ஆய்வு: நிகழ்த்துக்கலையில் தப்பாட்டம் – ஜமாப் ஒப்பீடு!

இரா.மூர்த்திமனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன்,  ஆண்மான், ஒளி, சாத்திரம்,  மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை,  உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை,  சிற்பம்,  ஓவியம்,  கட்டிடம், நாட்டியம்,  கூத்து,  ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து,  ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.  இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.

“நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மண்ணில் மகிழ்ந்து,  மண்ணின் மனத்தோடு நாட்டுப்புற மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும் கலைகள்” என்று ஓ.முத்தையா அவர்கள் கூறுகிறார். கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ,  நோக்கங்களையோ அல்ல. மனிதன் கலையின் வழியாகத் தன்னைத்தானே தானே வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று இரவிந்திரநாத் தாகூர் கூறுகிறார். இதில் தப்பாட்டம் என்ற பறையாட்டம், தென்மாவட்டங்களிலும்,  ஜமாப் (திடும்) என்ற ஆட்டம் கொங்கு நாட்டிலும்  நிகழ்த்தப்படும் கலைகள் இரண்டும் நாட்டுப்புறக் கலையில் முதன்மையாகக் கொள்ளப்பட்டாலும், தப்பாட்டத்திலிருந்தே திடுமெனும் ஜமாப்; ஆட்;டம் வளர்ச்சி கொண்டவையாகும். அத்தகைய சிறப்புபெற்ற தப்பு,  திடும் ஆகிய இரண்டு இசைக்கருவிகளின் அமைப்பு, பயன்பாடு,  இசைக்கும்முறை,  அதன் வகைகள், அதனை உருவாக்கும்முறை குறித்து ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

பறையாட்டம் / தப்பாட்டம்
பறை என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். ஆடு, மாடு ஆகிய விலங்குகளின் தோலினை வட்ட வடிவமான மரக்கட்டையில் இறுகக்கட்டி இசைக்கிற ஒரு வகை தோல் இசைக்கருவியாகும். “இந்திய சங்கத்தில் அவநந்த வாத்தியங்கள் எனப் பறை அழைக்கப்படுகிறது. அவநந்தம் என்றால் மூடப்படுவது என்று பொருளாகையால் ஒரு பாத்திரமோ, மரத்தாலான கூடோ தோலினால் போர்த்தப்பட்டால் அது ‘அவநந்தம்’ என்றும், ‘புஸ்பகாம்’ எனவும் அழைக்கப்படுகிறது என்று டி.எஸ் பார்த்தசாரதி கூறுகிறார்.

இந்து தர்மத்தில் பறை சக்தியின் பெயரென்றும் அவளே ஆதியென்றும்,  சிவனே பகவான் என்றும் பாரதியார் கூறுகிறார். இப்பறை சங்க காலத்திலிருந்து தமிழக நிலப்பரப்பில் குறிஞ்சியில் குறிஞ்சிப்பறையாகவும், முல்லைநிலத்தில்  முல்லைப்பறையாகவும், மருதநிலத்தில் மருதப்பறையாகவும், நெய்தல்நிலத்தில் நெய்தல்பறையாகவும், பாலைநிலத்தில் பாலைப்பறையாகவும் பெயரிடப்பட்டு மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டன.

Continue Reading →

ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்

ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்முன்னுரை

மொழி என்பது பேசுவதற்கானது. கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்காக அல்லது புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாரம்சம். ஒருமொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அதுவொரு தனிமனித வாழ்க்கையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ளமுடியும். அப்படி விவரிக்கின்ற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். அவ்விலக்கியப் படைப்பின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழியாகும்.

தமிழ்மொழி பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருக்கின்றது, பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்துள்ளது. இத்தகைய வேறுபாடுகளுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன.

தமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் அல்லது சமூகம் அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார வழக்குகள் ஆகும். பெரும்பாலான தமிழ்மொழி வட்டார வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்றாலும், சில சொற்கள் பெரிதும் மாறுபடுகின்றன. தமிழகத்தில் வழங்கப்படும் சில சொற்களின் ஒலிகள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. சான்றாக, இங்கே என்ற சொல் தஞ்சாவுரில் “இங்க” என்றும், திருநெல்வேலியில் “இங்கனெ” என்றும், இராமநாதபுரத்தில் “இங்குட்டு” என்றும், கன்னியாகுமரியில் “இஞ்ஞ” என்றும், யாழ்ப்பாணத்தில் “இங்கை” என்றும் வழங்கப்படுகின்றன.

வட்டார நாவலின் தனித்தன்மை

நாவல் வகைகளில் வட்டார நாவல்கள் ஒரு தனித்தன்மையுடன் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ளதைப் போலவே மொழிபேசும் எல்லைக்குள்ளே ஒரு குறிப்பிட்ட பொருண்மை பொதுவாகக் காணப்படும் பகுதிகளை வட்டாரம் என்பர். அங்குள்ள படைப்பாளிகளாலோ அல்லது அப்பொருண்மை புரிந்த வாசகர்களாலோ அவ்வட்டார மொழியில் படைக்கப்படும் நாவல்களே வட்டார நாவல்கள் ஆகும்.

வட்டார நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி, கதையைக் கூறுவதாகும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்குகள், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளை அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறைகளோடும், அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் யதார்த்தமாக வெளிப்படுத்துவதே வட்டார இலக்கியத்தின் நோக்கமாகும். இதனை,

“இலக்கியத்தை மண்மணத்துடனும், வேரோடும் காட்டும் முயற்சியே இது. இதுவொரு நுணுக்கமான அருங்கலை“

என்பார் இரா. தண்டாயுதம் (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப.2). ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தன்மைகளைக் கலைஇலக்கிய வடிவில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதினால் வட்டார இலக்கியங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.

தமிழில் வட்டார நாவல்கள்

தமிழில் 1942ல் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய “நாகம்மாள்” நாவலே தமிழின் முதல் வட்டார நாவலாகும். கொங்கு நாட்டுப் பேச்சு வழக்கைப் பயன்படுத்தி, கிராமியச் சூழலை மையப்படுத்தி இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சு. வே. குருசர்மாவின் “பிரேம கலாவத்யம்” (1893), கே.எஸ். வேங்கடரமணியின் “முருகன் ஓர் உழவன்” (1927) ஆகிய நாவல்கள் கிராமங்களை மையப்படுத்தி எழுந்தபோதிலும், முழுக்க முழுக்கக் கிராமியச் சூழலைப்பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மண்வாசனையை வீசும் ஒரு முன்மாதிரியான நாவலாக இருப்பது “நாகம்மாள்” நாவலேயாகும்.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை ஃபூக்கோதொல்காப்பியத்தின்படி தலைவன் – தலைவி மறைவாக ஒழுகும் களவு ஒழுக்கத்தை வரையறுப்பதே களவு இலக்கியக்கொள்கையின் வேலை. அத்தகைய களவில் தலைவனுக்குச் சார்பாக இயங்கும் பாங்கன், தலைவிக்குச் சார்பாக இயங்கும் தோழி இடம்பெற்றிருப்பது பொருத்தமுடையது. களவு ஒழுக்கத்திற்கு எவ்வகையிலும் சார்பாக இயங்காத செவிலி, நற்றாய் பாத்திரங்கள் களவில் ஏன் இடம்பெற்றிருக்கிறது? களவுக்குப் பொருத்தமற்ற செவிலி, நற்றாய் இருவரில் நற்றாய் குடி பொறுப்பிற்கு உரிமையானவள்; செவிலி தலைவியின் குடிச்செயலைப் பின்பற்றி தலைவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருப்பவள். குடிசார்ந்து நேரடி உரிமையைப் பெற்றிருப்பதால் களவுக்குப் பொருத்தமற்ற நற்றாய் பாத்திரம் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இவ்ஆய்வுக் கட்டுரைக்கு ஃபூக்கோவியல் சிந்தனை கருவியாகக் கொள்ளப்படுகிறது. காரணம் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படுகிற இடத்தில் மாறிய பொருளுக்கும் மாற்றப்படுகிற பொருளுக்கும் இடையில் நடந்தவற்றைக் குறித்த ஆராய்ச்சியில் மிகுகவனம் செலுத்தியது ஃபூக்கோவியல் சிந்தனை. ஃபூக்கோ உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய ஒரு பொருள் குறித்த ஆராய்ச்சியை அவ்வரலாற்றின் பின்னணியில் ஆராய்பவர். ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட இலக்கியவிதிகள் மொழியாலான ஒரு பொருள். அது இலக்கியவிதிகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே பூக்கோவியல் சிந்தனையைக் களவில் வைத்து விளக்க இடமுண்டு. மேலும் இங்குக் களவு கற்பாக மாற்றப்பட்டதற்கு இடையில் நற்றாயின் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. அதற்குரிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதற்கு முன் ஃபூக்கோவியல் சிந்தனையில் கட்டுரையை விளக்குவதற்குப் பயன்படக்கூடிய பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.

