கவிதை: நல்லிணக்கம் சமாதானம் நாட்டிலோங்கச் செய்திடுவோம் !

வெறி   கொண்டு    அலைகின்ற 
நெறி  பிறழ்ந்த  கூட்டமதால்
கறை   படியும்  காரியங்கள்
கண்  முன்னே  நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி  கலங்கிப்   போகின்றார்   !

மதம்  என்னும்  பெயராலே
மதம் ஏற்றி  நிற்கின்றார்
சினம்  என்னும் பேயதனை
சிந்தை கொள  வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி  உற்று  திரிகின்றார்  !

Continue Reading →

கவிதை : என் மகன்! (அன்னையர் தினக் கவிதை)

(ஒரு  தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)

ஶ்ரீராம் விக்னேஷ்

1.
கட்டிய  கணவர்தம்,  
மட்டிலா  அன்பினால்,
கட்டிப் பொன் :  கனியைப்பெற்  றேன்! – வாரிக்
கட்டியே  முத்தம்இட்  டேன்! – சிறு
தொட்டிலில்  போட்டவன்,
தூங்கிடும்  போதிலே,
தூய்மையாம்  தெய்வம்கண்  டேன்! – ஒரு
தாய்மையின்  உய்வில்நின்   றேன்!

2.

எட்டியே  பிடித்துமார்,
பற்றியே  முகத்தினால்,
முட்டியே  பருகக்கண்   டேன்! – முகம்
மோதியே  மகிழக்கண்   டேன்! –  தேன்
சொட்டென   வாயினால்,
விட்டிடும்   வீணிரால்,
சட்டையும்   நனையக்கண்   டேன்! – மனம்
சாலவே   குளிரக்கண்   டேன்!

Continue Reading →

அன்னையர் தினக் கவிதை: குடியிருந்த கோவில் !

கருவறையில் குடியிருத்தி
குருதிதனைப் பாலாக்கி
பெற்றெடுக்கும் காலம்வரை
தன்விருப்பம் பாராது
கருவளரக் கருத்துடனே
காத்திருக்கும் திருவடிவம்
உண்டென்றால் உலகினிலே
உண்மையிலே தாயன்றோ  !

குடியிருந்த  கோவிலதை
கூடவே  வைத்திருந்தும்
கோடிகொண்டு கோவில்கட்டி
குடமுழுக்கும் செய்கின்றோம்
கருவறையை தாங்கிநிற்கும்
கற்கோயில் நாடுகிறோம்
அருகிருக்கும் கோவிலாம்
அம்மாவை மறக்கலாமா  !

அன்னதானம்  செய்கின்றோம்
அறப்பணிகள் ஆற்றுகிறோம்
ஆத்ம  திருப்தியுடன்
அநேகம்பேர் செய்வதில்லை
தம்பெருமை தம்புகளை
தானதனில் காட்டுகிறார்
தாயவளைத் தாங்கிநிற்க
தானவரும் நினைப்பதில்லை    !

Continue Reading →

முகநூற் கவிதைகள்: முகம்மது றியால் கவிதைகள்!

முகம்மது றியால்

1. கன்னிக் கூறை

வாங்கி வைத்த சந்தனமும்
புதுசு மணக்கும் ஆடைகளும்
வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன

நான்
பெரிய மனிசியாகி
இந்த வீடடிற்குள் இன்னும்
உங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றேன்
உம்மா…

என்னைக் குளிப்பாட்டி
ஆடை உடுத்தி
அழகு பார்க்க
நீங்கள் இனி
வரவே மாட்டீர்களா?

Continue Reading →

கவிதை: எண்ணியெண்ணி அழுகின்றோம் !

இரக்கமின்றி கொலைசெய்ய
எம்மதமும் சொன்னதுண்டா
வணக்கத்தலம் வன்முறைக்கு
வாய்ததென்றும் சொன்னதுண்டா
அரக்ககுணம் மனமிருத்தி
அனைவரையும் அழிக்கும்படி
அகிலமதில் எம்மதமும்
ஆணையிட்டு சொன்னதுண்டா   !

