எதிர்வினை: என்னைக் கவர்ந்த கவிதை வரிகள்

[ பதிவுகளில் வ.ந.கிரிதரனின் பக்கத்தில்  ‘சிலோன் விஜயேந்திரன்’ பற்றி வெளியான குறிப்பு பற்றிய குரு அரவிந்தனின் எதிர்வினை இது. இங்கு ‘சிலோன்’ விஜயேந்திரன் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்து…

Continue Reading →

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சிறுகதைப் பயிலரங்கு

சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று  கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று  ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று  கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று  ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

‘லட்சக்கணக்கான வாசர் வியாபத்தைக் கொண்ட,  தமிழ் இலக்கிய உலகம் அறிந்த எழுத்தாளர் குரு அரவிந்தன், சிறுகதைகள் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்’ என்று எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய குரு அரவிந்தன் சிறுகதை பற்றிக் குறிப்பிடும் போது தனது அனுபவங்களையே முன்வைத்தார்.

சிறுகதை பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சீரான நடையோடு கற்பனைத் திறன் கலந்து சொல்வதுதான் சிறுகதை என்பது எனது கருத்து என்று குறிப்பிட்ட அவர், சிறுகதை மையக்கருவோடு அதாவது கதையின் நோக்கத்தோடு ஒன்றிப்போனால் மிகவும் சிறப்பாக அமையும். வாசகர்களுக்கு அதை வாசிக்கும் போது அந்தக் கற்பனைப் புனைவு மனதில் ஏதாவது நெகிழ்வை ஏற்படுத்துமானால், அது தரமான ஒரு சிறுகதையாகக் கணிக்கப்படலாம். சிறுகதை எப்படி இருக்கக்கூடாது என்று பார்ப்போமேயானால், கட்டுரைத் தன்மையில் இருந்து மாறுபட்டிருக்க வேண்டும். சிறுகதையில் உபகதைகள் சொல்ல வெளிக்கிட்டால் அது குறுநாவலுக்கான முயற்சியாக மாறிவிடலாம். அதுமட்டுமல்ல, சிறுகதையில் உபதேசத்தைத் தவிர்ப்பதும் நல்லது என்றே எண்ணுகின்றேன் என்றார்.

Continue Reading →

English Translation of Writer Asokamitran’s book ‘Chennai Nagaram – Oru Paarvayil’ by Dr.K.S.Subramanian

Asokamitran:

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

Book Release Function held on the 14th of August, 2015. Veteran Tamil writer Asokamithran’s articles on the various parts of the city of Chennai, as they were several decades ago , initially written and serialized in an Internet Magazine and later on published as a volume by Kavitha Publications. Now, Dr.K.S.Subramanian who has been translating Tamil books of his choice, both prose and poetry into English, mostly without accepting any remuneration (He calls it ‘labour of love!’) has translated this book into English. In Tamil the title is ‘Chennai Nagaram – Oru Paarvayil’ and in English the title is ‘Chennai City: A Kaleidoscope’ and it is now  published by Westland Publishers.

About the Author: Asokamitran:
Chennai City: A Kaleidoscope is a compilation of essays penned by veteran writer Asokamitran. He moved to Chennai as a young man of twenty, and having spent more than sixty years in his adopted home now, Asokamitran is well placed to describe the shifts and changes that Chennai has undergone, and he does so beautifully, with his trademark wit, perceptiveness and lucidity. Its waterways, its stations, its lanes and alleys: this is a wonderful ode to city, and a must-read for both, natives of Chennai, and visitors.

Translator Dr.K S Subramanian: Dr.K.S.Subramanian (1937) served the Govt. of Indian (IRAS) for fifteen years (1960-1975) and the Asian Development Bank at Manila for twenty-two years(1975-1998), retiring as a Director. Since his return to India in 1998 he has been involved in literary and social pursuits. He has translated from Tamil to English over 35 literary works encompassing novels, short novels and collections of poetry, short-stories and essays. His Tamil writings on literary, social and developmental themes have appeared in seven volumes. Significant works – Novels, novellas and Tamil New Poetry – have been rendered into English by him. Seven anthologies of modern Tamil poetry have been compiled by him and rendered into English. He has also translated poems of contemporary poets. So far he has translated about 40 per cent of Mahakavi Subramania Bharathis corpus of poetry.

Continue Reading →

சில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்

கவிஞர் அய்யப்ப மாதவன்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

நவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய  முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.

பரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட  இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன?]

இவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல்  முகவரி: iyyappan66@gmail.com.

இதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

Continue Reading →

சில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்

கவிஞர் அய்யப்ப மாதவன்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

நவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய  முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.

பரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட  இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன?]

இவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல்  முகவரி: iyyappan66@gmail.com.

இதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

Continue Reading →

இசை – தமிழ் மரபு (3)

- வெங்கட் சாமிநாதன் -பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பக்தி சகாப்தத்தின் இலக்கிய மேதைமை கம்பனில் தன் உச்சத்தை அடைந்து பின் சரிவடையத் தொடங்கி, 16  – ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட வறண்டு போனது அம்மேதைமை இசையிலும், நடனத்திலும் தன் கவனத்தை முழுவதுமாய் திருப்பியது,  இதற்குப் பின் தமிழ் நாடு இவ்விரண்டு துறைகளிலும் கற்பனை, மேதைமை இரண்டிலும் மிகச் சிறந்து மலர்ந்தது. பல்லவர்களும் சோழர்களும் கோவில்களை தமிழர் வாழ்க்கையின் உட்கருவாய் மாற்றியதில் அவர்களது நடவடிக்கைகள் கோவிலைச் சுற்றியே இருந்தன .விஜயநகர சாம்ராஜ்யமும் அவர்களுக்குக் கீழ்ப்பட்ட நாயக்கர்களும் இத்தகைய அமைப்புகளை ஒருங்கிணைத்து அவற்றை இன்னும் வலுப்படுத்தினர். இத்தகைய நிகழ்வுகள் வடக்கில் பழங்காலத்தில் குப்தர்களின் காலத்துக்குப் பின் எப்போதும் காணப்படவில்லை, அது தேய்ந்து போன நினைவுகளாயிற்று., உயிர்ப்புள்ள நிஜம் அல்ல. தெற்குக்கு அதன் சரித்திரம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது,  அதற்கு சாதகமாக இருந்தது   வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின்  இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள ச்ப்தங்கள்  அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும்  அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு  பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர். . கோவில் திருவிழாக்களின்போது வாரக்கணக்கில் பாட்டுக் கச்சேரிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன, வருடம் முழுவதும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன, தெருக்களில் ஊர்வலமாய் நாகஸ்வர இசையும், நடனமும் நிகழ்த்தப்பட்டன. திருமணங்களிலோ அல்லது செல்வந்தர் வீட்டு விசேஷங்களிலோ நடந்த பாட்டுக் கச்சேரிகளும் நடன கச்சேரிகளும் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. விடியலுக்கு முன்பாடகர்கள் கூட்டமாய் தேவாரமும்,  பிரபந்தமும், தியாகராஜ கிருதிகளும் பாடிக்கொண்டு போகும் காலைப் பொழுதுகளில் சாலைகள் விழித்தன. சங்ககாலத்தில் பாணர்களும் பொருணர்களும், பக்தி சகாப்த நூற்றாண்டுகளில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இதைத்தான் செய்தனர்.

Continue Reading →

அஞ்சலி: சாந்தி சச்சிதானந்தம் பற்றிச் சில நினைவுகள்…

சாந்தி சச்சிதானந்தம் நாடறிந்த சமூக சேவையாளர்; எழுத்தாளர். விழுது அமைப்பின் ஸ்தாபகர். இலங்கையிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்து பெண்களின் உரிமைக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடி வந்தவர். இவரை எனக்கு 1978இலிருந்து தெரியும். என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றவர். இவரது தந்தையார் சச்சிதானந்தம்தான் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970இல் நல்லூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர். சிறிது காலத்தின் முன்புதான் என் முகநூல் நண்பர்களிலொருவராக இணைந்து கொண்டார். இவரது திடீர் மறைவு யாரும் எதிர்பாராதது. நீண்ட நாள்களாக இவர் நோய்வாய்ப்பட்டிருந்த விடயமே இவரது மறைவினையொட்டி வெளியான செய்திகளின் வாயிலாகவே அறிந்துகொண்டேன். இவரது திடீர் மறைவானது பழைய நினைவுகள் சிலவற்றை அசைபோட வைத்துவிட்டது.

மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் எங்கள் வகுப்பில் இவர் ஒருவரே தமிழ்ப்பெண். மிகவும் துணிச்சல் மிக்கவர். மிகவும் இனிமையாகப்பாடும் குரல் வளம் மிக்கவர். மொறட்டுவைப்பல்கலைக்கழக நிகழ்வுகளில் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்திருக்கின்றார். பெண் உரிமை பற்றி அக்காலகட்டத்திலேயே தீவிரமாக வாதிடுவார். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தில் நான் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்தபொழுது இவர் சங்கத்தின் உபதலைவராகக்கடமையாற்றினார்.

