இலங்கைக் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய , பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ ஒழுங்கு செய்த அஞ்சலி நிகழ்வு!

இலங்கைக் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய , பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' ஒழுங்கு செய்த அஞ்சலி நிகழ்வு!இன்று ஸ்கார்பரோவில் அமைந்துள்ள ‘ஹீரோ பார்ட்டி ஹா’லில் அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்கள் ஆகியவற்றில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. தற்போதுள்ள சூழலில் மிகவும் கட்டாயமாக நடத்த வேண்டிய இந்நிகழ்வினைச் சிறப்பாகக்  குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ததற்காகக் ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ பாராட்டுக்குரியது.  குறிப்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த ரட்ணம் கணேஷ், நேசன் & டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை , சபேசன், சத்தியசீலன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

நிகழ்வில் கனடியக் கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் வெளிகளில் பங்கு பற்றும் பலரைக் காண முடிந்தது. குறிப்பாக நேசன் , பாலா (கரவெட்டி), எல்லாளன், அலெக்ஸ் வர்மா, கிருபா, திலீபன், மெலிஞ்சி முத்தன், கலாநிதி சுல்ஃபிகா,  பாலசுப்பிரமணியம் (கரவெட்டி), கற்சுறா, ஜெபா கற்சுறா, எஸ்.கே.விக்னேஸ்வரன், அவரது மகள் அரசி விக்னேஸ்வரன் , ‘அரங்காடல்’ செல்வன் , நிரூபா ஆயிலியம், சிவா கந்தையா (டெலோ),பாக்கியம் முருகேசு எனப் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வு அண்மையில் இலங்கையில் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவதுடன் ஆரம்பமாகியது. ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்’பினைச் சேர்ந்த ரட்ணம் கனேஷின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகியது. நிகழ்வினை ஆரம்பித்து வைத்து அவராற்றிய உரையில் ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ நடைபெற்ற தாக்குதல்கள் பல்லின மக்களுக்கிடையிலான இணக்கத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்ததுடன் அரசு மேலும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். இதற்கு மக்களாகிய நாமனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

அவரைத்தொடர்ந்து கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை இலங்கையின் கடந்த கால மற்றும் தற்கால அரசியல் பற்றிய தெளிவான உரையாக அமைந்திருந்தது. இலங்கையில் மார்க்சிசக் கட்சிகளின் செயற்பாடுகள், தேசியப் பிரச்சினை , சோவியத் உடைவுக்குப்பின்னர் பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்கப்படும் சமூக, அரசியற் செயற்பாடுகள், இலங்கையில் நிலவிய சாதியை, இன, மத, மொழி மற்றும் வர்க்கத்தை மையமாக வைத்தியங்கிய அடையாள அரசியல், பயங்கரவாதத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த இலங்கைத்தமிழர்கள் (இவ்விதமான நடவடிக்கைகளை அவர்களது ‘பையன்க’ளே செய்திருந்தாலும் வெளியில் அவர்கள் அவற்றை அவர்களது ‘பையன்கள்’ செய்யவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் ‘பையன்க’ளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்காலம் ஆதரவானதொரு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார்கள் ) இவற்றைப்பற்றியெல்லாம் தொட்டுச் சென்றது அவரதுரை. அவர் தனதுரையில் முஸ்லிம் மக்கள் தம்மினத்தவர் செய்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களைக் கண்டித்ததன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

Continue Reading →

கவிதை: மறக்கப்பட்டவர்களின் துயரம்!

-அண்மையில் இலங்கையில்  கிறிஸ்த்த ஆலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களில் பலியாகியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை முன்வைத்த எண்ணங்கள் –

குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள்

ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள் மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்றி
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.

