நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 – 13)!

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

5

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!சனிக்கிழமை ஐந்து மணியளவில் தமிழர் கூட்டமைப்பு கூட்டம் துவங்கியது. தேவகுரு பின்னுக்குப் போய் அமர்ந்தார். அதனைப் பார்த்த தலைவர் சற்குணம், அவரை முன்னுக்கு கொண்டு வந்து அமர்த்தினார். இந்தப் பிரச்சனைகளிலே அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தான் இவற்றை வைத்துக் கொண்டு பிரபல்யம் அடைவதாக இளைஞர்கள் சிலர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ எனவும் பயந்தார். தலைவர் தமது உரையைச் சிறிதாக முடித்துக் கொண்டு, பிரதான உரையைத் தேவகுருவை நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். ‘நாம் நினைப்பவற்றை, உண்மையிலே உறுதிபூண்டு, அவர்களுக்குச் சொல்லவேண்டியது தமது கட்டாயம்’ என்று நினைத்தார்.

‘கடமையைச் செய்; பயனில் பற்று வைக்காதே. கடமை செய்வதினால் கிடைக்கும் பயனையும் ஈசுராப்பணமாக்குதல் வேண்டும்’ என்று இராமநாதர் கீதையின் சாரம் பற்றிச் சொல்லும்பொழுது கூறியது அவருக்கு அப்பொழுது நினைவில் மிதந்தது.

Continue Reading →

‘அம்மா’வின் பறிபோன ஆட்சியும் , பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பும்!

'அம்மா'வின் பறிபோன ஆட்சியும் , பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பும்!

‘அம்மா’வின் ஆட்சி முடிவுக்கு வந்ததையிட்டு எதிர் அரசியல்வாதிகள் துள்ளிக்குதிக்கின்றார்கள். அம்மா முதல்வரோ இல்லையோ அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அவர்தான். அவர் சிறையிலிருந்தாலும், வெளியிலிருந்தாலும் ஆட்சிக்கயிறு அவர் கையில்தான். இதனைப் புரிந்துகொள்ளாமல் தமிழக அரசியலின் ஊழற் பெருச்சாளிகளெல்லாம் துள்ளிக்குதிக்கின்றன. விரைவில் இந்தியாவின் பல அரசியல்வாதிகளுக்கெதிரான ஊழல் வழக்குகள் தீவிரப்படுத்தப்படலாம். அம்மாவுக்கே இந்த நிலை என்றால் அவர்களது நிலை.. இப்பொழுதே அவர்களுக்கு வயிற்றைக்கலக்கத் தொடங்கியிருக்கும்.

தமிழக முதல்வருக்கெதிரான இந்தத்தீர்ப்புக் காரணமாக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகச் சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஊழல் புரிந்தவர்களெல்லாரும் வெளியிலிருக்கின்றார்கள். அவர்களும் உள்ளே போகும் நிலை வந்தாலே பாரதத்தில் நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகக் கருத முடியும். இந்திரா காந்தியின் படுகொலையின்போது, குஜராத் படுகொலையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுக்குக் காரணமானவர்கள் இன்னும்  வெளியிலிருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் உள்ளே செல்லும் நிலை வந்தால்மட்டுமே இந்தியாவில் நீதி இன்னும் உயிருடனிருப்பதாகக் கருத முடியும். அதுவரையில் இத்தீர்ப்பினை முழுமையாக நீதி செத்துவிடவில்லை என்பதன் அடையாளமாகக் கொள்ள  முடியாது.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குத்துவிளக்கு திரைப்படம் வெளியிட்ட கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா தென்னிந்திய தமிழ் சினிமாவின் இராட்ச ஒளிவெள்ளத்தால் மங்கிப்போன ஈழத்தின் அகல்விளக்குகள்.

குத்துவிளக்கு   திரைப்படம்   1970   களில்    உருவான    சூழல்   மிகவும் முக்கியமானது.  வி.எஸ். துரைராஜாகுத்துவிளக்கு   திரைப்படம்   1970   களில்    உருவான    சூழல்   மிகவும் முக்கியமானது.     டட்லி சேனா  நாயக்கா    தலைமையிலான    ஐக்கிய தேசியக்கட்சி    படுதோல்வியடைந்து    ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க)  –  என். எம். பெரேரா   (சமசமாஜி) –   பீட்டர்    கெனமன்    (கம்யூனிஸ்ட்) கூட்டணியில்    அரசு    அமைந்த   பின்னர்   பல   முற்போக்கான திட்டங்கள்    நடைமுறைக்கு    வந்தன. உள்நாட்டு     உற்பத்திக்கு   மிகவும்    முக்கியத்துவம்   தரப்பட்டது. வடக்கில்    வெங்காயம் – மிளகாய்   பயிர்செய்கையாளர்களின் வாழ்வில்    வசந்தம்   வீசியது. உள்நாட்டு    ஆடைத்தொழிலுக்கு  ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து    தரமற்ற    வணிக   இதழ்கள்   மீதான  கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை   ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம்    தோன்றியது.

