தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு

பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -எல்லா மொழி விக்கிப்பீடியாக்களையும் நாளாந்தம் 500 மில்லியன் பயனர்கள் பயன்படுதுகிறார்கள். அண்ணளவாக 200 000 பயனர்கள் தொகுக்கிறார்கள். ஆனால் விக்கிப்பீடியர்களில் 13% ஆனவர்களே பெண்கள்.[1] இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாகத் தொகுப்பவர்களில் 1% பயனர்கள் மட்டுமே பெண்கள். இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன, பெண்கள் பங்களிப்பை எப்படி ஊக்குவிக்கலாம் ஆகிய விடயங்களைச் சுருக்கமாக விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

பங்கேற்பதன் முக்கியத்துவம்
விக்கியூடகம் இன்று பரந்து பயன்படுத்தப்படும் ஒரு தகவல் ஊடகம். இதில் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தில் பெண்களின் பங்களிப்பு இருப்பது முக்கியம் ஆகும். எழுதப்படும் தலைப்புகள், எழுதப்படும் முறை, விக்கி செயற்படும் நோக்கு ஆகியவற்றில் பெண்கள் தங்களின் உள்ளீடுகளை வழங்க முடியும். இல்லாவிடின் பெண்கள் தொடர்பான தலைப்புக்கள் போதிய அக்கறை பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.[2]

பல மொழிகள், பண்பாடுகள், துறைகள், ஈடுபாடுகளைக் கொண்டவர்கள், கட்டற்ற அறிவு என்ற ஒரே இலக்கோடு இணையும் களம் விக்கியூடகம். அதில் பெண்கள், பெண்களின் குரல்கள், பங்களிப்புக்கள் சிறப்பாக இருக்க வேண்டும். விக்கி அனைவரையும் உள்வாங்கும் பங்கு கொண்டது, எனவே அதில் இணைவது, செயற்படுவது இலகுவானது.[3] பெண்கள் உரிமைகள், பெண்கள் இயக்கத்தின் செயற்பாடுகளின் ஒரு நீட்சியாக இது அமையும்.[4]

Continue Reading →

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது!

பொதுத்தகவல்
தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனை ஜிம்மி வேல்ஸ் என்பவரும் லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா  4.3 மில்லியன் கட்டுரைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. அதிவேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய விக்கிப்பீடியாவில், தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளும் இணைந்து கொண்டன. இன்றைய காலகட்டத்தில், 286 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலான தகவல்களுக்கும் இணையம் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ் விக்கிப்பீடியாவும் மிக முக்கியமான ஒரு ஊடகமாக இருக்கின்றது.  விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் பின்னர், விக்கிமீடியாவின் விக்கி நூல்கள், விக்கிச் செய்திகள், விக்சனரி, விக்கிப் பொதுவகம், விக்கி மேற்கோள்கள், விக்கித் தரவு போன்ற பல செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி பெற்றன. தமிழ் மொழியிலும் இதே செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டு, பல தன்னார்வலர்களின் பங்களிப்பால் வளர்ச்சியடைந்து வருகின்றன.

Continue Reading →

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

- நித்தியானந்தன் ஆதவன் -தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -– தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்” என்ற கட்டுரையை விக்கிப்பீடியர்கள் உதவியுடன் 13 வயது 8 ஆம் வகுப்பு மாணவர் நித்தியானந்தன் ஆதவன் எழுதியுள்ளார்.  தமிழ் விக்கிப்பீடியாவை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள், பங்களிப்புக்கள், பங்களிக்க இருக்கும் தடைகள் உட்பட்ட விடயங்களைக் இக் கட்டுரை சுருக்கமாக மாணவர் பார்வையில் இருந்து ஆய்கிறது.  –
 
 
தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது, விக்கியூடகங்களின் உள்ளடக்கம் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது தான். அந்த வகையில் பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்களில் மாணவர்களின் செயற்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்

தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10.

தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை ‘பதிவுகள்’ தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சிலவற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து ‘பதிவுகளு’க்கு அனுப்பியவர்: சந்திரவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது.  தமிழ் விக்கிபீடியா பற்றி ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்- பதிவுகள்

தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்

- இ. மயூரநாதன் -தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -விக்கியூடகங்களின் தொலைதூரக் கனவு, “உலக அறிவு முழுமையையும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகைக் காண்பது” ஆகும். இந்தத் தொலைதூர உலகத்தை அடைவதற்கான சில நடைமுறைச் சாத்தியமான நோக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்னிறுத்தியே பன்மொழி விக்கித் திட்டங்கள் இயங்கிவருகின்றன. “கட்டற்ற உரிமங்களின் கீழ் அல்லது பொது உரிமத்தின் கீழ், கல்விசார் உள்ளடக்கங்களைச் சேகரித்தும், உருவாக்கியும் உலக அளவில் பரவச் செய்வதற்கு மக்களுக்கு ஆற்றல் அளித்து ஊக்குவிப்பது” என்பதே இத்திட்டங்களை இயக்கிவரும் விக்கிமீடியா நிறுவனத்தின் செயலிலக்கு.

பல்வேறு விக்கித் திட்டங்களை உருவாக்கி இயக்கிவரும் எல்லா மொழிச் சமூகங்களும் மேற்படி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இந்த நோக்கங்களை அடைவதில், எல்லா மொழிச் சமூகங்களுமே ஒரே மாதிரியான பின்னணிகளையும், வசதி வாய்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. பல்வேறு, வரலாற்று, அரசியல், சமூக பண்பாட்டுக் காரணிகள் இந்த மொழிச் சமூகங்களிடையே ஒரு சமமற்ற தன்மையை உருவாக்கி வைத்துள்ளன. இதனால், மேற்படி இலக்குகளை அடைய விரும்பும் மொழிச் சமூகங்கள் விக்கியூடகங்களின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், வளங்களையும் புரிந்துகொண்டு, தமது பின்னணிகளுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான முறையில் அமைந்த திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவது முக்கியமானது.

Continue Reading →

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். ‘ஆசிய ஜோதி’யின் அருங்கனிச் சிறப்பு!

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு! - அறிஞர் அ.ந.கந்தசாமி -[ கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தமிழ்க் கவிதையுலகில் முக்கியமானதோர் கவிஞர். பக்திப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கை பற்றிய பாட்டுகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், காவியங்கள், தேசியம் பற்றிய கவிதைகள், சமூக நோக்குடைய கவிதைகள் , வாழ்த்துப் பாக்கள் எனப் பல்வேறு கருத்துடைய கவிதைகளைப் படைத்தவர் கவிமணி. அவரது நினைவு நாளான செப்டம்பர் 26இல் , ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் முக்கியமானவர்களிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி கவிமணியின் ‘ஆசிய ஜோதி’ என்னும் காப்பியம் பற்றி எழுதிய ‘புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். ‘ஆசிய ஜோதி’யின் அருங்கனிச் சிறப்பு!’ என்னும் கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம்.  புத்தரின் வரலாற்றை மையமாக வைத்து எட்வின் ஆர்னால்ட் எழுதிய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பிது. அறிஞர் அ.ந.க.வின் கவிமணியின் மொழிபெயர்ப்புக் காவியமான ‘ஆசிய ஜோதி’ பற்றிய இக்கட்டுரை 18.2.1951, 11.3.1951இல் வெளியான ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ‘கவீந்திரன்’ என்னும் பெயரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டத்தில் ‘பண்டிதர் திருமலைராயர்; என்னும் பெயரிலும் ‘சிலம்பு’ பற்றிய கட்டுரைகளை சுதந்திரன் பத்திரிகையில் அ.ந.க. எழுதியிருக்கின்றார். – பதிவுகள் -]

Continue Reading →

திரு விக்னேஸ்வரனது தெரிவு தமிழீழ மக்களின் தெரிவு அல்ல என்பது அவருக்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துவது போன்றது!

