தமிழர் சால்பு வழக்காறும் மரபுகளும் – ஒரு நோக்கு

ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!த.சிவபாலுஒரு வழக்காற்றைத்தான் மரபு என்ற சொற்பதத்தால் பெரிதும் குறிப்பிடப்படுகின்றது. வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. வழமையாக ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டில் இருந்து வந்த ஓரின, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள், சமயத்தைப் பின்பற்றும் மக்களால் மேற்கொள்ளப்படும் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டுவந்த அதேமுறையில் பின்பற்றப்படுமானால் அதனை ‘வழக்காற்று முறை’ என்று குறிப்பிடலாம்.

எனவே பண்பாட்டையும் வழக்காற்றையும் தனித்தனியாகப் பிரித்துவிடமுடியாது. வழக்காறு அல்லது மரபு என்பது மக்கள் வாழ்வியலைக் குறித்து நிற்பதாகும். மக்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழும் முறைமை மரபுகளைப் பின்பற்றி வாழுவதாகக் கொள்ளலாம். வழக்காறு அல்லது மரபு என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Custom’ என்ற பதம் அல்லது ‘Tradition’ என்றப பதம் பயன்படுத்தப்படுகின்றது. Custom can also mean changed to suit better: altered in order to fit somebody’s requirements.  வழக்காறு என்பது ஒன்றிற்குப் பொருந்தும் வகையில் மாற்றப்படக்கூடியது என்ற பொருளையும் நடைமுறையையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. வழக்காறுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன அல்ல காலும், நேரம், இடம் கருதி மாற்றம் பெற்றே வருகின்றன என்பது வெளிப்படை. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

வழக்காறுகள் அல்லது மரபுகள் மாற்றம் பெறுகின்றன என்றால் புதிய அல்லது வேறுமரபுகள் வந்து சேருகின்றன என்பது பொருளாக அமைகின்றன. எனவே நடைமுறையில் இருந்துவந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் நடைமுறியில் இருந்து விலகிப்போவதனைத் கட்டி இழுத்துப பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை. பண்டய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப்பிடித்துக்கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, சாதிய மரபு முறைகள் எம்மத்தியில் இருந்து அகற்றப்பட நீண்டகாலப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியறிவு வளர்ச்சியின் பயனாக சாதியத்தைப் பேணும் மரபுகள் மருவி அல்லது அருகி வருகின்றன என்பதனை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  பண்டைத் தமிழகத்தில் இருந்த அல்லது பேணப்பட்டுவந்து பழந்தமிழர் மரபுகள் அருகி அல்லது மங்கிப்போனதற்கு அவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை சமூகவளர்ச்சியின் காரணமாக இல்லாதொழிந்து போனது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று – ‘ நித்திய வாழ்வு காணலாம்’

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'அண்மையில், வாசித்த அறிவியல் கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த கட்டுரைகளிலொன்று யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவரும், பொறியியலாளருமான திரு. ப. தயாநிதி , சென்ற வருடம் யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரால் , யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக நடாத்திய ‘கலையரசி’ நிகழ்வு மலரில் எழுதிய ‘இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின் நித்திய வாழ்வு காணலாம் (Live long enough to live for ever) என்னும் கட்டுரைதான் அது.

தானியங்கியியல் (Robotics), நனோ தொழில் நுட்பம் (nano thechnology) மற்றும் மரபுப்பொறியியல் (Genetic engineering) ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்த அடுத்த கட்ட அறிவியல் வளர்ச்சியே இவ்விதம் மானுடர் நீண்ட காலம் அல்லது நித்திய வாழ்வு வாழ்வதற்குரிய சாத்தியத்தைக்கொண்டு வந்துள்ளதை , அழகு தமிழில் , தர்க்கச்சிறப்புடன் விபரிக்கின்றது தயாநிதியின் இந்தக்கட்டுரை.

நனோ தொழில் நுட்பத்தினைப்பாவித்து மானுடரின் கண்களுக்குப்புலப்படாத ‘நுண் தானியங்கி’ (nanobot) எனப்படும் தானியங்கியை  (robot) உருவாக்க முடியும். இந்த ‘நுண்தாங்கிகளை’ வைரஸ்கள், பக்ரீயியாக்களைப்போல் தம்மைத்தாமே பிரதியெடுத்துப் பெருகும் வகையில் உருவாக்க முடியும். இதன் மூலம் இவ்விதமான ‘நுண் தாங்கிகள்’ கொண்டு பல்வேறு நோய்களை உருவாக்கும் வைரஸ்களை, பக்ரீறியாக்களை மற்றும் புற்று நோய்க்கலங்களை அடையாளம் கண்டு அழிக்க முடியுமென்பதை, பல்வேறு நோய்களுக்குக் காரணமான மரபணுக்களைச்சரி செய்ய முடியுமென்பதை எளிமையாக விபரிக்கின்றது மேற்படி கட்டுரை.

