பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள்

முன்னுரை

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-‘இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்’ என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகில் சக்திதாசன் காளிதாசன் ஷெல்லிதாசன் சாவித்திரி என்ற நிருபநேயர் ஒரு உத்தம தேசாபிமானி நித்தியதீரர் போன்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் பாரதியார் மட்டும் என்றால் மிகையல்ல தான் வாழ்ந்த காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் பாரதி எனவே தான்

‘எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

என்று தனது கடைசிப் பாடலாக இவற்றை எழுதியுள்ளான் ஆம் இது பாரதியின் இறுதிப்பாடல் ‘இப்போது 1921 ஆம் ஆண்டு பாரதி தனது இறுதிக் காலத்தில் ஒரு கவிதை எழுதுகிறான் அது ஒரு வாழ்த்துக் கவிதை வாழ்த்து வழக்கம் போல நாட்டிற்காக? அல்லது பாரத நாட்டு மக்களுக்கா? என்று கேட்டால் வாழ்த்து பாரத சமுதாயத்திற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பாரத சமுதாய வாழ்த்தே பாரதியின் கடைசிப்பபடல் என பாரதியின் நண்பர் ஸ்ரீ சக்கரை செட்டியர் கூறுகிறார்.’ என்று முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்கிறார். இவ்வாறாக எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்த பாரதியார் தமது ஆத்திச்சூடியில் மக்கள் வாழ்ககைக்குத் தேவையான பல்வேறான சிந்தனைகளைக் கூறியுள்ளார். இக்கட்டுரை புதிய ஆத்திச்சூடியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதாக அமைகிறது.

Continue Reading →

ஆய்வு: இரட்டைக்காப்பியங்களில் பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பு

ஆய்வுக்கட்டுரை!முன்னுரை
 பண்டைக் காலத்தில் தமிழில் நூல்கள் பல எழுந்தன. அந்நூல்களில் காப்பியமும் ஒன்று. பழங் காப்பியமாகக் கருதப்படுவது சிலப்பதிகாரமாகும். இந்நூலினைத் தொடர்ந்து எழுந்தது மணிமேகலை. சிலப்பதிக்காரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையிலும் காணப்படுவதால் இவை ‘இரட்டைக்காப்பியம’; என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரட்டைக்காப்பியங்களில் படைக்கப்பட்டுள்ள பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

துணைமை மாந்தர்கள் – விளக்கம்
 காப்பியம் என்பது தனியொருவரின் கதையினைக் கூறி முடிப்பதல்ல. அது ஒரு சமுதாயத்தையே காட்டக்கூடியது. பலர்கூடி வாழும் கூட்டுறவு வாழ்வாகிய உலக வாழ்வில் சமுதாயம் என்பது பல்வேறுபட்ட மக்கள் கூடிவாழும் அமைப்பாகக் காணப்படுகிறது.

 உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட தலைவன் அல்லது தலைவியைச் சுற்றி அக்குறிக்கோளை அடையப் பல நிலைகளில் துணை செய்வார்கள் துணை மாந்தர்கள்.

 இலக்கியத்தில் தலைவன் தலைவி ஆகிய இருவரும் தலைமை மாந்தராக இருப்பதற்கும் அவர்களின் சிறப்பை விளக்கிக் காட்டுவதற்கும் காப்பிய நிகழ்வுகள் படைக்கப்படுகின்றன. துணைமை மாந்தர்களை காப்பியத்தில் அமைத்து அவற்றின் இயல்புக்கேற்றவாறு ஒழுகிப் படிப்பவர் மனதைக் கவர வேண்டும். இம்மாந்தர்கள் காப்பியத்தில் கதை நிகழ்வோடு தொடர்புள்ளவர்களாகவும் தலைமை மாந்தரை மேம்படுத்துபவர்களாகவும்ää பண்பினை வெளிப்படுத்துபவர்களாகவும் அமைத்துக் காட்டப்படுகின்றன. இரட்டைக்காப்பியத்தில் பெண் துணைமை மாந்தர்களை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading →

“தறிநாடா” நாவலில் பாத்திரப்படைப்பு

முன்னுரை:
ஆய்வுக்கட்டுரை!     இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வுகளையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.  அவ்வகையில் “தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.

