(மீள்பிரசுரம்) தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும்

லடீஸ் வீரமணி“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார்.

கடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா.

அந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.

“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது.

இந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.

ஜோன் டி சில்வா என்ற கலைஞரு டன் தொடர்பு கொண்டிருந்த இராஜேந் திரம் மாஸ்டர், அவரோடிருந்த டபிள்யூ. சதாசிவத்தின் தூண்டுதலால், ஜோன் டி சில்வா அவரது மகன் பீட்டர் சில்வா ஆகியோரின் நாடக மேடை ஏற்றத் திற்குத் திரைக்குப் பின்னால் இருந்து பல பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இதனால் நாடகங்களை அனுபவ ரீதியாக கற்று அறிந்து கொண்டவர்.

Continue Reading →

மறைந்த நண்பர் அ. ந. க.

எழுத்தாளர் அ.ந.கந்தசாமிஎழுத்தாளர் செ.கணேசலிங்கன்எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமி மறைந்து இன்றுடன் ஐம்பத்தொரு வருடங்களாகிவிட்டன. இன்றும் தமிழ் இலக்கிய உலகு அவரை மறந்து விடவில்லை. அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் , நாவல் , மொழிபெயர்ப்பு ஆகியவை இணையத்தில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதானுள்ளன. இதுவரையில் அவரது படைப்புகளில் ‘மதமாற்றம்’ (நாடகம்), ‘வெற்றியின்  இரகசியங்கள்’ (உளவியல் நூல்) ஆகியவையே நூலுருப்பெற்றுள்ளன. ஏனைய படைப்புகளும் விரைவில் நூலுருப்பெறுமென எதிர்பார்ப்போம்.

1967 ஆம் ஆண்டினை அ.ந.க.வின் ஆண்டு என்று காவலூர் ராஜதுரை அ.ந.க பற்றி கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாண்டில்தான் அவரது ‘மனக்கண்’ தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பினைப்பெற்றது. அவரது ‘மதமாற்றம்’ நாடகம் கொழும்பில் லடீஸ் வீரமணி இயக்கத்தில் நான்கு தடவைகள் மேடையேறிப் பெரும் வரவேற்பைபெற்றது. இவ்விதம் அவ்வாண்டில் எழுத்துலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தவர் பெப்ருவரி 14, 1968  அன்று , தனது நாற்பத்து நான்காவது வயதில் அவரைத்தாக்கியிருந்த நோய்களின் தாக்கத்தால் மரணித்தது துயரகரமானது.

அ.ந.க.வின் இறுதிக்காலத்தை அவரது நண்பர்களிலொருவராக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவரது குமரன் சஞ்சிகையில் எழுதிய ‘மறைந்த நண்பர் அ. ந. க.’ என்னும் கட்டுரையில் நினைவு கூர்ந்திருந்தார். கொழும்பு ஆஸ்பத்திரியில் நோயின் தீவிரம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அ.ந.க.வைப்பற்றி அங்கிருந்தவர்கள் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவருக்குப் போதிய கவனிப்புகள் கிடைக்கவில்லை. இதனைக்கண்டு மனம் நொந்த செ.க உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவரைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்தார். அவரது இறுதிக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக விளங்கிய அ.ந.க.வின் கலையுலக நண்பர்களான எழுத்தாளர் ஏ.இக்பால், லடீஸ் வீரமணி தம்பதியினர் செய்த அரிய உதவிகளையெல்லாம் இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார் செ.க.

அ.ந.க இளமையிலேயே தன் உறவுகளை விட்டுப்பிரிந்து தனித்துத் தன் வாழ்வினைக் கொண்டு நடாத்தியவர், தொழிலாளர் போராட்டங்கள், இலக்கியமென்று , ஊடகத்துறைப்பங்களிப்பு எனத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த அவருக்கு இறுதிவரை உறுதுணையாக நின்றவர்கள் அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களே. இவ்விதமான நண்பர்களைப்பெற்ற அவர் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் இறுதிக்காலத்தில் அ.ந.க.வைப்பராமரித்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன், லடீஸ் வீரமணி தம்பதியினர், கவிஞர் ஏ.இக்பால் போன்றவர்களைத் தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இக்கட்டுரையின் இறுதியில் செ.க. “நண்பர் தமது திறமை பற்றி கடைசி நாட்களில் கற்பனை செய்ததுபோல இலக்கிய வரலாற்றில் அவர் மதிப்புப் பெறாதுபோக நேரினும் நாடகத்துறையில் இந் நாடகம் அவருக்கு ஒர் அழியாச் சின்னமாக நிலைத்து நிற்கும் என்று துணிபாசுக் கூறுவேன்.” என்று கூறுவார். ஆனால் அ.ந.க.வின் படைப்புகள் அனைத்துமே அழியாச்சின்னங்களாக நிலைத்து நிற்பதைக் காலம் இதுவரையில் நிரூபித்திருக்கின்றது. இனியும் நிரூபிக்கும் என்று துணிந்து கூறுவேன். வ.ந.கி, ஆசிரியர், பதிவுகள் –

