தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல்

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல்அன்புடன் நண்பர்களுக்கு , வணக்கங்கள்! தோழர் கலைச்செல்வனின் மறைவின் 10வது ஆண்டு நினைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியன்று பாரிஸில் நடைபெற இருக்கின்றது. அனைத்து நண்பர்களும் இந்த அழைப்பினை ஏற்று நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நிகழ்ச்சி பற்றிய விபரங்களை வெகுவிரைவில் அறியத் தருகிறோம்.  மேலும் தோழர் கலைச்செல்வனின் எழுத்துப் பிரதிகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். மார்ச் மாதம் நடைபெறுகின்ற ஒன்றுகூடல் நிகழ்வில் அதனை வெளியிடுவதற்கான சாத்தியங்கள் நெருங்கி வரவில்லை. இவ்வருட இறுதிக்குள் கலைச்செல்வனின் எழுத்துப் பிரதிகள் நூல் வடிவம் பெறும் என்பதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒன்றுகூடலை ஒழுங்கமைக்கும் நண்பர்கள் சார்பாக

 லக்ஷ்மி

Ms. Luxmy
27 rue Jean Moulin
92400 Courbevoie
France.
 
Tél: 00331 49 97 89 83
Mobile: 00336 09 24 96 99

nluxmy@gmail.com