அதுவரைகாலமும்    இந்திய   திரைப்படங்களை    இறக்குமதி  செய்து கோடி    கோடியாக    சம்பாதித்த   இலங்கையில்    திரைப்படங்களின் இறக்குமதிக்கு   ஏகபோக    உரிமை     கொண்டாடிய   பெரும் தனவந்தர்களுக்கு   வயிற்றில்    புளி   கரைக்கப்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட   கள்ளப்பணத்தை   வெளியே    எடுப்பதற்காக புதிய    ஐம்பது  –   ரூபா   நூறு    ரூபா    நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்நிய செலாவணி   மோசடிகளில்   ஈடுபட்ட   சில   பெரும்   புள்ளிகள் கைதானார்கள்.  கொழும்பு    தெற்கில்   வோர்ட்    பிளேஸில்   முன்னாள்   அதிபர் ஜே. ஆர் .ஜெயவர்தனாவின்    வாசஸ்தலத்திற்கு    அருகாமையில்   தமது கட்டிடக்கலை        பணியகத்தை    நடத்திக்கொண்டிருந்த  துரைராஜா அவர்களுக்கு    தாமே  ஒரு   தமிழ்த்திரைப்படம்   தயாரிக்கவேண்டும் என்ற    எண்ணம்    உருவானது   தற்செயலானது  என்று    சொல்ல முடியாவிட்டாலும்  அன்றைய   காலப்பின்னணியும்   அவரை அந்தப்பரீட்சைக்கு    தள்ளியிருந்தது    எனச்சொல்லலாம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம் (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம்  (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)இலக்கிய  ஆய்வு  நூலுக்கான  ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’  வழங்கிய  ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால்  எழுதப்பட்ட ‘பல்வேறு பயன் தரும் பனைமரம்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.

Continue Reading →

இலண்டன் தமிழ் நாடக விழா 2014: அடக்குமுறைக்கு எதிரான சரித்திர பிரசித்தி பெற்ற குரல் -சமூக விரோதி (1882) நாடகம்

இலண்டன் தமிழ் நாடக விழா 2014: அடக்குமுறைக்கு எதிரான சரித்திர பிரசித்தி பெற்ற  குரல்  -சமூக விரோதி (1882) நாடகம் க பாலேந்திரா மிழ் அவைக்காற்று கலைக் கழகம் இலங்கையில் 1978 இல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து இயங்கும் ஒரே தமிழ் நாடக அமைப்பு;  இலண்டனில் மையம் கொண்டு உலகில் பல நாடுகளிலும் நாடக விழா நடத்தி வருகின்றது . எதிர் வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வருடாந்த லண்டன் நாடக விழா வடக்கு இலண்டன் பகுதியிலே வாத்போர்ட் பம்ப் ஹவுஸ் அரங்கில் நிகழவிருக்கிறது.  இவர்களது இந்த  விழாவில் இரண்டு வெவ்வேறு சுவை தரும் நாடகங்கள் மேடையேறுகின்றன. முதலாவதாக லண்டன் தமிழ்  நாடக பள்ளி சிறுவர்கள் நடிக்கும் “அரசனின் புத்தாடை ‘ என்ற மாவை நித்தியானந்தனின் நாடகம் இடம் பெறுகின்றது. அடுத்து மிகவும் காத்திரமான உலகப் புகழ் பெற்ற “சமூக விரோதி ” என்ற நாடகம் பேராசிரியர் சி சிவசேகரம் அவர்களின் பிரதியாக்கத்தில் அரங்கேறுகிறது. இரு நாடகங்களையும் தமிழ் நாடக உலகு நன்கு அறிந்த நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்துகிறார்.

