ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்கள் கௌரவிப்பு!

ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவிப்பு!ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு  International Zentrum – Flachs Markt– 15> 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா ஸ்ரான்லி மற்றும் திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்ற ஆரம்பமானது.  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களை ரவித்துப்பாராட்டிவாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் ஆத்ம இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்மூண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய் நிகழ்த்தினர். 

இதனைத்தொடர்ந்து பாராட்டு விழாவினுக்கு வருகை தந்தவர்களை வரவேற்க வந்தவர்களை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகொசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன்புவனேந்திரன் அவர்கள் கவிதையால் தன் வரவேற்புரையை வழங்கினார்.

அடுத்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கண்களுக்கும் மனதுக்கும் விருந்துபடைத்த வரவேற்பு நடனத்தினை ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியரான திருமதி.கலைநிதி சபேசன் அவர்களின் மாணவிகளான செல்வி கவிநிலா சபேசன் செல்வி நர்த்திகா நகுலேஸ்வரன் செல்வி மதூசி நகுலேஸ்வரன் ஆகியோர் படைத்தனர்.

இதனைத்தொடர்ந்த கலை நிகழ்வாக வீட்சே கலைவாணி இசைப்பள்ளி மாணவர்களான  செல்வி சகானா முருகதாஸ் செல்வி ஜோபினா யோகநாதன் செல்வி சர்மிலி பால்ராஜா செல்வி அபிராமி பரமானந்தன் செல்வன் ஜோனுசன் யோகநாதன் ஆகியோரின் இசைப்பாடல் இனிமைக்கு  இனிமை சேர்த்ததெனலாம்.

ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவிப்பு!தொடர்ந்து தலைமையுரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டதனையடுத்து யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் மிகச்சுருக்கமாக தமதுரையை நிகழ்த்தியதையடுத்து டோர்ட்மூண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவர்களான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் செமியா சிவகுமாhரன்  செல்வி ஆர்த்திகா நடனபாதம் ஆகியோரின் வயலினிசைக்கு   செல்வன் ராகுல் ரவீந்திரர் மிருதங்கம் வாசித்து மெருகேற்றினார்.

தொடர்ந்த நிகழ்வில் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவனான செல்வன் ராகுல் ரவீந்திரர் வழங்கிய சுரத்தட்டு இசை இடம்பெற்றது. தமிழ்ச்சினிமாப்பாடல்களை தன் சுரத்தட்டு இசையில் வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்ததென்பதற்கு மண்டபம் அமைதியில் மூழ்கி இரசித்ததனை என்னால் காணமுடிந்தது.

தொடர்ந்து இருபதுநிமிட இடைவேளை இடம்பெற்றது. பல்வகைப்பட்ட சிற்றுண்டிகள் பொதிகளில் இடப்பட்டு பார்வையாளர்களுக்கு தம் இருக்கைகளுக்கு  யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர்களால் விநியோகிக்கப்பட்ட வேளையிலும் இசைக்கதம்பம் மண்டபத்தை நிரப்பிக்கொண்டேயிருந்தது.

இடைவேளையானது முப்பது நிமிடத்தை நெருங்கிக்கொண்டிருந்போது விழாவின் முக்கிய நிகழ்வு ஆரம்பமாவதையறிந்து பார்வையாளர்கள் விரைந்து மண்டபத்துள் நுழைந்தனர்

தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களில் ஒன்றான ஜேர்மனியிலும் கலை, எழுத்து, பொதுப் பணிகளை நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஐவருக்குப் பாராட்டுவிழா ஒன்றினை நடாத்துகின்ற இவ்வேளையில் இவர்களில் தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் முன்னாள்செயலாளரும் சோஸ்ற்நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவராஜா  அவர்கள் தற்போது இலங்கையில் வசித்தவருகின்ற காரணத்தினால் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியதோடு,

இவருடன் திருமதி கலைவாணி ஏகானந்தரஜா அவர்கள் திரு. க. பத்மகுணசீலன் அவர்கள் திரு புத்திசிகாமணி அவர்கள் திருமதி ஜெயா நடேசன் அவர்கள்     ஆகியோர் தமிழ், எழுத்து, கலைப்பணிகளையும், சமுகப்பணிகளையும்; தொடர்ந்து செய்வதோடு, எமது எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்ந்தும் சேவை புரிந்து வருபவர்கள்.

