வின்சென்ட் வான் கோ

[ ஓவிய்ர் வான் கோவின் பிறந்த தினம் மார்ச் 30. அதனையொட்டி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது.  உண்மைக்கலைஞன். வாழ்வின் சவால்கள் எவையும் அவனது கலையார்வத்தைத்தடுக்கவில்லை. இங்கு க்லைஞர்கள் எதைச்செய்தாலும் முதல் கேள்வி அதைச்செய்வதால் ஏதாவது வருமானம் வருகிறதா? என்பதுதான். வான் கோ பொருளியல், உளவியற் சூழல்களை மீறிப்படைப்புகளைத்தந்தவன். பிரமிக்க வைக்கிறது. – பதிவுகள் ]

ஓவிய்ர் வான் கோவின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 – சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

இளமை
வின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.  வான்கோ பிறப்பதற்கு முன்பே சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார் எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர்.[note 1] இது தெரிந்தபோது வான்கோவுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணியாக இருந்தது. வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மற்றொரு சகோததரர் கோர். வான்கோவுக்கு சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர். அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.

Continue Reading →

கனடாத்தமிழ்ச்சிறுகதைகள்!

குரு அரவிந்தன் – கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் 28-03-2015 அன்று ரொறன்ரோ தமிழ் சங்கம் நடத்திய ஒன்றுகூடலின்போது வாசித்த கட்டுரையில் இருந்து சில பகுதியை மட்டும் இங்கே தருகின்றேன். – குரு அரவிந்தன் –

ஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் ‘சிறுகதை எழுத்தாளர்கள்’ என்று  சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் இக்கட்டுரை எல்லோரையும் திருப்திப் படுத்த மாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இப்படி ஒரு கட்டுரையை யாராவது எழுதாவிட்டால் கனடிய சிறுகதை இலக்கியத்தை ஆவணப்படுத்த முடியாமல் போய்விடலாம் என்பதால் ரொறன்ரோ தமிழ் சங்கத்தினரின் விருப்பத்திற்கிணங்க இக்கட்டுரையை இங்கே வாசிக்கின்றேன். நான் வாசித்த என் நினைவில் நிற்கும் அனேகமாகக் கனடாவில் வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றின் கருப்பொருட்களை மட்டுமே இங்கே குறிப்பிடுகின்றேன்.

ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்புதான் தமிழ் சிறுகதைகள் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர ஆரம்பித்தன. அந்தவகையில் கனடாவில் 1980 களின் பின்தான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையத் தொடங்கியது எனலாம். கனடாவில் தமிழ் சிறுகதைகளை எழுதுபவர்களில்; அனேகமானவர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களாகவே இருக்கின்றார்கள். பொதுவாகத் தமிழ்ச் சிறுகதைகள் தாயக வாழ்க்கை அனுபவங்களையும், இந்த மண்ணில் சுமார் 30 வருடகால வாழ்வியல் அனுபவங்களையும் கொண்டனவாகவும் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்துப் பொதுச் சூழலில் எழுந்த கதைகள், ஈழத்துப் போராட்டச் சூழலில் எழுந்த கதைகள், புலம் பெயர்தலின் போது ஏற்பட்ட அனுபவங்கள், கனடிய சூழலில் எழுந்த கதைகள், இவை இரண்டையும் கடந்து சர்வதேச சூழலில் எழுந்த கதைகள் எனப் பல்வேறு சூழலை மையமாகக் கொண்ட கனடாவில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை கடந்த காலங்களில் என்னால் வாசிக்க முடிந்தது.

Continue Reading →

எழுத்தாளர் ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடு

வணக்கம்! வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல்…

Continue Reading →

சிறுகதை: அரச மரம்

- கனகலதா (சிங்கப்பூர்) -அண்மையில் நீர்கொழும்பில் வெளியிடப்பட்ட நெய்தல் இலக்கியத்தொகுப்பில் வெளியான சிறுகதை அரசமரம். இதனை எழுதிய செல்வி கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவி. தற்பொழுது சிங்கப்பூரில் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றார். இவரது கவிதை, சிறுகதைத்தொகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – முருகபூபதி –.. ]