பொன்னு:
     தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.

Continue Reading →

ஆய்வு: சிலப்பதிகாரத்தில் அறம் – மீள் பார்வை

முன்னுரை
 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்’ என்னும் தத்துவம் சிலம்பில் உள்ள மூன்று உண்மைகளில் ஒன்று. அதாவது அரசியல் கற்பு ஊழ் கூற்று என்கிற மூன்று பொருள்களை மையமாகக் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரம். அவற்றுள் ஊழ் கற்பு ஆகிய சொற்கள் உள்ளே வந்துள்ளன. ஆனால் அரசியல் என்னும் சொல் பாயிரத்தில் மட்டும்தான் வந்துள்ளன. ஆனால் அரசு என்பதன் செயல்பாடுகள் குறித்து நூலில் பல இடங்களில் செயதி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘கொலைக்களக் காதை வழக்குரை காதை காட்சிக் காதை கால்கோள் காதை நீர்படைக் காதை நடுகற் காதை முதலிய காதைகள் அரசனை மையமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்நூலில் அரசியல் தொடர்பு கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. எனவே சிலப்பதிகாரத்தில் ‘அரசாடசி’ ‘அறம்’ என்னும் பொருண்மையில் இக்கட்டுரை அமைகிறது.

மன்னர்களும் அறமும்
 பொதுவாக அனைத்து அறநூல்களும் அரசன் செய்யவேண்டிய செயல்களை அறமாகக் கூறிச் செல்கின்றன. அந்தவகையில் சுக்கிரநீதி அரசன் நீதியோடு இருக்கவேண்டும் என்பதை கூறுகிறது.

‘அரசவைக்கு எப்பொழுதும் நன்மக்களைக் காத்தலும் கொடியவர்களை யொறுத்தலம் சிறந்த அறங்களாகும். இவ்விரண்டும் நீதியுணர்வின்றி உண்டாகா’. மேலும் நீதியுடைய அரசனை யாவரும் போற்றுவர்ளூ அல்லாதவனை யாரும் போற்றார். ‘எவன்மாட்டு நீதியும் பலமும் உள்ளனவோ அவன்பால் திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள். அரசன் தன் நாட்டிலுள்ளாரனைவரும் ஏவப்படாமலே நல்லன புரியும்படி நீதியைத் தன் நலங்குறித்து மேற்கொள்ளற்பாலன்’ என்று மன்னன் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்கிறது. அது போலவே நீதி தவறிய மன்னன் எவ்வாறான நிலையை அடைவான் என்பதையும் சுக்கிரநீதி விளக்கியுள்ளது.

Continue Reading →

ஆய்வு: திராவிட மொழி வளர்ச்சியில் ஓரெழுத்தொரு மொழி

- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – திராவிட மொழிகள் எல்லாம் ஒரு மூலமொழியிலிருந்து வளர்ந்தது அவை இன்னதென்று தெரியவில்லை. இருப்பினும் அம்மொழிகளனைத்தும்  மொழிக்குடும்பமாக இருந்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து கால மாற்றம், இடத்திற்கேற்ப பிரியத் தொடங்கியது. அவ்வாறாக பிரிந்த மொழிகள் தான் மொழிகளின் தொகுதியாக உள்ளது. அப்படிப்பட்ட தொகுதிக்குள் பல்வேறு மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியானது தனிப் பெருந்தன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக தமிழ்மொழி திராவிட மொழிகளின் ஆணிவேராக உள்ளது என்பதே சரியாகும். அவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஓரெழுத்தொருமொழியின் பங்கு பெரிதும் உள்ளது.

திராவிட மொழியும் தமிழும்

 திராவிட மொழி பல்வேறு குழுக்களாக அமைந்த அமைப்பாகும். அதில் பல்வேறு மொழிகள் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறமைந்த மொழிகளை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாகப் பகுத்துக் கூறுவர். இவற்றில் தென்திராவிட மொழியின் வரிசையில் முதன்மையாகவும், முக்கிய இடம் உள்ளதாகவும் குறிப்பிடுவது தமிழ்மொழியே ஆகும்.

