வாசிப்பும், யோசிப்பும் 123 : பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றிச் சில குறிப்புகள்…..

ஒல்லாந்தர் பார்வையில் ‘யாழ்ப்பாணத்தவர்’!

பேராசிரியர் கணபதிப்பிள்ளைபேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை எனத் தமிழ் இலக்கிய உலகில் கணபதிப்பிள்ளைகள் பலர். யாழ் இந்துக்கல்லூரியிலும் ஆசிரியரொருவரின் பெயர் கணபதிப்பிள்ளை. அவருமொரு பண்டிதரென்று நினைக்கின்றேன். அவரும் பத்திரிகைகளில் இலக்கியக்கட்டுரைகள் எழுதியதாகக்கூறக் கேட்டிருக்கின்றேன். இவ்விதம் கணபதிப்பிள்ளைகள் பலர் இருந்ததால் ஆரம்பத்தில் எனக்குப் பெருங் குழப்பமேயிருந்தது. நான் முதலில் அறிந்த கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள். அவரை அவரது சங்கிலி நாடகத்தினூடாகத்தான் முதலில் அறிந்து கொண்டேன். அந்தச் சங்கிலி நாடகப்பிரதி எனக்குக் கிடைத்தது தற்செயலானதொன்று. யாழ்ப்பாணத்திலிருந்த ஆச்சி வீட்டிலிருந்த பரண் மேலிருந்து கிடைத்த புத்தகங்களில் சில: மறைமலை அடிகளாரின் நாகநாட்டரசி குமுதவல்லி, திப்புசுல்தான் (பெரிய அதிக பக்கங்களுள்ள நாவல்), தேவன் (யாழ்ப்பாணம்) எழுதிய மொழிபெயர்ப்பு நாவலான ‘மணிபல்லம்’ அடுத்தது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் சங்கிலி.

என் மாணவப்பருவத்தில் நீண்ட நாள்களாக நான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைதான் ‘சங்கிலி’ நாடகத்தை எழுதிய பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்று எண்ணியிருந்தேன். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றிப்போதுமான நூல்கள் வெளிவந்திருக்கவில்லை என்பதுதான்.

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் ‘ஈழத்து வாழ்வும் வளமும்’ நூலினை அண்மையில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஈழத்தமிழர் வரலாறு பற்றி, அவர்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் பற்றி, அவர்தம் வாழ்வு பற்றி, அவர்தம் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள், அவர்தம் கிராமியத்தெய்வ வழிபாடு, அவர்தம் இசை, சிற்பக்கலை பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். குமரன் புத்தக இல்ல வெளியீடாக, கலாநிதி கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கின்றது.

இந்த நூலில் பேராசிரியர் ‘யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர்’ என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் ஒல்லாந்தர் பார்வையில் யாழ்ப்பாணத்தவர் எவ்விதம் தோன்றினார்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். அதனை வாசித்ததும் வந்த சிரிப்பினை அடக்க முடியவில்லை. அது இது:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 122 : ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான நூல் மதிப்புரைகள் சில/……

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்‘பதிவுகள்’ இணைய இதழ் ஆரம்ப காலகட்டத்தில் நூல் மதிப்பரைகளை வெளியிட்டு வந்தது. நூல் மதிஉப்புரைக்காக தமது படைப்புகளின் இரு பிரதிகளை அனுப்பி வைககவும் என்ற எமது வேண்டுகோளினையேற்று, எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைத்தார்கள். நூல் மதிப்புரை பகுதிக்காக அவ்வப்போது பல்வேறு புனைபெயர்களில் மதிப்புரைகள் எழுதுவதுண்டு. அவ்விதம் அவதானி, திருமூலம், மார்க்சியன், ஊர்க்குருவி, வானதி  போன்ற புனைபெயர்களில் எழுதிய நூல் மதிப்புரைககளில் சில ‘வாசித்ததும், யோசித்ததும் பகுதிக்காக மீள்பிரசுரமாகின்றன ஒரு பதிவுக்காக.

