ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்நாள்: 31-01-2015
நேரம்:
மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

நிகழ்ச்சி நிரல்

உருவாகும் புதிய தலைமுறை
காலம் கடந்தும் திருக்குறள் – திரு.குணரட்ணம் இராஜகுமார்
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ (நாவல்) – செல்வி.ஆரணி ஞானநாயகன்
தமிழ்நதியின் ‘கானல்வரி’ (குறுநாவல்) – செல்வி. மயூ மனோ

இளந்தலைமுறைச் சாதனையாளர்கள் – திரு.த.சிவபாலு
இளந்தலைமுறையினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்கள் – அசுந்தா பேதுரு
பல்லினப் பண்பாட்டுச் சூழலில் புதிய தலைமுறை – மீரா இராசையா

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 7

தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 7நாள்: 01-02-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236
திரையிடப்படும் படம்: தி கிட் (The Kid) (இயக்கம்: Charlie Chaplin)

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை சிறுவர்களுக்கான சினிமா ரசனையை வளர்க்கும் பொருட்டு ஒவ்வொரு சிறுவர்களுக்கான திரைப்படங்களை திரையிட்டு விவாதித்து வருகிறோம். மிக மோசமாக தொலைக்காட்சிகளும், தமிழ் சினிமாவும் குழந்தைகள் மீது பிம்பங்களால் ஆன வன்முறையை செலுத்தி வரும் இந்த சூழலில் குழந்தைகளின் அக உலகை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுவர்களின் அக உலகின் நலனுக்காக அவசியம் இந்த திரையிடலில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டியது நம்முடைய கடமை. எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் இந்த திரையிடலுக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Continue Reading →

இலங்குநூல் செயல் வலர் – க.பஞ்சாங்கம்-11 : பேச்சும், பனுவல் வாசித்தலும்

நாகரத்தினம் கிருஷ்ணாஉயிரியக்கம் ஓசையால் உறவாடுகிறது. புலன் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அனைத்துமே ஒருவகையில் பேச்சின் உட்பிரிவுகள்தாம். நமது  பார்வைக்கும் உறவுக்கும் ஓசையும் மொழியும் தரும் உருமாற்றம் ‘பேச்சு’. மொழியைக் குழைத்தும் பிசைந்தும் கிடைக்கிற பேச்சுக்கு இலக்கியம் ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்தித் தருகிறது பேச்சு செயல்பட சில அத்தியாவசியப் பொருட்கள் தேவை.ஓசை, உச்சரிப்பு, தொனி, கால பிரமாணம், பேசுபவர் கேட்பவர் இருவருக்குமிடையேயான உறவு, பேச்சில் தொடர்புடைய இரு மனிதர்களின் தகுதரம், இடங்கள் (உதாரனத்திற்கு நேருக்கு நேரா, ஆளுக்கொரு திசையில் இருந்துகொண்டா?) பேச்சுக்கு பேசுகின்ற நபரின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அள்விற்கு கேட்பவர் என்று ஒருவர் வேண்டும் இல்லையேல் அப்பேச்சால் எவ்வித பயனுமில்லை. நட்போ பகையோ இரண்டிற்கும் பேச்சு வேண்டும். எண்ணத்தை ஓசையுடன் பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும், அதே எண்ணத்தை மௌனமாக பகிர்ந்துகொள்ள எழுத்து உதவும். பேச்சு மொழி கேட்கும் தருணத்தில் மட்டுமே செயல்படமுடியும், மாறாக எழுத்து வடிவ பேச்சு எழுதிய தருணத்தைக் கடந்து நிற்கும். எடுத்துரைப்பில்  பேச்சு தவிர்க்கமுடியாததொரு தனிமம். எடுத்துரைப்பு குறித்த பேராசிரியரின் திறனாய்வு கட்டுரைகளில் எட்டாவது அத்தியாயத்தில் பேச்சும், அதனைத் தொடர்ந்து பனுவல் வாசிப்பும் இடம்பெற்றுள்ளன

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: கிழக்கிலங்கை மூதூரில் இழப்புகளே வாழ்வாகிப்போன மூத்த படைப்பாளி வ.அ.இராசரத்தினம் அன்பு மனைவிக்கு அவர் கட்டியது மாளிகையல்ல – இதயத்தால் படைத்தார் ஒரு காவியம்!