ஃபூக்கோவிய அதிகாரச் சிந்தனை
ஃபூக்கோவிய அதிகாரம் (Power) என்பது இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கின்ற ஒருவர்/ஒன்று மற்றொருவர்/மற்றொன்று மீது செலுத்துகிற ஆதிக்கம் சார்ந்த ஆற்றல் அல்ல. சமூகம் உறவுகளால் ஆனது. அந்த உறவுகள் ஒவ்வொரு கணப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கம் ஒன்று மற்றொன்றை மாற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தை நிகழ்த்துகிற ஆற்றலை ஃபூக்கோவியல் அதிகாரம் என்ற சொல்லால் குறிக்கிறது. ஃபூக்கோவிய “அதிகாரம் ஒரு நிறுவனம் அல்ல, மற்றும் ஒரு அமைப்பும் அல்ல…. அது ஒரு பெயர்” (Foucault,1998:93). அதிகாரம் தன்னிச்சையான இயக்கம் கொண்ட ஒரு பொருள் அல்ல. உறவுகளுக்குள் இருந்துகொண்டு அதனை இயக்கிக்கொண்டு இருக்கிற ஒன்று. உறவுகள் இல்லாமல் ஆகிறபோது அதிகாரமும் இல்லாமல் ஆகிவிடும்

ஆற்றலால் அமைந்த உறவுகள் அதிகார உறவுகளாகும் (Power relations). அதிகாரம் உறவுகொள்ளும்போதுதான் மாற்றம் நிகழ்கிறது. இங்கு ஒரு கேள்வி எழும். அது மாறுகிற செயல் ஆற்றலற்றதா? என்பதாகும். மாறுகிற செயல் ஆற்றலற்றது இல்லை. மாறாகக் குறைவான ஆற்றல் கொண்டது. அதாவது பயிற்சி பெறுகிற இடத்தில் இருப்பது. அதேசமயம் பயிற்சி பெறுகிற அதிகாரம் இல்லாமல் மாற்றியமைக்கிற அதிகாரம் இல்லை. “அதிகாரம் இங்கோ அங்கோ இடமாக்கப்பட்டது இல்லை” (Foucault,1980:98) என்பது சுட்டத்தக்கது. “அதிகார உறவுகள் உள்நோக்கம் மற்றும் தன்னிலையின்மையும் ஒருசேரப் பெற்றவை” (Foucault,1998,94). உள்நோக்கம் இருக்கிற இடத்தில் தன்னிலை தவிர்க்கமுடியாதது. ஆனால் ஃபூக்கோ அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். ஃபூக்கோ இதனை விளக்க வெவ்வேறு பொருண்மையிலான இரு சொற்களைக் கையாள்கிறார். ஒன்று உத்தி (Tactic) மற்றொன்று சூழ்ச்சி (Strategy).

Continue Reading →

ஆய்வு: குறுந்தொகையில் இடைச்சொற்பொருள் பயன்பாடு: பாலின நோக்கு (மன் இடைச்சொல் மட்டும்)

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?மனித உயிர்கள் சமூகமாக மாறும் வளர்ச்சிக் கட்டங்களில் மனித உயிர்களால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும், சைகைகளும் அர்த்தம் கொள்ளத் தொடங்குகின்றன. இந்த அர்த்தப் புலப்பாடுதான் மொழி எனப்படுகிறது. அதாவது, “வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தோந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவிக் கொண்டு இவற்றிற்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும் தான் மொழி பிறந்தது” (அந்திரேயெவ்.இ.லி., பி. எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய (மனிதக்குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்ற புத்தகத்திலிருந்து மகராசன் அவர்கள் மேற்கோள் காட்டியது, பெண்மொழி இங்கியல் , ப. 29).

மேலை இலக்கியத்திறனாய்வு, இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக் கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக்களம் விசாலாமாகியது போல மொழி, மொழியில் காணப்படும் சொல் தொடர்பான ஆய்வும் பெருகின. இவ்வளர்ச்சியின் அடிப்படை மொழியில் பாலின பாகுபாட்டிற்கான புதிய களத்தினை நமக்கு அறிமுகப்படுத்தியது. அவ்வடிப்படையில் மொழியில் காணலாகும் சொற்கள், அவற்றுக்கான பொருட்கள், பாலின நோக்கோடு பார்க்கும் போக்குப் பெருகியது. இந்தக் கருத்துகளை மையமாக கொண்டு இடைச்சொல்லில் ஒன்றாகக் காணப்படும் “மன்“ என்ற சொல்லைப் பாலின வேறுபாடு (Gender discrimination) என்ற பார்வைக் கொண்டு பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மொழியில் காணலாகும் சொல் மற்றும் சொற்பொருள் என்னும் இரு நிலைப்பாடுகளும் ஆண் சார்புத் தன்மையைக் கொண்டதாகவும், பெண்ணுக்கு எதிராகவும் உருவாக்கம் பெற்றுள்ளன. இக்கூற்றினைப் புரிந்துகொள்ள ஃபூக்கோ கூறியதாகப் பஞ்சாங்கம் எடுத்துக்காட்டும் கூற்று கீழ்வருமாறு, “ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அதிகாரம் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் அப்பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது” பெண்மொழி புனைவு, ப.66).

கட்டுரை தொடங்குவதற்கு முன்னால், பாலினம் என்றால் என்ன என்பது பற்றி ஒரு சிறு வரையறையை இங்கு காண்போம். “பாலினம் என்பது ஆண், பெண் இவ்விருபாலரும் சமூகத்தில் எவ்வாறு வாழவேண்டும் எனச் சமூகம் வரையறுத்திருப்பதற்கேற்றவாறு வாழும் வாழ்க்கைக் கூறாகும். மேலும், பாலின வேற்றுமைகள் என்பது, மேற்குறிப்பிட்ட உயிரியல் சார்ந்த பால் வேறுபாடுகளை ஆதாரமாகக் கொண்டு சமூகக் கலாச்சார உளவியல் கூறுகளை உள்ளடக்கியதாக அமைகிறது என்றும் ச. முத்துச்சிதம்பரம் கூற்றினை அ.மரியசெபஸ்தியான் அவர்கள் தமிழரின் பாலியல் முறைமைகள் ப.8 என்னும் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

தொல்காப்பியம் கூறும் சொல்வகையில் ஒன்று இடைச்சொல். இடைச்சொல் எண்ணிக்கையில் அதிகமானவை என்பதை அவ்வியல் நமக்கு உணர்த்துகின்றது. பெயர், வினை ஆகியவற்றைச் சார்ந்து தோன்றுவதால் இடைச்சொல் என்றாயிற்று.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியரின் ஏவல் வினையில் வினாவின் ஆற்றல்

- * - மா. சத்யராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 - -முன்னுரை
தமிழ் இலக்கணங்களில் பகுப்பாய்வுகளின் வழி நம் முதாதையோர் வாழ்ந்து பயன்படுத்திய இலக்கண மரபுகளை முதற்இலக்கணம் வாயிலாக அறியமுடிகிறது. சொற்களைக் கையாளும் முறையிலும், பயன்படுத்தும் முறையிலும் இலக்கணங்களின் பங்கு அளப்பறியது. சொற்களை பயன்படுத்தும் பொது காலம், இடம், சூழல் பொருத்து அமையும். அப்போது வினைச் சொற்களின் பங்கு மிகமுக்கியமானதாக அமையக் கூடும்.