பின்வரும் நூல்களுக்கான மதிப்புரைகளை இங்கு நீங்கள் வாசிக்கலாம்: கே.எஸ்.சிவகுமாரனின் ‘அசையும் படிமங்கள் , ஆழியாளின் ‘உரத்துப் பேச…, ‘ நடேசனின் ‘வாழும் சுவடுகள்’, பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!,  அசை அரையாண்டிதழ், ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு, திலகபாமாவின் கவிதைகள்!, பா.அ. ஜயகரனின் ‘எல்லாப் பக்கமும் வாசல்’! , ஆசி. கந்தராஜாவின் ‘பாவனை பேசலன்றி..’, செ.க.வின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’, நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்! & காஞ்சனா தாமோதரனின் ‘இக்கரையில்..’

மதிப்புரைகளுக்காக நூல்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் அப்பகுதியினை நிறுத்தி வைத்தோம். அதற்குப்பதிலாகத் தற்பொழுது பதிவுகள் இணைய இதழுக்கு நூல்கள் பற்றி அனுப்பப்படும் மதிப்புரைகளை ‘நூல் அறிமுகம்’ என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றோம். ஏற்கனவே ‘பதிவுகளி’ல் வெளியான மதிப்புரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் ஒரு பதிவுக்காக அவ்வப்போது மீள்பிரசுரமாகும்.


1. . கே.எஸ்.சிவகுமாரனின் ‘அசையும் படிமங்கள்’

வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு -06, இலங்கை. தொலைபேசி: 826336. விலை: 150 ரூபா
ஆசிரியரின் மின்னஞ்சல்:kssivan.1@juno.com. – பதிவுகள், ஜூன் 2003 இதழ் 42 –

தமிழில் திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலமாகத் தான் மிகவும் விரிவாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதி வருகின்றார்களெனெ நினைத்தேன். ஆனால் அண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் ‘அசையும் படிமங்கள்’ நூலினை வாசித்த பொழுதுதான் புரிகின்றது சிவகுமாரன் அறுபதுகளிலிருந்தே திரைப்படக் கலை பற்றி அவ்வப்போது தமிழில் எழுதி வந்துள்ள விடயம். இதுவரை காலமும் இலக்கியப் படைப்புகள் பற்றியே இவர் அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருவதாகக் கருதியிருந்த எனக்கு ‘அசையும் படிமங்கள்’ வியப்பினையே தந்தது.

Continue Reading →

பனுவல் வரலாற்றுப் பயணம் 4 :

கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள் 1. திருவெண்ணைநல்லூர்2. கிராமம்3. திருக்கோவிலூர்4. ஜம்பை – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம்…

Continue Reading →

தேடகம் ஆதரவில் எழுத்தாளர் என்.ஏ.ரகுநாதனின் ‘ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி’ நூலை முன்வைத்து இருத்தலும் உரைத்தலும்!

இடம்: Don Montgomery Community Recreation Centre, 2467 Eglinton Ave. E,Scarborough, ON M1K 2R1காலம்: செப்டம்பர் 23, பி.ப 4மணி ஏற்பாடு: தேடகம் (தமிழர்…

Continue Reading →

மறைந்தும் மறையா மாமேதை அப்துல் கலாம்.

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.’

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

திருக்குறளுக்கு அமைய அப்துல் கலாம் கசடறக் கற்றார் கற்றபின் அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுகி நின்றார். அதுவும் காணாதென்று மேலும் தொடர்ந்து செயற்பட்டு உலக மேதையானார். அவர் வரலாற்றைச் சற்று விரிவு படுத்திக் காண்போம்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஜைனுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும், நான்கு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் ஆறாவது குழந்தையாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் 15-10-1931 அன்று அவதரித்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு படகோட்டியின் மகனாவார். இவர் குடும்பம் ஏழ்மையில் வாடியதால், இவர் செய்தித்தாள்களை விநியோகம் செய்தார். இவர் ஒரு பழுத்த பிரமச்சாரியாவார்.

