இரங்கல் கவிதை: எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

பாலா,

எங்களையெல்லாம் விட்டு

திடீரென பிரிந்துவிட்டீரே…..!

இதுவென்ன கொடுமை…..?

நாங்கள் என்ன குறை செய்தோம்……?

பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு

இரண்டு நாட்களுக்கு

முன்புதானே கொண்டாடினீர்………?

நேற்று இருந்தோர்

இன்றில்லை என்ற கதையாகிப்போனதே……….!

Continue Reading →

அன்றிலும் மகன்றிலும்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

கடற்கரை மணலில்

கைகளைக் கோர்த்து

கால்புதைய நடப்பதல்ல

காதல்!

நெடிதுயர்ந்த

மரங்கள் அடர்ந்த

பூங்காக்களில்

புதர்களின் ஓரம்

புகலிடம் தேடுவதும் – அல்ல

காதல்!

Continue Reading →

இர.மணிமேகலை கவிதைகள் மூன்று!

1. மௌனம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மழையை ஏந்திய இலையிலிருந்து

மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று

எண்ணெய்வாசனை கமழும் சமையலறை  தயாராகிறது

நாவின் மொட்டுக்களைத்தூண்டும்

செம்மண் தோட்டத்துக் கத்தரி

கிண்ணங்களில் அடங்குகின்றது

முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை

நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்

களி நடனம் மிளிர்கிறது

இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்

உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது

அர்த்தநாரி இழந்துபோக

சிவனின் தாண்டவம்

சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்

படிந்த நிழல்

சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது

விழி நோக்கி

உன் பேச்சு அதிகமென்று

வேலியிட்ட மணித்துளிகளில்

பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்

ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது

மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது

சிந்தும் இரத்தத்துளிகளுடன்.

Continue Reading →

என்னைக் கேட்டால்..

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!

1. எங்கே போகிறது

–  வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். –

vetha_new_7.jpg - 11.42 Kbவாழ்வு முடிந்திட எம்மைத் தொடர்வதொரு
ஆழ்வெளி வாழ்வா! எங்கு போகிறோம்!
சூழ் நிலவும் சூனிய வெளியுமா!
வீழ் இறகாகி விண்ணில் வலமோ!
உடலின் ஆன்மா கடலாவி போன்றதோ!
சடலம் எரியும், சாசுவதம் ஆன்மாவோ!
உடலம் தேடி மறுபடி அடைக்கலமோ!
சுடல் என்பது ஆன்மாவிற் கில்லையோ!

உடலைப் பிரிய விரும்பாத ஆன்மா
கடலைத் திடலை எப்படித் தாண்டும்!
படலையாக மனமா! ஆன்மா நடலையிடுமே!
ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை
நேத்திர நீர் வடிய முறையான
சாத்திரப்படி கோத்திர வழிப்படி எம்
ஆத்தும சாந்திக்காய் ஏத்தும் அமைதிப்படி
ஆன்ம சேத்திர விடுதலை எனலாமோ!

Continue Reading →

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!1. வர்ணத்தின் நிறம்

முதலில்
நிறத்தில்
வர்ணம்
தெரிகிறதாவெனத்
தேடுகிறோம்

நெற்றியில் தெரியவில்லையெனில்
சட்டைக்குள் தெரியலாம்
சில பெயர்களிலும்
வர்ணம் பூசியிருக்கலாம்

வார்த்தையிலும்
சில நேரம்
வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்

நான்கு மூலைகளில்
மஞ்சள் தடவிய
திருமண அழைப்பிதழ்களில்
முந்தைய தலைமுறையின்
வால்களில்
வர்ணங்கள் தெரிகின்றன

Continue Reading →

வேதனைத் தழும்பு !

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கவி யாற்றலை  வளமுடைத்  தாக்கி !
தமிழினை உயர்த்திட கவிபாடிடும் கூட்டம்
வஞ்சகப் போட்டியாளர் பொறமை தனத்தினை
சொற்களால் எரிந்து மகிழ்ந்து விளையாடும்
பொல்லா மனசு இருந்திடல் கண்டு
நல் லுள்ளங்களில் வேதனைத் தழும்பு !

நண்பர் கொடுமை கவிதைப் போராட்டம் !
சரித்து வீழ்த்திச் சாபமிடும் மன வெறி
உயிர் தமிழ் மொழி அழிந்து கவிமனம்
பொறாமை தளையிடை வேதனைப்படுந்துயர்
ஊதிப் பெருத்திட ஆற்றலை அழித்திட
கவி உள்ளத்தில் வேதனை நெருப்பு !

Continue Reading →

ஏங்குகின்ற ஏழைகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அன்று     கப்பலிலே ஏறிவந்து- இலங்கைக்
                 கரைசேர்ந்த முப்பாட்டன் சோற்றுக்காய்
                 காடுவெட்டி தேயிலைநாட்டி-வெள்ளைக்
                 காரனுக்காய் உழைத்தாரே.

எட்டு       அடிகொண்ட லயமென்று -நீண்ட
                அடுத்தடுத்தக் குடிசைக்குள்ளே -கொத்து
                அடிமைபோல் வாழ்ந்தேதான் -சொந்த
                அறிவுமங்கிக் கிடந்தாரே.

Continue Reading →

மொழிபெயர்ப்புக்கவிதை: அந்தகாரத்துக்கு முன்பு

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ

Continue Reading →

கருணாகரன் கவிதைகள்!

1. கொலை

karunakaran_55.jpg - 6.13 Kb

இன்று முழுதும் என்னைக் கொன்று கொண்டிருந்தேன்
மற்றவர்கள் என்னைக் கொல்வதையும் விட
நானே என்னைக் கொல்வது சுலபமாக இருக்கலாம்
அது நல்லதும் கூட என்றெண்ணினேன்
ஆனால் அது மிகக் கடினமாக இருந்தது.

Continue Reading →