார்ந்த படைப்புகள் உருவாக வேண்டியது மிக அவசியம், ஆனால் ஒரு துறையில் அனுபவம் கொண்டவர் எழுதும் திறன் படைத்தவராக இருப்பதில்லை. அத்திறன் கொண்டோர் பல சட்டச்சிக்கல்கள், நடைமுறை பிரச்சினைகள் காரணமாகத் தங்கள் அனுபவங்களை எழுதுவதில்லை . இதில் அரசு, தனியார்துறை என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

மேற்கத்திய நாடுகளில் குறைந்தபட்சம் அவரவர் துறையில் சந்தித்த சவால்களை மட்டுமாவது ஆவணப்படுத்தி வருகின்றனர். இது எதிர்காலத்தில் அதே வகையான பிரச்சினைகளைச் சந்திக்க நேரும் இளையோருக்குப் பயன்தருவதோடு, அவற்றில் இருக்கும் சுவாரஸ்யம் பல புதியவர்களை அத்துறைக்குள் இழுத்துவரச் செய்கிறது. தாங்கள் படித்த புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு கலையை, அறிவியலை, தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்து, பிறகு படைப்பாளியாகவும் மாறிய பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

Continue Reading →

ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்.

ஓவியர் கருணா!ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.’ நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் வார்த்தைகளை அளந்து பேசும் இவர் எங்கள் மத்தியில் இன்று இல்லாதது ஓவியக் கலைக்கு மட்டுமல்ல, எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்.

கனடாவில் தை மாதத்தை மரபுத்திங்களாகக் கனடிய அரசு பிரகடனப்படுத்தியதில் இருந்து தமிழர் கலாச்சார நிகழ்வுகள் எல்லாவற்றிலும் இவரது ஓவியங்கள் இடம் பெறத் தொடங்கியதால் தமிழ் ஆர்வலர்கள் பலரின் பார்வையும் இவரது நவீன ஓவியங்கள் மீது திரும்பியிருந்தன. மிக அற்புதமாக ஓவியம் வரைவதில் வல்லவர் மட்டுமல்ல, நவீன யுகத்திற்கு ஏற்ப கணனியின் பாவனை மூலம் இவர் தனது ஓவியங்களுக்கு மெருகூட்டுவதில் வல்லவர். எனது நண்பர் பி. விக்னேஸ்வரனின் ‘வாழ்ந்துபார்க்கலாம்’ என்ற நூலுக்கான அட்டைப் படத்தை டிஜிட்டல் முறையில்தான் வடிவமைத்திருந்தார். இது போன்ற பல நூல்களுக்கு இவர் அட்டைப்படம் வரைந்திருக்கின்றார். மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இவரது ஓவியக் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்ற போது அந்த ஓவியங்களைப் பார்த்து ரசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிதும் சிறிதுமாகச் சுமார் 40 ஓவியங்கள்வரை அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் ஏதாவது நூல்களுக்கு அட்டைப் படம் வரைந்திருந்தால் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், அதைப்பற்றி நான் பாராட்டுவேன். நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை இவரது அட்டைப்படம் அப்படியே எடுத்துச் சொல்லும் வகையில் இவரது ஓவியங்கள் கதை சொல்லும். தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் கணையாழி இதழின் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு மலரின் அட்டைப்படமாக ஓவியர் கருணாவின் ஓவியமே இடம் பெற்றிருந்தது.

கனடாவில் வசித்த இயூஜின் கருணா அவர்கள் கரவெட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய தலைமை ஆசிரியரான காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு, இளைப்பாறிய ஆசிரியை நெஜினா வின்சென்ற் ஆகியோரின் அன்பு மகனாவார். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடன் உரையாடியபோது, ஓவியக்கலை பற்றி, குறிப்பாக நூல்களுக்கு அட்டைப்படம் வரைவது பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்திருந்தார். ஒரு நூலின் நீளம், அகலம் மட்டுமல்ல எத்தனை பக்கங்கள் என்பதும், எத்தகைய தாளில் அச்சடிக்கப்படுகிறது என்பதும் அவசியம் என்பது போன்ற பல நுணுக்கமான விடயங்களைத் தனது அனுபவத்தின் மூலம் தெளிவு படுத்தியிருந்தார். தாய்வீடு பத்திரிகையில் ஓவியம் பற்றிய தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியிருக்கின்றார். ஓவியக் கலை அருகிவரும் இக்கால கட்டத்தில் அனுபவம் மிக்க இவரது இழப்பு எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.