வ.அ.இராசரத்தினம்முருகபூபதிவீரகேசரியில்   பணியாற்றிய  காலத்தில்  அடிக்கடி  நான்  செய்திகளில்   எழுதும்  ஊரின்  பெயர்  மூதூர்.   ஒரு  காலத்தில் இரட்டை  அங்கத்தவர் தொகுதி.   தமிழர்களும்  முஸ்லிம்களும் புட்டும்   தேங்காய்  துருவலும்  போன்று  ஒற்றுமையாக  வாழ்ந்த பிரதேசம்.  அரசியல்  இந்தத்தொகுதியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. தமிழ் – முஸ்லிம்  அரசியல்  தலைவர்களும்  அப்பாவி  பொது மக்களும்   அதிக  அளவில்  கொல்லப்பட்டிருக்கின்றனர்.  பல   தமிழ்க்கிராமங்கள்  இந்த  ஊரை   அண்மித்திருக்கின்றன. மூதூருக்கு   படகில்  செல்லவேண்டும்  என்றெல்லாம்  சிலர் சொல்லக்கேட்டுள்ளேன்.   ஆனால்,  நான்  இலங்கையிலிருந்த காலப்பகுதியில்   திருகோணமலைக்கோ   அதன்  அயல்  ஊர்களுக்கோ சென்றதில்லை.  அதற்கான  சந்தர்ப்பங்களும்  கிடைக்கவில்லை.  1965  இல்   பாடசாலை சுற்றுலாவிலும்    1978   இல் சூறாவளியின் பொழுதும்தான் மட்டக்களப்பை     தரிசித்தேன்.   இலங்கையில்  பார்க்கத்தவறிய  தமிழ் ஊர்களும்  தமிழ்க்கிராமங்களும்  ஏராளம்.  மன்னார்,  திருக்கேதீஸ்வரம்,  திருகோணமலை,  மூதூர்  என்பனவும்  முன்னர் எனது    தரிசனத்துக்கு கிட்டவில்லை. 1984   இல்  தமிழ்நாட்டுக்கு  இராமேஸ்வரம்  வழியாக சென்றவேளையிலும்    மன்னார்,  தலைமன்னார்  ரயில் நிலையங்களைத்தான்    கடந்திருக்கின்றேனே   தவிர  அந்தப் பிரதேசங்களுக்குள்   சென்று  உலாத்திவிட்டு  வருவதற்கு சந்தர்ப்பமே    கிடைக்கவில்லை. எனினும்  –  குறிப்பிட்ட  தமிழ்ப்பிரதேசங்களை   பார்க்கத்தவறிய   ஏக்கம் மனதில்   நீண்டகாலம்  இருந்தது.    அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து  2009   இல்  போர்  முடிவுக்கு  வந்தபின்னரே 2010  இற்குப்பின்னர்    மேற்சொன்ன  தமிழ்  ஊர்களுக்கும் கிராமங்களுக்கும்    பயணித்துவருவதற்கான  வாய்ப்பு  கிட்டியது.

Continue Reading →

சிறுகதை: வழுக்குப்பாறை(1925)

- யாஸுனாரி காவாபாட்டா -லதா ராமகிருஷ்ணன்தன்னுடைய மனைவியோடும், குழந்தையோடும் அவன் அந்த மலை வெப்ப நீரூற்றுக்கு வந்துசேர்ந் திருந்தான். அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப்பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப்பட்டது. அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூடநம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.