இவர் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின், திருச்சினாப்பள்ளியிலுள்ள ‘செயின்ட் ஜோசேப் கல்லூரியில்’ இயற்பியல் பயின்று 1954-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால் இயற்பியற் துறையில் ஆர்வம் காட்டாத இவர், 1955-ஆம் ஆண்டு தன்னுடைய ‘விண்வெளிப் பொறியியற் படிப்பை’ சென்னையிலுள்ள   எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக அப்துல் கலாம்
1960-ஆம் ஆண்டில் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்’ (Defence Research and Development Organisation = DRDO )  எனும் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து இந்திய ராணுவத்துக்கு வழங்கினார். பின்னா;, ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்’ (Indian Space Research Organisation = ISRO) எனும் பிரிவிலும் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து, ‘துணைக்கோள் ஏவுகணைக் குழுவில்’ (Satalite Launch Vehicle = SLV) செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார். இவர் 1980-ஆம் ஆண்டு SLV-111 ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச்செய்து வெற்றியும் கண்டார். இது இந்தியாவுக்கே ஒரு பெரும் சாதனையாக அமைந்தது. இச் செயலைப் பாராட்டி இந்திய மத்திய அரசு இவருக்கு 1981-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 121: செங்கை ஆழியான் பற்றிய நினைவுகள்… விரைவில் பூரண குணமடைய வேண்டுகின்றோம்!

செங்கை ஆழியான்செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் தனது பத்திக்காக எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கட்டுரையில் செங்கை ஆழியானைப்பற்றி எழுதியிருந்தார். அதிலவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அதிர்ச்சியைத்தந்தது. செங்கை ஆழியான் அவர்கள் சுகவீனமுற்று, பேசுவதற்கும்  முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டிருந்த விடயமே அது.

இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் செங்கை ஆழியானுக்கு (கலாநிதி. க. குணராசா) அவர்களுக்கு முக்கியமான பங்குண்டு. புனைகதை, தமிழர்தம் வரலாறு பற்றிய ஆய்வு, அரசியல் மற்றும் இலக்கிய ஆவணச்சேகரிப்பு ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது.  புனைகதையைப்பொறுத்தவரையில் சமூக (வாடைக்காற்று, காட்டாறு, , வரலாறு (கடற்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம்) மற்றும் நகைச்சுவை (ஆச்சி பயணம் போகின்றாள், கொத்தியின் காதல், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்ற)  ஆகிய துறைகளில் பல முக்கியமான நாவல்களை அவர் படைத்துள்ளார். 1977 மற்றும் 1981 காலகட்டத்தில் யாழ் நகரம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டபோது அவற்றைப் பதிவு செய்ய வரதரின் வேண்டுகோளின்பேரில் ஆவணப்படைப்புகளாக உருவாக்கினார். அவற்றை அவர் நீலவண்ணன் என்னும் புனை பெயரில் எழுதியதாக ஞாபகம். இவரது பல குறுநாவல்கள் தமிழகத்துச் சஞ்சிகைகளில் பரிசுகளைப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை தவிர மறுமலர்ச்சி, சுதந்திரன், மல்லிகை மற்றும் ஈழநாடு சிறுகதைகளைத்தொகுத்திருக்கின்றார்.  அத்தொகுப்புகளுக்காக நிச்சயம் இவரை ஈழத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இவரது நாவலான ‘வாடைக்காற்று’ ஈழத்தில் வெளியான தமிழத்திரைப்படங்களிலொன்று. அதன் மூலம் ஈழத்துத் தமிழ்த்திரைப்பட உலகிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இவரது மூத்த அண்ணனான புதுமைலோலனும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த இன்னுமோர் எழுத்தாளரே. புதுமைலோலன் தமிழரசுக்கட்சிக்காக அரசியலில் ஈடுபட்டவர். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி அடியுதைபட்டு காயங்களுக்குள்ளாகியவர்தான் அவர். அவரது மகனும் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் போராடி மடிந்தவர்களிலொருவர்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்.:ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தமது கடின உழைப்பினால் தொண்டாற்றிய செங்கை ஆழியான்! கலாநிதி கந்தையா குணராசா விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும் மகாவம்சம் வரலாறு பற்றியும் ஆய்வுமேற்கொண்ட பன்னூல் ஆசிரியர்.

