லண்டனில் ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ விருதைப்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்!

இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ நவஜோதி ஜோகரட்னம்இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’  ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில்  லண்டன் The Orchard Theater  இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார். பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா.

‘நாட்டியக்கலைமணி’ ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்தைக் குருவாகக் கொண்டு  சாகித்தியா இவ்வரங்கேற்றத்தை கடும் உழைப்பின் மத்தியில் சிறப்பிப்பது தன்னை மிகமகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக கனடாவிலிருந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த ‘நிருத்தியக் கலைமணி’ ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். புஷ்பாஞ்சலி,  கணபதி ஸ்துதி, ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், பதம்,  கலிங்க நர்த்தனம், தில்லானா என்ற ஒழுங்கில் கவர்ச்சி, கச்சிதம், விறுவிறுப்பு நிறைந்த நடன உருப்படிகளால் சாகித்தியா  சபையோர்களைக் கட்டி வைத்திருந்தாள் என்று தனது பிரதம உரையில் குறிப்பிட்ட ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் இரு கண்களைப்போன்று நர்த்தகி சாகித்தியாவும் இசைக் கலைஞரான ஸ்ரீ.பாலகாட் ஸ்ரீராமும் பக்க வாத்தியக் கலைஞர்களான ‘மிருதங்க கலைமாமணி’ ஸ்ரீ.பத்மநாபன் ஜெயராமன், வயலின் வித்துவான் ‘சங்கமித்திரா’ ஸ்ரீ. கே.ரி.சிவகணஷ்,   புல்லாங்குழல் செல்வன்.அரவிந்தன் பகீரதன் போன்றவர்களோடு இணைந்து பரதத்தின் மதிப்பை, ஆளும் நேர்த்தியோடமைந்த பாவத்தை, கலையை உயிரோட்டமாக வெளிப்படுத்தி ரசிர்களை தக்க வைத்தார்; நர்த்தகி சாகித்தியா என்றும் பாராட்டியிருந்தார்.

Continue Reading →