இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை.

நாள்: 31-12-2014, இரவு 9 மணிமுதல் 02-01-2015 மாலை 6 மணி வரை.
இடம்: திருவண்ணாமலை
கட்டணம்: ரூபாய் 1500/- (ஆயிரத்து ஐநூறு)
தொடர்புக்கு: 9840698236

சிந்தாமணி நிகண்டு மின்–அகராதிநண்பர்களே, இந்த ஆண்டு உங்களுடைய புத்தாண்டை இயக்குனர் மிஷ்கினுடன் கொண்டாடத் தயாராகுங்கள். மிஷ்கின் சினிமா பற்றியும்,  உலக இலக்கியம் பற்றியும், இசைப் பற்றியும் பேசுவதை எந்தவித அயர்ச்சியும் இல்லாமல் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். இரண்டு நாள் முழுக்க முழுக்க நல்ல சினிமா பற்றியும், உலக இலக்கியம், இசையின் மகத்துவம் பற்றியும் மிஷ்கின் உங்களுடன் பேசவிருக்கிறார். இந்த நிகழ்வு திருவண்ணாமலையில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடைபெற உள்ளது. பவா செல்லத்துரை இதனை ஏற்பாடு செய்துக்கொடுத்திருக்கிறார். இரண்டு நாள் தங்குவதற்கும், உணவிற்கு சேர்த்து நண்பர்கள் 1500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். உதவி இயக்குனர்கள் மட்டும் 1000 ரூபாய் செலுத்தினால் போதும். நண்பர்களே, எதிர்வரும் ஆண்டின் தொடக்கமே மிக சிறப்பாக அமைய நிச்சயம் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுங்கள். மிஷ்கினுடைய இந்த உரை நிச்சயம் உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் திருப்புமுனையாக அமையும். இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவும், முன்பதிவு செய்துக் கொள்வதற்கும் தொடர்புகொள்ளுங்கள். தொடர்புக்கு: 9840698236

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com