செங்கை ஆழியான்முருகபூபதிசமீபத்தில்  இலங்கை  சென்று  திரும்பியிருந்த  மெல்பனில் வதியும் இலக்கிய  நண்பரும்  இளம்  படைப்பாளியுமான  ஜே.கே.  என்ற புனைபெயருடன்   எழுதும்  ஜெயகுமரன்  சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில்   நண்பர்  செங்கை  ஆழியானை  சென்று பார்த்ததாகச் சொன்னார். ஈழத்தின்  மூத்த  எழுத்தாளராக  அறியப்பட்ட  எழுதிக்கொண்டே இயங்கிய  செங்கை  ஆழியான்  சுகவீனமுற்று  பேசுவதற்கும் சிரமப்பட்டுக்கொண்டு   வீட்டில்  முடங்கியிருப்பதை  ஜே.கே. சொன்னபொழுது    கவலையாக  இருந்தது. அவருக்கு   நோய்க்குரிய  அறிகுறிகள்  தென்பட்ட 2010 – 2011 காலப்பகுதியில்  சந்தித்த  பின்னர்  மீண்டும்  சந்திப்பதற்கு  எனக்கு சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை. ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியில்  செங்கை  ஆழியானுக்கு முக்கியமான   இடம்  இருக்கிறது  என்பதை  எவரும் மறுக்கமுடியாது.    இவரும்  செ.கணேசலிங்கன்  போன்று  நிறைய எழுதியவர்.   யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவராக  பேராதனைப் பல்கலைக்கழகம்  புகுந்த  கந்தையா குணராசா   என்ற   இயற்பெயர்  கொண்டிருந்த  செங்கை ஆழியான் சிறுகதை,    நாவல்,   தொடர்கதை,  ஆய்வுகள்,  மற்றும்  புவியியல் சம்பந்தப்பட்ட   பாட  நூல்கள்,   ஏராளமான  கட்டுரைகள், விமர்சனங்கள்,    நூல்   மதிப்புரைகள்  எழுதியவர்.     பல இலக்கியத்தொகுப்புகளின்  ஆசிரியராகவும்  பல   நூல்களின் பதிப்பாசிரியராகவும்  விளங்கியதுடன்   சுறுசுறுப்புக்கும் விடாமுயற்சிக்கும்   எடுத்துக்காட்டாகவும்  முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இன்றும்   எமது  நாட்டிலும்  தமிழகத்திலும் விமர்சனங்களுக்குள்ளாகிவரும்  மகாவம்சம் பற்றிய  ஆய்வையும் மேற்கொண்டு   நூல்   எழுதியிருப்பவர்.

நோயின் உபாதை அவரைப்   பேசவும்  எழுதவும் முடியாமல் முடங்கவைத்திருக்கிறது. இளமைத்துடிப்புடன் அவர் இயங்கிய காலங்களில் இன்று போன்று கணினி வசதி  இருக்கவில்லை. வீரகேசரி பிரசுரமாக  வெளியான  அவருடைய  வாடைக்காற்று நாவலை 1973  காலப்பகுதியில்  படித்துவிட்டு, யாழ்ப்பாணம்  பிரவுண் வீதியிலிருக்கும் அவருடைய கமலம் இல்லத்தின் முகவரிக்கு கடிதம் எழுதினேன். அவ்வேளையில்  அவர்  செட்டிகுளம்  உதவி  அரசாங்க  அதிபராக பணியிலிருந்திருக்க வேண்டும். நெடுந்தீவு    தொழில்  வாழ்க்கை  அனுபவங்களிலிருந்து  அவர் எழுதிய அந்த  நாவலில்  வரும் பாத்திரங்களை    எங்கள்  நீர்கொழும்பூர்   மீனவ  மக்கள்  மத்தியிலும்  நான்  பார்த்திருப்பதனால்   அந்த  நாவல்  எனக்கு  மிக  நெருக்கமாகவே இருந்தது.

Continue Reading →

கவிஞர் வைதீஸ்வரனின் பன்முக இலக்கியப்பங்களிப்பு!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு அகவை எண்பது!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத்தக்கவை. http://www.vydheesw.blogspot.in/ ) கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரை அடர்செறிவானது!   வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல், அவருடைய சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஆகியவை அவருடைய இலக்கியப் பங்களிப்பை மரியாதையோடு நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாய் இங்கே தரப்பட்டுள்ளன.

Continue Reading →