Continue Reading →

திணைச்சமூகத்தில் குலக்குறி மரபுகளும் நம்பிக்கைகளும்

முன்னுரை
ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்மனிதன் தொடக்க காலத்தில் இயற்கையைக்கண்டு அச்சம் கொள்ள நேரிட்டான். அதனால் இயற்கையைக் கடவுளாக நினைத்து வழிபடத் தொடங்கினான். இனக்குழு வாழ்க்கையிலிருந்தக் கூட்டத்தினர் தெய்வங்களைக் கண்டும், பார்த்தும், உருவகித்துக்கொண்டும் ஏற்படுத்திக்கொண்டும் அதனை வணங்கி வாழ்ந்து வந்தனர். இத்தெய்வங்கள் மலை, காடு,  மரங்களான ஆலமரம், வாகைமரம், கடம்பமரம், வேப்பமரம், மரம், மராமரம், பனைமரம், வேங்கைமரம், முரசில்மரம், இல்லில், கந்தில், பொற்றாமரைக்குளம், கினை (பறை), குவளைப்பூ, தாமரைப்பூ, நடுகல், மரத்தின்பொந்து, பாறை, அருவிநீர் எனப் பல்வேறு இடங்களில் குடிகொண்டிருந்தன. இதனை நற்றிணை “அணங்கொடு நின்றது மலை” (நற்.குறி.165:3). என்கிறது. மக்கள் மத்தியலும் பல்வேறு விதமான தெய்வம் தொடர்பான நம்பிக்கைகளும், பறவைகள், விலங்குகள் வாயிலாக வெளிப்படும் நம்பிக்கையும், தொழில் தொடர்பான நம்பிக்கையும் வழக்கத்தில் நிலவி வந்தன. இக்குறிகளை எல்லாம் சமுக மரபு, பண்பாட்டு மரபு, குலக்குறி மரபு என்றழைத்தனா்.  அஃது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குலக்குறியியல்  பொது விளக்கம்
குலக்குறி மனித வாழ்வோடு காலங்காலமாகப் பரிணமதித்து வரக்கூடிய ஒரு அடையாளம் சார்ந்த படிமாகும். இதில் விலங்கையோ பறவையோ ஒரு பொருளையோ தங்களது குலக்குழு முழுமைக்கும் வழிகாட்டியாக வணக்கத்திற்குரியதாக மூதாதையர்களாகக் காண்பதே ஆகும். இதில் ஓா் இனக்குழு மனிதன் தனக்கு இணையாக தன் கூட்டத்து மக்களுள் ஒருவராகக் கருதி ஒரு விலங்கையோ பறவையையோ தாவர வகையையோ அணுகி நடந்து கொள்வானேயானால் அது நிச்சயம் குலக்குறிப் பண்பாட்டிற்கே உரிய இயல்புகளில் ஒன்றாகும்.

தோழமை உணா்வுடன் உறவு பாராட்டப்படுகிற ஓா் இனக்குழுவினைச் சுட்டும் உயிருள்ள அல்லது உயிரற்றப் பொருளே அவ்வினக்குழுவின் குலக்குறி அடையாளம் ஆகும் என்று ஆ.தனஞ்செயன் முன்வைக்கிறார். எமிலி தா்கைம் அவா்கள் குலக்குறி வழிபாட்டினை பற்றிக் தொடக்கில் பயன்படுத்தினார். பின்னா் ஜான் பொ்கூசன் மெக்லெனன் கூறும்போது, இன்றுள்ள சமயமுறைகளில் இன்றியமையாதெனக் கருதப்படும் பண்பாட்டு மரபுகளான வழிபாட்டுப்பொருள்கள், அதன்மீதான நம்பிக்கை, நம்பிக்கையில் உறுதிகொண்டோர், சடங்கு, சடங்கு செய்தல் போன்றவற்றைக் கொண்ட ஆரம்பகாலச் சமயமாகக் குலக்குறியியம் தோன்றியது என்கிறார். இத்தன்மை கொண்டு பார்க்கும்போது குலக்குறி, வழிபாடு, நம்பிக்கை என்ற இரண்டின் அடிப்படையில் எழுந்ததே ஆகும்.

குலக்குறி மரபில் – தெய்வமும் நம்பிக்கையும்

முல்லை    நிலத்தின் தெய்வமாக திருமால் கருதப்படுகிறது. தொல்காப்பியம் இதனை, “மாயோன் மேய காடுறை உலகம்”(தொல்.பொரு.அகத்.5நூற்) என்று திருமாலை நிலத்தோடு தொடர்பு படுத்தி வெளிக்காட்டுகிறது. அகநானூற்றில்  “மரஞ்செல மதித்த மால் போல”  (அகம்.59-4)என்று கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் ‘மாயோன்’ தென்னாட்டில் முல்லைநிலத் தெய்வமாகவும், கண்ணனாகவும் காட்சிபடுத்தப்படுகின்றான்.  ஆனால் சங்க இலக்கியத்தில் மால், மாயோன் என்ற பெயர்களே வழக்கிலிருந்தன. மால் என்பதற்குப் பெரியோன் என்றும், மாயோன் என்பதற்குக் கரியவன் என்றும் கருத்து உள்ளன.

