இலண்டன்: உரையாடல்! பகிர்வு! கற்றல்! மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

 இலண்டன்: உரையாடல்! பகிர்வு! கற்றல்! மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.

காலம்: ( 04- மே-2013 ) மாலை 4.மணி
இடம்:  The London Tamil Sangam, 369, High Street North, Manor Park, London, E12 6PG

ஆய்வுகள்
• க.அயோத்திதாசர்
• பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்
• ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
• தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,
• அறம் அதிகாரம்
• அ.மாதவையா
• தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
• வடலூர் ராமலிங்கம்

படைப்புகள்
• சிலுவைராஜ் சரித்திரம்
• காலச்சுமை
• லண்டனில் சிலுவைராஜ்

உட்பட முப்பதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.அவரது உரையை அடுத்து விரிவான கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

• நிகழ்வு புதிய இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதனை கவனத்தில் கொள்ளவும். மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்!

The London Tamil Sangam
369, High Street North,
Manor Park, London, E12 6PG

அனைவரையும் அழைக்கிறோம்.

eathuvarai@googlemail.com