Continue Reading →

FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol – I

33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!

[லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள். இவற்றில் சில ‘FLEETING INFINITY  [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol – I’ தொகுப்பில் இடம் பெற்றிருப்பவை. இங்கே லதா ரமாகிருஷ்ணனின் தெரிவிலான 33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இங்குள்ள  33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் தேர்வின் சிறப்பு தெரிகின்றது. இவற்றையெல்லாம் அவர் முகநூலிலிருந்து பெற்றார் என்பது முகநூலின் ஆக்கபூர்வமான பங்களிப்பை வெளிப்படுத்துவதுடன், முகநூலில் வெளியாகும் படைப்புகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது.பதிவுகள்.காம் ]


இத்தொகுப்பில் சமகாலத்தில் ஆர்வமாகக் கவிதை எழுதிவரும் 139 கவிஞர்களின் படைப்புகள் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில், மூலக்கவிதையும் அதன் மொழிபெயர்ப்புமாக இடம்பெறுகிறது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு உலகத்தரமான படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழின் தரமான படைப்புகள் ஆங்கிலத்திலும் ஆங்கிலம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் படுதலும் என்பதை கவனப்படுத்தவும் இந்த முயற்சி உதவினால் மகிழ்வேன்.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நிறைய வருடங்களாக எழுதிவருபவர்கள், தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர்கள், கவிதை தவிர இலக்கியத்தின் பிற பிரிவுகளிலும் முனைப்பாக இயங்கி வருபவர்கள், சிறுபத்திரிகைகள் நடத்தி வருபவர்கள், இலக்கியப் பங்களிப்புக்காக விருதுகள் பெற்றிருப்பவர்கள். எத்தனையோ நெருக்கடிகளுக்கிடையில், எதிர்மறையான சூழல்களில் இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிவந்தவர்கள்; வருபவர்கள்.  அவர்களுடைய கவிதைகளை  இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கவென நான் தேர்ந்தெடுத்து வைத்திருப்பவை. இவற்றில்இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை மூன்று நான்கு மட்டுமே.

இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!

1. அப்துல் ஜமீல்:  சடலமாக கிடந்த இரவு

மின்கம்பியில் சிக்கி அடிபட்டுப்போன
இராட்சதவெளவால்போன்று
சடலமாகக் கிடந்தது
தனக்குள்அனேகரகசியங்களை
பதுக்கிவைத்திருந்தஇரவு

விண்மீன்கள் பூக்க மறந்து
நிலா கருமுகிலினுள் செமித்த கணத்தினிடை
கோடையில் அலைந்தது வானம்

இரவினை வாசிக்க
மின்மினிப்பூச்சிகள் சிலவற்றை
பறக்கவிட்டேன்

செத்துப்போன இரவினுள்
தொலைந்துபோன தங்களது கனவுகளை
சிலர் தேடிக்கொண்டிருந்தார்கள்

இரவினையார் கொலை செய்திருப்பார்களென்று
துப்புத்துலக்க அவகாசமில்லை

கவனிப்பாரற்றுக்கிடந்த
இரவின் வெற்றுடலை
பகலினுள் அடக்கம் செய்கிறேன்
உடன் விடிந்து விடுகிறது

Continue Reading →

FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] – A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY (Vol – I)

FLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதிலதா ராமகிருஷ்ணன் (ரிஷி) ஜூன் 2016இல் நான் ஃபேஸ்புக்கில் என்னை இணைத்துக் கொண்டபோது எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. காரணம், நான் எப்போதுமே என்னுடைய ‘nutshell world’ க்குள்ளாகவே வாழ்பவள். அதையே அதிகம் விரும்புபவள். நான் இந்த நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன்….?  ஆனால், விரைவிலேயே எங்கிருந்தெல்லாமோ நட்பினர் கிடைத்தனர். அவர்களில் பலர் தமிழில் கவிதை எழுதிவருபவர்கள். அவர்கள் தங்களுடைய கவிதைகளை( தங்கள் நட்பினருடைய கவிதைகளையும் தங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களின் கவிதைகளையும்கூட) அவரவர் டைம்-லைனில் பதிவேற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாசிக்கக் கிடைத்த கவிதைகளின் மொழிநடை, உள்ளடக்கம், ஆழம், விரிவு, பாசாங்கற்ற தன்மையெல்லாம் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தந்தன.  அப்படி எனக்கு வாசிக்கக் கிடைத்தவற்றில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவேற்றத் தொடங்கினேன். இதற்குக் கிடைத்த வரவேற்பு நான் எதிர்பாராதது. ஃபேஸ்புக் நட்பினர், தங்கள் கவிதை மொழிபெயர்க்கப் பட்டதோ, இல்லையோ, பதிவேற்றப்பட்ட மற்றவர்களின் கவிதைகளையும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் மனமாரப் பாராட்டினார்கள்.  இந்த வரவேற்பு தந்த உத்வேகத்தில் பல கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றினேன். ஏறத்தாழ 600 கவிதைகளை மொழிபெயர்த்திருப்பேன். இரவு நேரத்தில் ஒரு நல்ல கவிதையைப் படிக்கக் கிடைக்கும்போது அந்தக் கவிதை தரும் வாசிப்பனு பவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதற்குப் பொருத்தமான படத்தை கூகுளிலிருந்து தேர்ந்தெடுத்துப் பதிவேற்றுவது வழக்கமாகியது. அப்படி மொழிபெயர்ப் பதற்காக எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் 100க்கு மேல் இருக்கும். 

என்னுள்ளிருக்கும் கவிஞர், வாசகர், மொழிபெயர்ப்பாளரின் துணையோடு நான் எனக்குப் பிடித்த கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். என் மொழிபெயர்ப்பில் குறையிருக்கலாம். மூல கவிதையோடு ஒப்பிட என் மொழிபெயர்ப்பு ஒரு மாற்று குறைவானதாகவே இருக்கலாம். ஆனாலும், என் முகநூல் நட்பினரின் கவிதைகளை மொழுபெயர்ப்பதும் பதிவேற்றுவதும் எனக்கும், என் நட்பினருக்கும் வரவாக்கும் நிறைவுணர்வு என்னை மேலும் மொழிபெயர்க்கத் தூண்டுகிறது என்பதே உண்மை.

என் முகநூல் நட்பினரின் கவிதைகள் எனக்கு அளித்த நிறைவான வாசிப்பனுபவத்திற்கு நன்றி சொல்வதாய் அவர்களுடைய கவிதைகளையும் அவற்றின் என்( ஆங்கில மொழிபெயர்ப்பையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பினேன். இந்த என் விருப்பத்தை என் டைம்-லைனில் பகிர்ந்துகொண்டபோது எல்லோரும் அதைப் பெரிதும் வரவேற்றார்கள்.

Continue Reading →

போலிச் செய்தி எனும் போர்க் கருவி!

எழுத்தாளர் க.நவம்‘போலிச் செய்தி’ தமிழுக்குப் புதிய பதமல்ல. ஆனால் அதன் ஆங்கில வடிவமான ‘fake news’ மேற்குலகில் 3 வருடங்களுக்கு முன்னர் பலரும் அறிந்திராத ஒரு வார்த்தை. இப்போது அது ஜனநாயகத்துக்கும் கட்டுப்பாடற்ற விவாதத்துக்கும் மேற்குலகின் புதிய ஒழுங்கமைப்புக்கும் அச்சுறுத்தல் தரும் வார்த்தையாகிவிட்டது. அரசல்புரசலாக அடிபட்டுவந்த அவ்வார்த்தையை அம்பலத்துக்குக் கொண்டுவந்த பெருமை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பையே சாரும். அவரது பெருவிருப்புக்குரிய வார்த்தையாக மட்டுமன்றி, ’2017ஆம் ஆண்டின் வார்த்தை’ என்ற விருதுக் கௌரவதையும் தன்வயப்படுத்திக்கொண்ட வல்லமை மிக்க சொல்லாகிவிட்டது! .