Continue Reading →

கண்டி ஃபோறம் விடுத்துள்ள அறிக்கை” பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை

– கண்டி ஃபோறம்  விடுத்துள்ள அறிக்கை” பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை –

கண்டி ஃபோறம்  விடுத்துள்ள அறிக்கை" பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லைகடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நாட்டின் பலபகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட, சுமார் 350 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று 500 பேரை மோசமான காயங்களுக்கு உட்படுத்திய, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டி ஃபோறம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இப்பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவிரவாத மதக்குழுவினர் என அடையாளம் காணப்பட்டதை அறிந்து நாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இஸ்லாத்தில் பயங்கர வாதத்துக்கு இடமில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். இஸ்லாம் சாந்திக்கும் சமாதானத்துக்குமான  ஒரு மார்க்கமாகும். யாரேனும் ஒருவர் ஒரு மனிதரைக் கொன்றால் அது முழு மனிதர்களையும் கொன்றதற்குச் சமமானது என்றும், யாரேனும் ஒருவர் ஒரு. மனித உயிரைக் காப்பாற்றினால் அது முழு மனிதர்களையும் காப்பாற்றியதற்குச் சமமானது என்றும் குர்ஆன் அழுத்தமாகக் கூறுகின்றது (5:32). இதுதான் இஸ்லாம். பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனித சமுதாயத்தில் இடமும் இல்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதக் குழுவினர் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், தங்கள் கருத்தியலிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்றும் நாம் வெளிப்படையாகக் கூற விரும்புகிறோம். இன்று பத்திரிகைகளில் தெரிவிக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்படும் ஒரு சர்வதேசப் பயங்கரவாதக் குழுவின் கையாட்களாகச் செயற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது. இப்பயங்கரவாதக் குழு  மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளால் மத்தியகிழக்கில் மேற்கொள்ளப் பட்ட  அழிவுச் செயற்பாடுகளின் ஒரு உபவிளைவாகும். அவர்களுடைய கருத்தியலும் செயற்பாடுகளும் இஸ்லாத்துக்கு எதிரானவைகளேயாகும்.

இப்பயங்கரவாதப் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இதயம் நிறைந்த இரங்கலையும் அநுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரை இருந்ததில்லை. இந்த நாட்டில் இதுகாலவரை  இவ்விரு சமூகங்களுக்கும் இடையே எந்தவித மோதல்களோ முரண்பாடுகளோ இருந்ததில்லை. இந்த நிலையில்தான் முஸ்லிம்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒரு பயங்கரவாதக் குழு அவர்கள் மீது  பைத்தியகாரத் தனமாக ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அத்தோடு முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரு பேரழிவுச் சூழ்நிலைக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கிறது. இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதோடு, அவர்கள் தங்கள் வாழ்வை மீளக் கட்டி எழுப்புவதற்கும் தங்கள் மன வடுவை ஆற்றுவதற்கும் சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று முஸ்லிம் சமூகத்தை நாம் வேண்டுகிறோம்.

குற்றவாழிகளுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் எதிராக அவசியமான உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தையும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளையும் நாம்  வேண்டிக்கொள்கிறோம். அதேவேளை, கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம்தின் கீழ் நடந்ததாகக் கூறப்படும், நிலைமையை இன்னும் மோசப்படுத்தக்கூடிய, ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரில்  மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகளைத் தவிர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துமாறும் நாம் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறோம்.

இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தையும் இன மத வெறுப்பையும் இல்லாதொழிப்பதற்கும், பரஸ்பர புரிந்துணர்வையும், இனங்களுக்கும் மதங்களுக்குமிடையே  நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கும், இலங்கைக்கான பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைமைப் பீடங்களுக்கும், சிவில்  சமூக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறோம்.

Continue Reading →

ஆய்வு: இலக்கியங்களில் மறுபிறப்பு

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்முன்னுரை
மனித உயிர் உடலும் குருதியும் கலந்த பின்டமாகும். வாழும் வாழ்வில் இவ்வுயிர் பிறர் போற்றும்படி  அறமாக இருக்க வேண்டும். பிற உயிர்களுக்கு துன்பம் விளைவித்தல்  கூடாது. ஆனால் மனிதன் இன்றைய நவீன வாழ்க்கையில் நிலைபேறில்லாத் தன்மையில் எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு பிற உயிர்களின்மீது போற்றுதலில்லாமல் சுயபோக்கோடு செயல்பட்டு வருகிறான். மனமும் அதனைச்சார்ந்து இயங்குகிறது. பண்பாடும் கலச்சாரமும் அதற்கு ஒத்திசைவு தருகிறது.

