பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!

- வி. ரி. இளங்கோவன் -பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..! ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 – ம் திகதி (11 – 12 – 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் ((50, Place de Torcy, 75018 Paris –  Métro:  Marx Dormoy) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Continue Reading →

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தமிழ்மொழித்திறன் போட்டி – 2011 / 12

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12!கனடிய ஒன்ராறியோ அரசைச் சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும் மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு இச்சங்கம் உருவாக்கப்பட்டது. பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள் முதன்மை கொடுத்து வருகின்றன. அந்த வாய்ப்பினை மாணவர் முழுமையாகப் பயன்படுத்தவும் தாய்மொழி கலை பண்பாடு போன்றவற்றில் மாணவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் இச்சங்கம் உதவி வருகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் இச் சங்கம் மாணவர்களுக்கிடையேயான மொழித்திறன் போட்டிகளையும் ஆசிரியர் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது.

Continue Reading →

உயிர்மை 100ஆவது இதழ் வெளியீட்டு விழா

உயிர்மை 100ஆவது இதழ் வெளியீட்டு விழா அருமை நண்பர்களே! ‘உயிர்மை’ இதழ் தனது நீண்ட பயணத்தின் இன்னொரு கட்டத்தை எட்டுகிறது. வரும் டிசம்பர் 1 ஆம்தேதி ‘உயிர்மை’யின் 100ஆவது இதழ் வெளிவருகிறது. டிசம்பர் 1 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் (மாவட்ட மைய நூலகம், (LLA BUILDING),735, அண்ணா சாலை, சென்னை-2) நடைபெறும் இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பிதழின் முதல் பிரதியை இந்திரா பார்த்தசாரதி வெளியிட, எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். எங்களது இந்தப் பயணத்தை வலிமையும் அர்த்தமும் உள்ளதாக்கிய ‘உயிர்மை’- ‘உயிரோசை’ வாசகர்கள் இந்த நிகழ்வில் நேரடியாகவோ மானசீகமாகவோ பங்கேற்க வேண்டுமென விரும்புகிறேன். நீங்களின்றி இந்தப் பயணத்தின் ஓரடியும் சாத்தியப்பட்டிருக்காது.

Continue Reading →

The military is taking over large chunks of land in North- Chandrika Kumaratunga

Chandrika Kumaratunga26 November 2011 –  Former President Chandrika Kumaratunga last week delivered a scathing attack on the government’s handling of the former IDPs at a discussion held in the South Asia Policy Research Institute in Colombo. “You may be satisfied with it (reconciliation process), but I am not,” she said responding to Professor Rohan Gunaratna, who was the guest speaker. Prof. Gunaratna earlier in his address outlined the government’s achievements in post war transformation in the spheres of humanitarian assistance, social and economic developments and political engagement. “I don’t know whether it was necessary to keep250,000 civilians in detention for two years?” Kumaratunga quizzed. She recalled that the government leaders at the time justified the move, arguing that it was necessary to identify the terrorist cadres among the civilians.

Continue Reading →

(81) – நினைவுகளின் சுவட்டில்..

வெங்கட் சாமிநாதன்ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர். புதிதாக தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” என்று எங்களில் ஒருவர் கேட்க, “ஆமாங்க, இங்க நிறைய நம்மாட்கள் இருக்காங்களாங்க? என்று கேட்டார் வந்தவர்களில் பெரியவர். “நிறைய இருக்காங்க. ஆபிஸ்ல வேலை செய்யறவங்களும் சரி, அணைக்கட்டிலெ வேலை செய்யறவங்களும் சரி, நிறையவே இருக்காங்க. அணை கட்டி முடியற வரைக்கும் இருப்பாங்க. அப்பறம் எங்கேயோ யார் என்ன சொல்ல முடியும்? வேறே எங்கே வேலை கிடைக்கும்னு தேடிப் போகணும்” என்றோம்.

Continue Reading →

Madduvil Gnanakumaran’s poems

Madduvil is a place in the Yaalpaanam (Jaffna) peninsula in the North. A youngster from this area has been writing poems in Tamil for more than 10 years but many had had no opportunity to read them because he had not brought them in book form. However two books have been already published in recent time. K.S.SivakumaranMadduvil is a place in the Yaalpaanam (Jaffna) peninsula in the North. A youngster from this area has been writing poems in Tamil for more than 10 years but many had had no opportunity to read them because he had not brought them in book form. However two books have been already published in recent time. This is the third one. This collection is called “Siraku Mulaiththa Theeyaaka…” (Like Fire with a Wing). This poet named Gnanakumaran was away in Germany for a long period of time and has come back to his motherland having qualified in the German language and presently teaches that tongue. He also interests himself in making short films. He has contacts with some of the writers in Tamilnadu. In the collection mentioned there are a number of poems with a few illustrations. Some of the poems are his attempts to write poetry, while a few others underline humanism as his motif. With his present maturity he could shine as a notable poet with a strong sense of a vision and philosophy.

Continue Reading →

ஈழத்துத் தமிழ் இலக்கியம்: ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்!

எழுத்தாளர் இளங்கீரன்ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது. அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின் வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்துள்ளமையே இதற்கான காரணமாகும். 1950 களிலிருந்து 1970கள்வரை படைப்பிலக்கியத் துறையில் இளங்கீரன் மும்முரமாகச் செயற்பட்டார். எழுத்தையே வாழ்வாகக் கொண்ட ஒருவராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இக்கால கட்டத்தில் அவரது எழுத்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ஈழத்தின் சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டிய விருத்தியினைக் காட்டி நிற்கின்றன. இளங்கீரன் பல்வகைப் பரிமாணங்களையுடைய ஒருவராக அறியப் படுகின்றார்.

Continue Reading →

ஈழத்துத் தமிழ் இலக்கியம்: செ.யோகராசாவின் படைப்புத்துறைப் பங்களிப்புகளும் பயன்பாடுகளும்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை பீடத்தின் தலைவராக இருந்து செயற்படும் கலாநிதி செ. யோகராசா நவீன கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை பீடத்தின் தலைவராக இருந்து செயற்படும் கலாநிதி செ. யோகராசா நவீன இலக்கியத்தின் பல்துறைப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து தமது கருத்துக்களை முன்வைப்பதில் முன் நிற்பவராக முகிழ்ந்து நிற்கின்றார். கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நவீன இலக்கியம் சம்பந்தமான பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். சிறுவர் இலக்கியம் பற்றிய இவரது சிந்தனையை முதலில் நோக்குவோம். ‘ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்! ‘ஈழத்து சிறுவர் பாடல் களஞ்சியம்’ என்ற இவரது நூல்கள் இரண்டையும், ஆழ்ந்த அகன்ற அறிவிற்காய் ‘குமரன் புத்தக இல்லம் ‘வெளிக்கொணர்ந்துள்ளது. நவீன இலக்கியத்துறைகள் வளர்ந்துள்ள ஈழத்துத் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்துறையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதென்பதனை ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிந்திருப்பர். மேலை நாடுகளில் இத்துறைசார் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதாய் உள்ளமை மனங்கொள்ளப்பட வேண்டியது. இந்நிலையில் சிறுவர் இலக்கியத்துறையில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியமானது.

Continue Reading →

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்! பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன். ‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார். சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள். முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன். ‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார். சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள். முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

Continue Reading →