ஒருமுறை எம் வகுப்பைச்சேர்ந்த சிங்கள, தமிழ் மாணவர்கள் அனைவரும் ‘மலைநாட்டிலிருந்த World’s Endற்குச் சுற்றுலா சென்றிருந்தபொழுது இவரும் வந்திருந்தார். இவர் பொதுவாக மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு வருவதில்லை அந்த ஒரு சுற்றுலாவைத்தவிர.

அவ்வப்போது நாம் ஓய்வாகக்கூடியிருக்கும் வேளைகளில் மட்டக்களப்பைச்சேர்ந்த மோகன் அருளானந்தனையும், இவரையும் பாடல்களைப்பாடச்சொல்லி வற்புறுத்துவோம். ‘அமுதைப்பொழியும் நிலவே’ பாடலை மிகவும் இனிமையாகப்பாடுவார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும்: 109: ஈழத்துத்தமிழ்க்கவிதை வாசிப்போமா? , கருந்துளைகள் பற்றி ஹார்கிங்! , ஓடையிலே என் சாம்பர் கரையும் போதும் , ஒரு கணத்து மின்னலும், அரைக்கணத்து மின்னலும் இரு கவிஞர்களும் & பதிப்பகத்தார் விடும் தவறுகள் பற்றி….

ஈழத்துத்தமிழ்க்கவிதை வாசிப்போமா? (1) : மூட்டைபூச்சியினைத்தூது விடும் கவிஞன்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்தமிழ்க்கவிஞர்கள் அன்னத்தைத் தூது விட்டதைப் படித்திருக்கின்றோம். வெண்ணிலாவை, வெண்முகிலை, நதி அலையினை, புறாவினையெல்லாம் தூது விட்டிருப்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால் மூட்டைப் பூச்சியினை யாராவது தூதனுப்பியிருப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? நம்மூர்க்கவிஞனொருவன், மீன்பாடும் தேனாட்டுக் கவிஞனொருவன் மூட்டைப்பூச்சியினைத்தூதுவிட்டுக் கவி பாடியிருக்கின்றான். அவன் வேறு யாருமல்லன். அமரக் கவிஞன் இராஜபாரதிதான் அவன். ‘ஓடையிலே என் சாம்பர் ஓடும்போதும், ஓண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்’ என்று பாடிய அதே கவிஞன் இராஜபாரதிதான் அவன்.

Continue Reading →

அவ்வை சண்முகமும், நாடக கலையும்

நாடகம் – அறிமுகம்

avvai_sanmugam5.jpg - 10.30 Kbமுத்தமி;ழ் வடிவங்களில் நாடகம் குறிப்பிடத்தக்கதாகும். நாடகம் என்ற தனி சொல்லைக் காலத்தால் முந்தைய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் முதன் முறையாகப் பயன்படுத்தியுள்ளது. “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” என்பர்.

நாடக ஆர்வம்

அவ்வை சண்முகம் இளமையில் நாடகத்தில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்ததை தன் வரலாற்றில் குறித்துள்ளார். சண்முகம் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய போது கூட அவருடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்ததையும் தன் நாடக வாழ்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடக கம்பெனி தொடங்குதல்

அவ்வை சண்முகம் 1952ல் மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின்  1950ல் டி.கே.எஸ் நாடகக்குழு தொடங்கப்பட்டது.

நாடகத் தொழில் சிறப்புப் பெற்ற இடம்;

நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரை மாநகரமாகும். நாடக கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள் கூட மதுரை என்று போட்டுக் கொண்டதை அவ்வை சண்முகம் நாடக வாழ்க்கையின் மூலம் அறிய முடிகிறது.

Continue Reading →

பேசாமொழி 35வது இதழ் வெளியாகிவிட்டது..

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!நண்பர்களே, பேசாமொழி மாற்று சினிமாவிற்கான தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. தற்கால தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனரின் படம் பேசாமொழியில் அட்டைப்படமாக வருவது இதுவே முதல்முறை. அந்த பெருமை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களையே சாரும். பாலாஜி சக்திவேலின் மிக நீண்ட நேர்காணலும், அவருடன் நான் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கமான வடிவமும், இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. தவிர பண்ணையாரும் பத்மினியும் திரைப்பட இயக்குனர் அருண்குமாரின் நேர்காணலும் இந்த இதழில் வெளியாகியிருக்கிறது.

Continue Reading →