அதிலிருந்து மீளாக்கம் பெற்று புதியக் கலாச்சாரத்தைக் கையிலெடுக்கும் வன்மையும் ஒரு படி மக்களிடத்தில் எழுந்துள்ளது. மனித வாழ்வானது உயிர்களிடத்தில் இரக்கமும், அன்பும் கொள்ளும்போது மறுபிறப்பு எய்தாமல் இப்பிறப்பிலே இன்ப நிலையை அடைய முயற்சி செய்யும். இத்தகைய எண்ணப் போக்குகள் சங்ககாலத்திலிருந்து மக்களிடத்தில் நிலவி வந்தன. வருகின்றன. அதற்கு மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த அறங்கள் என்ன? அந்த அறத்தினால் மக்கள் அடைந்த இன்பப்பேறு என்ன? மறுபிறப்பின்மீது மக்கள் கொண்ட எண்ண வோட்டங்கள் எவ்வாறு இருந்தன. இருந்து வருகின்றன. இன்றைய நவீன வாழ்க்கையில் மனிதன் குடும்ப அமைப்பாக்கத்தில் பிறப்பு எய்தியும், மறுபிறப்பு எய்தாமல் இருக்கவும் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் என்ன என்பது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க காலத்தில்  மறுபிறப்பு
உயிர்களின் இறப்பானது இந்ஞாலத்தில் மீண்டும் பிறப்பு எய்துவதற்கே படைக்கப்பட்டவையாகும். ஆகையால் உயிர்களின் கதிகளை நான்கு நிலைகளில் நரகர், விலங்கு, மக்கள், தேவர் என உறுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நான்குவகைக் கதிகளும் இஞ்ஞாலத்தில் மீண்டும் மீண்டும் வினை புரிவதற்கே படைக்கப்பட்டவகையாகும். ஆனால் வாழும் வாழ்க்கையில் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்நிலை இல்லை என்கிறது.

அதாவது, ஒருவன் தன்னுடைய வாழ்வில் மறுமைப்பயன் (மறுபிறப்பு) அடைய எண்ணினால் அவன் அறப்பயன் செய்து ஒழுகுதல் சிறந்தன்று. அத்தகையோன் இப்பிறப்பில் நலம் செய்து மறுபிறப்பில் இன்பம் பெற முயற்சிப்பான். அத்தகையோனை அறவிலை வணிகன் என்றழைத்தனர். இதனைப் புறநானூறு தெளிவுபடுத்துகிறது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன்” (புறம்.134:1-2)

என்ற பாடல் வரிசுட்டுகிறது. சங்கப் பாடல்களில் மறுபிறப்பு பற்றி கூறுகின்ற இடங்களெல்லாம் அறத்தை மட்டும் வழியுறுத்தவில்லை. கொடைத்தன்மையையும், உணவுப் பங்கீடுமே முன்னிருத்திப் பேசுகின்றன. பாரி, ஆஆய், சான்றோர் பிறருக்குச் செய்த கொடையும் (பாரி- பாணர்களுக்கு) வறுமை நிலையில் கொடுத்த உணவே முதன்மையாகக் கொள்ளப்படுகிறது. இங்கு பாரி, ஆஆய் இருவரும் மறுமைப் பயனை நோக்கி கைங்காரியங்கள் செய்தாகச் சொல்லப்படவில்லை. மக்கள் வறுமையில் வாடும்போது நிவர்த்தி செய்து, கொடையளித்து சிறப்புற்றதே மறுபிறப்பு நிலையில் புலவர்கள் பேசியுள்ளனர். இவ்வாறு குடிமக்களுக்குச் செய்யும் கொடையளிப்பு சமணத் தத்துவத்தில் அறமாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு செய்த கொடைகள் உயிர்களின் கதிகளை இப்பிறப்பிலே தெய்வநிலை அடையச்செய்கிறது. இவை ஒரு புறம் இருப்பினும், ஐந்து நில  மக்களிடத்திலும் இப்போக்கு நிலவியுள்ளன.

Continue Reading →

ஆய்வு: சமூகவியல் நோக்கில் இரட்டைக் காப்பியங்களில் கற்பு

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்சங்க காலத்தில் இனக்குழு சமூகம் அழிந்து பொறுப்புகள் எல்லாம் பெண்ணின் கைகளில்  தோன்றிய போதே குடும்பம் என்ற அமைப்பு உருவாகியது. குடும்பம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒன்று கலந்த வாழ்வாகும். குடும்ப உருவாக்கத்தின்போதே பெண்ணுக்கு கற்பு என்பது வழியுருத்தப்பட்டன. இக்கற்பு தொடக்க காலத்தில் முல்லை நிலத்திலே முதலில் தோற்றம் கண்டன. அதனால் முல்லையை முல்லை சான்ற கற்பு என்று  அழைக்கப்பட்டன. கணவனுக்காக காத்திருக்கும் நிலை என்று பெண்ணுக்கு தோன்றிதோ அன்றே அப்பெண்ணின் கற்பும் வலியுருத்தப்பட்டன.  பின்பு கணவன் இறந்த பின்பு சமூகத்தில் தனித்து அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு பெண்ணுக்கு உறுதுணையாகவும்  இருந்தன. இக்கற்பு இரட்டைக்காப்பியங்களில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கற்பு உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்ன? அனைத்து வகையான பெண்களுக்கும் கற்பு பொதுப்படையாக ஏற்படுத்தப்பட வேண்டிய காரணம். பெண்கள் ஆண்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கும்  தனித்து அடையாளப்படுத்துவதற்கும் உண்டான நிலைகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