போலிச் செய்தி என்னும் பதத்தை 2017 இறுதியில், டொனால்டு ட்ரம்ப் தனது மிகப் பிரியமான சமூக ஊடகமான ட்விட்டரில் பெரிதும் பயன்படுத்தத் தொடங்கினார். பிரபல முன்னணி ஊடகங்களான New York Times, Washington Post, CNN போன்றவற்றைப் போலிச் செய்திகளின் கருவூலங்கள் எனக் குறிப்பிட்டார். CNN, ABC, NBC நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்புகள் யாவும் போலிச் செய்திகள் எனச் சாடினார். தமக்குப் பிடித்தமற்ற செய்திகளனைத்தும் போலிச் செய்திகளே எனப் பிரகடனம் செய்தார். ட்விட்டரில் இச்சொல்லை இற்றைவரை உபயோகித்துவரும் அவர், ஊடகங்கள்மீது தொடர்ந்தும் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.

தம்மைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் எல்லாமே போலிச் செய்திகள் என அங்கலாய்த்துத் திரியும் அமெரிக்க அதிபர், தேர்தல் காலம் முதற்கொண்டு தமக்கு ஆதரவாக மாஸிடோனிய இளைஞர்களால் பரப்பப்படும் செய்திகளை மட்டுமே உண்மைச் செய்தியாக நற்சான்று வழங்கி வருகின்றார். ஊடகங்களை மக்களது எதிரிகள் என்கின்றார். அவர் தொடர்பான அநேகமான CNN, CBS, NBC செய்திகள் எதிர்மறையானவை என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் போலிச் செய்திகள் என்பதுதான் தவறு. உண்மையறவற்றை அவர் போலிச் செய்திகள் என்பதில்லை. பதிலாக, தமக்கு அசௌகரியமானவற்றையும் பாதகமானவற்றையுமே அவர் போலிச் செய்திகள் என்பதுதான் வேடிக்கை! இது ஊடக சுதந்திரத்தின் மீதான, ஆதாரமற்ற தாக்குதலென விமர்சிக்கப்படுகின்றது. 

முற்றுமுழுதாகப் புனையப்பட்ட கதைகளே போலிச் செய்திகள் எனப்படுகின்றன. இவை பொய்யானவை; இட்டுக்கட்டப்பட்டவை; ஆதாரங்களற்றவை. வாசகர்களைத் தவறாக வழிப்படுத்துவதற்கான ஒரு பிரச்சார மார்க்கமாகப் பயன்படுத்தப்படுகின்றவை. அண்மைக்கால உண்மைச் செய்திகளினதை விட, போலிச் செய்திகளின் உலகு மிகமிக விசாலமானது. சிலவற்றுள் சில உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எவ்வித சூழ்நிலைப் பொருத்தப்பாடும் இருப்பதில்லை. உறுதி செய்யத் தேவையான உண்மைகள், அடிப்படை ஆதாரங்கள் இருப்பதில்லை. வேண்டுமென்று ஆத்திரமூட்டும் மொழியில், முக்கியமான விபரங்களைத் திட்டமிட்டுத் தவிர்த்து, ஏதோ ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்துவதாகப் போலிச் செய்திகள் வரையப்படுகின்றன. சிலவேளைகளில் தவறுதலாக அல்லது கவனக் குறைவாக உருவாக்கிப் பரப்பப்படுகின்ற போதிலும், போலிச் செய்திகள் பொதுவாகத் தவறானவை; நேர்மையற்றவை; நேர்த்தியற்றவை; ஏமாற்றுவதை அல்லது பழிவாங்குவதை நோக்கமாகக் கொண்டு, உருவாக்கிப் பரப்பப்படுபவை; உண்மையை மூடி மறைப்பவை: பொதுசன அபிப்பிராயத்தின்மீது செல்வாக்குச் செலுத்துபவை; தமக்கான ஆதரவைப் பெருக்கவும் எதிர்ப்பை நசிக்கவும் முற்படும் அரசாங்கங்களதும் அதிகாரம் மிக்கவர்களதும் ஆயுதமாகப் பயன்பட்டு வருபவை.

Continue Reading →