Continue Reading →

(கீற்று.காம்) ‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்

செ.கணேசலிங்கன்“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் பன்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதனைப் பிணைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவதற்கான எழுச்சி நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, அவர்களது விடுதலைக்கான போராட்ட உணர்வைத் தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும் பண்பு மானிட நேயப்படைப்பாளிகளிடமுண்டு. சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஒரு பெரும் சக்தியாக திரட்டுவதற்கு மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவனே மானிடநேயப் படைப்பாளி. தோல்வியிலும், அடிமை மனப்பான்மையிலும் நீண்டகாலமாகப் பீடிக்கப்பட்டு, விரக்கியடைந்த நிலையிலுள்ள மக்களின் ஆத்மாவைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து போராட்டப் பாதையில் அவர்களை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தவனே மனிதநேயப் படைப்பாளி. ”

மேலும், “ மனித குலத்திற்கு விசுவாசமாக நடப்பது, மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது, கசப்பான உண்மையானாலும் அதனைத் துணிவுடன் கூறுவது, மனிதர்களின் உள்ளத்திலே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி அதனை உறுதிப்படுத்துவது, அதைக் கட்டுவதிலே அவர்களுக்குள்ள ஆத்மசக்தியைப் பலப்படுத்துவது, உலக சமாதானத்துக்கும், சாந்திக்குமாகப் போராடுவது, எங்கெல்லாம் சமாதானத்துக்கான குரல் ஒலிக்குமோ அங்கெல்லாம் சமாதான வீரர்களை அந்தரங்க சுத்தியுடன் ஆதரிப்பது. முன்னேற்றத்திற்கான உண்மையான நேர்மையான முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது இதுதான் மானிடநேயனின் கடமை. ” என்று ‘ டான் நதி அமைதியாகப் பாய்கின்றது’ என்ற உலகப் புகழ்பெற்ற நாவலைப்படைத்த மிகையில் ஷொலகோ கூறியதை உள்ளத்தில் ஏற்று இலக்கியம் படைத்தவர் செ.கணேசலிங்கன்.

செ.கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928 ஆம் தேதியன்று, க. செல்லையா-இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்து கிறிஸ்துவப் பள்ளியில் கற்றார்.  சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாவது வகுப்பு பயின்றார். பின்னர், யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரியில் சேர்ந்து எச். எஸ்.சி. பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும் தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் வயலில் விவசாய வேலைகளை செய்த பின்னர், கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார்.  இவர் கல்வியில் மிகத் திறமை பெற்ற மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் ( னுடிரடெந யீசடிஅடிவiடிn) செய்யப்பட்டார்.

எச்.எஸ்.சி. எனும் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்து கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில்  1981 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.

மகாத்மா காந்தி 30.01.1948 அன்று படுகொலை செய்யப்பட்டதையொட்டி தமது உரும்பிராய் கிராமத்தில்  நண்பர்களுடன் இணைந்து நினவேந்தல் கூட்டம் நடத்தினார். அந்த நினைவேந்தல் கூட்டத்தில், “ மகாத்மா காந்தியின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும், அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்பதனால் இங்கே நிலவும் சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். இங்குள்ள கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும். மக்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ” என்று தீவிரமாக உரையாற்றினார்.

Continue Reading →

திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.

கல்வெட்டுப் பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும்,  வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _

Continue Reading →

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன் – கோவில் கல்வெட்டு

வரலாறுஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்
செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால்
வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி
ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்
பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு
டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _ 

வேளான் – அரசன், அரசமரபினர், ஆட்சியாளன்.

விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேந்தன், மன்னர், அரையன், நாட்டுக் கிழான் அல்லது கோன் ஆகிய நான்கு அதிகார அடுக்கு ஆட்சியாளரும் 10 ஆம் நூற்றாண்டு அளவில் சோழர் ஆட்சியில் தம் பெயருக்குப் பின்னே வேளான் என்ற பட்டத்தை இட்டுக் கொண்டனர். வேந்தனும், மன்னனும் தந்தைக்குப் பின் மகன் என்ற மரபு வழியில் ஆள வந்தவர்கள். ஆனால் அரையர் மற்றும் நாட்டுக் கிழான்கள் வேந்தர், மன்னர் விருப்பில் அரையராக கிழானாக அமர்த்தப்பட்ட எளியோர். இது அவர்களது தகுதி, உண்மைத் தன்மை பொறுத்து அமைந்தது. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவன் மகன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன்கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ளவரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

இக்கல்வெட்டில் சந்தி விளக்கேற்ற இருவரும் சுற்றத்தாரோடு கோவிலில் நுழைந்திருக்க வேண்டும்.  இருவரும் பறையர் சாதியை சேர்ந்தவர்கள் என்பது அந்நாளில் இவர்கள் தாழ்த்தப்படவும் இல்லை, ஒடுக்கப்படவும் இல்லை. தீண்டாமையும் இல்லை. அதோடு பறையர்கள் நாட்டுக் கிழான்களாக ஆட்சியில் இருந்துள்ளனர். செயங் கொண்டன் தன்னை பாட்டாலி காவலன் என்பதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

Continue Reading →

வாசிப்பும் , யோசிப்பும் 337: செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ பற்றி…

அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய 'எழுதித்தீராப் பக்கங்கள்'அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ வாசித்தேன். தன் புகலிட அனுபவங்களுடன் சிறிது புனைவினையும் கலந்து , அங்கதச்சுவை மிக்க படைப்பாக்கியிருக்கின்றார் காலம் செல்வம். இந்நூலிலுள்ள பாத்திரங்களின் உரையாடல்கள், சம்பவங்கள் சில இந்நூல் புனைவும் கலந்ததென்ற உணர்வினையே எனக்குத் தருகின்றது. இந்நூலின் முக்கிய பலம் நூலாசிரியரின் அங்கதச்சுவை மிக்க எழுத்து. வெறும் நகைச்சுவை எழுத்தென்றில்லாமல் , நகைச்சுவையினூடு சமூகத்தையும் கிண்டலடிக்கின்றது. அதனாலேயே அங்கதச்சுவை மிக்க படைப்பாகியிருக்கின்றது இந்நூல். நூல் சுவைப்பதற்கு இன்னுமொரு காரணம் நூலில் காணப்படும் ஓவியங்கள். ஓவியங்களுடன் நூலை வாசிக்கையில் பல இடங்களில் அடக்க முடியாமல் சிரிப்பு வெடிக்கின்றது. நூலாசிரியரின் நடையும், ஓவியங்களும் இந்நூலின் சிறப்புக்கு முக்கிய காரணங்கள்.

இந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தை இந்நூலைத் தொடராக வெளியிட்ட ‘தாய்வீடு’ பத்திரிகையின் ஆசிரியர் டிலிப்குமார் இந்நூலுக்கு எழுதிய அறிமுகக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் ஈர்த்தன. அவை வருமாறு: “புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினரது துயர வாழ்வு ஒரு தொடராக எழுதப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்” ” முதல் தலைமுறையினரது அனுபவங்கள் செவிவழிக் கதைகளாக இருந்தனவேயன்றிப் பதிவுகளாகத் தெரிந்திருக்கவில்லை”

இவை தவறான கூற்றுகள். காலம் செல்வத்தின் ”எழுதித்தீராப் பக்கங்கள்’ நூல் அண்மைக்காலகட்டத்தில்தான் ‘தாய்வீடு’ பத்திரிகையில் தொடராக வெளியானது. இந்நூல் புகலிடத்தமிழர்களின் வாழ்வினை ஆவணப்படுத்துமொரு சிறப்பான நூல் என்பதில் மாற்றுக்கருத்துகளில்லை. ஆனால் இவ்விதமான நூலொன்று வெளியானது இதுவே முதல் தடவையாகும் என்பது தவறானது. இந்நூல் வெளியாவதற்குப் பல வருடங்களின் முன்னரே , தொண்ணூறுகளில் வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ கனடாவிலிருந்து வெளியாகும் ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியானது. இதுபோல் 2007 காலகட்டத்தில் திண்ணை, பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளியான வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலும் தொடராக திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இவையெல்லாம் முறையே இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், நியூயார்க் மாநகரத்தில் அலைந்து திரிந்த வாழ்வையும் பதிவு செய்தவை. இவையிரண்டுமே உண்மை அனுபவங்களின் அடிப்படையில் உருவான புனைவுகள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 336: இருவர்!