இவர்களை  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும்  ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொன் சிறிஜீவகன் அவர்கள் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர் திரு.அம்பலவன்புவனேந்திரன் அவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர் மற்றும் இதர உறுப்பினர் ஆகியோர் பாராட்டுப்பெறுகின்ற அந்தச் சான்றோர்களை மேடைக்கு அழைத்துவந்து அமரச்செய்தனர்

இவர்களைப்பற்றிய சிறுகுறிப்புரையை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் நிகழ்த்தியதனைத்தொடந்து பாராட்டுக்களுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தேறின.

முதலில் தமிழின தமிழ்மொழி தமிழ்ச்சமூக முன்னேற்றத்துக்கான கலை இலக்கியப்பணிகளை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கின்ற திரு. க. பத்மகுணசீலன் அவர்களைப்பற்றிய குறிப்புக்களையும் சிறப்புக்களையும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும் ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொன் சிறிஜீவகன் அவர்கள் தெரிவித்தனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள்  திரு. க. பத்மகுணசீலன் அவர்களுக்கு பொன்னாடைபோர்த்திக் கொரவித்ததையடுத்து திரு பொன் சிறிஜீவகன் அவர்கள் சந்தணமாலையணிவித்து மரியாதைசெய்தார்.

தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகொசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன்புவனேந்திரன் அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கிப்பாராட்டி ஆசிகளைப்பெற்றார். பலத்தகரகோஷத்தின் மத்தியில் நிறைவேறிய இந்நிகழ்வினையடுத்து அடுத்துபாராட்டைப் பெறபவரான திருமதி கலைவாணி ஏகானந்தரஜா அவர்களைப்பற்றிய குறிப்புரைகளை திரு பொன் சிறிஜீவகன் அவர்கள் தெரிவித்தனையடுத்து,

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திருமதி இராஜேஸ்வரி அவர்கள்பொன்னாடைபோர்த்த திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் சந்தணமாலையணிவிக்க திருமதி.ராதா புத்திசிகாமணியவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கியதையடுத்து பாராட்டுப்பெறுகின்ற அடுத்தவரான தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாரான திரு. பொன்: புத்திசிகாமணியவர்களைப்பற்றிய குறிப்புக்கள் வாசிக்கப்பட்டதனையடுத்து,

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் மூலம் மரியாதைசெய்ய அழைக்கப்பட்போது திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் பொன்னாடை போர்த்த திரு. ப.பசுபராஜா அவர்கள் சந்தணமாலையணிவித்து மரியாதைசெய்தார்.

தொடர்ந்து திருமதி கெங்கா ஸ்ரான்லி அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கினார். இந்தக் கொளரவத்தினைப்பெற திருமதி ஜெயா நடேசன் அவர்களின் குறிப்புரைகள் வாசிக்கட்டதனையடுத்து அவருக்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  உறுப்பினர்களில் மூலம் மரியாதைசெய்ய அழைக்கப்பட்போது திருமதி கீதா பரமமனந்தன் அவர்கள் பொன்னாடையினைப்போர்த்த திருமதி கிளி சிறிஜீவகன் அவர்கள் சந்தணமாலையணிவிக்க திருமதி சுலோசனா புவனேந்திரன் அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கியபோது  மீண்டும் கரகேசம் மண்டபத்தினை அதிரவைத்தது.

தொடர்ந்து பாராட்டைப்பெறுபவர் பெயர் வாசிக்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் சோஸ்ற்நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவஜா அவர்கள் பற்றிய குறிப்புரைகளை அடுத்து அவருக்கான மரியாதைகளை அவரின் சகோதரி திருமதி கலா சிவகுமாரன் அவர்கள் த.எ.ச.தலைவர் திரு. சிவராஜா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தொலைபேசி வாயிலாகத்தம்  ஆசிகளையும் தெரிவித்தவர்களின் பெயர்கள் வாசிக்கபட்டதோடு அனைவருக்கும் நன்றி தெரிக்கப்பட்டதோடு விழா இனிதே நிறைவுக்கு வந்தது.        

பதிவுகளுக்கு அனுப்பியவர்: yathumaki@gmail.com