ஆய்வு: சொல் உருவாக்கத்தில் சாதியம் – முனைவர் ஞா.குருசாமி –

- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -சொற்கள் ஒவ்வொன்றும் வெறும் எழுத்துகளின் கூட்டமைவு மட்டுமல்ல. அவற்றுக்குள் நுணுக்கமான வரலாறு ஒளிந்திருக்கிறது. சற்று ஆழ்ந்து உற்று நோக்கும் போது சொற்களுக்கு உள்ளான புரிதலை வரலாறு என்பதோடு மட்டும் நிறுத்தி விட முடியவில்லை. சமநிலைச் சமூகத்திற்கு எதிரான சாதிக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி பல சொற்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. எல்லாச் சொற்களுக்குள்ளும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சொற்பகுப்பு பெயர், வினை, இடை, உரி என விரிந்த தளத்தினுடையதாக இருப்பதால் சொற்களின் பின்புலப் புரிதலை முழுமையான வகை, தொகை ஆய்வுகளுக்குப் பின்னரே வரையறுத்து இனங் காணமுடியும்.

சமூக அமைப்பு அதிகாரமும,; பொருளும் பரவலாகி விடக்கூடாது என்ற நுணுக்கமான சிந்தனைசார் சாதியத்தில் தோய்ந்து இருக்கிறது. கட்டமைக்கப்பட்ட காலம் தொட்டே அதிகாரத்தையும,; பொருளையும் பரவலாகச் செய்யவிடாமல் தடுத்தே வந்த சாதியம், காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளவும் தவறவில்லை. எண்ணும் எழுத்தும் (கல்வி) சமீப காலம் வரை பிராமணர்களிடமும,; ஆதிக்கச் சாதியினரிடமும் இருந்து வந்தது. இவர்களிடம் இயல்பாக இருந்த ஆதிக்கக்குணம் இவர்களின் கையில் இருந்த கல்வியிலும் இருந்தது. குருகுலக் கல்விப் போதனையை வெறுமனே கல்விப் போதனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்து, அவர்களுக்கு மட்டும் கல்வி புகட்டிய குருக்களின் எண்ணம், புத்தி ஆகியவையும் கல்வியாகப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம், பொருள் ஆகியவற்றைப் பரவலாக விடாமல் தடுத்த சாதியச் சமூகத்தில் கல்வியின் மூலம் தன் சுகபோக வாழ்வைத் தக்கவைத்துக் கொண்ட குருக்கள், சொற்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். இத்தகு சூழலில் தான் சாதியக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி சொற்களுக்குள் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்தப் புரிதலோடு சொற்களை அணுகும் போது சில உண்மைகள் வெளிப்படலாம்.

‘கிழக்கு’ என்ற சொல் சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவே தமிழகத்தின் நிலம் என்பதால் மேற்கு மேடானதாகவும் கிழக்கு கீழானதாகவும் இருக்கிறது. மேட்டில் (மேற்கு (அ) மலை) பெய்கின்ற மழைநீர் கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது என்ற கற்பிதம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. ‘கிழக்கு’ என்ற சொல் சாதியப் புரிதலில் ‘தாழ்ந்த’ என்னும் பொருண்மையில் உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது.

Continue Reading →

ஆய்வு: “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலின் தேடல் – ஓர் ஆய்வு

ரெ.கார்த்திகேசுவின் 'தேடியிருக்கும் தருணங்கள்'- பெ.பழனிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 7. -முன்னுரை
“அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது ஔவையாரின் வாக்கு. அதன் படி பெறுதற்கரிய பிறப்பு எடுத்த மானிடர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நோக்கம் உண்டு. அந்நோக்கத்தை அடைய ஒவ்வொருநிலையிலும் தேடல் என்பது மிக இன்றியமையாதது. ஆம், இப்படித்தான் எழுத்தாளர் பெருந்தகை முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்களின் “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலின் முக்கியமான கதை மாந்தரான சூரியமூர்த்தியின் வாழ்க்கையில் ஒவ்வொரு இலக்கினையும் அடைய அவன் மேற்கொண்ட தேடுதல்களையே இக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

