குடியுரிமை / குடிவரவு கனடா: கனடாவின் குடிவரவு அமைப்பை பாதுகாப்பதற்கான சட்டம் அரச இசைவு பெறுகிறது

மந்திரி கென்னீ ஒட்டாவா, ஜூ ன் 29, 2012 —கனடாவின் குடிவரவு அமைப்பை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச இசைவு பெற்றதை குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார துறை மந்திரி ஜேசன் கென்னீ  இன்று வரவேற்றுள்ளார்: “இந்த சட்டமானது வெளிநாட்டு குற்றவாளிகள், ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படாத அகதி கோரல்களுடையவர்கள் ஆகியோர் கனடாவின் தாராளத்தன்மையுடைய குடிவரவு அமைப்பை துர்பிரயோகம் செய்வதையும் வரி செலுத்துவோரால் நிதிபெறும் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நன்மைகள் பெறுவதையும் தடுத்து நிறுத்தும்” என்று மந்திரி கென்னீ குறிப்பிட்டார். “கனடாவின் குடிவரவு மற்றும் அகதி அமைப்பு என்பது உலகத்திலேயே மிக நேர்மையான மற்றும் தாராளத்தன்மையுடைய அமைப்புகளில் ஒன்றாகும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அமைப்பிலும் அது அப்படியே தொடரும்.”

Continue Reading →

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பரிசளிப்பு விழா

புலம்பெயர்ந்த மண்ணில் இன்று அதிக தமிழர்கள் வாழும் இடமாகக் கனடா திகழ்கின்றது. புலம் பெயர்ந்த மக்களின் தாய் மொழியைக் காப்பதில் ஒன்ராறியோ அரசாங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒன்ராறியோ கல்விச் சபைகளில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி ஒன்றை ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்தியிருந்தது. அவர்கள் நடத்திய தமிழ் மொழித்திறன் காணல் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 17-06-2012 ஸ்காபரோ பெலாமி வீதியில் அமைந்துள்ள பெரியசிவன் ஆலயக் கலை அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புலம்பெயர்ந்த மண்ணில் இன்று அதிக தமிழர்கள் வாழும் இடமாகக் கனடா திகழ்கின்றது. புலம் பெயர்ந்த மக்களின் தாய் மொழியைக் காப்பதில் ஒன்ராறியோ அரசாங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒன்ராறியோ கல்விச் சபைகளில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி ஒன்றை ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்தியிருந்தது. அவர்கள் நடத்திய தமிழ் மொழித்திறன் காணல் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 17-06-2012 ஸ்காபரோ பெலாமி வீதியில் அமைந்துள்ள பெரியசிவன் ஆலயக் கலை அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Continue Reading →

கனடாவின் சிறந்த தமிழ்ப் பாடகி மகிஷா! ‘ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்’ நடுவர்கள் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியின் ‘ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு…

Continue Reading →

“மக்கள் எழுத்தாளர்’ விந்தன்

"மக்கள் எழுத்தாளர்' விந்தன்[எழுத்தாளர் விந்தனின் நினைவுதினமான ஜூன் 30இனையொட்டி அவர் பற்றிய இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்]  எழுத்துலகில் “விந்தன்’ என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வேதாசலம்-ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது. இயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார். அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம். மாசிலாமணி முதலியார் நடத்திய “தமிழரசு’ மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் “தமிழுக்கும் அமுதென்று பேர்’  என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.

Continue Reading →

எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு வயது 86

எழுத்தாளர் டொமினிக் ஜீவா[ தனிமனிதராக நின்று இத்தனை வருடங்களாகச் சளைக்காமல், களைக்காமல் ‘மல்லிகை’ மாத இதழினை நடாத்திவரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்த தினம் ஜூன் 27. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது சிறுகதைகள் முக்கியமானவை.  இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருது, கனடாவிலிருந்து சுயாதீன திரைப்பட அமைப்பினரின் ‘அகேனம்’ இலககிய விருது ஆகியவற்றைப் பெற்றவர். எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினத்தையொட்டி அவரைப் பற்றிய விக்கிபீடியாக் குறிப்புகள் பிரசுரமாகின்றன- பதிவுகள் -]  டொமினிக் ஜீவா (பிறந்த திகதி:  ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

Continue Reading →

சிட்னி: கவிஞர் கண்ணதாசனுக்கு வயது 85!