அரசனின் புத்தாடை நாடகம் ஒரு  இசை கலந்த  நாடகமாக,  லண்டனில் பாலேந்திரா -ஆனந்தராணி ஆகியோரால் கடந்து பத்து வருடங்களாக நடத்தப் படும் இலண்டன் நாடகப் பள்ளி மாணவர்கள், அழகு தமிழில் முறையான அரங்கப் பயிற்சியுடன் , நிகழ்த்தும் வர்ணங்கள் நிறைந்த மேடை நிகழ்வு. நகைசுவையுடன் கூடிய  நாடகத்தில் , லண்டன் சிறுவர்கள் ஆடி பாடி கலகலப்பாக தோன்றுகின்றனர். துசி தனு சகோதரிகள் மற்றும்  ஜனன இசை வழங்க விஜயகுமாரி , தர்ஷினி ஆகியோர் பாடல்களை பாடுகின்றனர் நடக்க ஆசிரியர் மாவை நித்தியானந்தன் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது பின் வருமாறு கூறுகிறார்:

Continue Reading →

மீள்பிரசுரம் (எதுவரை.நெற்): சிறீதரனின்படைப்புலகம்

- மு. நித்தியானந்தன் -1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் அலை, மல்லிகை, கணையாழி, திசை ஆகிய சீரிய இலக்கிய இதழ்களில் எழுதிவந்திருக்கும் ஸ்ரீதரன், ஈழத்து இலக்கிய உலகில் ‘பேசாப்பொருளாக’ இருந்திருப்பது நமது துரதிர்ஷ்டம். ஈழத்துச் சிறுகதை வரலாற்றை நுணுகி ஆராய்ந்து அண்மையில் வெளியான ஒரு நூல் பட்டியலிடும் 400 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் ஸ்ரீதரனைக் காணமுடியவில்லை என்பது ஆச்சரியமானதுதான். எனவேதான், இந்த எழுத்தாளரின் தொகுப்பு நமக்கு ஒரு அர்த்தத்தில் புதிய வரவாக அமைந்திருக்கிறது.

Continue Reading →

மீள்பிரசுரம் (எதுவரை.நெற்): சிறீதரனின்படைப்புலகம்

- மு. நித்தியானந்தன் -1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் அலை, மல்லிகை, கணையாழி, திசை ஆகிய சீரிய இலக்கிய இதழ்களில் எழுதிவந்திருக்கும் ஸ்ரீதரன், ஈழத்து இலக்கிய உலகில் ‘பேசாப்பொருளாக’ இருந்திருப்பது நமது துரதிர்ஷ்டம். ஈழத்துச் சிறுகதை வரலாற்றை நுணுகி ஆராய்ந்து அண்மையில் வெளியான ஒரு நூல் பட்டியலிடும் 400 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் ஸ்ரீதரனைக் காணமுடியவில்லை என்பது ஆச்சரியமானதுதான். எனவேதான், இந்த எழுத்தாளரின் தொகுப்பு நமக்கு ஒரு அர்த்தத்தில் புதிய வரவாக அமைந்திருக்கிறது.

Continue Reading →

மீள்பிரசுரம் (குமரிநாடு.நெற்): தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி

மீள்பிரசுரம் (குமரிநாடு.நெற்): தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி பாரத அரசாங்கம் சென்னைக் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அணுவியல் ஆய்வுகளை நடத்தியும், அணுமின் சக்தியைப் பரிமாறியும் வருகிறது. தென்கோடியில் ரஷ்ய உதவியால் இரட்டை அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உருவாகி வருகிறது. ஆனால் விஞ்ஞானத் துறைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கத் தனியாகச் சென்னை மாநில அரசு என்ன முயற்சிகளைக் கையாள்கிறது என்பது தெரியவில்லை ?

கலைக்காட்சி மாளிகைகள் [Art Museums] சில சென்னையில் உள்ளன. ஆனால் எத்தனை விஞ்ஞானக் காட்சி மாளிகைகளை [Science Museums] மாநிலத்தில் நிறுவி, ஆர்வமுள்ள தமிழரின் விஞ்ஞானச் சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது, தமிழரசு ? சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன ? எத்தனைத் தமிழ்வார இதழ்கள், மாத இதழ்கள் விஞ்ஞானத்திற்குச் சில பக்கங்களை ஒதுக்கி, விஞ்ஞானச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன ?

Continue Reading →

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 27-09-2014

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 27-09-2014 - 'ரொறன்ரோ' தமிழ்ச்சங்கம் -மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல்

உரை: தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் – முனைவர் பார்வதி கந்தசாமி

சிறப்பு விருந்தினர்கள் உரை
சங்ககால ஒளவையின் ஆளுமை அம்சங்கள்
விமலா பாலசுந்தரம்
விலைமகளிர் சமூக அசைவியக்கத்தில் மாதவியும் மணிமேகலையும்மீரா இராசையா
ஆண்டாள் பாடல்களில் மரபும் மாற்றமும்தேன்மொழியாள் கங்காதரன்

ஆவணி மாத இலக்கிய நிகழ்வுகள்
ஐயந்தெளிதல் அரங்கு

Continue Reading →

ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்!

ஸி. வி. வேலுப்பிள்ளைசெப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் ‘சி.வி. சில சிந்தனைகள’;;; என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வௌ;வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.

Continue Reading →