நாவலாசிரியர்
மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், மலேசியாவின் வட மாநிலமான கெடாவில் பீடோங் என்னும் சிற்றூரில் 1940-இல் பிறந்தார். அங்கே சைனீஸ் தோட்ட தமிழ்ப் பள்ளி, ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் சுங்கைப் பட்டாணி சரஸ்வதி பள்ளியிலும் தொடக்கக்கல்வியைக் கற்றார். தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியை பள்ளியில் முடித்தவர், பின்னர் மலாயப் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு B.A ஆனர்ஸ் பட்டமும், நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் ஆண்டு M.Sc., in journalism மற்றும் 1986 இல் மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் ஆனர்ஸ் பட்டமும் பெற்றார். ஆனர்ஸ் பட்டம் பெற்ற இவர் நல்ல திறனாய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 1991 ஆம் ஆண்டு Ph.D in Communication டாக்டர் பட்டமும் பெற்றார். மலேசிய வானொலியில் முதல் தமிழ் அறிவிப்பாளராக 1961 முதல் 1976 வரை பணிபுரிந்தார். மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் வானொலி, தொலைக்காட்சித் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

1952-இல் தமிழ் முரசு “மாணவர் மணிமன்ற மலரில்” எழுதத் தொடங்கி புதிய தொடக்கம், இன்னொரு தடவை, ஊசி இலை மரம், மனசுக்குள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், தேடியிருக்கும் தருணங்கள், அந்திமகாலம் , வானத்து வேலிகள், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் போன்ற நாவல்களையும், விமர்சனக் கட்டுரை நூல்கள், மலாயில் ஆராய்ச்சி நூல் மட்டுமின்றி மலாய் மொழியில் ஆறு சிறுவர் நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகளுக்கு “தனி நாயக அடிகள் விருது” “டான் ஸ்ரீ மாணிக்கவாசகர் பரிசு” “தெய்வசிகாமணி பரிசு” என விருதுகளும், தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.

Continue Reading →

ஆய்வு: உயிரின பரிணாம வளர்ச்சி சிந்தனையும், பண்டையத் தமிழரின் கருத்தமைவும்.

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இயற்கை, இயற்கைச் சார்ந்தப் பொருட்களின் இயக்கமே பொதுவிதியாம்.  இவ்வியற்கை விதியில்  மனித குலத்தின் தோற்றமும் அடங்கும்.  புவியில்  ஓரு  செல் உயிரிகள் தோற்றம் பெற்று, பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து,  அவை நீர் வாழ்வன, நீர், நில வாழ்வன, நிலவாழ்வன எனப் பன்முகப்பட்டு, மெல்லுடலி, குடலுடலி, முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை, குட்டி ஈனுபவை, முது நாண் அற்றவை, முது நாண் உடையவை எனப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.    இவற்றுள் ‘மனிதனின் பரிணாம வளர்ச்சி’ வியக்கத்தக்கது. 

மனிதக்குரங்கு மனிதனாக மாறிய வளர்ச்சி நிலையை, டார்வின் கோட்பாடும், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கருத்தியலும் தெளிவுற எடுத்துரைத்தன.  டார்வினின் ‘தக்கவை பிழைத்தல்’ கோட்பாடானது, இவ்வியற்கை உலகில் ‘தம்மைத் திருத்திக் கொண்டு வாழத் தகுதியற்ற உயிரினங்கள் மடிந்து போகும்’ என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டோடு விளக்கியது.  இக்கருத்தியல் மதக்கருத்துக்களுக்கு நேர்மாறாக,பல்வேறு புதிய சிந்தனைகளையும், உண்மைகளையும் உலகிற்கு எடுத்துரைத்தது.

பண்டைக் காலத்தில் மனிதன் வளர்ச்சியடைந்தப் பின்னர், அதாவது நாடோடி வாழ்க்கைக்குப் பின்னர் நிலையான குடியிருப்பை அமைத்து,உற்பத்திக் கருவிகளை உருவாக்கிய காலக் கட்டத்திலும், அதற்குப் பின்னரும் இயற்கை பொருட்களையும், அதன் மாறுபாடுகளையும் தொடர்ச்சியாக ஆராய்ந்துள்ளான்.  மதவாதிகள் ஒருபுறமும், இயற்கையியலாளர்கள் மறுபுறமுமாய் இவ்வுலகைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

Continue Reading →

ஆய்வு: தாயுமானவர் பாடல்களில் தன்னையறிதல்.

- வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -முன்னுரை
தன்னை அறிந்து கொள்வதில் ஒரு முறையான பயிற்சியும், முயற்சியும் ஒருபுறம் இருக்க இன்னும் பல்வேறு வழிகளில் பலர் தன்னை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் தேடல் என்பது புறத்தேடல் அதாவது வெளிவுலகத் தேடல் அல்ல அகத்தேடல், அதாவது மனதளவில் தேடுதல் ஆகும். இந்த அகத்தளவு தேடலில் அவர்கள் தேடியவை கிடைத்ததன் பயன்பாட்டை அவர்கள் பாடலின் மூலம் வெளி உலக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொறுத்திப்பார்த்து பயன்பெறும் வண்ணம் அமைத்திருப்பார், அந்த வகையில் தாயுமானவர் தன் அகத்தேடலின் பயனை அவர் பாடலின் மூலம் எடுத்துக் கூறுவதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தன்னையறிதல்
ஆன்மீக உலகத்தில் நான் யார்? என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒன்றாகும். எத்தனையோ அணுகு முறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் இது சம்மந்தமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியிருந்தாலும் அடிப்படை உண்மை ஒன்றுதான். நாம் அறிந்துகொள்ளும் செய்திகளைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமானால்,அதனை சரியான கோணத்தில் விவாதித்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் என்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. நமது சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. உலகமே ஒரு யுத்தகளமாக அமைந்துள்ளது, போராட்டமும் வன்முறையும் தலை விரித்து ஆடுகிறது. எல்லாவற்றிற்கும் மூல காரணம் இந்த நான் என்னும் உணர்வுதான். ‘நான் சொல்வதுதான் சரி, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்று இந்த நான் எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சினையாக உள்ளது. இந்த நான் என்னும் உணர்வுதான் நமது செயல்களை ஊக்குவிக்கும் முக்கியமான அம்சமாகவும் உள்ளது. நமது செயல்களை நிர்ணயிக்கும் அம்சமாகவும் உள்ளது.

“தன்னைஅறி யாதுசகத் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே”.
(தாயு. பு.க.பா.எ.289)

என்ற பாடலில் தன்னையறிந்தவருக்கே சுகம் கிடைக்கும் என்கிறார்.

Continue Reading →

ஆய்வு: நல்வழி உணர்த்தும் அறநெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான நல்வழியில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33)

அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10)என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

Continue Reading →

ஆய்வு: தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் – வாழ்வும் வரலாறும்

கவிஞர் வாணிதாசன்

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, அதன் நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலைக்கு வந்தடைகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்றழைக்கப்படும் கவிஞரேறு வாணிதாசன் என்னும் தனிமனிதன் தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கும் வகையில் பல்வேறு படைப்புகளை தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். அவற்றில், தான் வாழ்ந்த காலத்தின் மீது கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளையும், எதிர்கால சமூக மாற்றங்களையும் விரும்பி இலட்சிய நோக்கோடு பல உன்னத கருத்தாழமிக்க கவிதைகளை இனிமையும் எளிமையும் அமைந்த செந்தமிழ் நடையில் அழகுற படைத்தளித்துள்ளார். அவரது படைப்பின் வழி தமிழ்ச்சமூகமும் தமிழிலக்கியமும் அடைந்த பெரும் பயனையும், இன்னபிற சமூகசிந்தனைகளையும் வெளிக்கொணர்ந்து தமிழிலக்கியத்திற்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற எண்ணத்தில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் – வாழ்வும் பணியும்
கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் ‘அரங்கசாமி என்ற எத்திராசலு’ இவர்தம் புனைப்பெயர் ‘ரமி’ என்பதாகும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். இவர்தம் பெற்றோர் அரங்க திருக்காமு, துளசியம்மாள். இவரின் காலம் 22.7.1915 முதல் 7.8.1974. இவர், கவிஞரேறு, தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். கவிஞர் வாணிதாசன் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்த தொகுப்பில் இயற்கையைப் பற்றிய கருத்துக்கள் இவரின் பாடல்களில் மிகுதியாக காணப்பட்டதால் இவரை தமிழகத்தின் வேர்ட்;ஸ்வொர்த் என்று பாராட்டினார்கள். இந்த கவிதை தொகுப்பு பெரும்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மக்களிடம் பகுத்தறிவைத் தூண்டுவதே தன் பாடல்களின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பது இவருடைய மற்றுமொரு சிறப்பாகும்.