மாணிக்கதாசன்உபதிஸ்ஸ கமநாயக்க‘மக்கள் விடுதலை முன்னணி’த்தலைவர் ரோகண விஜேவீரா பற்றிய சிங்களத்திரைப்படம் பற்றிய காணொளியைப்பார்த்ததும் கூடவே ரோகண விஜேவீராவுடன் கைது செய்யப்பட்டுப் படையினரால் கொலைசெய்யப்பட்ட கட்சியின் உபதலைவரான உபதிஸ்ஸ கமநாயக்கவின் (Upatissa Gamanayake) நினைவும் தோன்றியது. கூடவே அவரது தாயாரின் சகோதரியின் மகனான இன்னுமொருவரின் நினைவும் தோன்றியது. உபதிஸ்ஸ கமநாயக்க சிங்கள சமுதாயத்தின் வர்க்க விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அரசபடையினரால் கொலைசெய்யப்பட்டால், அவரது அன்னையின் சகோதரியின் மகனோ இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காய் ஆயுதம் தாங்கிப்போரிட்ட ஒருவர். ஆரம்பத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பில் இணைந்தவர் பின்னர் அது தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம், விடுதலைப்புலிகள் என்னும் அமைப்புகளாகப்பிரிந்தபோது தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைத்துக்கொண்டவர். பின்னர் தன் இறுதிகாலத்தில் அவ்வமைப்பின் இராணுவத்தளபதியாகவும் , பிரதித்தலைவராகவுமிருந்தவர். அவர் வவுனியாவிலிருந்த கழகத்தின் முக்கிய பாசறையான லக்கி ஹவுஸுல் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் மாணிக்கதாசன்.

மாணிக்கதாசன் என்றதும் அவரது இராணுவச்செயற்பாடுகள் மற்றும் அவை காரணமாகவெழுந்த விமர்சனங்கள்தாம் முதலில் நினைவுக்கு வரும். விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அனைத்து அமைப்புகளிலும் இவை போன்ற விமர்சனங்களுள்ளன.

மாணிக்கதாசனுக்கும் வடக்கு அராலிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இவரது சகோதரியொருவர் அங்குதான் திருமணம் செய்தவர். இவரது சகோதரரொருவர் அங்கு மாணவர்களுக்கு ‘டியூசன்’ கொடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறுவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் மாணிக்கதாசனே அங்குவந்து தேடப்படும் காலங்களில் உறைந்து வாழ்ந்ததாகவும் கூறுவர். இவரைப்பற்றி 1984 -1987 காலப்பகுதியில் கழகத்தின் அப்பகுதிப்பொறுப்பாளராகவிருந்த முரளி இவரைப்பற்றிக் கூறியது இவரைப்பற்றிய இன்னுமொரு பிம்பத்தையே தந்தது.

வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம் மாணிக்கதாசன். அவ்விதமொரு நாள் அப்பகுதிப்பொறுப்பாளரான தன்னைச் சந்திக்க வந்த நிகழ்வைப்பற்றி அவர் நினைவு கூர்கையில் (யாழ் கோட்டையில் ‘புளட்’ அரண் அமைத்துக் காவல் புரிந்து கொண்டிருந்த காலகட்டமது) வழக்கம்போல் வேகமாக வாகனத்தையோட்டி வந்த அவர் அவ்விதமே தன்னையதிலேற்றி முருகமூர்த்தி ஆலயத்தடிக்கு அழைத்துச்சென்று சிறிது நேரம் உரையாடிச்சென்றதாகவும், அப்போது அப்பகுதியில் இன்னுமொரு பயிற்சி முகாம் அமைக்க வேண்டுமெனக் கூறியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு விடயம்: ‘தோழர் சின்ன மெண்டிஸ் போராளிகளுடன் மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். மாணிக்கதாசனும் அவ்வாறே மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். அத்துடன் மிகவும் வேடிக்கையாகவும் உரையாடுவார்.’ இவ்விதமான அவரது ஆளுமையினால் அக்காலகட்டத்தில் கழகத்தோழர்களின் அன்புக்குரியவராகவுமிருந்தாரென்றும் அவர் மேலும் கூறினார்.