Continue Reading →

ஆய்வு: திணைக்கோட்பாடு நோக்கில் புறத்திணையியல் புறநானூறு

முன்னுரை :

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-தொல்காப்பியம் தமிழ் மொழிக்கும், கவிதைக்குமான இலக்கண நூல், இதில் பொருளதிகாரம் திணைக்கு முக்கியம் கொடுத்து எழுதப்பட்டுள்ள பகுதி. திணைகள் மொத்தம் ஐந்து அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதனொடு கைக்கிளை, பெருந்திணை சேர்ந்து 7 என்று கூறப்படுகின்றன. இவற்றில் அகத்திணைக்குரிய திணைகள் 5 ஆகும். அவற்றில்

  மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
  சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்
 (தொல். 1000)

என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறியுள்ளது. ஆகமொத்தத்தில் தமிழர்களின் முதன்மையான திணை 5 மட்டுமே. இந்த திணையை, நிலப்பகுதிகள் என்பது பொருத்தமாக அமையும். அந்த வகையில் தமிழர்கள் ஐவகையான நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அகமாகவும் புறமாகவும் பாகுபடுத்தியுள்ளனர் முன்னோர்கள். அந்த வகையில் இக்கட்டுரை புறத்திணையியல் கொண்டு புறநானூற்றுப் பாடல்களை திணை இலக்கணத்தில் ஆராய்கிறது.

Continue Reading →

ஆய்வு: காப்பியங்களில் வினைக் கோட்பாடு

ஆய்வு: காப்பியங்களில் வினைக் கோட்பாடுசமூக வரலாற்றினைக் காட்டும் பெட்டகமாகவும் மானிடசமூகத்தினை உயிரோட்டமாகக் காட்டும் அரிய சான்றாகவும் காப்பியங்கள் திகழ்கின்றன. எனவே தான், இக்காப்பியங்களை  இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்றைய சமூகத்தில் பல்வகையான நம்பிக்கைகள் நிலவியிருந்தமையை காப்பியங்களின் வழியாக அறியமுடிகிறது. அவற்றில், மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. இம்மறுபிறப்பிற்கு அடிநாதமாக விளங்குவது  வினையாகும். எனவே இவ்வினையில் காணப்படும் இன்ப, துன்பங்கள் குறித்து ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.

வினைக்கோட்பாடு – விளக்கம்

வினை என்பது ஒருசெயல், தொழில் என்ற பொருளைக் குறிக்கின்றது. இதனை நல்வினைத் தீவினை என்று இருவகைப்படுத்தலாம். வினைப்பயன் என்பதற்குச் செயலின் விளைவு, தொழிலின் பயன் என்று பொருள் கொள்ளலாம். இதனையும் நல்வினைப்பயன், தீவினைப்பயன் அல்லது நற்பயன், தீப்பயன் என்று இருவகைப்படுத்தலாம். ஒருவன் செய்யும் செயல் நல்ல செயலாக இருந்தால் அதன் பயனாய் நன்மையும், தீய செயலாக இருந்தால் அதன் பயனாய் தீமையும் விளையும் இந்த வினை விளையும் காலம் அதாவது, பயனளிக்கும் காலம் மனிதனுடைய நிகழ்காலத்திலோ, மறுபிறவியிலோ நிகழும். இந்தக் கருத்தை இந்தியச்சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நிகழ்வே கர்மா என்று வடமொழியாளர்களால் வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினை என்று குறிப்பிடுகின்றன. சமயங்கள் வினைக்கோட்பாடு என்றும் விதிக்கோட்பாடு என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றினை, இந்து சமயத்தில் விதி, சமண மதத்தில் ஊழ், ஆசிவகத்தில் நியதி எல்லாம் தமிழ் இலக்கிய இலக்கண ஒழுக்க நூல்களில் பிவாகித்திருந்த கர்மம் என்ற அடிப்படைக் கருத்துடன் நெருங்கியத் தொடர்புடையனவாக இருந்தன என்று நா.வானமாமலை கூறுகிறார். எனவே கர்மா என்பது வினையும் அதன் செயல்பாட்டு முறையும் சேர்ந்து நிகழ்வு என்று கூறலாம். இந்த நிகழ்வு மனித நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு கோட்பாடாகவே எண்ணப்படுகிறது.

