இன்றல்ல நேற்றல்ல….

இன்றல்ல நேற்றல்ல....’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.

”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு

இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.

’நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று 

பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு 

அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.

‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’ 

என விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு, ஊர்ப்பெண்களையெல்லாம்,

Continue Reading →

இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி! கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள்!

இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி! கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள்!” தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு. ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம் சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது”

இந்த வரிகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை சுமார் 32 வருடங்களுக்கு முன்னரே (27-04-1985) வீரகேசரியில் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் எழுதியிருக்கின்றேன். எனக்கு இந்தப்புனைபெயரைச்சூட்டியவர் அச்சமயம் வீரகேசரி பிரதம ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன்.  மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன!!?? இலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கலுக்கென அமைச்சும் இயங்குகின்றது. 1977 இற்குப்பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, தாம் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிக்கு “கையசைத்துவிட்டு” , அன்றைய ஜே. ஆரின். ஐ.தே.க. அரசுடன் “கைகுலுக்க” வந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்டது தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சு. அதன்பின்னர் இந்த அமைச்சு, பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளினாலும் யாராவது ஒரு தமிழருக்கு – (அவ்வேளையில் ) அரசு ஆதரவாளருக்கு தரப்படும். இது தொடர்கதை. ஆனால், தமிழ் மொழி அமுலாக்கலிலும் இதுதான் தொடர்கதை!?

எனது கட்டுரையில் வீதிகள், ஒழுங்கைகள், தெருக்கள் யாவும் ” மாவத்தைகளா”கிவிட்டதையும், கிராம எழுச்சி, கிராமோதயவாகிவிட்டிருப்பதையும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சதொசவாகிவிட்டதையும், கிராம எழுச்சிச்சபை, “கிராமோதய மண்டலய” என மாறியிருப்பதையும் இவ்வாறு மொழிக்கபளீகரம் செய்யப்பட்ட இதர தமிழ் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன். இன்றும் இலங்கையில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது!!! அரசின் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்களின் பெயர்களைப்பாருங்கள்: ஜாதிக சம்பத, சம்பத்ரேகா, செவன, கொவிசெத, அத கோடிபதி, நியத்த ஜய, கோடிபதி சனிதா, சுபிரி தெலக்‌ஷபதி. இலங்கையில் மூவின மக்களும் ( இதில் இரண்டு தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள்) இந்த அதிர்ஷ்டத்திற்காக பணம் கொடுத்துவருகிறார்கள். இலங்கை நாளிதழ்களிலும் தினமும் வரும் அதிர்ஷ்ட லாப விளம்பரங்களில் தமிழைத்தேடவேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியின் கௌரவிப்பு விளம்பரத்திற்கும் “ரண் கெகுளு” என பெயர் சூட்டப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. இந்தப்பின்னணிகளுடன் மட்டக்களப்பில் வதியும் எழுத்தாளரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்கள் நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில் எழுதியிருக்கும், ” கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்” என்ற ஆய்வை பார்க்கலாம். அதிலிருந்து ஒரு பந்தி:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் ‘சிறுவர் கதைகள்’ தொகுப்பும், அதன் சிறப்பும்!

வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!நான் எப்பொழுதுமே ஒரு குழந்தையிலக்கிய நூலொன்றினை அணுகும்போது ஒரு குழந்தை தன் சொந்த அனுபவத்தில் எவ்விதம் அந்நூலினை அணுகுமோ அவ்விதமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகுவேன். என் பால்ய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த குழந்தைக் கதைத் தொகுப்புகளில்  முக்கியமான அம்சம். அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியமும், அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும், உள்ளே ஆக்கங்களுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் மற்றும் கூறப்படும் மொழியும்தாம். எனக்கு எப்பொழுதுமே நூலொன்று பிடிப்பதாகவிருந்தால் மேற்கூறப்பட்டுள்ள சகல அம்சங்களும்  முக்கியமானவை. எனக்கு மட்டுமல்ல குழந்தைகள் அனைவருக்கும் இக்கூற்று பொருந்தும். குழந்தைப்பருவத்தில் குழந்தையொன்றின் சிந்தையில் நூலொன்றின் அட்டைப்படம் கற்பனைச்சிட்டினைச் சிறகடிக்கப் பறக்க வைக்கின்றது. அந்நூலிலுள்ள ஓவியங்களிலுள்ள உருவங்கள் அவை மானுடர்களாகவிருக்கட்டும் அல்லது ஏனைய உயிரினங்களாகவிருக்கட்டும் அவற்றைப்பார்க்கும் குழந்தையொன்றின் உள்ளத்தில் களிப்பினைத தருகின்றன. சிறு வயதில் கண்ணன் சிறுவர் சஞ்சிகையில் வெளியாகும் சிட்டுக்கள் போன்ற உயிரினங்களைப்பற்றிய குழந்தைக் கவிதைகளை இரசிக்கும் அதே ஆர்வத்துடன் நான் அப்படைப்புகளுடன் வெளியாகும் ஓவியங்களையும் இரசிப்பேன். இவற்றைப்போல் அப்படைப்புகளை வெளிப்படுத்தும் எளிமையான மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்தவை. வாண்டுமாமா, குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் படைப்புகளின் சிறப்புக்கு முக்கியக்காரணம் அவற்றை விபரிக்கும் எளிய, இனிய மொழிநடையே. இவ்விதமான என் மற்றும் குழந்தைகளின் பொதுவான உளவியலின் அடிப்படையிலேயே நான் இவ்வகையான குழந்தைப்படைப்புகளையும் சரி, நூல்களையும் சரி அணுகுவது வழக்கம். அதே அணுகல் முறையினைத்தான் அண்மையில் ‘டொராண்டோ’ நகரில் வெளியான எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் கையாண்டேன். அவற்றில் இங்கு நான் எடுத்துக்கொண்ட நூல் அவர் எழுதிய ‘சிறுவர் கதைகள்’ என்னும் நூலே.

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா இலங்கையில் தெல்லிப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..யாழ் மகாஜனாக் கல்லூரி முள்ளாள் மாணவி. இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பேராதனை வளாகத்துப் பட்டதாரி. தற்போது ‘டொராண்டொ’க் கல்விச்சபையின் தமிழ் மொழி ஆசிரியராகவும், மொழி மதிப்பீட்டளராகவும் மற்றும் பாட விதான அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்களிலொருவராகவுமிருக்கின்றார். இவரது இந்தப்பின்னணி இவ்வகையான நூல்களை எழுதுவதற்கு மிகவும் உதவும்; உதவியிருக்கின்றது. இந்நூலுக்குரிய ஓவியங்களை , அட்டைப்படங்களுட்பட (முன் அட்டை மற்றும் பின் அட்டை)  வரைந்திருப்பவர் ஓவியர் ஜீவா ( ஜீவநாதன்).

Continue Reading →

கவிதை: மின்னுவதெல்லாம்…..

- தம்பா (நோர்வே) -சாவே வாழ்வான போதினிலும்
குண்டுமழையில் கவசக் குட்டையாகி
மக்களை காத்தவனுக்கு
கைகளையும் கால்களையும்
காணிக்கையாக பெற்றுக் கொண்ட போர்
தண்டனையாக
ஒரு வேளை உணவுக்காக
கை ஏந்தி நிற்கவைக்கிறது.

`பெடியள்´, `போராளி´ என
பல்லாக்கு தூக்கி
போற்றிப் பாடியவன்,
முடம்
பரதேசி
பாரச்சுமை என
ஒதுக்கி ஓடுகிறான்.

