மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (17, 18, 19 & 20)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்  (17)

பராசக்தி படத்தை இன்றும்  ஒரு மைல்கல்லாக, ஒரு க்ளாசிக் என்று தான் மதிப்பிடுகிறார்கள். அந்தப் படம், கோர்ட்டில் சிவாஜி கணேசனின் உரத்த வாக்குமூலம்  சினிமாவா, அரசியலா? அதை எழுதிய போது கருணாநிதி அரசியல் வாதியாக தன்னை எண்ணிக்கொண்டாரா, இல்லை சினிமா கதையாசிரியராகவா? இன்று வெங்கட் சாமிநாதன்சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும்  நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும் வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும் கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும்.  தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன்.  ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள்  அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள்.

Continue Reading →

மகாகவி பாரதியார் பற்றி மூன்று கட்டுரைகள்!

மகாகவி பாரதியார்[ஏற்கனவே பதிவுகளில் வெளியான மகாகவி பாரதியார் பற்றிய கட்டுரைகள் இங்கே ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. ‘பதிவுகள்’ இதழில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இம்முறை இக்கட்டுரைகள் ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றன. மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவன். அதே சமயம் தன் காலகட்டத்தையும் மீறியும் சிந்தித்தவன்; செயற்பட்டவன்; இருப்பு பற்றிச் சிந்தித்தவன்; இவ்வுலகின் பலவேறு நாடுகள் பற்றியும், அந்நாடுகளில் வாழும் மானுடர்கள் பற்றியும், பல்வேறு அரசியல் தத்துவங்கள் பற்றியும், தேசிய மற்றும் சமூக விடுதலை பற்றியும், பெண் விடுதலை பற்றியும் சிந்தித்தவன். அவனது குறுகிய கால கட்டத்து வாழ்வில் அவன் சாதித்தவை அளப்பரியன. பிரமிப்பினை ஊட்டுபவை. அவனது பரந்த வாசிப்பும், அவனது வாழ்வனுபவமும் அதன் விளைவான அவனது தேடலும் அவனைப் புடமிட்டன. அதன் விளைவாக உருவானவைதான் அவனது படைப்புகள்.  அவை கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பென பரந்துபட்டவை. – பதிவுகள் -]

Continue Reading →