Continue Reading →

ஆய்வு: : நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்

பெண் கவிஞர்கள்முன்னுரை
பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்:

ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை மதம், சாதி, இன கலாச்சார பண்பாடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான நிலையைத் தோற்றுவிக்கின்றன. உடல், உளம், உணர்வு நிலை, மொழி வயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு என ஒரு பெண்ணின் அத்தனை கூறுகளையும் இயக்கும் சூத்திரதாயாக ஆண்மையக் கோட்பாடே செயற்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம் என்னும் உணர்வின்றிப் பெண்கள் அதிகார மையத்துக்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நசுங்கி வாழ்ந்தனர்.

ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகவும், பெண் கல்வியின் தாக்கத்திலும் சமூகப் பொருளாதார, மத, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் பெண் மீதான மரபுசார்ந்த சமூகக் கட்டுமானம் தகா;க்கப்பட்டுப் பெண், பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபை 1975ம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பதினொரு ஆண்டுகளை அனைத்துலக மகளிர் ஆண்டாகக் கருதலாம்.

ஈழத்துப் பெண்ணிய எழுச்சி
ஈழத்துப் பெண் கவிதைகள் 1980 களுக்குப்பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணா;வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சார்நிலையின் மீள் உருவாக்கம் போன்றவற்றைக் கூறலாம். இக்காலக்கட்டத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், ‘நமது குரல்’ (ஜேர்மனி), ‘கண்’ (பிரான்ஸ்), ‘சக்தி’ (நார்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும், பெண்ணியக் கருத்துக்களை உள்வாங்கி வெளிவந்ததுடன் ஆளுமைமிக்க பெண்ணிலக்கியப் படைப்பாளிகளையும் ஈழத்திலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தன.

Continue Reading →

ஆய்வு: சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா?

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -தாய்மைப் பண்போடு உயிர்கள் தோற்றுவாய்க்குரிய முதன்மை காரணியாய் உடையோர் பெண்களே ஆவர்.  அத்தகு பெண்கள் பல்வேறு வியப்பிற்குரிய செயல்களை இன்று வரையும் செய்து கொண்டே வருவது நாமறிந்ததே.  எனில் அவ்வியப்பான அவர்களின் வாழ்வு மிகுந்த வேதனைக்குரியதாகவும் இருந்ததை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  சங்க கால சமூகம் வீரயுக சமூகம். சங்க காலப் பெண்கள் மறக்குடி மகளிராகவும் தன்மானம், ஒழுக்க நிலையோடு வாழ்ந்ததையும் மறுக்கவியலாது.  எனில் அன்றைய சமூகத்தில் பெண்கள் பல்வேறு வகை சமூகச் சிக்கலுக்குள்ளும் ஆளாகியதையும் மறுக்க முடியாது.

வியப்பு நிலை
சங்க காலத்தில் பெண்கள் வாழ்வில் காதல் செய்து கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையும், உரிமையும் இருந்தது.  சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இலக்கிய பாடலைப் பாடும் அளவிற்கு பெண்கள் வாழ்வு இருந்துள்ளது.  ஒளவை போன்ற பெண்பாற் புலவர் அதியமானின் அவைக்கள புலவராகவும், முதன்மை அமைச்சராகவும், அறிவுரை சொல்வோராகவும், ‘தூது’ செல்லுதற்குரிய உரிமை பெற்றவராகவும் வாழ்ந்துள்ளதை வழி அறியலாம். ‘கற்பு ஒழுக்கம்’   என்று விதிக்கப்பட்ட வரையறைக்குள் ஓர் ஆடவனையே எண்ணி ஒழுக்கமாகவும், குடும்பத்தை பேணி பாதுகாத்தும் இல்லறத்தை நடத்திய பெண்ணின் எண்ணமும், சிந்தனையும் மிகுந்த சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது.

