மெல்பனில் முருகபூபதியின் ‘சொல்லமறந்த கதைகள்’ நூல் வெளியீட்டு அரங்கு

மெல்பனில் முருகபூபதியின் 'சொல்லமறந்த கதைகள்' நூல் வெளியீட்டு அரங்குபடைப்பிலக்கியவாதியும்   பத்திரிகையாளருமான   அவுஸ்திரேலியா  மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதியின்   வெளியீட்டு   அரங்கு   எதிர்வரும்   23-08-2014           ஆம்  திகதி   மாலை  3   மணியிலிருந்து   6   மணிவரையில்   மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில்  நடைபெறும். கலை, இலக்கிய   ஆர்வலர்   திரு. கந்தையா  குமாரதாசன்   தலைமையில் நடைபெறவுள்ள  ‘சொல்ல   மறந்த   கதைகள்’  நூல்  தமிழ்  நாடு  மலைகள் பதிப்பகத்தின்   வெளியீடாகும்.

இலங்கை – தமிழக – அவுஸ்திரேலியா – கனடா   மற்றும்   ஜெர்மனியில் வெளியாகும்   இதழ்கள் ,  இணைய   இதழ்கள்   ஆகியனவற்றில்   பதிவான படைப்புகளின்   தொகுப்பு   சொல்ல  மறந்த  கதைகள்.    இலங்கையில் நீடித்த   போர்க்காலத்தில்   அரசியலிலும்   மூவீன    மக்களிடத்திலும்   ஏற்பட்ட மாற்றங்களையும்   ஒரு    ஊடகவியலாளனின்   மனிதநேய   –  மனித உரிமைப் பார்வையில்    இலக்கிய   நயமுடன்   பதிவுசெய்த   புதிய    தொகுப்பு   நூல் சொல்ல மறந்த கதைகள். 1972  காலப்பகுதியில்  படைப்பு   இலக்கியம்   மற்றும்   பத்திரிகைத்துறையில் பிரவேசித்த   முருகபூபதியின்   இருபதாவது   நூல்   சொல்ல  மறந்த கதைகள்.    இவ்வெளியீட்டு  அரங்கிற்கு   அன்பர்களும்   கலை –  இலக்கிய ஆர்வலர்களும்    ஊடகவியலாளர்களும்     அழைக்கப்படுகின்றனர். மேலதிக   விபரங்களுக்கு:   திரு. லெ. முருகபூபதி –   தொலைபேசி: 04 166 25 766

letchumananm@gmail.com