Continue Reading →

ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம்

எழுத்தாளர் பிரபஞ்சன்குடும்பத்தினரை உயர்த்தும் குலவிளக்காய் சமுதாயத்தினை வழிநடத்தும் விடிவெள்ளியாய் குவலயத்தில் திகழ்பவர்கள் பெண்களே. இத்தகு பெண்கள் கடந்து வரும் பாதைக் கரடுமுரடானது, ஏனெனில் வேறு எந்த உயிரினங்களிலும் இல்லாத ஆண், பெண் என்ற பேதம் மனித இனத்தில் மிகுதியாக வளர்ந்து வந்துள்ளது. இப்பேதத்தை உருவாக்கியுள்ள இன்றைய சமுதாயத்தில் ஆண், பெண் வேற்றுமைகளை நீக்கி காலங்காலமாக அடிமைக் கூண்டில் அகப்பட்டு அல்லலுறும் பெண்ணை விடுவித்து, அவர்களுக்கு முதலிடம் கொடுத்து, அவளுக்காகவே குரல் கொடுப்பது முன்னேற்றச் சிந்தனையாகக் கருதப்படுகிறது. இச்சிந்தனை இன்று வேரூன்றி நின்று, பரவலாகப் பேசப்பட்டு, முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இச்சிந்தனைக் காலத்தின் தேவையை உணர்ந்து எழுந்தது எனில் மிகையில்லை. பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைவது பெண்களைச் சமுதாய அளவில் முன்னேற்றுவதுதான் சமூகத்தில் பெண்களின் இடத்தை இனம் காட்டுதல், அவற்றால் பெண்கள் அடையும் பாதிப்புகள் அவற்றின் ஆழம் மற்றும் அதற்குக் காரணமான நிறுவன மரபு போன்றவற்றையே இக்கட்டுரை முன்வைக்கிறது. 

பெண்ணியம்
“Feminism” என்ற ஆங்கிலச் சொல் “Femina” என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். Femina என்ற சொல் முதலில் பெண்களின் குணாதிசயங்களைக் குறிப்பிடவே இந்த சொல் வழங்கப்பட்டது. பின்பு பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கு வழங்கப்பட்டது.

“பெண்ணியம் என்ற இச்சொல் 1890இல் இருந்து பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது”.1

பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமைப் போராட்டம், பெண்நிலை பேதம் போன்ற சொற்றொடர்கள் பெண் விடுதலையைக் குறிக்கும். பெண் விடுதலை என்ற கருத்து மேல்நாட்டுச் சிந்தனையின் தாக்கமாகும். பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்க்கும் அபாயமானக் கூறு என்று பலர் கருதுகின்றனர். காலங்காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைக் களத்திலிருந்து விடுவித்து சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் செயற்பாடாகும்.

Continue Reading →

தமிழுக்களித்த நன்கொடை!

தாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” தாமோதரம்பிள்ளை சனாதனன்தாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” எனும் பெயரிலான நூல் மிக அண்மையில் வெளிவந்து, அதை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்தின் கலை வரலாறு பற்றியதாக அமையும் இந்த ஆய்வுநூல், காலனிய மற்றும் பின்காலனியகால யாழ்ப்பாணத் தீபகற்பம், நவீன கலைப் போசிப்பிற்கும், கலைச் செயற்பாட்டுக்குமான மையமாக அமையுமாற்றையும் அவற்றிற்கான பின்புலம் மற்றும் பேறுகளை புலமைசார் விசாரணைக்கு உட்படுத்துவதாயும் அமைந்துள்ளது. காலனியவாத, தேசியவாத முரண்களின் பின்புலத்தில் தோன்றிய நவீனமயமாதல் படிமுறையில், காண்பியக் கலையில் நிகழ்ந்தேறிய பன்முகத் தன்மைமிக்க அர்த்தம், அடையாளம், அழகியல் முதலாய மாற்றங்களைத் பல்துறைறைச்சங்கம ஆய்வொழுங்குநிலை நின்று யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியும், யாழ்ப்பாணத்துக்கப்பாலான இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் மற்றும் இந்தியப் பிராந்தியங்கள் ஆகியவற்றோடும் ஊடாடியும் வாசிப்பதாய் இந்நூல் அமைகிறது. 