தொல்காப்பியரின் காலத்தில் வழங்கப்பட்ட வினைச்சொற்கள் வாயிலாக முக்காலத்தில் பயன்படுத்திய சொற்களை அறியமுடிவதோடு ஒருவரிடம் ஒரு செயலை அல்லது வேலையை கூற முற்படும் போது அவர் அவ்வேலையை பணிவாக கூறவும், கேட்டுக்கொண்டதற்கு இணங்க விரைந்து செய்து முடிக்க ஏவல் வினையை பயன்படுத்திலுள்ளனர். இவ் ஏவல் வினையை பயன்படுத்தும் போது ஏன், யா, ஓ, ஏ என்றும் வினாக்குறியீடுகள் ஏவல் வினைகளில் இணைக்கப்படுதல் தமிழ் மொழியில் காணப்படும் ஒருவகை மரபாக அமைந்துள்ளது.

பொதுவாக மக்கள் மனம் பிறர் ஏவுவதை விரும்புவதில்லை அது ஏவலேயாயினும் அன்போடும் பணிவோடும் கூறவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய கோட்பாடுகளை கொண்டு தொல்காப்பியர் கூறப்படும் ஏவல் வினையை ஆராய்வதாகவும் வினையில் வினாவின் ஆற்றல் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமையக்கூடும்.

தொல்காப்பியரின் முன்னிலை வினையும் ஏவலும் வேறுபடுத்திக் காட்டவில்லை (தொல். சொல் 223, 224) இந்நூற்பாக்களின் ஏவல் வினையினை சுட்டியுள்ளார். மேலும் (நேமி.45), (நன்:330), (இல.வி.236 616) ஆகிய இலக்கண நூல்களும் தொல்காப்பியத்தை ஏற்கிறது. (தொல். எச். 210,214) ஆகிய நூற்பாக்களில் ஏவலில் வரும் குறிப்பொடுத் தோன்றும் பவணந்தியார் முன்னிலை வினைய வினையிலிருந்து ஓரளவு வேறுபடுத்தி காட்டியுள்ளார் எனலாம் (நன் 335, 337). மேலும்,

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே    (தொல்.சொல். 452)

என்றும்

முன்னிலை முன்ன ரீயு மேயும்
அந்நிலைமரபின் மெய்யூர்ந்து வருமே    (முத். 760)

தொல்காப்பியரின் ஏவல் முன்னிலையில் மட்டும் வழங்கும். (வீர. 79), (நன். 336), (இல.வி. 358), (தொன்.வி. 113) இவ்விளக்கணங்களை ஏற்பதோடு. முன்னிலையில் ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு என்றும் குறிப்பிடுகிறார்.

உண்ணுதி, உண்டி போன்ற இகர விகுதி பெற்ற சொற்களும் (தொல். சொல். 223) ஒருமையிலும் உம் விகுதி பெற்ற சொற்கள் பன்மையிலும் வழக்கிலுள்ளன என்பார். பேச்சு வழக்கில் செல், வா, போ என்பன போன்ற சொற்கள் ஒருமையிலும், வாரும், செல்லும், வாருங்கள், செல்லுங்கள், செய்யுங்கள் என்று சொற்கள் பன்மையிலும், உயர்வு காரணமாகவும் வரும்.

