எழுத்தாளர் பூவண்ணன் நினைவாக (‘தென்றல்’ இதழிலிருந்து): குழந்தை எழுத்தாளர் டாக்டர் பூவண்ணனுடன் ஒரு சந்திப்பு

எழுத்தாளர் பூவண்ணனின் புகழ்பெற்ற நாவல்: ஆழம் விழுது.எழுத்தாளர் பூவண்ணன்[குழந்தைக் கவிஞர் என்றால் அழ. வள்ளியப்பா, நவாலியூர்த்  தாத்தா  சோமசுந்தரப் புலவர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள்தாம் முதலில் நினைவுக்கு வருவார்கள். அது போல் குழந்தை எழுத்தாளர்களென்றால் வாண்டுமாமா, பூவண்ணன்  ஆகியோர்தாம் முதலில் நினைவுக்கு வருவார்கள். எழுத்தாளர் பூவண்ணன் அண்மையில் காலமானார். அவரது நினைவாக, ‘தென்றல்’ இணைய இதழில் வெளியான இந்த நேர்காணலை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]

டாக்டர் பூவண்ணன் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய வரலாறு முதலிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். ஏராளமான பரிசுகளை வென்றவர். இவரது ‘ஆலம்விழுது’ கதை தமிழ் தவிர இன்னும் பல மொழிகளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. பெரியவர்களுக்காகவும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் பூவண்ணன். இதோ அவரே பேசுகிறார்….

Continue Reading →

அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை

- வெங்கட் சாமிநாதன் -ஐம்பது வருடங்களாயிற்று. தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது. வேறு எதில் புரட்சி நிகழ்ந்துள்ளதோ இல்லையோ, தமிழ்க் கவிதை என்று இப்போது சொல்லப்படுவதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்க் கடற்கரையோரங்களில், கிழக்கு இந்திய தீவுகளில், சுமத்ராவில் சுனாமி வீசிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோமே. கடற்கரையோர சாலைகளில் கார்கள் மிதந்து கொண்டிருந்தன. காவிரியில் வெள்ளம் வந்தால் ஒரு வருடம் தான் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமாகும். ஆனால் அடுத்த வருடங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும். வெள்ளம் கொண்டு சேர்த்த வண்டல் மண்ணின் கொடை. ஆனால் தமிழ்க் கவிதையில் நிகழ்ந்துள்ளது சுனாமியா, காவிரி வெள்ளத்தின் ஆரம்ப நாசமா, என்று கேள்வி எழுந்தால், அவரவர் கவித்வ உணர்வைச் சார்ந்து தான் பதில் வரும்.. அதுவும் முடிவற்று வாதிக்கப்படும். ஒரு காலத்தில் ஏதும் திருமணமோ, பொங்கலோ, வாழ்த்துச் செய்தி அனுப்ப வெண்பா எழுதாத தமிழ்ப் பண்டிதர்களே கிடையாது. வெண்பா தான் மிகக் கஷ்டமான வடிவம் என்பார்கள். பண்டிதர்களுக்கும் வாழ்த்துப் பெற்றவர்களுக்கும் அது பற்றிக் கவலையில்லை. வந்தது கவிதைதானா என்பது பற்றியும் யாரும் கவலைப்பட்டதில்லை. அது உணரப்படுவது மாத்திரமே. சீரும் தளையும் ஒழுங்காக இருந்தால் அது கவிதை தான். அங்கு கவி பாடுதலும் அரங்கேற்றமும் சுலபமாக இருந்த காலம். இலக்கண அமைதி இருந்தால் போதும். அதிகம் போனால் பொருட் குற்றம் பார்த்த காலத்தில் நக்கீரர்கள் இருந்தார்கள். இப்போது பொருட் குற்றம் பார்ப்பது கருத்து சுதந்திரத்தில் கற்பனையில் கை வைப்பதாகும். இருந்தாலும் அந்தக் காலத்தில் ஏதோ ஒரு வரைமுறை இருந்தது.

