விழியாக விளங்குகிறாய் பாரதியே!

– பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாளில் இக்கவிதை அவருக்குச் சமர்ப்பணம் –
மகாகவி பாரதியார்
வறுமையிலே  உழன்றாலும்
பெறுமதியாய்   கவிபடைத்தாய்
அறிவுறுத்தும் ஆவேசம்
அதுவேயுன் கவியாச்சே
துணிவுடனே கருத்துரைத்தாய்
துவிண்டுவிடா உளங்கொண்டாய்
புவிமீது வந்ததனால்
பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் !

பலமொழிகள் நீகற்றாய்
பற்றுதலோ தமிழின்பால்
தேமதுரத் தமிழென்று
தீர்க்கமாய் நீமொழிந்தாய்
காதலுடன் தமிழணைத்தாய்
கற்கண்டாய் கவிதைதந்தாய்
ஆதலால் பாரதியே
அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் !

Continue Reading →

கவிதை: முதியோர் முரசு

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அது ஒரு அளவான குடும்பம் – ஆனால்
அழகான குடும்பம் என்று சொல்வதற்கில்லை…

அது மூன்று தலைமுறைகள் வாழுகின்ற வீடு
மூவருக்கு அது கூடு –
வயதில் முதிர்ந்த இருவருக்கு அது கூண்டு…

முதிர்ந்த தலைமுறைக்கு மகனொருவன்
உண்டு – அவன் மனைவி என்னும்
மலரின் பின்னால் சுற்றுகின்ற மயக்க வண்டு…

இன்னும் சொன்னால் மனைவி
என்னும் சாட்டையால் சுற்றுகின்ற பம்பரம்
மணிக்கணக்கில் வேலை
செய்து தளர்ந்துவிடும் எந்திரம்…

அந்த வீட்டின் இல்லத்தரசி ஆணைகளால் ஆளுகிறாள் –
அடக்கி ஆளுகின்ற அதிகாரத்தால் நீளுகிறாள்…

மூன்றாம் தலைமுறையாய் மழலை
மொழி பேசும் மகவொன்றும் உண்டு –
அவன் வாசமும் பாசமும் வீசுகின்ற மலர்ச்செண்டு…

அந்த வீட்டின் இரு தூண்கள் வேம்போடு ஓர் அரசு…
அவர்கள் படும் இன்னல்களில் உருவானது என் முரசு…

வாழ்கையில் கடந்து வந்த பாதைகளை
முதிய நெஞ்சங்கள் அசை போடுகின்றன
விரக்கிதியின் விளிம்பில் நின்று
சோக இசை பாடுகின்றன…

Continue Reading →

நிறைவு

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

காலைக் கதிரவனோடு
கைகோர்த்து
தூரத்து
ரயில் பயணம்
தொடர் வண்டியின்
தடதட சப்தம்
திடீரென
வீசிய சாரல்
மழை!!

Continue Reading →

கவிதை: குப்பைகள் குறித்து…

கவிதை: குப்பைகள் குறித்து...

குப்பை:1

இதுவரை அப்படியொன்றும் செய்ததில்லை
எல்லோரும் அதனை சர்வசாதாரணமான நிகழ்வு என்று
தங்களுக்குள்ளும், பிறருக்கும் சொல்லிக் கொள்கின்றனர்.
அவர்களுடைய கால்கள் பதிந்த பாதச்சுவடுகளில் சில
பழைய பாதைகள் பதிவதைக் காணமுடிந்தது. எப்படியோ?
ஆனால் அது உண்மைதான்.
கடற்கரையருகே நடக்கவேண்டியவன்
அலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான்
அலைகள் இழுத்துச் சென்ற மணல் மீதிருந்த
ஒரு குப்பையைப் போல.
அவன் ஒரு குப்பைதான் சந்தேகமென்ன?
ஒரு குப்பைக்குத்தான் மற்றொரு குப்பையின் மதிப்பு என்ன?
என்று தெரியுமே.

Continue Reading →

கவிதை: குடும்ப விளக்கு

ஶ்ரீராம் விக்னேஷ்– 30.08.2019 அன்று, “மனைவியர் தின” த்தினை  முன்னிட்டு, குத்துவிளக்காகத்  திகழும்  “குடும்ப விளக்கு”ப்  பெண்ணைச்  சிறப்பித்த  பாவேந்தரது வரிகளை,  முடிந்தவரை   என் வரிகளில்   தருகின்றேன். –

முட்டிடும்  கூரைவீட்டில், 
குட்டைபோல்  குனிந்துசேவை.
மட்டிலா  செய்யும் மனைவி!

கட்டிய  கணவன்  நெஞ்சில்,
கிட்டவும்  துன்பம்  சேரா
கெட்டியாய்  நிற்கும்  துணைவி !

பட்டிகள்  தொட்டிதோறும்,
இட்டமாம்  நேசத்தோடு,
பரிமாறும்  இதயம்  இரண்டு !

திட்டமாய்  இருந்தால்  அதனைத்
தீர்க்கமாய்ச்  சொல்லலாமே
திறமான  குடும்பம்  என்று !

பட்டினியோடு  சென்று,
பகல்சாயத்  திரும்பி வந்து
பாயாசம்  உண்டேன் நான்  என்பான்!

கட்டிய  மனையாள் உண்ணக்
கவளத்துச்  சாதம்தொட்டுக்,
காதலோ  டூட்டச்  சொல்வான் இவளோ

Continue Reading →

மனக்குறள் 22,23 & 24

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-22: தமிழும் தமிழரும்

உயிரெழுத்துப் பன்னிரண்டு மெய்பதி னெட்டும்
பயிராக்கும் முப்பதுவே பார்!