அத்துடன் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகளுக்குப் பதிலாக , அவற்றின் வேலைகளைச்செய்வதற்கு இவ்வகையான நுண்தாங்கிகளை இரத்தத்துக்குப் பதிலாகப்பாவிக்கக்கூடிய நிலையும் உருவாகுமென்றும் கட்டுரை விபரிக்கின்றது.

அத்துடன் கட்டுரை கூறும் இன்னுமொரு விடயமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது மானுடர் செய்யும் வேலைகள் அனைத்தையும் தானியங்கிகள் செய்வதால், தற்போது நிலவும் பொருளாதார நிலை முற்றாக அழிந்து, எல்லாருக்கும் எல்லாப்பொருள்களும், சேவைகளும் கிடைக்க வழி பிறக்குமாம்.

Continue Reading →

சிறுகதை: வேட்டை!

பெஸீ ஹெட்- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -எழுத்தாளர் பற்றி: பெஸீ ஹெட் Bessie Head

தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.  1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான ‘The Collector of Treasures’ எனும் தொகுப்பிலுள்ள ‘Hunting’ எனும் சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. –மொ.பெ.


சிறுகதை: வேட்டை!

ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத அறுவடைக் காலமானது அத் தறுவாயில் முடிந்திருக்கும் என்பதால் எல்லோரிடமுமே சோளம் இருக்கும். அச் சோளத்தோடு கலந்து சுவையான உணவாகக் கொள்ள ஏதேனும் தேவைப்படும். சாதாரணமாக இக் காலத்தில், அவ் வருடத்திற்கான மழை வீழ்ச்சி பெய்யுமெனில் கொடிய மிருகங்களைக் காணக் கிடைக்கும்.

பன்னிரண்டு மாதங்களிலும் மிக அதிகளவில் குளிரான மாதம் ஜூலை மாதம் என்பதனால் இறைச்சியைக் காய வைக்கையில் ஏனைய மாதங்களில் போல கெட்டுப் போகவோ புளுத்துப் போகவோ மாட்டாது. எனவே ஜூலை மாதத்தில் அனேக ஆண்கள் ஊரை விட்டுக் கிளம்பி விடுவார்கள். சிலர் வாரக் கணக்கிலும், சிலர் ஒரு மாதம் தாண்டியும் கூட ஊரைத் தாண்டி வெளியே இருப்பர். அவர்கள் அடர்ந்த வனாந்தரத்துக்குச் சென்று மிகக் கடினமாக வாழ்க்கையைக் கழிப்பர். மரங்களிலிருந்து கிளைகளை வெட்டியெடுத்து முக்கோண வடிவத்தில் நட்டு அதன் மேல் புற்களை கூரையாகப் பரப்பி கூடாரங்களையோ குடிசைகளையோ உருவாக்கிக் கொள்வர். இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதற்குள் புகுந்துகொள்வர். சிங்கங்கள் நடமாடும் பகுதியொன்றுக்கு அவர்கள் வேட்டைக்காக வந்திருப்பின் சிங்கங்களை அச்சுருத்துவதற்காக தமது குடிசைக்கருகில் தீ மூட்டி விசாலமானதாக எரிய விட்டிருப்பர்.

Continue Reading →

இலண்டன்: இரு நூல்களின் அறிமுகமும் ஆதிரை நாவலின் – அரசியலும் அழகியலும் பற்றிய உரையாடலும்

இலண்டன்: இரு நூல்களின் அறிமுகமும் ஆதிரை நாவலின் – அரசியலும் அழகியலும் பற்றிய உரையாடலும்

13 பெப்ரவரி 16 (சனிக்கிழமை) மாலை 4.30 தொடக்கம் 8.30 வரை
இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12 6SG (Near the Eastham Station)

நிகழ்வு-01
நூல்களின் அறிமுகம்
* தமிழகத்தின் ஈழ அகதிகள் – தொ,.பத்தினாதன்
* இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – கருணாகரன்

உரை – எஸ்.வாசன் , கோகுலரூபன் | வழிப்படுத்தல் – ராகவன்

நிகழ்வு-02
ஆதிரை நாவலின் அரசியலும் அழகியலும்
உரை- மாதவி சிவலீலன், ஹரி இராசலெட்சுமி | ஏற்புரை- – சயந்தன் ( நாவலாசிரியர்)
வழிப்படுத்தல் – எம். பௌசர்

Continue Reading →

பெண்களின் குரலாக ஒலித்த பெண்ணியவாதி அருண். விஜயராணி !