கற்பு  பொது விளக்கம்
கற்பு என்பது கணவன் மனைவி இருவரிடையே ஏற்படும் பற்று மாற உறுதிப்பாடு. இக்கற்பு என்பதற்கு இளம்பூரணர், “மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது”1 என்கிறார். நச்சினார்க்கினியர், “தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்”2 என்கிறார். வ.சுப.மாணிக்கம், “கற்பு என்பது அகத்திணை வலியுறுத்தும் அறங்களுள் தலையானது”3 என்கிறார். புலவர் குழந்தை, “கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் நெஞ்சுகலந்த அன்பின் பயனே கற்பு ஆகும்”4 என்கிறார். ஆகவே கற்பு என்பது ஆண், பெண் இரு உள்ளங்களின் ஒன்று கலந்த அன்பாகும்.

ஆணுக்கும்  பெண்ணுக்கும் பொதுவான  நிலையில் சொல்லப்படுகின்ற இக்கற்பு உடல் தூய்மை நிலையில் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது என்று பொதுமைப்படுத்தப்படுகிறது. வடமொழியில் இக்கற்பு என்பதற்கு “பதிவிரதா தா்மம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது கடவுளுக்கு நிகரான தலைவன், கணவனுக்கு அடிமையானவள் என்று பொருள் சொல்லப்படுகிறது. தொல்காப்பியா் கற்பு என்பதற்கு “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கம்” இஃது கிழவோளுக்கு மட்டும் உரியது என்று கூறுகிறார். வள்ளுவரும் பெண்ணின் கற்பு என்பதற்கு தெய்வத்தோடு தொடா்பு படுத்தாமல்  தனது கணவனோடு தொடா்பு படுத்தியே கூறுகிறார்.

“தெய்வம் தொழாள் கொழுநன்  தொழுதழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்.55)

இங்கு பெண்ணின் கற்பு “பதிவிராத தா்மம்” நிலையில் கணவணோடு தொடா்பு கொண்டு பேசப்படுகிறது. ஆக, கணவனோடு இருக்கும் பெண்களுக்கு கற்பு என்பது உரித்தானதாகக் கொண்டால் கணவனில்லாப் பெண்களின் கற்பினை எவ்வாறு இனங்காண முடியும் என்ற ஐயமும் எழுகிறது. அப்பெண்கள் சமூகத்தில் தனது கற்பினை வெளிக்காட்ட சில முன்னெடுக்கைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் அவா்களது வாழ்வு அடையாளப்படுத்தப்படுகிறது.

Continue Reading →

ஆய்வு: திருமந்திரம் கூறும் நால்வகை நிலையாமை

ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20. பதினெண் சித்தர்களுள் காலத்தால் முற்பட்ட திருமூலரால் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்பட்டு 3000 பாடல்களைக் கொண்ட நூல், திருமந்திரம். இந்நூல்  9 தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகிறன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன. கலிவிருத்தத்தால் பாடப்பட்ட இந்நூல் தமிழில் தோன்றிய முதல் யோக நூலாகவும் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகவும்  திகழ்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு வித்திட்ட திருமந்திரம் கூறும் நிலையாமை குறித்த செய்திகள் ஆய்வு பொருளாகின்றன.

நிலையாமை – விளக்கம் :
நிலையாமை என்ற சொல்லுக்கு “உடலை விட்டு உயிர் பிரிந்த பின் ஆன்மாவுக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள்” என்று பொருள் கொள்ளலாம்.  மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருக்கும் நான்கு பொருள்களைத் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

யாக்கை நிலையாமை :
திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 187 முதல்  211 வரை இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மனிதனின் மரணத்துக்குப் பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதனவற்றையும் திருமூலர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

”பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.”             (திருமந்திரம் – 188)

என்ற பாடலில் கூரைப் போல விழும் உடலில் இருந்து வெளிப்படும் ஆவியோடு, ஐம்பொறிகளைக் கொண்டியங்கிய உடலும், அவ்வுடலால் பிறந்தவர்களும், அவ்வுடலை மணந்தவர்களும்  துணையாக வரமாட்டார்கள். மாறாக அவ்வுடலால் செய்யப்பட்ட நன்னெறிகளே துணையாக வருமென்று யாக்கையின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார். மேலும்,

”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.”         (திருமந்திரம் – 189)

என்ற பாடலில் உடலை விட்டு உயிர் நீங்கினால் உயிருடன் இருந்தபோது உடலுக்கு  வைத்த  பெயர் கூட நிலையாது, அவ்வுடல் பிணம் என்ற பெயரைப் பெறும் என்று திருமூலர் கூறுகிறார்.

”குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.”          (திருமந்திரம் – 202)

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியத்தில் இயற்கை உணவுகள்

முன்னுரை
-  முனைவர் த.அமுதா,  கௌரவ விரியுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் கலைக்கல்லூரி, வேலூர் - 2 தமிழ்நாடு, இந்தியா -நோயற்ற உடலிருந்தால் நூறுவரை வாழலாம் என்று ஆன்றோர் வாக்கு. நோயற்ற வாழ்வுக்கு நல்ல பழக்கங்கள் கடின உழைப்பு அல்லது உடற்பயிற்சி சரியான உணவுமுறை ஆரவாரமற்ற வாழ்க்கை முறையே அதற்கேற்ற சூழல், மன அமைதி இன்ன பிறவும் இன்றியமையாததாகும். நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்தும், நாம் பின்பற்றத் தக்க எளிய பழக்க வழக்கங்களைக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றில் முதன்மையும், முக்கியமானதும் இயற்கையோடு ஒன்றிய  வாழ்க்கை முறையும், மருத்துவ முறையும,; உணவு முறைமாகும்.

மனித குலம் நீடுவாழ இயற்கையும், சமசீரான உணவு முறையும் வாழ்க்கை முறையும்  முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உணவு

சொல்லமைப்பின்படி நோக்கினால் உண் என்பதே அடிச் சொல்லாக அமைகிறது. உடல் நலமுற்றவனுக்கு உணவாகப் பயன்படும் கஞ்சி நோயுற்றவனுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத்; தரும் பொருளை உணவென்று கூறுவர்.

‘உணாவே  வல்சி யுண்டி யோதன
மசனம் பதமே யிரையா கார
முறையே யூட்ட முணவென வாகும்‘1

என உணா, உணவு, அசனம், பதம், இரை, ஆகாரம், உறை,  ஊட்டம் என்பதைவற்றை உணவின் பெயர்களாகப் பிற்கல நிகண்டு குறிப்பிடுகிறது.

உணவின் சிறப்பு
ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்பதைப்போல உணவில்லாத மனிதன் உயிரற்ற மனிதன் எனலாம். மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கான ஊன், உடை, உறையுள் என்பவற்றில் உடையும், உறையுளும் இன்றிகூட உயிர் வாழலாம். ஆனால் உணவின்றி உயிர் வாழ்ந்தவர் இல்லை. ‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’2 எனப் புறநானூறு உரைக்கின்றது. உணவு மனிதனின் உயிர்நாடி. உணவில்லையேல் இவ்வுலகம் இல்லை. உலகின் அறம், ஒழுக்கம் மேன்மை எல்லாம் உணவில் அடங்கியிருக்கிறது. எனவே தான் ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று புறநானூறு உரைக்கிறது.

குறுவர்கள்
மலைவாழ்நர், தினைவிளைக்கும் புனத்திலே ஊடு பயிராகப் பருத்தியையும் அவரையையும் விதைத்துப் பயன் கொண்டனர். தினைக் கதிரைக் குருவி, கிளி முதலியன கவராதிருக்கக் குறமகளிர் பரண மீதிருந்து கவண் எறிவர். அங்கிருந்தே கொள்ளிக்கட்டையைக் காட்டி விலங்கினங்களை விரட்டுதலும் உண்டு. ‘காவன்மையால் பாலக்கனிகளைக் கானவர், மரங்கள் தோறும் வலைமாட்டிக் கனிகாத்தனர்‘.3 விளைவு மிகுதியால் பகலிலேயே அறுவடையை முடிக்க முடியாததால், உழவர்கள் இரவிலும் வேலையை நீட்டிப்பது வழக்கம், அப்பொழுது விலங்குகளால் ஊறு நேரா வண்ணம் தொண்டகப்பறை முழுக்குவர். ‘ சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்து இரவரி வாரின் தொண்டகச் சிறுபறை பானாள் யாமத்துங்கறங்கும்.’4