முதலில்   சில  கணங்கள்  என்ன  பேசுவது  என்று  மலருக்குத் தெரியவில்லை.    முதல்நாள்  பேராசிரியரின்  உரையைக் கேட்டதிலிருந்து   அவர் மீது  மலருக்கு  அளவுகடந்த  மரியாதை உண்டாகி இருந்தது.   அவரிடம்  மேலும்  பேசும்  ஆர்வத்தில்  அவரது பரபரப்பான   அட்டவணையில்    எங்களுக்குச்  சிறிது  நேரம் ஒதுக்கக்கேட்டிருந்தோம்.     காலையில்  என்ன    சாப்பிட்டீர்கள்…? இன்றைய  உங்களது  திட்டம்  என்ன…? அண்மையில்   என்ன வாசித்தீர்கள் …? என்று   மெல்ல  உரையாடலைத்  தொடங்கி இயல்பான   நிலையில்   பல  விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மலர்  திடீரென்று   கேட்டார்

 “இந்த  அரச  மரம்  உங்களைச் சங்கடப்படுத்தவில்லையா…?”

ஒரு  கட்டில் –  அதைச் சுற்றி  மூன்றடி  இடைவெளி நாற்காலியுடன் கூடிய   குட்டி  மேசை  மிகச்  சிறிய  குளியல் -கழிவறை –  பொருட்கள்   வைக்க  ஒரு  சிறு  அலுமாரியுடன்  இருந்த  அந்த அறையை   மூன்று  ஸ்டார்  ஹோட்டல் தகுதியுடையதாக்கிக்கொண்டிருந்தது    வாசலைப் பார்த்திருந்த  சற்றுப் பெரிய    ஒற்றைச் சன்னல்.

சன்னலை  முழுவதுமாக  ஆக்கிரமித்திருந்தது  அரச மரம்.   அறைக்குள்   நுழைபவர்  பார்வை   நேர்  கோட்டில்  சென்றால்    அந்த மரத்தில்தான்  நிலைகுத்தும்.

Continue Reading →

Tribune ( (Sri Lanka) Oct. 23, 1965: Valluvar -2 ON PRINCES and STATECRAFT

By A.N.Kandasamy [ This is the second article in the Series on Valluvar by A.N.Kandasamy. –  Editor, Tribune ]

Let US in this article traverse the second section of Valluvar, the section on Politics and Wealth where he puts forward his theories on statecraft and the art of  government. In this section Valluvar resembles Machiavalli of The Prince and Kautiliya of the Arthashastra. The ethics he advocates for the individual in the first section ( அறம் ) is swept aside to make room for new norms of behaviour for the Prince. What is good enough for the individual is neither enough or good for the ruler of  a country.  Cold realism prompts him to seek new attitudes, practical attitudes that will help to further the interests of the state and the community. For example Valluvar considers non-killing as a supreme virtue in the individual  and says as follows in his chapter on non – killing:

Let no one do that which  would destroy the life of  another, although he should by so doing, lose his very own life. – Kural 327.

But non-killing is a good ideal for the individual it is not so for the guardian of the state. In this too he differs from the pure moralist teachings of the Buddha, Jesus and Mahavira.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 79 : மேலும் சில கருத்துகள்!

முல்லை அமுதனின் இலக்கியச்செயற்பாடுகளின் முக்கியத்துவம்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் முல்லை அமுதனைப் பலரும் அறிவர். எழுத்தாளர், சஞ்சிகை / இணைய சஞ்சிகை ஆசிரியர் / வெளியீட்டாளர், புத்தகக்கண்காட்சி நடத்துபவர், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ‘இலக்கியபூக்கள்’ தொகுப்புகளைத்தொகுத்து வெளியிட்டவர், எழுத்தாளர் விபரத்திரட்டினை வெளியிட்டவர் இவ்விதம் தமிழ் இலக்கிய உலகில் இவருக்குப் பன்முகங்களுள்ளன. அண்மையில் வெளியான ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத்தொகுப்பில் இவரது கவிதை, சிறுகதை மற்றும் மேற்படி தொகுப்புக்காக இளைய அப்துல்லாஹ் (இலண்டன்) கண்ட நேர்காணல் ஆகியன இடம் பெற்றுள்ளன. மேற்படி நேர்காணலில் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியம் பற்றி பல தகவல்களைக்காணலாம். அதற்காக இவருக்கு நன்றி. மேற்படி தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிய பலரின் கட்டுரைகளில் ஆவணப்படுத்தப்படாத பல விடயங்கள் ,  உதாரணமாக இணைய இதழ்கள் பற்றிய விபரங்கள் ,இவரது பதில்கள் முலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனக்கு ஆச்சரியம் தந்த விடயங்களிலொன்று. 1987இல் நான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டுவந்த கையெழுத்துச்சஞ்சிகையான ‘குரல் பற்றியும் மறக்காமல் இவர் தன் பதிலில் குறிப்பிட்டிருந்ததுதான். ‘குரலு’க்காய்க் குரல் கொடுத்த ஒருவர் இவர் ஒருவராகத்தானிருக்க முடியும். 🙂  அத்தகவலை ஆவணப்படுத்தியதற்காக நண்பருக்கு நன்றி.