Continue Reading →

ஆய்வு: சாரு நிவேதிதாவின் மொழிநடை

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-மொழி என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வரும். மாற்றத்தைப் படைப்பாளிகள் தமது படைப்பில் பதிந்து படைப்பாக்குவர். தமிழ் மொழி பற்றியச் சிந்தனை தொல்காப்பியர் காலம் முதல் தொடங்கி வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழி மூவழக்கு நிலையாக இருந்தது.

அதாவது செய்யுள் வழக்கு, உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு என்ற நிலையில் மொழி விளங்கியது. இந்த நிலை ஐரோப்பியர் காலத்திற்குப் பின் மாறிவிட்டது. காரணம் பா வகையும் (செய்யுள் வழக்கு) உரைநடையும் இலக்கியப் படைப்பிற்குரிய இருவகைகளாக மாறின. பொதுப் பேச்சு வழக்கும் தமக்குரிய எழுதும் சூழல்களைப் பெருக்கிக் கொண்டது. காலப்போக்கில் உயர் வழக்கு என்று ஒன்றும் பேச்சு வழக்கு என்று ஒன்றும் உரைநடையில் உருவாகி தனித்தனிச் சூழல்களைத் தத்தமது பயன்பாட்டிற்கு அமைத்துக் கொண்டன. இதன் பயனாய் தமிழில் இரட்டை வழக்கு நிலை உருவாகியது என்று ஆரோக்கியநாதன் கூறுகிறார்.

Continue Reading →

ஆய்வு: சங்க மகளிர்தம் பாலியல் வெளிப்பாட்டு உணர்வில் வண்ணக்குறியீடு

முன்னுரை

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்சங்ககால மக்களின் வாழ்க்கை முழுவதும் பண்பாட்டு மயமாக்கப்பட்டச் சூழல். அதனால் அவர்கள் பண்பாடு கருதியே குறிப்பால் நிறங்கள் வழி தங்களது பாலியல் செய்திகளை உணர்த்தி வந்தனர். சங்க இலக்கியத்தில் பாலியல் புனைவுகளை வெளிப்படையாகச் சுட்டும் மரபு இல்லை. அவற்றை நிறங்கள் வழிக் கூற முற்பட்டுள்ளனர். சமூகத்தில் படைக்கப்பட்ட நிறம் மொழியமைப்பில் ஓர் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறங்கள் சமூகக் கட்டமைப்பில் குறியீடாகவும், சமுதாயத்தினரின் எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வண்ணக்குறியீட்டின் வழியாக சங்க மகளிர் தம் பாலியல் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.

நிறக்குறியீடு

மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை நாம் இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி, மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழியினை நோக்கும்பொழுது அதில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்றாக நிறத்தைக் (வண்ணம்) குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறங்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் பொழுது அதற்குரிய தன்மை அல்லது பொருண்மையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading →

ஆய்வு: தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்தொல்காப்பியம் இலக்கியநிலையிலும் வழக்குநிலையினையும் எடுத்து இயம்பும் ஒப்பற்ற இலக்கணமாக விளங்குகின்றது. இத்தகைய இலக்கணத்தினை மக்களிடம் பரவவிட்டவர்கள் உரையாசிரியர்கள் எனலாம். இதற்கு அவர்கள் மேற்கொண்ட உரைமுறைகளும் ஒன்றாகும். அவ்வாறு உரைகூறும் பொழுது, உரையாசிரியர்கள் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவ்வாறான விளக்கத்தின் மூலம் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளியினை உரையாசிரியர்கள் வளர்த்துள்ளனர். இத்தகையப் பணியில் குறிப்பிடத்தகுந்தவர் தெய்வச்சிலையார். இவரின் உரையினைத் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளார். எனவே, இவர் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களில் தொடரியல் சிந்தனையைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

எச்சங்கள்

எஞ்சி நிற்பன எல்லாம் எச்சம் எனலாம். வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம். வினையியலில் கூறப்படும் எச்சங்கள் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் இருவகைப்படும். வினையைக்கொண்டு முடிவன எல்லாம் வினையெச்சம் இல்லை. குறிப்பிட்ட இலக்க அமைப்பிற்கு உட்பட்டுவருவன மட்டும் வினையெச்சம் எனப்படும்.

Continue Reading →