கவிப்புயல் இனியவன் கவிதைகள்

கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.1. அனாதையாகி விடுவேன்……

நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ….
அப்படியில்லை இதுதான்…..
உண்மை காதலின் ……
அடையாளம்….!!!

வாழ்க்கையில் ….
எல்லாம் இழந்துவிட்டேன்…..
உன் நினைவையும் இழந்தால்……
அனாதையாகி விடுவேன்……

நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்

2. அவள் என் எழில் அழகி

அ வளிடம் இதயத்தை கொடு ….
அ வளையே இதயமாக்கு …..
அ வளிடம் நீ சரணடை ….
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ….!!!

ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் …
ஆ ராதனைக்குரிய அழகியவள் ….
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ….
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே….
ஆ ருயிர் காதலியவள் ……!!!

இ தயமாய் அவளை வைத்திரு ….
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ….
இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே …….
இ ன்னுயிராய் அவளை பார் …..
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ……!!!

ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ……
ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் …..
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ……
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ……
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ……!!!

உ யிரே என்று அழைத்துப்பார் ……
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ……..
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ….
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் …..
உ ண்மை காதல் அடையாளம் அவை …..!!!

ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது …..
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ……
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு …..
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ……
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி …..!!!

எ கினன் படைத்த அற்புதம் அவள் …….
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் …….
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ….
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ……
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ……!!!

3. நகை சுவை

நான் அருகில் வரும்போது
வல்லினம் -போல்
முறைத்துப்பார்க்கிறாய்

தூரச்சென்றதும் திரும்பி பார்த்து
மெல்லினம் -போல்
கையை அசைக்கிறாய்.

நானோ….
அந்த இரண்டுக்கும் நடுவில்
இடையினமாக…….
திணறிக்கொண்டு இருக்கிறேன் ..!

4.ஒரு ஜீவாத்மாவின் கவிதை

ஒரு ஜீவன் வதைக்கபடும் …..
போது உன் உயிரும் வதை …..
படனும் அப்போதான் நீ ஜீவன் …..
வதைக்கப்படும் ஜீவனை….
பார்த்து பதபதக்கும் ஜீவன்….
ஜீவாத்மா அல்ல பரமாத்மா……!!!

படைப்புகள் எல்லாம் ஒன்றே……
வடிவங்களே வேறுபடுகின்றன……
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு……!!!

எல்லவற்றையும் விரும்பு …….
அளவோடு  விரும்பு ……
எல்லா வற்றிலும் சமனாக…
பற்றுவை‍ _ எதில் அளவு …..
அதிகமாகிறதோ அதுவே…..
உனக்கு மரணத்தின்……
நுழைவாயில்……………………….!!!

அன்பு ..பாசம்.. கருணை…
இரக்கம்..பற்று..காதல்….
தியாகம்….எல்லமே அளவாக….
இருக்கவேண்டும் அளவுக்கு…..
மீறும் போது நீ மட்டுமல்ல…..
அவர்களும் துன்ப படுகிறார்கள்……!!!

<kavikiniyavan@gmail.com>