வினாவும் ஏவலும்
ஒருவர் மற்றொருவரிடம் ஒரு செயல் செய்ய கூறும் போது அவர் அந்த ஏவுவதை விரும்புவதில்லை. அந்த ஏவலேயாயினும் அன்போடும், பணிவோடும் கூறவேண்டுமென எதிர்பார்க்கிறார். ஆகவே ஒருவர் மற்றொருவரிடம் ஏவும் போது கட்டளையாகக் கூறாமல் தனது விருபத்தை தெரிவிக்கும் பொருட்டு பணிவான ஏவலை அமைத்துக் கொள்ளுகின்றனர். எடுத்துக் காட்டாக, ‘இதை செய்’ என்பதற்கு பதிலாக ‘இதை செய்து தருகிறாயா’ என்று பணிவுடன் கேட்கிறோம். ‘தருகிறாயா’ இது வினாவாக இருந்தாலும் ‘செய்’ என்னும் ஏவலைக் குறித்து நிற்கிறது. இதனை மறைவான ஏவல் என்றும் கூறலாம். இப்படி கூறுகையில் நாம் கட்டளையாக கூறவருவதை மறைத்து தம் விருப்பத்தினை தம் விரும்பும் ஏவலை தெரிவிக்கப் பயனுள்ளதாக அமைகிறது.

Continue Reading →

ஆய்வு: திருக்குறளில் கடல் : காட்சியும் கருத்தும்

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

முதன்மைச் சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்…

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர்.

Continue Reading →

மண்டைப் பாணர் – ஓர் ஆய்வு

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாக்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறிய அறிஞர் பெருமக்கள், மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். பாணர் மரபில் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள்  தோன்றுகின்றன. எனவே, ‘மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்கக் காலத்தில் இருந்தனரா?’ என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

மண்டை என்பது என்ன?
மண்டை என்பது சங்கக்கால இரவலர்கள் உணவு பெற்று உண்பதற்காக வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்து பாடி முடித்த பின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக இருந்துள்ளது எனப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.

புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்
புறநானூற்றுப் பாக்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன. அவற்றினை இப்பகுதியில் எடுத்துக்காட்டி ஆராயப்பட்டுள்ளன.  விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும்  உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கி காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமான்ஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார்.  இதனை,

“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரன்முத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே”            -புறம்.103

Continue Reading →

ஆய்வு: தமிழ் சூடியில் சமுதாய நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
17.4.1917 ஆம் ஆண்டு மேலைச் சிவபுரியில் வ.சு.ப. மாணிக்கம் பிறந்தார்.இயற்பெயர் அண்ணாமலை.மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார்.அப்பெயரே நிலைத்து விட்டது.பண்டிதமணி கதிரேசச் செட்டியாரின் தொடர்பால் தமிழ் நூல்களை ஊன்றிப் படித்தார். தமிழில் ‘அகத்திணைக் கொள்கை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழ் சூடி என்னும் நூலை இயற்றியவர் ஆவார்.இவர் கல்விச் சிந்தனையில் தலையாயவர்.மொழிப் பகை விரும்பாதவர்.மொழிக்கலவை வேண்டாதவர்.எக்கலையும் தமிழ்ப்படுத்தலாம் ;.என்னும் கொள்கையர்.அறிவுத் தூய்மை போல அகத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டவர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவு நலம் பெற்று வளர்ந்து அழகப்பர் கல்லூhயில் ஆள்வினைத்திறம் கற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மதிப்புயர் துணைவேந்தராக பணியாற்றிய இவர்.இளமைத்துறவு,செல்வத் துறவு போலப் புகழ்த்துறையும் விரும்பும் காந்திய நெறியாளர் உரைநடையில் புதுத்தடம் காட்டுபவர்.உவமை நடையும், சுருக்க நடையை வளஞ் செய்து தனிநடையாளராகக் காட்டுகின்றன.இவர்; பாடிய ‘கொடை விளக்கு’ வள்ளல் அழகப்பரின் புகழ்பாடும் தமிழ் விளக்கு.இவரால் இயற்றப்பட்ட தமிழ் சூடி,ஆத்திசூடி போல அமைந்தது.இவருடைய பாடல்களில் உலகப் பார்வை,தேசியப் பார்வை,தமிழ்ப் பார்வை,ஒழுக்கப் பார்வை,நடைமுறைப் பார்வை எனப் பலவிதப் பார்வைகளைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளார்.இந்நூல் ஒரடியால் அமைந்த 118 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளன சூடிகள் பலவற்றிலும் தமிழ் சூடிக்கு தனி இடம் உண்டு இந்நூல் காப்பு வாழ்த்துப் போல் குழந்தையை முன்னிலையாக கொண்டு தமிழை வாழ்த்தி பாடியுள்ளார்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