Continue Reading →

அஞ்சலி: கலாநிதி தர்மசேனா பத்திராஜா ( Dr.Dharmasena Pathiraja)

கலாநிதி தர்மசேன பத்திராஜா

பிரபல சிங்களத்திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கலாநிதி தர்மசேன பத்திராஜா இன்று கண்டியிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்திரைப்பட உலகில் தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தடம் பதித்தவர் இவர். தமிழில் வெளியான எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் ‘பொன்மணி’ புனைகதையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுக் கலையுலகில் கவனத்திற்குள்ளாகிய ‘பொன்மணி’ என்னும் தமிழ்த்திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் சிங்களத்திரையுலகில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ்த்திரையுலகிலும் தவிர்க்கப்பட முடியாத இயக்குநர்களில்ருவராகத் தடம் பதித்தவர் இவர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை சர்வதேசத்திரைப்பட விழாக்களில் (மாஸ்கோ, இலண்டன், இத்தாலி, இந்தியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றவையுட்பட) திரையிடப்பட்டுள்ளன. இவர் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் நடுவராகவும் விளங்கியிருக்கின்றார். இவரது படைப்புகளைப்பற்றிய ஆவணத்திரைப்படங்கள் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டுள்ளன. இவரது திரைப்படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. இலங்கைச்சினிமாவுக்கு இவராற்றிய பங்களிப்புக்காகக் ‘கோல்டன் லயன்’ விருதினையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள் (1-3)

- வ.ந.கிரிதரன் -காலத்தால் அழியாத கானங்கள் 1: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

“நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?”

தமிழர்களின் கவிதை வரலாறானது சங்கப்பாடல்களில் தொடங்கி இன்றைய தமிழ்ச்சினிமா மெல்லிசைப்பாடல்களையும் உள்ளடக்கியதொன்றுதான் என்பதை இன்று கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் , திறனாய்வாளர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளத்தொடங்கி விட்டார்கள். சங்கப்பாடல்கள் எவ்விதம் அகம், புறம் பற்றிப்பாடினவோ அவ்விதமே இம்மெல்லிசைப்பாடல்களும் மானுடரின் அகம் , புறம் பற்றிப் பல் கோணங்களில் மானுட வாழ்வை, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதலின் சிறப்பை, காதலின் இழப்பையெல்லாம் அற்புதமான நெஞ்சையள்ளும் மொழிநடையில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் வைரமுத்து  போன்ற கவிஞர்கள் பலர் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது பாடல் வரிகளுக்கு உணர்வூட்டிய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் பங்களிப்பையும் புறக்கணித்து விட முடியாது.

காதலின் பிரிவுதுயரை வெளிப்படுத்தும் சிறப்பான பாடலிது. இப்பாடலின் சிறப்புக்கு மெல்லிசை மன்னர்களின் இசையும், சுசீலாவின் குரலும் ஏனைய முக்கிய காரணங்கள். கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு தன் குரலால் உயிரூட்டும் சுசீலாவின் மிகச்சிறந்த பாடல்கள் வரிசையில் வைத்தெண்ணப்படும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். இப்பாடல்களெல்லாம் மானுடரின் பல்வேறு பருவங்களில் அவர்தம் மனதுக்கு ஆறுதளிப்பவை; இதமாகவிருப்பவை. இப்பாடலின் ‘யு டியூப்’  காணொளி ஒன்றுக்கான  எதிரிவினைகளில் முதியவர் ஒருவர் எழுதியிருந்த கருத்தொன்று என் நெஞ்சினைத் தொட்டது. அதனைக் கீழே பதிவு செய்கின்றேன். அத்துடன் தெரிவிக்கப்பட்டிருந்த மேலும் சில கருத்துகளையும் பதிவு செய்கின்றேன். இக்கருத்துகளெல்லாம் இவ்விதமான மெல்லிசைப்பாடல்கள் எவ்விதம் மானுட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை வெளிப்படுத்துவன.

Continue Reading →

அஞ்சலி: திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள் – இலங்கைத் திரைப்பட உலகை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞன்! தமிழ்ப்பேசும் மக்களின் கனவுகளை ஆவணமாக்கிய மனிதநேயரையும் இழந்துவிட்டோம்!

திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள்இலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர்  திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை , கண்டியில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக செய்தி வந்தது. இன்றைய தினமே மாலையில் கண்டி மஹியாவ மயானத்தில் அவருக்கு இறுதிநிகழ்வுகளும் நடந்துவிட்டன! அண்மையில்தான் அவருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தமிழ்ப்பிரதேசத்திலிருந்தே விருது பெற்றுக்கொண்டு விடைபெற்றுவிட்டார் என்பதை அறியும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. தர்மசேன பத்திராஜ தமிழ்ப்பேசும் மக்களின் உற்ற நண்பர். தமிழ் கலா ரசிகர்களினால் போற்றப்பட்டவர். இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குநர். தரமான சிங்களப்படங்களையும் குறும்படங்கள் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றையும் இயக்கியவர். பழகுதற்கு இனியவர். எளிமையானவர்.  சிறுபான்மை இனமக்களிடம் அளவுகடந்து நேசம் பாராட்டியவர். விசால மனம்படைத்த மனித உரிமை செயற்பாட்டாளர். எல்லாவற்றுக்கும் அப்பால் மனித நேயக்கலைஞர். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானவர்.

அவரை நான் முதல் முதலில் சந்தித்ததும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு பகல்பொழுதில்தான். அதனால் அந்த முதல் சந்திப்பும் மறக்கமுடியாதது. யாழ்ப்பாணத்தில் தயாராகிக்கொண்டிருந்த எழுத்தாளர் காவலூர் ராசதுரையின் பொன்மணி படப்பிடிப்பு வேலைகளுக்காக தர்மசேன பத்திராஜாவும் அவரது ஒளி – ஒலிப்பதிவாளர் மற்றும் சிலரும் அன்றைய தினம் மதியம் காங்கேசன் துறை நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்தார்கள். அன்றைய சந்திப்பு எதிர்பாராதது. எனினும் – அவரை அதன்பின்னர் சந்திப்பதற்கு  காலம் கடந்து நான் அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. பொன்மணியில் திருமதி சர்வமங்களம் கைலாசபதி – டொக்டர் நந்தி – பொறியிலாளர் திருநாவுக்கரசு – ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா – கலைஞர் சோக்கல்லோ சண்முகம் – மௌனகுரு – சித்திரலோக தம்பதியர் – பவாணி திருநாவுக்கரசு – திருமதி காவலூர் ராசதுரை உட்பட பலர் நடித்தனர். கதாநாயகியாக திரைப்பட நடிககை சுபாஷினி நடித்தார். பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் பாடல்கள் இயற்றினார். காவலூர் ராசதுரையின் மைத்துனர் தயாரித்திருந்தாலும் பொன்மணியின் கதை – வசனம் நிருவாகத்தயாரிப்பு முதலான பொறுப்புகள் அனைத்தையும் சுமந்தவர் காவலூர்.

Continue Reading →

அஞ்சலி: ஈழத்தின் இயற்கை எழிலையும் பொருளாதார வளத்தையும் இன ஐக்கியத்தையும் பொப்பிசையில் பேசுபொருளாக்கிய கலைஞன் தமிழ்த்திரையுலகிலும் காலூன்றிய பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்

ஈழத்தின் இயற்கை எழிலையும் பொருளாதார வளத்தையும் இன ஐக்கியத்தையும் பொப்பிசையில் பேசுபொருளாக்கிய கலைஞன் தமிழ்த்திரையுலகிலும் காலூன்றிய  பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய வேளையில், 1983 தொடக்கத்தில் தமிழக எழுத்தாளர்கள் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன், தொ.மு. சி. ரகுநாதன் ஆகியோரையும் அழைத்திருந்தது. இவர்களில் ரகுநாதன் பாரதி இயல் ஆய்வாளர். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அத்துடன் அவர் எனது அப்பாவின் வழியில் உறவினர். எனக்கு பாட்டா முறை. இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் தமிழகத்திற்கு திரும்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது ” இங்கிருந்து எடுத்துச்செல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக்கேட்டேன். உடனே அவர் ஏ.ஈ. மனோகரனின் ” சுராங்கனி…. சுராங்கனி… சுராங்கனிட்ட  மாலு கெனாவா..?” என்ற பாடல் கஸட் வாங்கித்தரமுடியுமா?” என்று கேட்டார். நான் மூர்ச்சையாகி விழாமல், அவரையே கண்இமைக்காமல் சில கணங்கள் பார்த்தேன்.  இலங்கையிலிருந்து அவர் எடுத்துச்செல்லவிரும்பிய ஈழத்தின் பொப்பிசைச்சக்கரவர்த்தியின் அந்தப்பாடல் இன்றும் பல மொழிகளில் பலரால் பாடப்படுகிறது. மனோகரன் இந்தப்பாடலை ஹிந்தி உட்பட எட்டு மொழிகளில் பாடியிருக்கிறார். இசைஞானி இளையராஜாவும் சுராங்கனி மெட்டில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஹிந்தி திரையுலகில் பிரபல்யமான பாடகி ஆஷாபோன்ஸ்லே, ” “சுராங்கனி கமால் கரோகி” என்ற பாடலை பரமாத்மா என்ற படத்தில் பாடியிருப்பதாக அறியப்படுகிறது.  அண்மையில் வேற்று நாட்டு மங்கையொருவராலும் இந்தப்பாடல் கிராமிய காட்சிகளுடன் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு ஒலித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றேன்.