அருண். விஜயராணிஇலங்கையில்   இலக்கியம்  பேசி  எழுதி  வாழ்ந்த  ஒருவரை அந்நியதேசத்தில்  கொண்டு  சென்றுவிட்டால்,  அது  கண்ணைக்கட்டி காட்டில்  விட்டதற்கு  சமம்  என்று  சொல்வார்கள்.  இலங்கையில் அவ்வாறு   இதழ்களிலும்    வானொலியிலும்  தனது  பெயரை ஆழமாகப்பதித்திருந்த  அருண். விஜயராணி  கணவருடன்   மத்திய கிழக்கு,    இங்கிலாந்து  என்று  பயணித்து  இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு   வந்தபொழுது    இங்கும்  கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ…?  என  யோசித்திருப்பார்.

ஆனால்,  அவர்  இங்கு  வந்த  காலத்தில்  இலங்கையிலிருந்து  வந்த சிலர்  தமது  பொதிகளுடன்  இலக்கியத்தையும்  சுமந்து வந்திருந்தனர்.   அதனால்  விஜயராணிக்கு  அவுஸ்திரேலியா நால்வகை  பருவகாலங்களைக்கொண்டிருந்தாலும்  கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில்   வசந்த காலம்தான்.

இலங்கையில்,   மத்திய  கிழக்கில்,  இங்கிலாந்தில்  அவர் வாழ்ந்தபோது  செய்ய இயலாமல்போன  ஒரு  ஆக்கபூர்வமான செயலை  அவர்  இங்கு செய்தமைக்கு  இங்கிருந்த  அவருக்கு இங்கிதமான  இலக்கியச்சூழல்தான்  காரணம்.  இங்குதான்  அவருடைய   முதல்  கன்னிமுயற்சி  கன்னிகாதானங்கள்  நூல் வெளியானது.

1989  ஆம்  ஆண்டு  அவர்  இந்த  கங்காரு  நாட்டுக்குள்  வந்தது  முதல் 2015   ஆம்  ஆண்டு  இறுதியில்  இங்கிருந்து  விடைபெற்றது வரையில், அவர்  சுவாசித்தது  கலை,  இலக்கியக்காற்றைத்தான்.

Continue Reading →

மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு! விஜயதாரகை வெளியீடு!

அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான,  கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015  ஆம் திகதி மறைந்த   திருமதி…

Continue Reading →

முகநூல் பதிவுகள்: காய்தல் உவத்தல்!

- நந்தினி சேவியர் -விமர்சனம் என்றால் என்ன என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். நான் ஒரு வாசகன். எனக்கு என்கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தவித சங்கோசமும் இருந்ததில்லை..  எனக்கு வேண்டியவர், என்னோடு ஒன்றாகப் படித்தவர்.. எனது கொள்கையை ஏற்று கொண்டவர்…என்பதற்காக ஒரு படைப்பாளியை ஏற்றி போற்றவோ….விரோதமானவார் உடன்பாடற்றவர் என்பதற்காக அவரது நல்ல படைப்புகளை நிராகரிக்கவோ நான் ஒருப்படேன். விமர்சனம் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதிலும் நான்காட்டமான கருத்துள்ளவன்..

கே.டானியல்…. ஒரு மா.ஓ வாதி. அவர் சாதி அமைப்புக்கு எதிரானவர் அதற்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆனால் தலித்திய சிந்தனையாளர் அல்ல. சாதிச்சங்கங்கள் கூடாது என்கிற சிந்தனையாளர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கச் செயற்பாட்டாளர். இதனை சிலர் மறைக்கப் பார்ப்பது உண்மையில் கண்டிக்கப்படவேண்டியது.

1975 ஆக இருக்காலம் ..அவரது “போராளிகள் காத்திருக்கின்றனர்” நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்திருந்தது. அதற்கான வெளியீட்டு நிகழ்வு. யாழ்/ றிம்மர் மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. தலைமை பேரா. சி தில்லைநாதன் . பேரா.கைலாசபதி சில்லையூர், பாசையூர் தேவதாசன், மற்றும் சிலர் பெயர் நினைவில் இல்லை அவர்களோடு நானும் ஒரு பேச்சாளன்.நிகழ்வுக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக கே டானியலோடு அவரது மோட்டர் சைக்கிளில் நானும் பல இடங்களுக்குச் சென்றேன். குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் வீட்டுக்குச் சென்றது நினைவிருக்கிறது… “நாகம்மா இஞ்சை பாரப்பா உவன் டானியல் வந்திருக்கிறான் உவன் பொடியன் நந்தினியும் வந்திருக்கிறான் எதேனும் தின்னக்கொண்டுவா” என்று எம்மை உபசரித்ததும்..அவர் மனைவி வெட்டித்தந்த மாம்பழத்தை சுவைத்ததும் நினைவில் இருக்கிறது. உரும்பிராய், புன்னாலைகட்டுவன்.என்று பல இடங்களுக்கும் சென்று திரும்பினோம்.