ஜப்பானிய அரிசி பானத்தில் காணப்படும் கசடில் பதப்படுத்தப்பட்டு ஊறுகாயாக்கப்பட்ட வெள்ளரித்துண்டத்தைப் போலிருந்த முகத்தையுடைய சவரத் தொழிலாளி ஒருவன் அவனுக்கு சவரம் செய்துகொண்டிருந்த போது அவன் அந்த தேவதாரு மரத்தைப் பற்றி விசாரித்தான். (இந்தக் கதையைப் பதிவு செய்யும்போது பெண் குலத்தின் நற்பெயரைக் காப்பதில் கவனமாக இருக்கவேண்டும் நான்).

“நான் சிறுவனாக இருந்தபோது, பெண்களைப் பார்க்கவேண்டும்போல் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். அவர்கள் அந்த தேவதாரு மரத்தைச் சுற்றித் தங்களைப் பிணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்காய் விடியலுக்கு முன்பே எழுந்துவிடுவோம். எப்படியோ, குழந்தை வேண்டும் பெண்கள் பைத்தியம் பிடித்தவர்களாய் நடந்துகொள்கிறார்கள்.”

Continue Reading →

மாதொருபாகனை முன்வைத்து மேலும் சில கருத்துப்பகிர்வுகள்

லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப்பது சில அறிவுசாலிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூகமாற்றத்திற்கான முன்முனைப்பை மெய்யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உருவாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்தமாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகு முறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப் படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.

Continue Reading →

சுப்பர் சிங்கர் ஜுனியர் – 4

ஜெசிக்கா யூட்சுப்பர் சிங்கர் ஜுனியர் – 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading →

ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் உடன் போக்கு

ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் உடன் போக்குஅகத்தையும் புறத்தையும் பதிவு செய்திருக்கும்  சங்க இலக்கியங்கள் பெண்ணுக்கான களவு வெளியை வெகுவாகப் பேசுகின்றன.ஆணுக்கொரு பண்பாட்டையும் பெண்ணுக்கொரு பண்பாட்டையும் கொண்ட தமிழ்ச்சமுதாயத்தில் பெண் தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்கவேண்டியிருக்கிறது.பெண் தான் விரும்பிய வாழ்வை மேற்கொள்ள சில நேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உடன்போக்கை, உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகளை அகநானூற்றுப்பாடல்கள் வழியாக ஆய்வுசெய்கிறது இக்கட்டுரை.

உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகள்
 முன்பே குறிப்பிட்டதுபோலத் தலைவி தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்குப் பெண்ணே உடந்தையாகவும் இருந்திருக்கிறாள். கயமனாரின் பாலைத் திணைப்பாடலில் தோழி, “ நின்னை மிக விரும்பிய அன்னை எய்தும் துன்பத்தை உளத்திற்கொண்டும் நின் தமையன்மாரது புலியை ஒத்த அச்சம் தரும் தலைமையை நோக்கியும் நீதான் கலங்காத மனத்தினையுடையையாகி என் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்வாயாக. உடன்போக்கினைத் துணிவாயாக” என்று கூறுகிறாள் (பா.எ.259.)தோழியின் கூற்றின்படி தமையன்மாரது அச்சம்தரும் தலைமையும் இதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அன்னையின் துன்பமும் தலைவியின் களவு வாழ்வு கற்பு வாழ்வை நோக்கிப் பயணிக்கத் தடையாயிருக்கின்றன. இத்தடைகளைத் தகர்த்தெறியவே உடன்போக்கு என்ற நிகழ்வு. உடன்போக்குக்குக் காரணமாயிருப்பவள் தோழியே.  கயமனாரின் மற்றொரு பாடலில் தோழி, நம் தாய் தந்தையர் மணத்திற்கு ஆவன செய்துள்ளனர், நான் தலைவனுடன் அரிய காட்டுவழியில் செல்வதை ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறுகிறாள்1. உடன்போக்குக் காரணமான தோழியே தலைவியின் நிலையைத் தலைவனுக்குஉணர்த்தும் வாயிலாகவும் அமைகிறாள்.

Continue Reading →

மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

லதா ராமகிருஷ்ணன்மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு,  மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது.  கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.

Continue Reading →

மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

லதா ராமகிருஷ்ணன்மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு,  மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது.  கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.

Continue Reading →