ஈஸ்டர்தின நன்னாளில்
இலங்கையினை அதிரவைத்த
ஈனச்செயல் தனைநினைக்க
இதயமெலாம் நடுங்கிறதே
துதிபாடி துதித்தவர்கள்
துடிதுடித்தார் குருதியிலே
அதையெண்ணி அகிலமுமே
அழுதேங்கி நிற்கிறதே   !

பிராத்தனைக்குச் சென்றவர்கள்
பிணமாகிக் கிடந்தார்கள்
பேயாட்டம் நடந்தேறி
பெருந்துயரே எழுந்ததுவே
இன்னுயிரை ஈந்தளித்த
யேசுபிரான் சன்னதியில்
இரத்தவெறி அரங்கேறி
எடுத்ததுவே பலவுயிரை   !

Continue Reading →

கவிஞர் மழயிசையின் கவிதைகள் இரண்டு!

- கவிஞர் மழயிசை -

1. காற்று கரைந்துவிட
நிலம் சடமாக…..                              
நீர் உறைந்துவிட…         
எத்தனித்து உமிழ்கிறது வானம்.
குளிரும் இரவுகளில்….           
எரியும் மனமுல்லை.                          
எரியும் மனமதனில்…            
விரியும் பகற்கொள்ளை.

Continue Reading →

கவிதை: வாக்களிப்போம் வாருங்கள் !

தேர்தல்தேர்தல் தேர்தலென்று
தெருவெல்லாம் திரிகிறார்
ஆளைஆளை அணைத்துபடி
அன்புமுத்தம் பொழிகிறார்
நாளைவரும் நாளையெண்ணி
நல்லகனவு காண்கிறார்
நல்லதெதுவும் செய்துவிட
நாளுமவர் நினைத்திடார்  !

மாலை மரியாதையெல்லாம்
வாங்கிவிடத் துடிக்கிறார்
மக்கள்வாக்கை பெற்றுவிட
மனதில்திட்டம்  தீட்டுறார்
வேலைபெற்றுத் தருவதாக
போலிவாக்கை விதைக்கிறார்
வாழவெண்ணும் மக்கள்பற்றி
மனதிலெண்ண மறுக்கிறார்  !

ஆட்சிக்கதிரை ஏறிவிட
அவர்மனது துடிக்குது
அல்லல்படும் மனதுபற்றி
அவர்நினைக்க மறுக்கிறார்
அதிகசொத்து பதவியாசை
அவரைசூழ்ந்து நிற்குது
அவரின்காசை அனுபவித்தார்
அவர்க்குத்துதி பாடுறார் !

Continue Reading →

கவிதை: சித்திரைப் பாவையே வருக !

சித்திரைப்புத்தாண்டு!

– சித்திரைப் புத்தாண்டு நாளினையொட்டி அண்மையில் கிடைத்த கவிதை.- பதிவுகள்.காம் –

இன்று
நாங்கள் காலை துயில் எழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்றெடுத்த 
சித்திரைப்பாவையே உந்தன்
மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !

இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !

Continue Reading →

பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்!

பிச்சினிக்காடு இளங்கோ

1. இராவணன்களே….

அடிப்படையில் அனைவரும்
பத்துத்தலையோடுதான்
வடிவமைக்கப்படுகிறோம்

பத்துத்தலையில்
சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள்
தலைமுறைக்குத்தேவைப்பட்டார்கள்

சிலவற்றில் சிரத்தையும்
சிலவற்றைத்தவிர்த்தும்
வாழ்ந்தவர்கள்
தலைவர்களானார்கள்
நமக்குத் தத்துவமானார்கள்
தத்துவம்தந்தார்கள்

தலைமுறைகள்
பேசவேண்டுமானால்
உங்கள் கவனம்
சில
தலைகளில் மட்டுமே

Continue Reading →

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. தேடி அலைந்த பாதியில்  கிடைத்த மீதி

அதிகமாகி விட்டது வயது
பாா்க்காதே அதையெல்லாம்!

உடம்பு இப்படி நடுங்குகிறது
மறைக்க முடியவில்லை
அவளுக்குத் தெரிந்தால்
எனது வீரமெலாம் போச்சு!

பயந்து ஒளிந்து அவளது
அழகு உதட்டைப் பாா்த்தேன்
அனுமதித்தால் ஒரு முத்தம்
எதற்கு கஞ்சத்தனம்
அவளது விருப்பம் வரை!

Continue Reading →