Continue Reading →

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்

அறிமுகம்

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்சு.குணேஸ்வரன்தமிழ் இலக்கியத்தின் செழுமையினையும் குறித்த ஒரு மக்கட்கூட்டத்தின் பண்பாட்டு அம்சங்களையும் விரிவாகப் பதிவு செய்யும் இலக்கிய வடிவங்களில் புனைகதை இலக்கியம் முதன்மையானது. அண்மைக்காலத்தில் இலங்கைத் தமிழ்ப்படைப்பாளிகளின் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. போர்க்காலத்திலும் போரின் பின்னரும் வெளிவந்த நாவல்களை அரசியல் அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பகுக்கலாம். அவற்றுள் பண்பாட்டின் அடிப்படையில் பெரிதும் கவனத்தைக் குவித்த படைப்புக்களாக எஸ். ஏ உதயனின் நாவல்கள் அமைகின்றன. இந்தக் கட்டுரையில் லோமியா, தெம்மாடுகள், வாசாப்பு, சொடுதா ஆகிய உதயனின் நான்கு நாவல்களும் நோக்கப்படுகின்றன. இவை கடந்துபோன காலங்கள் பற்றியும் அவை கொண்டியங்கிய பண்பாட்டு பெறுமானங்களின் மீதான வேணாவா குறித்தும் பேசுகின்றன. கழிந்துபோன காலத்தின் எச்சங்களான நினைவுகளின்மீது கட்டியெழுப்பப்பட்ட படைப்புக்கள் இவை. ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் படிப்படியான மாறுதல்களைக் காட்டுபவை. பலவற்றை இந்தச் சமூகம் மறந்துவிடுகிறது. சிலவற்றையே ஞாபகக் கிடங்குகளில் இருந்து மீட்டுப் பார்க்கின்றது. மீளவும் மீளவும் இந்தச் சமூகம் தவறுவிடும்போது கடந்த காலங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடங்களாகி விடுகின்றன. கடற்பிரதேச மக்களின் வாழ்க்கை அம்சங்கள், அவர்களின் பண்பாடுகள், வாழ்க்கைப் போராட்டங்கள், மாறுதல்கள் என ஏறத்தாள எண்பது வருடத்திற்கு முற்பட்ட காலங்களில் இருந்தான கதைகளை தனது நாவல்களில் எஸ்.ஏ உதயன் பதிவு செய்கிறார்.

Continue Reading →

Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan

[Recently, a conference on canadian writing  was held in the National college , Trichy. Called ‘Canada:A Multitude of Spaces’, the conference was spearheaded by the Indian Association of Canadian Studies. The following paper on V.N.Giritharan’s writings was submitted to the conference by Dr R Dharani.] 

Literature, in a way, is a manifestation of an individual’s or a community’s elusive experiences. A grand procession of happy episodes alone in a life is highly impracticable and astonishing, as life itself is, and in most cases, akin to the tragi-comedies of Shakespeare. However, in the history of literature across the globe, catastrophe gained more attention than romance, chivalry and happy endings. The misfortunes of African- American writers have ever earned them the proper justice. The sorrow-stricken lives of a community who had been intimidated simply because of their ethnic background have been the cause of many social changes in western countries. Of all the complexities of life, the crisis of a survival stands first in the life of any human being. This is not the case with any other living creature in any part of the world. In any piece of literature, it is not uncommon to unearth such a theme intertwined with many other themes. Man struggles to locate a place of his own on this planet to ascertain a sense of identity of his life. Nationality, nativity, society, family, tradition, culture, language are such things endorsing the survival impulse of a man. Depending on the needs, man sets the priority for concepts like nationality, family and other matters.

Continue Reading →

உறைந்துபோன அரசியல் கொண்டவரின் உளறல்கள்

யமுனா ராஜேந்திரன் -“ காலம் இதழில் எஸ்.என்.நாகராசன் அவர்களின் நேர்காணல் ஓன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்கும்போது காலம் உறைந்துவிட்டதுபோன்ற உணர்வு. அவரை மகான் ஆக்கிப்  பார்க்கவேண்டும் என நேர்காணல் செய்தவர்கள் விரும்பி இருப்பார்கள் போலும். அது அவர்களது உரிமை. புகைப்படத்தில் பார்க்கும்போது நாகராசன் ஆரோக்கியமாகத் தெரிகிறார். இத்தகைய நேர்காணல்கள் மார்க்சியத்தைக் காலம் கடந்த தத்துவம் என்று உணரச்செய்கின்றன. மார்க்சியர்கள் என்று யாரைக் குறிப்பிடுவது? மார்க்ஸ் எழுதிய நூல்களைப் படித்தவர்களையா? அல்லது அவரது தத்துவத்தை தனது அணுகுமுறையின் அடிப்படையாகக் கொண்டவர்களையா? நேர்காணல் எடுத்திருப்பவர் தமிழ்நாட்டில் நான்கு பேர்களை மார்க்சியர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கிற காரணத்தால் தனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. அந்தப் பட்டியலில் பேராசிரியர் முத்துமோகனை அவர் சேர்த்திருக்கிறார். ( இதைவிடப் பெரிய விருது முத்துமோகனுக்கு  வேறென்ன இருக்கமுடியும்?). இன்னும் கொஞ்சம் கருணை வைத்து அந்தப் பட்டியலை நேர்கண்டவர்  நீட்டலாம். ஏனென்றால் இந்தப் பட்டியலை அதில் இடம்பெற்றிருப்பவர்களே கூட முழுமையானதென்று ஏற்கமாட்டார்கள். இத்தனை பெரிய தமிழ் நாட்டில் நாலே நாலு மார்க்சியர்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அது மார்க்சியத்துக்கும் அவமானம் அல்லவா! “