Continue Reading →

ஆய்வு: சுற்றுச் சூழலில் காற்று மாசுபாடு

முன்னுரை
 முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -பிரபஞ்சத்தில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், மையமாகவும்  மனிதனே கருதப்படுகிறான். இயற்கையின் ஒரு மேம்பட்ட அங்கமாக விளங்கும் மனிதன், இயற்கையை அனைத்து விதங்களிலும் தனக்கும் தன்னுடைய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான். அவ்வாறு மனிதனின் வாழ்க்கைக்கு மூலாதாரமாக விளங்கும் அவனைச் சுற்றியமைந்துள்ள அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஒன்றே. சுற்றுச்சூழல் என்ற சொல்லின் நேரடியான சுற்றுப்புற என்பதாகும். ‘சுற்றுச்சுழல் என்ற வார்த்தை நுnஎசைழn என்ற பிரஞ்சு மொழிச் சொல்லில்லிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் சுற்றிலும், ‘சூழ்ந்து வருவது’, ‘சூழ் என்பதாகும். இதன் மூலம் மனிதனைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற  பொருட்களே  சுற்றுச்சூழல் என்பது தெளிவாகிறது. இவ்வாறு சற்றுச் சூழலில் காற்று எவ்வாறு மாசுப்படுகிறது அறியவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சுற்றுச் சூழல் மாசுபாடு
சுற்றுச்சூலை அழிக்கின்ற, எந்தவொரு பொருளும் சுற்றுச் சூழலினுள் செலுத்தப்படுதலே மாசுபடுதல் ஆகும். மாசுபடுதல் என்பது தவறான இடத்திலுள்ள பொருட்களாகும்.

நம் பயன்பாட்டுக்குப் பின் எஞ்சியிருப்பவற்றை கழிவுகளாக வெளியேற்றப்படுதலில் இடம்பெறும் பொருட்கள்தான் மாசுபடுத்திகள் ஆகும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகளால் ஆறுகளும், நச்சு வாயுக்கள், அணுசக்தி நிலையக்கழிவுகள் போன்றவற்றால் காற்றும் மாசுபடுகின்றன. உயிர்தொழில்நுட்பமும், தொழிலக முன்னேற்றமும் கொண்ட நாடுகளில் தான் மிகவும் மோசமன மாசுபடுதல் ஏற்படுகிறது.

மனிதக்கழிவுகளினால் சுற்றுச்சூழலை வெளிப்படையாக அல்லது தற்செயலாகக் கொடுக்கின்ற செயலே மாசுபடுதல் எனப்படும்.

‘மசுபடுத்தி என்பது பல்வேறு சிற்றினங்களின் வளர்ச்சி விகிதத்தை மாற்றியமைக்கின்ற விதத்தில் சுற்றுச்சூழலை கேடு நிறைந்ததாக மாற்றுகின்ற ஒரு பொருள் அல்லது விளைவு: உணவுச் சங்கிலியில் குறுக்கிடுவது, நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை செயல்படுத்தி உடல் நலத்தில் குறுக்கிடுவது. மக்களின் பல்வேறு வசதிகளையும் சௌகரியங்களையும் குறைப்பது. சொத்து மதிப்புக்களை குறையச் செய்வது போன்ற எந்த ஒன்றும் மாசுபடுத்தியே’. ஹொலிஸ்டர் மற்றும் போர்டியான்ஸ் தங்களது சுற்றுச்சூழல் அகராதியில் விரிவான வரையாக கொடுத்துள்ளார்கள்.

காற்று மாசுபாடுதல் எங்ஙனம்?
ஆக்ஸிஜன், கார்பன்- டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆகியவற்Nhடு பல்வேறு இதர வாயுக்களும் குறிப்பிட்ட விழுக்காட்டு அளவில் சாதாரணமான காற்றில் பரவியுள்ளன. எரிமலை வெடித்தல், மணற்காற்று புழுதிப்புயல், பெரும் விபத்தால் ஏற்படும் புகை மண்டலம் ஆகிய இயற்கை நிகழ்வுகளாலோ அல்லது மனித நடவடிக்கைகளாலோ, ஆக்ஸிஜனைத் தவிர காற்றில் உள்ள இதர வாயுக்களின் அடர்த்தி நிலை அதிரிக்கும்போதும், மிதக்கும் திடக்கழிவுகளின் அளவு உயரும்போதும், காற்று மாசுறுகிறது எனாலம். காற்று மாசுபாடானது புகை, தூசுக்கள், தீங்குவிளைக்கம் வாயுக்கள் போன்றவை காற்றில் கலந்து அதன் தரத்தைக் கெடுப்பதால் ஏற்படுகிறது. பூமியைச்; சுற்றி எல்லா பக்கங்களிலும் அதன் மேற்பரப்பில் காணப்படும் ஒரு வாயு உறைளே, அதிலுள்ள காற்று முக்கியமாக நைட்ரஜன் (78.4மூ ) ஆக்ஸிஜன் (20மூ) ஆர்கன் மற்ற வாயுக்கள் (1.5மூ;) கார்பன் டை ஆக்ஸைடு (0.0314மூ) போன்ற பல்வேறு வாயுக்களை உள்ளடக்கியது வளிமண்டலம் எனப்படும். காற்றானது உயிர்வாழ் அடுக்கில் உள்ள அனைத்துவகை உயிரிகளுக்கும் மிகவும் இன்றியமையாதது. உணவு இல்லாமல் ஒரு சில வாரங்களுக்கும், நீரில்லமால் ஒரு சில நாட்களுக்கும் மனிதனால் உயிர் வாழ இயலும். ஆனால் காற்றில்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட மனித உயிர் வாழ இயலாது.1