தமிழ்ப்பற்று
இந்நூலில் தமிழ்ப்பற்றை வளர்க்க கூடிய பாடல்கள் ஏழு  (1,21,44,50,61,62,100,) ஆகும்.  ஒவ்வொரு மனிதருக்கும் தமிழ்ப்பற்று இருக்க வேண்டும்.இப்பற்றை வளர்ப்பது தமிழ் நூல்கள் இந்நூல்களைப் படிக்க வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இதனை,

Continue Reading →

ஆய்வு: மூதுரையில் வாழ்வியல் சிந்தனைகள்

- முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். - நீதிக்கருத்துக்களை போதிக்கக் கூடிய இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்படுகின்றன. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய அறநூல்களைப் படைத்துள்ளார்.

ஓளவையார்:
ஓளவையார் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் அவ்வை, தாய், மூதாட்டி, பெண்துறவி, தவப்பெண், அம்மை, அன்னை என்று விளக்கம் தருகின்றன.  பொருளுக்கு ஏற்ப ஒளவையின் உருவமும் கற்பனை செய்யப்பட்டது. மதிப்புமிக்க முதிர்ச்சி பெற்ற தவமகள் ஒருத்தியின் திருத்தோற்றமே நம் கண்முன் நிற்கிறது. வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த பெண் புலவர்கள் ஒளவை என்ற பெயரில் தங்களை அழைத்துக் கொண்டதாக ஆய்வாளர் சுட்டுவர்.  ஓளவை என்ற பெண் கவிமரபு பல்வேறு காலங்களில் தொடர்ந்திருக்கிறது.  சங்க காலத்திலும் அதற்குப்பிறகும் வாழ்ந்த ஒளவையார் பலரென்பர்.  அவர்களுள் நீதிநூல்களைப் பாடிய சோழர்கால ஒளவை கி.பி.12ஆம் நூற்றாண்டினர் என அறிஞர் மு.அருணாச்சலம் கருதுகிறார். ஆடவரைச் சார்ந்து பெண் ஒழுகவேண்டும் என்ற அடிமைத்தனத்தை சங்ககால ஒளவை முன்மொழியவில்லை. ஆனால் ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிருத்தப்பட்டனர்.

மூதுரை:
மூப்பு 10 உரை ஸ்ரீ மூதுரை, மூத்தோர் 10 உரை ஸ்ரீ மூதுரை எனவும் பதம் பிரிப்பர்.  மூதுரை கடவுள் வாழ்த்துடன் 31 வெண்பாக்களை உடையது.  நம் முன்னோர்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் இறைவனை வேண்டிக் கொண்ட பின்பே ஆரம்பிப்பார்கள்.  முழுமுதற் கடவுளுமான தும்பிக்கையானாகிய விநாயகனைப் போற்றிப் பணிந்த பிறகே எதையும் தொடங்குவார்கள்.  ஓளவையார் மூதுரையைப் பாடும் முன் வேழமுகத்தானை வணங்கித் துதிக்கிறார்.     வாக்குண்டாம் என கடவுள் வாழ்த்துப்பாடல் தொடங்குவதால் மூதுரை “வாக்குண்டாம்” எனவும் வழங்கப்படுகிறது.

வாழ்வியல் சிந்தனைகள்:-
நீதிநூல்கள் வாழ்வியல் சிந்தனைகளை எடுத்தியம்புகின்றன. நம் பெரியார்கள் மக்கள் நேர்மையாக வாழ்ந்து பண்பாளர்களாகத் திகழவேண்டும் என்று சின்னச்சின்ன வார்த்தைகளில் நீதிகளைக் கூறினார்கள்.  மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறுதிநாள் வரையிலான வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வியல் நோக்கில் மனித சமூகம் நாளும் வளர்நிலை பெற்றுவருகின்றது. வாழ்வியல் நோக்கம் மனித சமுதாயத்தில் நிலைபெற்று உள்ளது. வாழ்வின் மேம்பாடு இன்றைய காலகட்டங்களில் பல்வேறு துறைகளில் மேன்மை பெற்று உள்ளது.    