இருநூற்றுப் பத்துமாறும் ஏர்முப்பத் தாய்தம்
இருநூற்றி நாற்பதேழாம்  என்க!

இலங்கையும் சிங்கபூரும் ஏற்றதோ ராட்சி
இலங்க மொழியும் தமிழ்!

எட்டுகோடி யாம்தமிழர் என்க உலகமெலாம்
பற்றுமண் வாழ்கின்றார் பார்!

தொல்வாழ் விடங்கள் சிறகாரும் ஈழமும்
விள்ளும் தமிழ்நாடும் வேர்!

இருநூற்றி ஐந்து எழில்நாடு இன்றெம்
இருந்தமிழர் வாழும் இடம்!

இந்தியா சிங்கப்பூர் (இ)லங்கா மொரிசியசும்
தந்தாரே காசிற் தமிழ்!

தமிழ்மரபுத் தைத்திங்கள் சாருங் கனடா
அரசேற்றி வைத்தார் அறி!

இரண்டா யிரத்துப் பதினாறில் இட்டார்
மரபுதமிழ்ச் சட்டம் வரைந்து!

சொல்லும் தமிழ்மரபு சேர்த்தாரே சட்டமெலாஞ்
சொல்லும் பலநாடு சேர!

Continue Reading →

தமிழ் நதி

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

அமைதியின் அதீத அன்பில்
மெளனித்து நிற்கும்
திசையற்ற பொழுதுகளில்
தமிழ்த்தாய் கண் முன்
பேறுவகையுடன் காட்சியளிக்கிறாள்.

Continue Reading →

இரு கவிதைகள்!

1.

முல்லைஅமுதன்தண்ணீரில்
மூழ்கிப்போகும் என்று தெரிந்தும்
அம்மா
காகிதக்கப்பலைத் தண்ணீரில் விட்டாள்..
அவ்வைப்பாட்டி
அவள் இல்லை என்று
நினைக்கும்படி
கதை சொல்லிச் சொல்லி
சோறு
ஊட்டிய அம்மா சொன்னதும் பொய்தானே?
இருந்திருக்கலாம்..
நாகரீககோமாளியாக
தாய்மாமன்…
‘உம்மாண்டி வருகுது’
என்று சொல்லி
பயமுறுத்தியதும்
அதே அம்மாதானே?
‘இந்த வழியால் மட்டுமே போ’
கட்டாயப்படுத்தி
வழியனுப்பிவைக்கின்ற அம்மா..

Continue Reading →

அகில மக்காள் வாருங்கள் !

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -போட்டி பொறாமை எலாம்
பொசுக்கியே விட வேண்டும்
வாட்டமுறும் வகையில் என்றும்
வார்த்தை பேசல் நல்லதல்ல
மூத்தவரை மனம் நோக
வைப்பதிலே என்ன பயன்
கீழ்த்தரமாய் வரும் நினைப்பை
கிழித் தெறிவோம் வாருங்கள் !

பெற்றவர்கள் மனங் கலங்க
பிள்ளை செய்தல் கூடாது
சொத்துப்பற்றி சண்டை செய்து
சுகம் பறிக்கக் கூடாது
கற்றுத் தந்த ஆசானை
களங்கமுற வரும் நினைப்பை
கடுந்தீயில் போட்டு நின்று
கருக்கி நிற்போம் வாருங்கள் !

Continue Reading →

ஒளிப் பதிவுக் கலை (கவிதை)

– 19.08.2019  உலகப்  புகைப்பட  தினத்தை முன்னிட்டு, இக் கலையை  மதிக்கும்,  அத்தனை  கலைஞர்களுக்கும்  இக்கவிதை  சமர்ப்பணமாகிறது. –
ஶ்ரீராம் விக்னேஷ்
பாரதி  தாசன்சொல்  “உருக்கவர்  பெட்டி”யின்
பரிணாம  வளர்ச்சியா  லே,
பாரினை  ஓர்திரை  அரங்கிலே  கொட்டிடும்
படைப்பாளி  ஆகினோம் : நாம் !
ஊரினை  பேரினை  உறவினை  அறியாது,
ஓர்முனை  எட்டினோ  ரும்….
யாரவர்  என்பதைக்  கவர்ந்திங்கே  சொல்லுவோம்
யாம்செய்யும்  தொழிலினா  லே !

கனவிலே  சுற்றிடும்  உலகென்று  பேருக்கு
கண்டவர்  சொன்னபோதும் :  பலர்
கனவினை  நனவாக்க  கையிலே  பணங்கொட்டும்
கடவுளாம்  கலையின்  கூடம் !
மனதிலே  தோன்றியும்,  தோன்றலுக்கு  அன்றியும்
மறைந்திடும்  காட்சி  முற்றும்,
தனதுளே  காட்டுமே  தலைசுற்றப்  பண்ணுமே
தந்திரக்  காட்சி  மற்றும் !

“ஏன்.?”என்று  கேட்டிட  எவரின்றி  வீதியில்
இழிநிலை  கண்டமா  தும்,
“மான்”என்று  காட்டிட  ஒப்பனைக்  கலையினார்
மணியாகச்  செய்தபோ  தும்,
வான்நின்று  சிரிக்கின்ற  வண்ணத்  தாரகை
“வா.!”என்று  ரசிகர்மோ  தும்,
நாம்நின்று  செய்திடும்  நல்லஒளிப்  பதிவினால்
நடந்தது  அன்றோ  ஏதும்..?

Continue Reading →