Continue Reading →

மலேசியத் தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (1 & 2)

அத்தியாயம் ஒன்று: அம்பிகை

வே.ம.அருச்சுணன் – மலேசியா  “பார்த்திபா  ……!  பார்த்திபா…..!’’ 
                       
 “என்னம்மா……?”

“படுக்கைய விட்டு எழுந்திரிக்காம…..இன்னும் நீ என்ன செய்யுற?”

அம்மா அம்பிகை அதட்டுகிறார்.

“அம்மா…..!” சிணுங்குகிறான்.

“சின்னப்பிள்ளையா நீ….?’’

 “அம்மா….சாயாங் இல்ல…. கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேம்மா….பிளீஸ்!”

Continue Reading →

‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்

'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (2)

நோயல் நடேசன்சிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று  நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள்.  அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் , ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத்தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். அறிமுகமற்ற சிறு நகரங்கள் மற்றும் மெல்பன் புறநகர்ப் பிரதேசங்கள் என சில இடங்களில் வேலை செய்யும்போது அந்தப் புதிய இடங்களும் , புதிய மனிதர்களும் திரில் அனுபவமாக இருந்தாலும் மனதில் நிரந்தர வேலை இல்லையே என்ற அழுத்தம் பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டு போல் எப்போதும் குடைந்து கொண்டிருக்கும். விக்ரோரியாவில் பக்கஸ்மாஸ் மெல்பேனில் இருந்து நுாறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதிகமாக பால் மாட்டுப்பண்ணைகள் உள்ள பிரதேசமாகும். சிவா சுந்தரம்பிள்ளை வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாதது மடடுமல்ல. வாழ்வையே வேறு பாதையில் திருப்பியது. சிறிய சம்பவங்கள் நெருப்புப்பொறி போன்று பெரிய காட்டை அழிக்க கூடியவை. சுந்தரம்பிள்ளையின் எதிர்காலத்தை புதிதாக மீண்டும் புதிதாக வார்பதில் பக்கஸமாஸ் வைத்தியரும் அங்கு நடந்த நேர்முகமும் பங்காற்றியது.

Continue Reading →

கனடா: ‘இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

முன்னாள் நா. உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன்  “நான் தமிழ்நாட்டில் இருந்த காலப் பகுதியில்தான் இராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை ஈழத் தமிழர்கள் செய்தார்கள் என்பதை ஏற்க மறுக்கிறேன். திரு பழ. நெடுமாறன் கூறுவதைப் போல  இந்தக் கொலையைச் செய்தவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நீதி, நேர்மை முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்டன. இராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப் பட்ட விதமும்  தண்டனை வழங்கப்பட்ட விதமும் பல அய்யங்களை எழுப்புகின்றன.  இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். எஞ்சிய 13 பேர் ஈழத்தமிழர்கள். சரி சமமான எண்ணிக்கை என்பது தற்செயலான செயல் அல்ல. ஆழமான உள்நோக்குடன் செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ் தேசிய உணர்வை சிதைப்பதற்காக இந்த சதி வகுக்கப்பட்டு சிபிஅய் என்ற புலனாய்வு அமைப்பு தனது புலன் விசாரணையை நடாத்தியது என நூலாசிரியர் திருச்சி வேலுசாமி சொல்லுகிறார்” என இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நூல் பற்றி ஆய்வுரை ஆற்றிய முன்னாள் நா. உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன்  குறிப்பிட்டார்.

Continue Reading →

புதிய தலைமுறை தொலைக்காட்சி: சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியீடு

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் – 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஸோன் என்கிற ஆவணப்படம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்யூசன் க்ளப்-ல் இன்று…

Continue Reading →