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஓர் ஒளவையார். அரிதாகக் கிடைக்கப் பெற்ற மானிடப் பிறவியை பண்பட்டதாக வாழ வாழ்வியல் சிந்தனைகள் வளமானவையாக இருக்க வேண்டும்.  இன்று ஊhடைன ளுpநஉயைடளைவ என்று கூறுவதைப் போல குழந்தைகளுக்காக உள்ள பாடல் வரிசைகளில் ஒளவையாரின் பாடல்கள் மிகப் பிரபலமானவை ஆகும். ஒளவையார் மூதுரையில் கல்வி, நட்பு, உதவி போன்ற வாழ்வியல் சிந்தனைகளை குழந்தைகளுக்காகப் பாடினாலும் பெரியவர்களுக்கும் பயன்படக்கூடியவையாக உள்ளன எனலாம்.

Continue Reading →

ஆய்வு: கற்புக்கால மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
கற்புக்கால மெய்ப்பாடுகளாவன, தெய்வமஞ்சல், புரையறந்தெளிதல், இல்லது காய்தல், உள்ளது உவத்தல், புணர்ந்துழி உண்மை, பொழுது மறுப்பாதல், அருள்மிக உடைமை, அன்புமிக நிற்றல், பிரிவாற்றாமை, மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ ஆகியவற்றை தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.24)  இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

1:1 தெய்வம் அஞ்சலும் அகநானூறும்
தெய்வமஞ்சலென்பது, “தெய்வத்தினை யஞ்சுதல்” (இளம்.மெய்.24) எனவும், “தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தபாதரும் இன்னாரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும்;  அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வமஞ்சலென்றா னென்பது மற்றுத் தனக்குத்  தெய்வந் தன் கணவனாகலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சபடுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது.” (பேரா.மெய்.24) எனவும், “சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற் றொழுவது நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைமகனா லுணர்த்தப்பட்டு அவன் தெய்வத்தை அஞ்சி வழிபடல். தெய்வமாவது-ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலாயினோரும், குல தெய்வமுமாம். குலதெய்வம் – இறந்துபோன முன்னையோர். அஞ்சி வழிபாடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடெனப்படும்.” (குழந்தை. மெய்.24) எனவும், “களவின் கண்ணும் வரைவின் கண்ணும் “பிரியேன் பிரியின் தரியேன்” எனச் சூளுரைத்த தலைவன் கற்பின்கண் பொதுவாக  ஓதல் முதலியவற்றின் கண்ணும் சிறப்பாகப் பரத்தையின் கண்ணும் பிரிந்தவழி அச்சூளுரை காரணமாகத் தலைவற்கு ஊருநேருங்கொல் எனக் கருதி முழுமுதற் பொருளல்லாத பூத தத்துவ பொருளாகவும் கிளவியாகத்துள் தெய்வஞ் சுட்டுவனவாகவும் கூறப்பெற்ற தெய்வங்களைத் தலைவி அஞ்சுதலாம். பரவுதல், வேண்டல் என்றாற் போலக் கூறாமல் அஞ்சுதல் எனக் கூறியமையான் தெய்வம் என்றது சிறுதெய்வம் என்பது பெறப்படும்.”  (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

தலைவனின் சூள் பொய்த்தவழி அவனுக்குத் துன்பம் நேருமோ என அஞ்சும் தலைவி தெய்வத்தைப் போற்றல் தெய்வமஞ்சலெனப்படும். இங்கு தெய்வமெனப்படுவது ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலானோரைச் சிறப்பாகக் குறிக்கும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறுந்.87, கலி.88 ஆகிய பாடல்களையும், பேராசிரியர் கலி.16, 75, தொல்.கற்.5 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.87 ஆம் பாடலையும் குழந்தை, கள.6 ஆம்  நுற்பாவையும், பாலசுந்தரம் கலி.16, 75 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

Continue Reading →