அவ்வாறு படித்தவர் முதல் பாமரர்கள் வரையில் பெரிதும் கவரப்பட்ட பொப்பிசைப்பிதா என அழைக்கப்பட்ட ஏ.ஈ. மனோகரன் சென்னையில் மறைந்துவிட்டார். இவரது மறைவின் பின்னர் இவர்  தொடர்பாக சென்னையில் வெளியான அஞ்சலிக் கட்டுரைகளில், இவரால்தான் “சின்னமாமியே உன் சின்னமகளேங்கே..” என்ற பாடலும் பாடப்பட்டதாகவும், அந்தப்பாடலும் இவரால்தான் பிரபல்யம் அடைந்ததென்றும் தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. “சின்னமாமியே… உன் சின்ன மகளேங்கே….” பாடலைப்பாடி பிரபல்யப்படுத்தியவர் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் புகழ்பெற்ற  கலைஞர் நித்தி கனகரத்தினம் என்பதே சரியான தகவல்.  நித்திகனகரத்தினமும் ஏ. ஈ. மனோகரனும் நல்ல நண்பர்கள்.  நித்திகனகரத்தினத்தின் குறிப்பிட்ட பாடல் வரிகளை சற்று மாற்றிப்பாடியவர்தான் ஏ. ஈ.மனோகரன்.  அந்த வரிகள் ” பட்டுமாமியே….” எனத்தொடங்கும் இந்தப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடினார்.

Continue Reading →

இலண்டனில் சலங்கைகளின் சங்கமம்

இலண்டனில் சலங்கைகளின் சங்கமம்

‘கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில் மட்டுமன்றி இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களிலும் தனது நாட்டியத் திறமையால் கலாநர்த்தகியாகத் திகழும் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா லண்டனில் விடாமுயற்சியுடன் தனது ‘சலங்கை நர்த்தனாலயா’ நடனப் பள்ளி மாணவர்களுக்குக் களம் அமைத்து, அவர்களின் நாட்டியத் திறமைகளை வெளிக்கொண்டுவருவது பாராட்டுக்குரிய விடயம்’ என்று முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் விரிவுரையாளரும்,  சுயவயெஅ குழரனெயவழைn ஐ நடாத்தி வரும்  கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அண்மையில் லண்டன் வின்சன்சேர்ச் மண்டபத்தில் இடம்பெற்ற சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்பு வழங்கிய ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியில் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்தார். அவர் மேலும்  பேசுகையில் லண்டனில் பல்வேறு நிகழ்வுகளின் மத்தியில் மாணவர்களை ஒருங்கிணைத்து கணேச ஸ்துதி, அலாரிப்பு, .பதம், குறத்தி நடனம், சீதா கல்யாணம், முருகன் கௌத்வம், சிவ கிருத்தி போன்ற நாட்டிய வடிவங்களால் அலங்கரித்தமை மிக மெச்சத்தக்க விடயம். இதற்கு பார்வையாளர்கள்; மேலும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த அமைப்பின் தலைவியான நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அவரது மகளான உயிரியல் பட்டதாரியான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் மாணவர்களுடன் இணைந்து உறவும் மரபும் சேர்வதுபோல் வாழ்க்கையிலும், மகத்தான நாட்டியக் கலையிலும் ஒன்றிணைவது பார்வையாளர்களை மேலும் ஈர்ப்புக்கொள்ள வைத்தது என்றால் அது மிகையாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்” .பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறந்து கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல்!