வெளியீட்டு நிகழ்வு…  மண்டபம் நிறைந்த கூட்டம்

Continue Reading →

சிறுகதை: மஞ்சள் பட்டு!

பரதன் நவரத்தினம்1

திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் .

நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் .

இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல சம்பளம் ,இரண்டு கார்கள் ,மூத்தமகனுக்கு ஏழு வயது,இளைய மகளுக்கு நாலு வயது . இனி இதைவிட பெரியதொரு வீடு தேவை என்று தீர்மானித்து அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது .இம்முறை இன்னொருவரின் வீட்டை வாங்காமல் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்குவது என்று தீர்மானித்து எந்த இடத்தில் வாங்குவது ,எந்த வீடு கட்டும் நிறுவனத்திடம் கட்டக்கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் இருவரும் இறங்கிவிட்டார்கள் .

Continue Reading →

சிறுகதை : புனிதமலர்

சிறுகதை : புனிதமலர்பரதன் நவரத்தினம்1.

“தம்பி அவசரம் ஒருக்கா இந்த வார விடுமுறை வீட்டிற்கு வா ” கடிதத்தை வாசித்த பின் அதை மேசை மீது போட்ட மணிவண்ணன் அம்மா ஏன் அவசரமாக வரசொல்லி எழுதியிருகின்றார் என்ற அந்த வரி மட்டும் மனதை குடைந்துகொண்டிருந்தது .

என்னவாக இருக்கும் ?

“பெண் பார்த்திருகின்றேன் வந்து பார் என்பாரோ ,இவன் வரகுணன் படிக்கின்றான் இல்லை, உன்னை பார்க்கவேண்டும் போலிருந்தது”

அம்மா அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை அப்படி எழுதினாலும் சுகம் கேட்பதும் இப்படியான விடயங்களும் தான் அதில் இருக்கும் .

இரண்டு வருடங்களுக்கு முதலும் இப்படி ஒரு கடிதம் வந்தது, அடித்து பிடித்து மணிவண்ணன் வீட்டிற்கு ஓடினால்

“உன்ரை தம்பி இவன் வரகுணன் இனி ஒன்பதாம் வகுப்பு. அவனை கலைப்பிரிவில் விட்டு விட்டார்கள் வெளியில் விடயம் தெரிய வரமுதல் ஒருக்கா போய் பாடசாலை அதிபரை சந்தித்து அவனை விஞ்ஞானபிரிவிற்கு மாத்திபோட்டுவா. ” என்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் தனது முகநூல் பதிவொன்றில் விமர்சனம் பற்றிக்குறிப்பிடும்பொழுது குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தைக்கவர்ந்தது. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “டானியல் யார் ..அவரது கொள்கை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் வீரகேசரி நிறுவனம் யாருடையது என்றும் உங்களுக்குத்தெரியும்….. அந்த நிறுவனம் டானியலின் நாவலை வெளியிடுகிற தென்றால் ஒன்று வீரகேசரி டானியல் பக்கம் மாறி இருக்கவேண்டும் அல்லது டானியல் வீரகேசரியின் பக்கம் மாறி இருக்கவேண்டும்.. இதில் யார் யார் பக்கம் மாறியுள்ளார்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்றேன். கூட்டம் நிசப்தமாக இருந்தது.”

இருவருமே ஒருவர் ஒருவர் பக்கம் மாறியிருக்க வேண்டுமென்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. டானியலுக்குத் தன் படைப்பு பல வாசகர்களிடம் செல்ல வேண்டும். வீரகேசரி நிறுவனத்துக்கு எந்தவொரு படைப்பும் இலாபம் ஈட்டி வருமானத்தைத்தர வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பாவித்துக்கொள்கின்றார்கள். ஆனால் டானியல் வீரகேசரி நிறுவனத்துக்காகத் தன் படைப்பின் உள்ளடக்கத்தை அல்லது வரிகளை மாற்றிச் சமரசம் செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எவ்வளவோ நல்ல மார்க்சிய நூல்களை மேற்கு நாடுகளின். இலாபம் ஈட்டிச் சம்பாதிப்பதையே அடிப்படையாகக்கொண்ட பதிப்பகங்கள் பல வெளியிட்டுள்ளன. மார்க்சின் மூலதனம், மார்க்சின் வரலாறு போன்றவற்றையெல்லாம் , கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எல்லாவற்றையும் அவை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் எல்லாம் மார்க்சியத்தத்துவத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்டன என்று கூற முடியுமா?

Continue Reading →