Continue Reading →

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள் இருளர் ஒரு சிறிய பழங்குடி சமூகம், இருளர் மொழி தென் கிழக்கு இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இருளர் என்ற சொல்லின் தோற்றம் தெளிவாக இல்லை, இருளரின் இருண்ட தோற்றத்தை வைத்து ’இருள்’ என்ற சொல் வந்திருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்கள்  இருண்ட காடுகளில் சுற்றித் திரிந்ததால் இருளர் என்று வந்திருக்கலாம். அதிலும்  நாங்கள் இருட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் இருளர் என்று பெயர் பெற்றோம் என்று அவர்களே சொல்லுகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரை  வெட்டக்காடு இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விவரிக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம்  அட்சரேகையில்    10° 10′ மற்றும் 11° 30’  வடக்கிலும் தீர்க்கரேகையில் 76° 40′ மற்றும் 77° 30’  கிழக்கிலும் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள இருளர் பழங்குடிகள் ஆரம்ப காலங்களில் கொங்குமண்டலத்தில் குடியேறியபோது, ​​இந்த இடம் சோழர்களால் ஆளப்பட்டது. அப்போது பல்வேறு மன்னர்கள் ஆட்சிப் புரிந்தனர். இறுதியில் பிரிட்டிஷ் பேரரசு இந்த இடத்தை ஆட்சி செய்தது, அதன்பிறகு கொங்குமண்டலம் என்ற பெயர் கோயம்புத்தூர் என பெயர் மாற்றப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ன் படி கோவை மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 34,72,578 அதில் ஆண்கள் 17,35,362 பேரும்   மற்றும் பெண்கள்  17,37,216  பேரும் அடங்குவர். இதில் மொத்த மலைவாழ் மக்கள் 28,797 அதிலும் குறிப்பாக இருளர் பழங்குடிகள் தோராயமாக 7000 காணப்படுகின்றனர் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருளர் மொழி
கமில் சுவலபில் (1973) இருளர் மொழியைத் தனி மொழியாக கருதுகிறார். எஸ்.வி. சண்முகம் தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் தனி மொழியென எடுத்துரைக்கின்றார். ஆர்.பெரியாழ்வார் (1976) இருள மொழி தனித்துவம் வாய்ந்த மொழியாக தனித்து நிற்கிறது. மேலும் இது தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் இருளர்கள் இரு மொழியாளர்கள் என்றும் தெரிவிக்கின்றார். கமில் சுவலபில் (1979) இருளர் சமூகக் கலாச்சாரம் மற்றும் கிளை மொழி அடிப்படையில் அவர்களை ஐந்து வகையாகப் பிரித்துள்ளார் அவை: மேலநாடு இருளர், வெட்டக்காடு இருளர், உராளி இருளர், கசபா இருளர் மற்றும் காடுபூஜாரி இருளர்.

இருளர் குல அமைப்பு
இருளர் பழங்குடியினரிடையே மொத்தம் 12 குலங்கள் காணப்படுகின்றன. அவை: குருனகே, வெள்லே, தேவனே, கொடுவே, பேராதரா, கர்ட்டிகா, அறுமூப்பு, குப்பே, குப்புலி, உப்பிலி, சம்பெ, புங்கெ ஆகிய குலங்கள் சமூக நிலைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. இருள பழங்குடிகள் அகமண உறவுடைய பிரிவாகக் கருதப்படுகின்றனர். இது சமூக நிலைப்பாட்டின் தனிநபரின் நிலையை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வம்சாவழியும் ஒவ்வொரு பிறப்பு மற்றும் திருமண விழாவில் அவர்களுக்கெனத் தனி பங்களிப்பு காணப்படுகிறது. இது ஒரு கடமையாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட குலத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

Continue Reading →