கோமகன்” எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்.” என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர். கோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து கசப்பான அனுபவங்களினால் நொந்து நூலாகிப்போனவர். கசப்பான அனுபவங்களை சுமந்தவாறு, தொடர்ந்தும் பல அமைப்புகளில் ஈடுபாடு காண்பித்துக்கொண்டிருப்பவர்.

” நீங்கள் சொல்வது உண்மைதான். எழுத்தாளர்களிடையே ஒற்றுமை இருக்காதுதானே…? பாண்டியன் சந்தேகம் தீர்ப்பதற்காக அவன் மனைவி கூந்தலில் வரும் வாசனை இயற்கையானதா..? செயற்கையானதா..? என ஆராய்ந்து சண்டை பிடித்தவர்கள் சிவனும் நக்கீரனும். கம்பரும் ஒட்டக்கூத்தரும் பிடிக்காத சண்டையா…? என்னதான் சண்டை பிடித்தாலும் சிவன், நக்கீரனை எரித்தவாறு எமது தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் உயிரோடு எரிக்கமாட்டார்கள். ஆனால், எழுத்தால் எரிக்கப் பார்ப்பார்கள்!!!

தத்தம் எழுத்துக்களினாலேயே கருத்தியல்களை எதிர்ப்பார்கள். அரசியல் மற்றும் பொது அமைப்புகள், கோயில்களில் பொலிஸ் வருமளவுக்கு சண்டைகள் நடக்கின்றன. எமது எழுத்தாளர்கள் அந்தளவிற்குச் செல்லமாட்டார்கள்” என்று எமது எழுத்தாளர் வர்க்கத்தின் மகிமை பற்றிச்சொன்னேன். யாழ்ப்பாணத்தில் 1960 களில் கூழ்முட்டை எறிந்த எழுத்தாளர்கள் மறைந்துவிட்டார்கள். புகலிடத்தில் சமகால எழுத்தாளர்கள் வேறு வழிகளில் தமது எதிர்ப்புகளை காண்பிக்கிறார்கள்.  பிரான்ஸில் வதியும் கோமகன் தொகுத்திருக்கும் நேர்காணல் நூலான குரலற்றவரின் குரல் பற்றி எழுத முற்பட்டபோதுதான் மேற்கண்ட உரையாடல் நினைவுக்கு வந்தது. எழுத்தாளர்கள் அனைவருமே ஒரேநேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான். அச்சாதனையை நிகழ்த்தியிருப்பவர் கோமகன். இவரது இயற்பெயர்: இராஜராஜன். ‘இராஜ ராஜா’ வுக்குரிய கம்பீரத்தோற்றம் கொண்டவர். அவர் எழுத்தாளர்களிடத்தில் முன்வைத்திருக்கும் கேள்விகளிலும் கம்பீரம் தெரிகிறது. குரலற்றவரின் குரல் பற்றி சொல்வதற்கு முன்னர் கோமகன் பற்றிய சிறிய அறிமுகத்தை தருகின்றோம்.

எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒரு பேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலான இதழ்கள், இணைய இதழ்களில் எழுதிவரும் கோமகன், இதுவரையில் சுமார் முப்பது சிறுகதைகளைப் படைத்திருப்பவர். கோமகனின் தனிக்கதை என்ற சிறுகதைத்தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை  ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் எழுதியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து ‘நடு’ என்னும் இணைய இதழை வெளியிட்டுவரும் அதன் பிரதம ஆசிரியர்.  சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் என்று மொத்தம் மூன்று சிறப்பிதழ்களை  இதுவரையில் ‘நடு’ வரவாக்கியிருக்கிறது. பிரான்ஸிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி இதழில் கோமகன், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர் யோ. கர்ணனின் நேர்காணலை பதிவுசெய்த முதல் அனுபவத்தின் தொடர்ச்சியாக மேலும் 13 பேரைத்தொடர்புகொண்டு இந்த நேர்காணல் தொகுப்புக்காக உழைத்திருக்கிறார்.

Continue Reading →