செல்வி சஸ்கியா யோகராஜாவின் அரங்கேற்றம் சென்னையில்

செல்வி சஸ்கியா யோகராஜாஇங்கிலாந்து சலங்கை நர்த்தனாலய நுண்கலைக்கூடத்தின இயபக்குனர் நாட்டிய விஷாரத் ஜெயந்தி யோகராஜாவின் மகளும்,  மாணவியுமான  செல்வி சஸ்கியா யோகராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆவணிமாதம் 24ம் திகதி இந்தியாவில் சென்னை மியூசிக் அக்கடமியில் கலைமாமணி நரசிமமாச்சாரிää கலாஷேத்திரா அதிபர் ஜனார்த்தனன் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. செல்வி சஸ்கியாவிற்கு ‘நாட்டிய ரூபினி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டமை சிறப்பாம்சமாகும். அரங்கேற்ற நிகழ்வின்போது ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் ‘ராஜேஸ்வரி நர்த்தனம்’ என்னும் பாடல்இறுவெட்டினை வேதம் புதிது மியூசிக் இயக்குநர் தேய்வேந்திரன்,  ‘கலைமாமணி ஷோபனா ரமேஷ்,  ‘கலைமாமணி’ லலா ஆறுமுகஐயா,  ‘கலாரத்தினா’  உமா சங்கர்ää இந்திய ரயில்த் திணைக்கள கவன்சிலர் ஆர். பத்மநாபன்,  ஆண்டான் கோவில் சுந்தரராஜன் ஆகியோரினால் வெளியிடப்பட்டு ஜெயந்தி யோசராஜாவிற்கு ‘ராஜேஸ்வர நர்த்தகி’ என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. ராஜேஸ்வர நர்த்தனம் என்னும் இறுவெட்டு நாட்டிய மார்க்கம் அடங்கிய புதிய பாடல்களைக்கொண்டது. இதன் பாடல்வரி,  இயக்கம் அனைத்தும் ஜெயந்தி யோகராஜாவினால் ஆக்கப்பட்டது. இவர் கடந்த வருடம்  காலம் சென்ற தன் தயார் ராஜேஸ்வரி அன்ரனிரட்னம் அவர்களின்  நினைவாக வெளியிட்டிருந்தார். 

மேலும் சில காட்சிகள்….

செல்வி சஸ்கியா யோகராஜாவின் அரங்கேற்றம் சென்னையில்

navajothybaylon@hotmail.co.uk