பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

தைதரும் வளமெனுந் தங்கநாள் பொங்கல்
தமிழ்ப்பெருஞ் சந்ததிச் சார்பிடும் பொங்கல்
கையிலே அறுவடைக் களம்தரும் பொங்கல்
காலமெல் லாம்பிணி காத்திடும் பொங்கல்
மைவரை உலகமாய் மாண்பிடும் பொங்கல்
மரபெனுஞ் செந்தமிழ் வார்த்திடும் பொங்கல்
செய்யவார் வெள்ளையர் தேசமும் பொங்கல்
சிறப்பிடும் நன்றியே!  பொங்கலோ பொங்கல்.

வானுயர் தமிழ்மர பென்றுவை யத்துள்
வரையறை செய்துஇன் னுலகெலாம் பொங்கல்
தேனுயிர் தமிழருந் திருவரங் காத்து
தேசமெல் லாமொடும் அரசிடும் பொங்கல்
மானுயிர் வாழ்வெனும் மானமும் தண்ணார்
மணித்தமிழ் கொண்டுமே வாழ்த்திடும் பொங்கல்
ஈனமுஞ் சதியொடும் ஈட்டிகொண் டானாய்
எழியர்போய் வந்ததே பொங்கலோ பொங்கல்

Continue Reading →

உளம் மகிழப் பொங்கிடுவோம் !

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !

Continue Reading →

ஆகாயக் கடல்!

எத் திசையிலும் எப்போதும்
சுழன்றடிக்கலாம் காற்று
அதன் பிடியில்
தன் வேட்கைகளையிழந்த
ஓருருவற்ற வானம்
மேகங்களையசைத்து அசைத்து
மாறிக் கொண்டேயிருக்கிறது

விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்
தொடுவானத்தினெதிரே
ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்

Continue Reading →

புத்தாண்டே நீ வருக !

2017-2018

புத்தாண்டே  நீவருக
புதுத்தெம்பை  நீதருக
எத்திக்கும் நடக்கின்ற
இடர்களைய  நீவருக
சொத்துக்காய் சுகத்துக்காய்
சூழ்ச்சிகளைச் செய்வாரின்
புத்தியினை மாற்றிவிட
புத்தாண்டே நீவருக !

அரசியலில் குழப்பங்கள்
அத்தனையும் அறவேண்டும்
ஆன்மீகம் மக்களது
அகமதனில் அமரவேண்டும்
குறைபேசும் குணமெல்லாம்
குழியதனுள் விழவேண்டும்
குவலயத்தில் அமைதிவர
குதித்துவா புத்தாண்டே !

Continue Reading →

நெடுங்கவிதை: ஈரோடு எனக்குத் திருத்தலம்

பேரோடும் புகழோடும்
பெரும்பணி ஆற்றும்
சீரோடும் சிறப்போடும்
சிந்தனையைத் தூண்டும்
ஈரோடு மக்கள்
சிந்தனைப் பேரபையின்
உலகத்தமிழ்ப் படைப்பரங்கில்
உங்கள்முன் நிற்கிகிறேன்
பிச்சினிக்காடு  நான்
பிறந்தது தமிழ்நாடுதான்
எனினும் எனக்கு
சிங்கப்பூர்
இரண்டாவது தாய்நாடு
தமிழ்நாடு

Continue Reading →

இரா.இலக்குவன் கவிதைகள்: குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்! தாமிரபரணி புராணம்!

கவிதை வாசிப்போமா?

1. குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்!

கு.அழகிரிசாமியின்
குமாரபுரம்
ரயில்வே ஸ்டேசனுக்குக்
காவிய குலுங்கலோடு
வந்து நின்றது
இரயில் வண்டி.

Continue Reading →

கவிதை: தொப்புள் கொடியும் முக்கணாம் கயிறும்.

- தம்பா (நோர்வே) -

“வா மகனே வா
உன் வருகையே
எமக்கு சுக்கிர திசையாகும்.~

“வேண்டாம் பெற்றவரே வேண்டாம்,
ஒன்றுவிட்ட அகவையை
மூலதனமாக்கி மூச்சிரைக்க வைக்காதீர்.”

“கந்து வட்டியும் காணா வட்டியும்
குலைந்து போகுது.
போட்டதை எடுத்ததுமில்லை.
பல்மடங்காகி பெருகியதுமில்லை.
வா மகனே வா”

” உயிர் ஒன்றும் பணமல்ல
முதலீடு செய்வதற்கு,
உணர்வுகள் ஒன்றும் பொருளல்ல
விற்பனைக்கு வைப்பதற்கு,
மகிழ்ச்சி ஒன்றும் கணக்கல்ல
லாப நாட்டம் பார்ப்பதற்கு.”

“ஊருக்கும்  உலகுக்கும்
தனயனின் வளச்சியை
பறைச்சாற்றும் மகிழ்வறிவாயோ?”

“உதயத்தில் உதிர்ந்த
லச்சோபலட்ச கணங்களில்
என்வாழ்வும் என்மகிழ்வும்
அறிந்த கணமேதுமுண்டோ?

Continue Reading →

சிந்தனை கிழிக்கும் பேனா!

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

வந்தனை செய்ய  வேண்டும்
அந்தமின்றியென்னை  எழுத  வைக்கும்
அந்தரங்கமேதும்   இல்லை   பகிரங்கம்.
அந்தரிப்போர்  யாருக்கும்  குரலெழுப்பும்.
இந்தளவு    என்றில்லையெவ்வளவும்   எழுத
சிந்தனை   கிழிக்கும்  பேனா.

உந்துதலீயும் பிறர்  கருத்துகள்.
எந்திர    வில்   போன்றது.
ஐந்தெழுத்துத்   தொடங்கி   ஆதரவு
கொந்தளிக்கும்  பிரச்சனைகள்   அரிய
சந்தக்  கவிகள்  என்று  எத்தனையோ..
சிந்தனை  கிழிக்கும்   பேனா.

Continue Reading →

இருந்து …..இறந்தோம் !

கவிதை வாசிப்போமா?

வெளுத்துப்  பெய்யும்  மழையின்  குரல்
இருட்டில்  என் கனவை  விழுங்கிற்று
அகலும்  அறிகுறியில்லை
போன பொழுதில்  பெய்தபோது
அம்மா அலுப்பின்றி  கிடந்தாள்
அருவமாகிப்  போன  அவளை
பெருமழைதான்  தின்று போட்டது
எங்களுக்கிடையேயிருந்த  காலம்
வலியைத்  துடைக்கத்  தவறியது
சலசலத்துப்  பொங்கிச்  சீரும்  நீர்
வாசலில்  பூதம் போல்  பெருகியது
என்  கண்ணீரையும்  வறுமையையும்  போக்கி
என்  அரவணைப்புக்குள்  இருந்த  உரிமை !
வெள்ளத்தின் பேரலைக்குள் நழுவும்
அவள்  இறுதி  உயிர்மூச்சு
மெல்லிய  அவள்  குரல்
தேக்கு மரக்கதவோரம்  பனித்துளிபோல் 
அடங்கி  முடங்கிற்று

Continue Reading →