விக்கிமூலம்: வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2008

வேலுப்பிள்ளை பிரபாகரன்[விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் நாள் உரையிது. நவம்பர் 2008 மாவீரர் நாளையொட்டி ஆற்றிய உரையிது. அந்த வகையில் இவ்வுரைக்கு முக்கியத்துவமுண்டு. ஒரு பதிவுக்காக அவ்வுரை மீள்பிரசுரமாகின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னர் பிரிந்திருந்த பல தமிழர் விடுதலை அமைப்புகள் இன்று அரசியல்ரீதியாக ஒன்றுபட்டிருக்கின்றன. அதுபோல் இதுவரை காலமும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய, மடிந்த போராளிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு வகையான தாக்குதல்களாலும் மடிந்த மக்கள் ,உள்/புற முரண்பாடுகளுட்பட , அனைவருமே நினைவு கூரப்பட வேண்டும். இதுவரைகாலத் தமிழர்களின் போராட்ட வரலாறு முறையாக, எந்தவிதப் பாரபட்சமுமற்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகள் காரணமாகப் படுகொலைசெய்யப்பட்ட அனைவரும் இந்த நினைவு கூரலில் உள்ளடக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒற்றுமைக்கு இது மிகவும் உதவியாகவிருக்கும். தொடர்ந்தும் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் செய்யும் போக்கு கைவிடப்பட வேண்டும். உண்மைகளின் அடிப்படையில் (உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல) அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். – பதிவுகள் – ]

Continue Reading →

கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவை விழா – 2013

கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவை விழா - 2013 கனடாவில் இருந்து வாராவாரம் வெள்ளிக் கிழமை தோறும் வெளிவரும் உதயன் பத்திரிகையின் வருடாந்தம் நடக்கும் பல்சுவைவிழா சென்ற சனிக்கிழமை மாலை (26-10-2013) ரொரன்ரோவில் உள்ள ஆர்மேனியன் இளைஞர் மன்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு கனடா கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. கனடிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறனின் பாட்டு மன்ற நிகழ்ச்சி முக்கிய கலை நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதைவிட கர்நாடக இசை, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளும் உள்ளுர் கலைஞர்களால் மேடை ஏற்றப்பட்டன.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் ( 5 )

எகிப்தில் சில நாட்கள் 5கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் பிரதேசத்தின் ஈரலிப்பற்ற சீதோஷ்ணம் கட்டிடங்களில் விரிவும் சுருக்கமும் மாறி மாறி ஏற்படாது புராதன சின்னங்களை ஒரு நிலையில் வைத்திருக்கிறது. புராதன கட்டிடங்களுக்கு மனிதர்களால் ஏற்பட்ட அழிவுகள் அதிகம். பிரமிட்டின் மம்மிகளோடு இருந்த செல்வங்களை திருடர்கள் கொள்ளையடித்தனர். பிரமிட்டின் கற்களையும் பளிங்குகளையும் பிற்காலத்தில் வந்த எகிப்திய அரசர்கள் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அழித்தனர். மனிதர்களால் இவ்வாறு அழிவுகள் ஏற்பட்டபோது இயற்கை பல புராதன சின்னங்களை மண்ணால் மூடியும், வெப்பம் இயற்கையின் நுண்ணுயிர்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

Continue Reading →

மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை

- வெங்கட் சாமிநாதன் -சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான்  பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே குறியாகக் கொள்ளாமல் மாறுபட்ட நடைமுறைகளை பொதிகை கைக்கொள்ள முடிந்திருக்கிறது காரணம், அது மத்திய அரசின் பொறுப்பில் இருந்தது தான். இப்படித்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்து, ‘பரவாயில்லையே, இப்படியும் தமிழ்ல படங்கள் வருகின்றனவே” என்று சந்தோஷப்பட்டேன். அதை நான் பொதிகையில் பார்த்தேனா, இல்லை லோக்சபா தொலைக்காட்சியிலும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லி அனேக சிறப்பான படங்களையும் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களே, அதிலா? நினைவில்லை. ஒரு வேளை லோக் சபா தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கக் கூடும். எதானால் என்ன, விளம்பர வருமானத்தையே நம்பியிருக்காத, அதையே குறியாகக் கொள்ளாத ஒரு தொலைக்காட்சி ஸ்தாபனத்தில் தான் இவற்றைப் பார்த்திருக்க முடியும். பார்த்தேன். இடையிடையே பழைய விஜயகாந்தின் பழைய படத்தையும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லிக் காட்டுவார்கள் லோக்சபா சானலில்.  பழசானால் க்ளாஸிக்ஸ் தானாமே.

Continue Reading →

முகநூற் குறிப்புகள்: மாடிக் கோயில்!

தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக...ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய "மகேந்திர வர்மன்" என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற ஊரில் பாறைகளை குடைந்து "குடவரைக் கோயில்" ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது.தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக…ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய “மகேந்திர வர்மன்” என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் “மண்டகப்பட்டு” என்ற ஊரில் பாறைகளை குடைந்து “குடவரைக் கோயில்” ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது. மாடிக் கோயில் என்பது “மாடிபோல் அமைந்த கோயில்” என்று பொருள், கோயில் விமானத்திற்குள் மாடிப்படிகள் அமைத்து (அதாவது ஒரே கோயிலுக்குள் பல கோயில்களை ஒன்றின் மேல் ஒன்றாக 1st FLOOR, 2nd FLOOR போன்று இவற்றை அமைத்திருப்பர். கடைசி கோயிலுக்கு சென்றடைந்ததும் நீங்கள் விமானத்தின் உச்சியில் நின்று கொண்டு ஊரின் அழகை ரசிக்கலாம், இது போன்ற கோயில்களை இன்று பார்ப்பது மிகமும் அபூர்வம். தமிழகத்தில் உள்ள சுமார் 40,000 மேற்பட்ட கோயில்களில், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மாடிக்கோயில்களின் அமைப்பை தாங்கி இன்று தமிழகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள “வைகுண்டப் பெருமாள் கோயில்” மற்றொன்று உத்திரமேரூர் “சுந்தரவரதப் பெருமாள் கோயில்” இந்த இரண்டு கோயில்களும் பல்லவ மன்னர்களால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும், தமிழகத்தில் முற்காலத்தில் செங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக பழைய பாடல்களில் காணமுடிகின்றது.

Continue Reading →

குளோபல் தமிழ் நியூஸ் (மீள்பிரசுரம்): ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி… என்.சரவணன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.

“…15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை… செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்…. …ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது…”

Continue Reading →

சிங்கம் வைத்திலிங்கத்தின் முகநூற் குறிப்பு: அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம்!

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வாழ்வியலில் அனைத்து அடக்கி-ஒடுக்கல்களுக்கும்-எதிராகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம். அவர்களின் தியாகங்களுக்கு சிரம் தாழ்த்துவோம்.

Continue Reading →

திரைப்படம் எதிர் இலக்கியம்

யமுனா ராஜேந்திரன்திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சிரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில், இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம்-காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும், திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும்.

Continue Reading →

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்1.0 முன்னுரை

தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்1.0 முன்னுரை

தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →