கனடாத் தமிழ் இலக்கியம்: எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூலை (Canadian Tamil Literature: Writer V.N.Giritharan’s Corner)

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், அவை பற்றி வெளிவந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் Canadian Tamil Literature: Writer V.N.Giritharan’s Corner என்னும்…

Continue Reading →

மார்ச் 30, 2013: பிரான்சு கம்பன் கழக மகளிர் அணி நடத்தும் குறளரங்கம் 26!

அன்புடையீர் வணக்கம், பிரான்சு கம்பன் கழக மகளிர் அணி நடத்தும் குறளரங்கம் 26 அறிக்கை இணைத்துள்ளேன். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!  மேலதிக விபரங்கள் ….உள்ளே தகவல்:…

Continue Reading →

தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்

தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்இன்றைய தினம் (11.02.2013) பவள விழா அகவையைத் தொட்டு நிற்கும் கவிஞர் ஏ.இக்பால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாததொரு ஆளுமை என்பது யாவரும் அறிந்ததே. அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மேல் மாகாணம் தர்கா நகரை புகுந்தகமாகக் கொண்டு அங்கு இற்றைவரை வாழ்ந்து வருகிறார். இலக்கியத்துறையில் தன்னை நிலைநாட்டி ஜாம்பவானாகத் திகழும் அதே நேரத்தில் கல்விப் புலத்தில் அவர் பணி இரண்டாம் பட்சமானதல்ல. அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் படிக்கும்போது அங்கு பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எம்.வை.எம். முஸ்லிம், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோரால் இனம் காணப்பட்டு வழி நடத்தப்பட்டார். அங்கு “கலாவள்ளி’ என்ற கையெழுத்துச் சஞ்சிகை இவர் பொறுப்பில் நடத்தப்பட்டது. ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர் தமிழ்ப் பாட நூல் ஆலோசனை சபை உறுப்பினராக, இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராக விடுவிப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, கல்விக் கல்லூரி தமிழ்ப் பிரிவு போதனாசிரியராக பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

Continue Reading →

கவிதை: அ.ந.க

[ ஏ.இக்பாலின் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய கவிதையொன்று அ.ந.க என்ற தலைப்பில் மல்லிகை சஞ்சிகையின் ஆகஸ்ட் 1969 இதழில் வெளிவந்திருந்தது. அதனை எமக்கு அனுப்பிய எழுத்தாளர் மேமன்கவி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி. – பதிவுகள்]

அறிஞர் அ.ந.கந்தசாமி
இன்று இலங்கையி லேறிப் பொலிந்திடும்
இலக்கியம் யாவினுக்கும்
நன்று தெளிவினை நாட்டிலாக்கிடும்
நற்றமிழ்ப் பத்திரிகைத்
தொண்டுட னேறிய தீரபுருஷராய்த்
திகழ்ந்து தமிழ் வளர்த்த
பண்டிதனல்லன்; பட்டமே பெற்றிடாப்
படித்தவன் கந்தசாமி.

Continue Reading →

‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan.

அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது நாவலான ‘குடிவரவாளன்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘An Immigrant’ நாவலுக்காக முனைவர் தாரணி அவர்கள் நல்லதொரு விமர்சனமொன்றினை எழுதியிருக்கின்றார். மின்னூலாக வெளிவந்துள்ள ‘An Immigrant’ நாவலுக்கான, அந்த விமர்சனத்தினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.


“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested” -Sir Francis Bacon English author (1561 – 1626)

‘An Immigrant’: A poignant autobiographical sketch of  V.N. Giritharan.

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

- R.  Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for WomenAn Immigrant is a giant leap in fiction for the Canadian writer of Sri Lankan Tamil origin  V.N. Giritharan. Thiis is a book to be read with utmost “diligence and attention”, as it deals with the existential crisis of a desperate soul in an alien land. The story is inspiring and lights up the spirit of every heart. Although the emphasis of this work is more on the survival struggle of a man known as Ilango, the protagonist, it bears a strong testimony to the brutal genocide of Sri Lanka, which is still infuriating to people across the world. The author V.N. Giritharan has presented in his book, his first hand experience of how the Tamil people are being victimized by the brutalities of the Sinhalese hoodlums who harrass the Tamil. It is also a unique tribute to those Tamil people who lost their lives, families, belongings, nationality and even the identity of being a human in the 1983 July riot that took place in Sri Lanka. In the first few chapters of the book, the author vividly illustrates the plight of the young man, Ilango, who is caught in the riot. In his own land, Ilango feels trapped by the racists and tries his best to escape the monsters. It is a heartrending narration of the author of the riot through the eyes of Ilango.

To the casual reader, this book will be exciting because of its straightforwardness both in the theme as well as in the style. However, it is so astonishing that the book carries multiple layers of meanings, dynamic profundity in the description of the details and critical complexity of notions. It is not just the story of Ilango who escapes the riot in 1983 to reach Canada.  But, the author discusses various challenging issues like the illegal immigrant status forced on an innocent man, denial of the Human Rights in a developed country like the USA, the horrible life in the detention camp, job-seeking crisis of a man without a Social Insurance Card, the tricks of the road side vendors, like Haribabu and Henry, the exploitation of agents like Peter and Pablo, the cowardice of Anisman, the advocate, and most of all, the denunciation of the so-called illegal immigrants who live in the City of New York. The other side of the fascinating City jolts not only the protagonist, but also the readers.

Ilango is seen as a simple innocent youth of Sri Lanka in the initial chapters of the book, who, then, develops into an extraordinary man with impressive qualities even amidst of his adversities. He is a poet, pragmatist, writer, idealist, humanist and an optimist too. In a somber state of affairs in his life, he recalls his readings of the poems of Bharathiar, the renowned poet of Eelam, V.I.S.Jeyabalan and another Eelam poet ‘Kavindran’ (A.N.Kandasami). These renderings provide him with immense strength. When Ilango is not certain about the resolution of the unbalanced predicaments of his life, he gets himself transformed to a philosopher. He considers his life like a tree log that swims along the current of water. Ilango’s positive approach to life is another trait that needs to be appreciated, which is very rare in most human beings.

Continue Reading →

வளர்பிறை அனுபவங்கள்

கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை  மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு.தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை அவர் கவிதைகள்  எப்போதும் கொண்டிருக்கிறது.கவிஞர் கதிர்பாரதிசுப்ரபாரதிமணியன்கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை  மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு.தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை அவர் கவிதைகள்  எப்போதும் கொண்டிருக்கின்றன. இத்தொகுப்பில் கவிதைகளில், கவிஞன் பற்றி நிறையவே எழுதியுள்ளார். கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி என்கிறார். எப்படியாகினும் கடத்தி விட வேண்டும் என்கிற ஆசையைச் சொல்கிறார். துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பென்று.  துப்பாக்கிக்குள் ரவை நிரப்பியதைப் போலாகிறது. அழவைத்து விட்ட நிறைவும் வந்து விடுகிறது. நவகவிஞனின் தினப்படி வாழ்க்கையின் அவலத்தை “  மகாகவி கவிதை எழுதுகிறான்”என்று குறிப்பிட்டு அவனின் எதிர்வினையையும் சொல்கிறார். கதிர்பாரதியின் கனவுகளை கொள்முதல் செய்து கொண்டு போன வாசகனின் கண்களில் ஒளி பெருகத் தொடங்கச் செய்கிறார். இவரின் பாழடைந்த வீட்டை கடந்து செல்பவனின் அனுபத்தை  வாசகன் கவிஞனை கடந்து செல்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் அவன் என்ன செய்து விட முடியும் என்பதில் ” ஆவல் ”கவிதையில் கூடக் குறிப்பிடுகிறார்.வாழ்க்கையே கொலைக்களமாகி வருவதைச்  சொல்லும் அனுபவங்கள் உண்டு.  வாழ்க்கையில் கவிதைக்கு இடமில்லாமல் போய் விடுகிற துயரத்தையும் மேலிட்டு எடுத்துக் காட்டுகிறார்.யாருடைய அனுபவங்களோ, வார்த்தைகளோ கூட  தனக்குள் வரித்துக் கொண்டதாகி பின் கவிதை வரிகளாகின்றன்.

Continue Reading →

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (7)

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட எண்ணம் இல்லை.  தருமு சிவராமு ஒருவர் தவிர. எழுத்து பத்திரிகையில் வெளிவந்த தம் கவிதைகளைப் பார்த்துத்தான் தான் சி.சு. செல்லப்பாவுக்கு  புதுக்கவிதை பற்றிய ஞானமே செல்லப்பாவுக்கு சித்தித்தது என்று பேச எழுத ஆரம்பித்தார். அன்றைய சிற்றிதழ் சூழலின் கவனம் அவர் பக்கம் திரும்பியதும் தம் பின்னால் ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கத் தொடங்கியதாக அவர் நம்பினார். 

Continue Reading →

எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி ‘நானா’ மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா!

எமிலி ஸோலா: - அறிஞர்  அ.ந.கந்தசாமி -[14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான ‘நானா’வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் ‘நானா’வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம் – பதிவுகள்].   உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. ‘பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!’ என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.

Continue Reading →

சுதந்திரன் ஜுலை 8, 1951; கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? “பெண்ணடிமையின்” சிகரம் என்பதே சாலப்பொருந்தும்! மன்னனின் தவறுக்காக மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்திய கொடுமை. புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சி!

[அறிஞர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் பத்திரிகையில் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் சிலப்பதிகாரத்தை விமர்சிக்கும் இந்தக் கட்டுரையினை ஜுலை 8, 1951 அன்று வெளியான சுந்திரனில் எழுதினார். இந்தக் கட்டுரை மிகுந்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது. அவற்றையும் சுதந்திரன் பிரசுரித்திருந்தது. பின்னர் இவற்றுக்கெல்லாம் பண்டிதர் திருமலைராயர் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக பண்டிதர் திருமலைராயரின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். இக்கட்டுரைகள் தமிழகத்தில் பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறிகின்றோம். இதுபற்றிய ஆதாரங்களைத் தமிழகத்திலுள்ளவர்கள் யாராவது அறிந்திருந்தால் அறியத்தரவும். எமது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com – பதிவுகள்-]

Continue Reading →

ஆரோக்கிய விவாதத்துக்கானதோர் அழைப்பு!

அன்புடையீர் தமிழாய்வு மாநாடுகள் மற்றும் தமிழ் விழாக்கள் பற்றிய கருத்துக்களை ஒரு கட்டுரைவாயிலாகப் பதிவுசெய்திருக்கிறேன். தமிழின் வளர்ச்சியில் அக்கறைகொண்டவர் என்ற வகையில் உங்கள் மேலான கருத்துக்கiளைப் பதிவிட்டு…

Continue Reading →