பெண்களின் வீரம்
சங்க காலத்து மறக்குடிப் பெண்கள் நிலை மிகவும் வியப்பிற்குரியதாக இருந்ததற்கு சான்றுகள் சில காணப்படுகின்றன.  புறநானூற்று பாடலொன்றில், “தன்னுடைய மகனை போருக்கு அனுப்புகிறாள் தாய்.  போர்க்களத்தில் தன் மகன் இறந்து விடுகிறான்.  அப்போது அவ்வூரில் உள்ள சிலர், உனது மகன் புறப்புண்பட்டு இறந்து போனான் என்று கூறுகின்றனர்.  அப்போது கோபம் கொண்ட தாய், ‘என் மகன் புறப்புண்பட்டு இறந்து கிடந்தாள் அவனுக்கு பால் தந்த என் மார்பை அறுத்துக் கொள்கிறேன்’ என கையில் வாளினை எடுத்துக் கொண்டு, போர்க்களம் நோக்கிச் செல்கிறாள்.  போர்க்களத்தில் பல உடல்கள் வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கிறது.  அங்கே தன் மகனின் உடலும் வெட்டப்பட்டு சிதறுண்டு கிடக்கிறது.  அவன் உடலை ஒன்று சேர்த்து பார்க்கிறாள்.  அவள் மகனோ மார்பில் புண்பட்டு இறந்தான் என்பதை அறிந்து மகிழ்கின்றாள். இக்காட்சியை, சங்கப் புலவர் சிறப்புற விவரிக்கின்றார்.  அத்தகு சிறப்பு மிகுந்த வீரம் கொண்ட பெண்கள் பண்டைய காலத்தில் இருந்தனர்.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியம் காட்டும் பண்டையக் காலப் போர் முறைகள் (புறத்திணையியலும் சமுதாயமும்)

ஆய்வுக் கட்டுரைகள்.- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -நான்கு கால்களையுடைய  விலங்கு நிலையிலிருந்து இரண்டு கால்களாய் மாறிய, உற்பத்திக் கருவிகளை உருவாக்கத் தொடங்கிய மனித சமுதாயம் வேரூன்றிய காலந்தொட்டு, சிறு சிறு குழுக்களுக்கான போராட்டம் தொடங்கி, இன்றைய அறிவியல் வளர்ச்சிப் பெற்ற யுகத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அதிகாரத்திலுள்ள நாடுகள் ஏனைய நாடுகளின் மீது போர் தொடுப்பது வரை, பல்வேறு விதமான மாற்றங்களையும், அழிவுகளையும் இப்புவியுலகில் வாழும் மனித இனம் சந்தித்துக் கொண்டு வந்திருப்பதே வரலாறு.

புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் இன குழுக்களிடையே ஓயாது  உணவிற்கான போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்துள்ளது. ஒட்டுறவு அடிப்படையிலான உற்பத்தி உறவுகள் பெருகி, தனியார் உடைமை முறை தோன்றி வர்க்கங்களின் தோற்றுவாய்களும் உருவாயின. அவை அடிமையுடைமை அமைப்பை நிறுவி, அரசுத் தோற்றம் உருவாக வழிகோலியது.

வர்க்கச் சமுதாயத்திற்குப் பின்னர் துவக்கத்தில் போர் முறையானது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் மற்றும் இரு வேறு நிலப்பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் போர் புரிந்து வந்தனர். நவீன வளர்ச்சியெனும் யுகமான முதலாம் உலகப் போர் (கி.பி. 1911 – 1915 வரை) வரை, போரில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையும் (சுமார் 85% பேர்) போர்ப்படைப் பிரிவினரே. ஆனால், இரண்டாம் உலகப் போரில்  (கி.பி. 1939 – 1945) போர்ப் படைப் பிரிவினரின் அளவிற்கு ஒப்ப மக்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று ஆயுத எந்திரங்களோடு போர்கள் நிகழ்ந்து வருகிறது.

தாய்வழிச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆணினம் கால்நடை வளர்ப்பினையும், சிறு பயிர் சாகுபடி முறையைக் கற்றுக் கொண்டதும் உழைப்பில் பிரிவினை ஏற்பட்டு தந்தைவழிச் சமுதாயமாகி குடும்பம் என்றொரு கட்டமைப்பு முழுமையாக வரையறுக்கப்பட்டது. ஓர் இனக் குழுவின் மூதாதையரோ அல்லது சிறந்த வீரனோ அல்லது தலைவனோ? மக்களை அடிமைப்படுத்தியவனே நாளடைவில் குறுநில மன்னனாகினான். பல குறுநில மன்னர்களை எதிர் கொண்டு வெற்றிப் பெற்றவன் சூவந்தனாகினான். இந்நிலை மாற்றமே மன்னர்கள், வேந்தர்கள், கட்டமைப்புக் கொண்ட நிலவுடைமைச் சமுதாயமாக மாறியது என கருதலாம்.

Continue Reading →

ஆய்வு: மூதுரை உணர்த்தும் அறநெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல், அசதிக்கோவை, ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான மூதுரையில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்

அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை. சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33) அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10) என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

Continue Reading →