ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஐந்து!

1. பழுதடையும் எழுதுகோல்கள்‘

லதா ராமகிருஷ்ணன்

[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்… போவான் போவான் அய்யோன்னு போவான்” -பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……

அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.

‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி யென

’புர்கா’வுக்குப் பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’ என்று
மதிப்புரை யெழுதியும்

நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
எழுத்தில் மனிதநேயத்தையும் பெண்ணியத்தையும்

முன்னிறுத்திக்கொண்டிருக்கும்

படைப்பாளிகளும் உளர்.

அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்? _

மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

– அண்மையில் எனது கண்ணம்மாக் கவிதைகள் ஐந்தினைத் தனித்தனியாக இங்கு பதிவு செய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன். ‘காலவெளி’ நம் இருப்பின் யதார்த்தம். இச்சொற்றொடரைக் காணும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம், வாசிக்கும் போதெல்லாம் நெஞ்சில் களி பொங்குகின்றது; சிந்தனைக்குருவி சிறகடித்துப்பறக்க ஆரம்பித்து விடுகின்றது. காலவெளியற்று இங்கு எதுவுமேயில்லை. காலவெளி பற்றிய என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் இக்கவிதைகள். –


1: காலவெளிச்சித்தனின் மடலொன்று!

ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

Continue Reading →

அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : “நெஞ்சு பொறுக்குதில்லையே”

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே – நம்மை
நெருங்கிடும் துயரங்கள் நீள்வது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அடிமை விலங்கொடித்து ஆர்ப்பரித்தோம்
அடைந்துவிட்டோம் சுதந்திரமெனக் கொக்கரித்தோம் – இன்று
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் கடக்கையில்
அங்கும் இங்குமாய்ச் செய்திகள் படிக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

இறைவன் இருப்பிடத்தைக் கேடயமாக்கி
இளஞ்சிறார் சிதைக்கப்படுவதா சுதந்திரம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கைம்மாறு கருதாது உதவிய காலம்போய்
கையூட்டு இல்லாமல் காரியம் நடப்பதெங்கே
நெஞ்சு பொறுக்குதில்லையே!

Continue Reading →

பா வானதி வேதா. இலங்காதிலகத்தின் கவிதைகள் இரண்டு!

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1. அவுஸ்திரேலியா காட்டுத் தீ..

கஞ்சாச் செடிகளைப பாதுகாக்க பற்றைகளுக்கு
அஞ்சாது   தீயிட்டாராம்   ஐம்பத்தோரகவை   மூதாளன்
பஞ்சபூதத்திலொரு அக்னி பகவான்
ஆச்சு(தோ) பாரென்று நெருப்பு யாகம் நடத்துகிறான்.

உருவம்,  உறக்கமில்லா  அழிப்பே    தீ!
கருவான நெருப்பைப் பற்ற வைத்தவனெங்கே!
பாகாசுரப் பசியில் சாம்பலாக்குவது  உன்திறமை!
நெருப்பு நடனம் நீரிற்தானே  அழியும்!

ஆவணியிலிருந்து (2019) குவீன்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ் பகுதிகளில்
ஆங்காரமிடும் நெருப்புப் புயல்    அவுஸ்திரேலியாவில்.
இயற்கைக்  கோர தாண்டவம் உச்ச கட்டம்!
மயற்கைப் பதட்டத்தில் மக்கள் வேதனையில்!

கடந்தமாத ஐம்பது பாகை வெப்பம் ஆகுதியாகி
கோடிகள் ஐம்பதிற்கும்  மேலான உயிரிழப்பு!
பத்து இட்சம்  கெக்டார் பரப்பளவு நிலம்
பல்லுயிரினம், நானூறுக்கும் மேலான வீடுகள் பாழ்.

Continue Reading →

ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

பொங்கலென்று சொன்னாலே
பூரிப்பும் கூடவரும்
மங்கலங்கள் நிறையுமென்று
மனமதிலே தோன்றிவிடும்
சங்கடங்கள் போவதற்கும்
சந்தோசம் வருவதற்கும்
பொங்கலை நாம்வரவேற்று
புதுத்தெம்பு பெற்றிடுவோம் !

Continue Reading →

உலகையாளும் பொங்கலே வாழியவே

உலகையாளும் பொங்கலே வாழியவே

இனிதாய்  வந்திடும் பொங்கலே
உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே   
உலகமே   கொண்டாடும்  பொங்கலே
உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே!

தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே
தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே
பொங்கும்   தமிழரின்    பொங்கலே
போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே!

Continue Reading →

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தன்மதிப்பு

நாங்கள் ஆளுக்கு நான்கு பிரம்மாண்டக் கப்பல்களின் அதிபதிகள்

என்கிறார்கள்.
அப்படியா என்று கேட்டு அப்பால் நகர்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குத் தலைசுற்றுவதுபோலிருக்கிறது.
இன்னொருவர் அதிர்ச்சியில் தடுக்கிவிழப் பார்க்கிறார்.
மூன்றாமவர் என்னை அப்படி முறைக்கிறார்.
நான்காமவர் நிதானமிழந்து வேகவேகமாய்த் தொடர்ந்துவந்து
ஆகாயவிமானங்கள் கூட எங்களிடமிருக்கின்றன என்கிறார்.
ஆளுக்கு நாலாயிரமா என்று கேட்கிறேன்
சலிப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு.
அத்தனை மண்டைகனமா என்று ஆத்திரத்துடன் கேட்டபடி
அடிக்கவருகிறார்கள்
அப்படியில்லை, என்னிடமிருப்பதை நீங்கள் அறியவில்லையே

என்ற ஆதங்கம் என்கிறேன்.
”அப்படி யென்னதான் வைத்திருக்கிறாய் பெரிதாக?”
”என்னை” யென்றபடி பிரதிசெய்யமுடியாத
வரிரூபமாகிறேன்.

Continue Reading →

புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் ! இரண்டாயிரத்து இருபதை இன்முகமாய் வரவேற்போம் !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் !

வெடித்துச் சிதறும் பட்டாசு
விடியல் காட்டும் குறியல்ல
இடக்கு முடக்கு வாதங்கள்
எதற்கும் தீர்வு வழியல்ல
நினைப்பில் மெய்மைப் பொறியதனை
எழுப்பி நின்று பார்திடுவோம்
பிறக்கும் வருடம் யாவருக்கும்
சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்  !

அறத்தைச் சூது கவ்வுமெனும்
நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்
உளத்தில் உறுதி எனுமுரத்தை
இருத்தி வைக்க எண்ணிடுவோம்
வறட்டு வாதம் வதங்கட்டும்
வெறுக்கும் எண்ணம் மடியட்டும்
சிரிப்பு மலராய் மலரட்டும்
பிறக்கும் வருடம் இனிக்கட்டும்  !

Continue Reading →

கவிதை: மூழ்கி நீந்துங்கள்!

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

ஆலகம் (நெல்லி) போன்றது கவிதை.
கீலகம் (ஆணி) போன்ற பூவிதை.
கேலகன் (கழைக்கூத்தாடி) போன்று கோலங்காணும்.
தாலப்புல்லான (பனை)  திறன் உடைத்து.
தூலகம் (பருத்தி), தூலிகை (அன்னத்தின் இறகு) போன்றது.

Continue Reading →