அன்புள்ள தமிழ் நண்பர்களே! “மானிட ஜாதியை ஆட்டிவைப்பேன்- அவர் மாண்டுவிட்டாலதைப் பாடிவைப்பேன்- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை- எந்த நிலையிலுமெனக்கு மரணமில்லை!” இது போன்ற மணியான கருத்து நிறைந்த…

Continue Reading →

Canada Day (July 1st)

Background
On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty's loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st.On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty's loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st.On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty’s loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st. The July 1 holiday was established by statute in 1879, under the name Dominion Day. There is no record of organized ceremonies after this first anniversary, except for the 50th anniversary of Confederation in 1917, at which time the new Centre Block of the Parliament Buildings, under construction, was dedicated as a memorial to the Fathers of Confederation and to the valour of Canadians fighting in the First World War in Europe. The next celebration was held in 1927 to mark the Diamond Jubilee of Confederation. It was highlighted by the laying of the cornerstone by the Governor General of the Confederation Building on Wellington Street and the inauguration of the Carillon in the Peace Tower. Since 1958, the government has arranged for an annual observance of Canada’s national day with the Secretary of State of Canada in charge of the coordination. The format provided for a Trooping the Colours ceremony on the lawn of Parliament Hill in the afternoon, a sunset ceremony in the evening followed by a mass band concert and fireworks display.

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் 17

17-ம் அத்தியாயம்: ஸ்ரீதரின் தியாகம்

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிமனத்தில் எம்மை எவ்வளவு தான் கவலை பீடித்தாலும் அவ்வப்போது நாம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டுதானே போக வேண்டியிருக்கிறது? ஸ்ரீதரை, அவன் “அமராவதி”க்கு வந்த அன்று மாலை கப்பிய சோகம் தாங்கவொண்ணாத சோகம்தான். இருந்த போதிலும் அது அடுத்த நாள் மாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஈடிப்பஸ் மன்னன்” நாடகத்தை எவ்விதத்திலும் பாதிக்க விடுவதிலலை, என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிவிட்டு, அதன் பின் “அமராவதி” வளவில் எங்காவது ஒரு மூலையில் கவலைப்பட உட்காரலாம் என்பது அவன் எண்ணம். கவலையைக் கூட ஒழுங்காக, வேறு நினைவின்றி அனுபவித்தால்தான் அதனால் நிவாரணமோ இன்பமோ ஏற்படுகிறது. அதறகு இந்த நாடகச் சந்தடி தீர வேண்டும் எனபது அவன் நினைவு.

Continue Reading →

Citizenship and Immigration Canada welcomes 26 new Canadians

Citizenship and Immigration Canada welcomes 26 new CanadiansCitizenship and Immigration Canada welcomes 26 new Canadians to a special citizenship ceremony at The Regional Municipality of York Administrative Centre in the Town of Newmarket. What: 26 new Canadians and their families will come together for a special citizenship ceremony hosted by Citizenship and Immigration Canada and The Regional Municipality of York. Presiding official: Judge Crist Geronikolos. When: Thursday, June 28, 2012  3:00 p.m. Where: The Regional Municipality of York, Administrative Centre, 17250 Yonge Street, Newmarket, ON  Special guests: Lois Brown, MP, Newmarket-Aurora, Honourable Charles Sousa – MPP, Provincial Minister of Citizenship and Immigration (TBC) Bill Fisch, York Region Chairman and CEO Frank Scarpitti, Mayor, Town of Markham and Co-Chair of the Community Partnership Council . Media are invited to attend. Photography and audio-visual equipment are permitted. As part of the event, York Region is also celebrating work that has been done on the York Region Local Immigration Partnership initiative (LIP) including the launch of Leading Change for a Stronger Community: Community Partnership Council Collective Action Plan 2012-2015. This three-year plan identifies actions to support the integration of newcomers and enhance welcoming and inclusive communities.

Continue Reading →

இணையத்தள அறிமுகம்: ‘பெயரற்ற யாத்ரிக’னின் ‘நடைவழிக்குறிப்புகள்’

ஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்‘பெயரற்ற யாத்ரிக’னின் ‘நடைவழிக்குறிப்புகள்‘ வலைப்பதிவு நவீன கலை, இலக்கியம் சம்பந்தமான சிந்தைக்கு விருந்தளிக்கும் பல்லாக்கங்களை உள்ளடக்கியுள்ளதொரு வலைப்பதிவு. ஏப்ரில் 2006 இலிருந்து நவம்பர் 2007 வரையில் மட்டுமே இவ்வலைப்பதிவில் தொகுப்புகள் காணப்படுகின்றன. இத்தொகுப்புகளில் காணப்படும் ஆக்கங்களின் பயன் கருதி பதிவுகள் வாசகர்களுக்கு இவ்வலைப்பதிவினை அறிமுகம் செய்கின்றோம். அதன்பொருட்டு இவ்வலைப்பதிவில் காணப்படும் நோபல் பரிசுபெற்ற துருக்கிய எழுத்தாளரான ஒர்ஹான் பாமுக் பற்றிய கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம். – பதிவுகள்-

ஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்

அரசியலைக் குறித்து பாமுக் வெளிப்படுத்தும் கருத்துக்களைவிட, அவரது படைப்புகளில் மிளிரும் கருத்துகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. —ஒரு விமர்சனத்திலிருந்து.

Continue Reading →