Continue Reading →

சமூக நீதி 2015: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 பிறந்தநாள் விழா!

1_panuval5.jpg - 31.78 Kbபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தை சமூக நீதிக்கான மாதமாக அனுசரிக்க சென்னையிலுள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 28, 2015 அன்று தொடங்கும் சமூக நீதி நிகழ்வுகள் தொடர்ந்து ஏப்ரல் 26, 2015 வரைக்கும், ஒவ்வொரு சனி, ஞாயிறன்றும் நடைபெறும்.

போட்டிகள்
மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சிகளைச் செய்ய விரும்புகிறோம். இந்த அடிப்படையில் டாக்டர் அம்பேத்கரின் சாதியை ஒழிக்கும் வழி நூலை முன்வைத்து, கட்டுரை, குறும்படம், ஒளிப்படப் போட்டிகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். மேலும் தகவல்களுக்கு http://www.panuval.com/blog/?p=29 பார்க்கவும்

சிறப்பு புத்தக விற்பனை
சமூக நீதி நிகழ்வுகள் நடக்கும் காலம் முழுவது கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு தனி)

சாதி அழித்தொழிக்கும் வழி ரூ. 70/-
அயோத்திதாசர் சிந்தனைகள் ரூ.1400
நொறுக்கப்பட்ட மக்களும் மறுக்கப்படும் நீதியும் ரூ.200
தம்மபதம் ரூ.130
மனுதர்ம சாஸ்திரம் ரூ. 160

Continue Reading →

ஆய்வு: கவிஞர் வெள்ளியங்காட்டான் பார்வையில் சத்தியம்

முன்னுரை
கவிஞர் வெள்ளியங்காட்டான்மனிதன் ஒரு விலங்கு. விலங்கு நிலையிலிருந்த மனிதனின்,   விலங்கு குணத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல. குறிப்பாக ஒழுக்கம், அன்பு, பண்பாடு, சத்யம் போன்ற ஒழுகலாறுகள் மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டன. குறிப்பாகச் சத்யம்;  சத்யம் என்றால் உண்மை அல்லது வாய்மை எனலாம். விலங்கு நிலையிலிருந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனை நல்வழிப்படுத்த, மனிதனிடமிருந்து மனிதனைக் காக்க உருவாக்கப்பட்டதே சத்யம். எனவே ஒவ்வொருவரும் சத்யத்தின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தாலே அவன் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடலாம் என்று பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்படும் நிலையில், கவிஞர் வெள்ளியங்காட்டானின் சத்யம் தொடர்பான கருத்தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கவிஞர் வெள்ளியங்காட்டான் – ஓர் அறிமுகம்
கவிஞர் வெள்ளியங்காட்டானின் இயற்பெயர் இராமசாமி, பெற்றோர் நாராயணசாமி நாயுடு, காவேரியம்மாள். இவர் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் 21.08.1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1942 முதல் கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, பொன்மொழிகள், மொழிபெயர்ப்புப் போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். சில காலம் கோவையிலிருந்து வெளிவந்த  ‘நவஇந்தியா’ இதழில் மெய்ப்புத் திருத்துனராகப் பணியாற்றியுள்ளார். 1960 முதல் கர்நாடகம் சென்று கன்னடம் கற்று கன்னட மொழியிலும் பல படைப்புகளை வெளியிட்டதோடு, கன்னடப் படைப்புகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 1991- இல் தனது 87-வது வயதில் காலமானார்.

Continue Reading →

27.03.2015 – இலக்கியவீதி அழைப்பு: ‘மறுவாசிப்பில் அகிலன்’..

அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’.. தலைமை : திரு. இல. கணேசன் அவர்கள்…

Continue Reading →

நூல் விற்பனை: திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபாவின் ‘அவளுக்குத் தெரியாத ரகசியம்’ (நாவல்) !

நாவல் – அவளுக்குத் தெரியாத ரகசியம்நாவலாசிரியர் – திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபாபக்கங்கள் – 218வெளியீடு – எக்மி பதிப்பகம்விலை – 300 ரூபாய்தபால் செலவு –…

Continue Reading →