காண்பியக் கலையின் கருத்துநிலையில் நிகழ்ந்த மாற்றங்களை, படைப்பு – படைப்பாளி – நிறுவனம் முதலாயவற்றுடன் தொடர்புறுத்தி ஆராயும் இந் நூல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மத்தியதரவர்க்கம் எனும் மேன்மக்கள் மற்றும் சைவ மறுமலர்ச்சி இயக்கம் முதலாக, ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி மற்றும் இராணுவ மயமாக்கம்வரையுமான சமூக வரலாற்று நிலவரங்கள், காண்பியக் கலைப்பயில்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் பெறுபேறுகள் குறித்தும் கவனஞ் செலுத்துகிறது. 

காண்பியக் கலைக் கல்வி, அதன் பழக்கம், அது பற்றிய நுகர்வு முதலாய நிலைகளில் உண்டான மாற்றங்களினூடு சாதி முதல் தேசியம் வரையான பல்வேறு அடையாள அரசியற் கூறுகளில் உண்டான மாற்றங்களையும் இந் நூல் ஆராய்கிறது. அந்தவகையில் கலைப்பயில்வு மாற்றங்களினூடு அடையாள அரசியல் மாற்றத்தையும் இந் நூல் இனங்காட்டுகிறது. 

யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தனது பொருளாதார மற்றும் அரசியல்சார் நலன்களினூடு, காலனியத்தின் விளைவாற் கிட்டிய ஓவியக் கல்வி மற்றும் மதமையக் கலையை மீள்வடிவமைப்புச் செய்ததைப் பற்றியும் இந் நூல் விபரிக்கிறது. 

‘மரபும் நவீனத்துவமும் குலத்தொழிலாகக் கலையும்’, ‘நவீனத்துவமும் மாயக்காட்சிவாதமும்’, ‘காலனியமும் தேசியமும் காண்பியற் கலை பற்றிய கருத்தாடற்புலமும்’, ‘கலைப்பயில்வும் அரச உத்தியோகமும்: நடுத்தர வர்க்கமும் ஓவியத்தின் கருத்துரு மாற்றமும்’, ‘நவவேட்கையும் உருவவாதமும்’ ஆகிய ஐந்து இயல்களில் (அறிமுகம், முடிவுரை நீங்கலாக) அமைந்த இந்நூல், 208+xxiv பக்கங்களில் அமைந்துள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 335: தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

அம்மாஇன்று , மார்ச் 26, அம்மாவின் நினைவு நாள். நவரத்தினம் டீச்சர் என்று அன்புடன் அவரது மாணவர்களாலும், ‘மங்கை’ என்று அவரது சிநேகிதிகளாலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவரது நினைவு நாள் என் சிந்தையில் அவருடன் கழித்த நாள்களை நினைவு கூர்ந்திட வைக்கின்றது. யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம், அராலி இந்துக்கல்லூரி என அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த பாடசாலை மாணவர்களைத் தன் அன்பால், சிரிப்பால், மென்மையான அணுகுமுறையினால் கட்டிவைத்தவர் அவர். வாழ்நாளில் ஆத்திரப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. சில சமயங்களில் குரலில் சிறிது கண்டிப்பைக் காட்ட முற்பட்டாலும் கூட அக்கண்டிப்பை அவரால் வெளிப்படுத்தவே முடிந்ததில்லை.

என் பால்யபருவத்தில் ஆரம்பத்திலிருந்து ஏழாம் வகுப்புவரை வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த காலகட்டத்து நினைவுகள் அழியாத கோலங்கள். அதிகாலையிலேயே எழுந்து, காலைச்சாப்பாடு, மதியச்சாப்பாடு எல்லாம் தயாரித்து, மதிய உணவையும் பார்சல்களாகக் கட்டி அல்லது ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரத்திலிட்டு பாடசாலை அழைத்துச் செல்வார். குழந்தைகள் நாமும் குருமண்காட்டிலிருந்து பாடசாலைக்கு அவரணைப்பில் பின் தொடர்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் ‘றோட்டின்’ ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

அவரது உலகமெல்லாம் பாடசாலையும் , குடும்பமும்தாம். அவற்றிலேயே அவர் இன்பமுற்றார். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் ‘றோட்டி’ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாகச் செல்லும் காலைப்பொழுதுகளில் எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி வருவார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் ‘என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்’ என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் ‘இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்’ என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘வாயெல்லாம் பல்’. 🙂 இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

அவர் அன்னையாகவும், வவுனியா மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் புவியியல் ஆசிரியராகவும் விளங்கியவர். . அவ்வப்போது குட்டிக் கதைகள் சிலவற்றையும் பாடத்தின் இடை நடுவில் கூறிச் சிரிக்க வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்திப் பாடத்தைத் தொடர்வார்.

Continue Reading →