திரு. விக்னேஸ்வரன் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை  தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா  ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது.

(1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்.  ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்த மகிழ்ச்சிக்கு அப்பால் விக்னேஸ்வரன் குறித்த ஐயப்பாடுகளே விஞ்சி நிற்கின்றது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னரும், தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகிய பின்னரும் திரு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்மீதான சந்தேகத்தையே வலுப்படுத்துவதாக உள்ளது.

Continue Reading →

புது நூல்: தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!சுப்ரபாரதிமணியன்“எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள்  வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில்  ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு  “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில்  வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக  இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித  நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை

Continue Reading →

TamilNet: Sampanthan, Sumanthiran find TNA victory superseding Vaddukkoaddai mandate!

Sampanthan[TamilNet, Monday, 23 September 2013, 08:23 GMT] – The obsession of utmost priority for a section of TNA leadership is to satisfy the Sri Lanka saving agenda of New Delhi and Washington, by interpreting the TNA victory as supersession of the Vaddukkoaddai Resolution based mandate of 1977, political observers in Jaffna commented on a statement made by the TNA leader Mr. R. Sampanthan, aided by Mr M.A. Sumanthiran, at a press conference convened in Jaffna on Sunday. Sampanthan talking of united and undivided country described the TNA victory as a clear verdict of Tamils, unprecedented in the political history of the island. Answering a question raised by an Eezham Tamil journalist that how then he views the 1977 verdict, Sampanthan said that there is nothing wrong in stating that the present victory is greater than the 1977 one. Sumanthiran was heard aiding him in answering the question. Without giving an opportunity to the genocide-affected people to decide on their political status, and without proving anything on demilitarization, territorial integrity of Eezham Tamils, prevention of demographic genocide, internationally recognizable constitutional guarantee for the nation of Eezham Tamils and even an international investigation on the war crimes, New Delhi and Washington are able to extract such assurances and interpretations from a section of Tamil leadership that jump at a hollow and nothing-new PC election, the observers commented.

Continue Reading →

The INDEPENDENT (UK): Tamil National Alliance triumphs in Sri Lanka polls. Victory gives party platform to campaign for autonomous federal state

C V Wigneswaran[Sunday 22 September 2013 ] Sri Lanka’s main ethnic Tamil party won a convincing victory in the country’s northern provincial elections, according to results released on Sunday, in what has been seen as a resounding call for wider regional autonomy in areas ravaged by a quarter-century of civil war. The Tamil National Alliance (TNA) will form the first functioning provincial government in the northern Tamil heartland after securing 30 out of 38 seats in Saturday’s elections, Sri Lanka’s elections commission said. President Mahinda Rajapaksa’s coalition won the rest of the seats. The win provides a platform for the TNA to campaign for an autonomous federal state, though the provincial council is largely a toothless body. The Tamils have fought unsuccessfully for self-rule for six decades, at first through a peaceful struggle and then the bloody civil war. The elections were seen by the international community as a test of reconciliation between the Tamils and the majority ethnic Sinhalese, who control Sri Lanka’s government and military.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் 2!

எகிப்தில் சில நாட்கள் 1நோயல் நடேசன்“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு கைத்தறிபோல எகிப்தில் எந்த குடிவகையும் குடிக்க முடியாது என்பதும் எங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்களில் ஒன்று. அது இஸ்லாமிய நாடு. இதன் காரணத்தால் துபாயில் ஆளுக்கு இரண்டு போத்தல்கள் வாங்கியபோது அதற்கு உபரியாக எடுத்துச் செல்ல தள்ளிக்கொண்டு செல்லும் அழகான பெட்டியையும் தந்திருந்தார்கள். அந்தப் பெட்டியை எப்படியும் எகிப்துக்கு எடுத்துச் செல்வது எமது நோக்கமாக இருந்தது.

Continue Reading →