மரணத்திற்கு முன்பு உதிரும் சிறகு.

பறவை

திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியவற்றுள்
சில இருப்பதாகத் தோன்றுகிறது.
அது
இறந்து போன ஒரு பறவையின் நீண்ட சிறகாக இருக்குமெனில்,
அது தன்னுடைய மரணத்திற்கு முன்பு
பறந்த வானத்தை
மீண்டும் சிருஷ்டிக்க முடியும்.
அத்தகைய சிருஷ்டியில் இருப்பவை
அது அமர்ந்திருந்த மரத்தை
அம்மரத்தில் தனது காதல் நிகழ்ந்த கூட்டை
அதன் எண்ணிக்கையில்லாக் குஞ்சுகளை
அதன் பறத்தலை
மீண்டும் கண்டு இன்புற முடியும்.

Continue Reading →

பத்திநாதர் தந்தை வாழ்வியலை நீத்தார்!

மீட்பரை இழந்தோம்! சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்! மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்!

சித்தமொன்று சத்தமின்றிச் சேவகம் செய்திடும்
பத்திநாதர் தன்னைவிட்டோம் பரிதவிக் கின்றமே!
செத்துமாந்தர் சிதறுகுண்டிற் சீவியம் இழக்கவும்
அத்திரமாய்ப் பக்கநின்று ஆதரித்த தந்தையே!

காயமோடு நொந்தபோதும் கருதுமண்ணின் சேவையில்
நேயமோடு நின்றநாதர் நிலத்துநேசர் அல்லவோ?
தூயசேவை ஆகமக்கள் துன்பமோட வைத்தவர்
மாயமொடும் உலகைவிட்டார் வருந்துகிறோம் மக்களே!

Continue Reading →

மனக்குறள் 9 & 10

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-9: நிலமும் பயிரும்..கலையும் கதிரும்...!

இலக்கியத் தோட்டம் இலங்கிடும் உலகில்
மலர்ந்திடும் செந்தமிழ் மன்று!

எழுத்தொடும் யாப்பிடும் இன்தமிழ் ஏடுகள்
வழுதியே போற்றுவர் வான்!

வையகம் வாழ்க மணிமொழி வாழ்கவே
செய்பயிர் என்கவே சேர!

இன்தமிழ் ஆக்கும் இலக்கியத் தோட்டமாய்;
அன்;புசால் மண்;ணெலாம் ஆக!

வாழ்க தமிழே வளர்கதொல் காப்பியம்
வாழ்க குறளொடும் வாழ்கவே!

சிறுகதை நாவல் திறம்பா வறிதல்
உறுநேர் உரைத்தலாம் என்ப !

கலைஞர் வலைஞர் கணினித் துறைவர்
அலைபா விசைஞர் ஆக!

கலைத்துறை யோடும் கனமொழி யாற்றல்
புலமையும் சொல்வார் புகல்!

பயிரிடுந் தோட்டம் பயில்மொழி யாப்பும்
அயிரொடும் ஒன்றே அறி!

எழுத்தால் உயர்ந்தவர் ஏடெலாம் போற்றும்
விழுமம் உகப்பர் விருது

Continue Reading →

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

ஓன்பது பத்து என்ற
உயரிய அழகை யிட்ட
அம்பியே புலவ ரேறே
அகிலமே வியக்கும் மன்னா!
நெம்புகோல் பார திக்குப்
பின்னொரு கவிதை யூறும்
தம்பியாய் வருகை தந்தாய்
தமிழ்மகள் மகிழ்ந்தாள் ஐயா!

மழலையர் மகிழப் பாடி
மதுரமாம் இலக்கி யத்தின்
அழகென ஒலித்த அம்பி
அணித்தமிழ் மரபின் நம்பி
உழவெனப் பாக்கள் இட்டு
உயிரெனக் கவித்தேன் வைத்தே
விழுமியம் படைத்த பாகன்
விளைநிலம் எழுதக் கண்டோம்!

Continue Reading →

கானடா நாடென்னும் போதினிலே

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தோதும் நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததும் எம் யோகமடா

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசும் பனிப்புயல் வீடுகளாம், குளிரும்
வெப்பமும் மாறிடும் பருவங் களாம்.

Continue Reading →

கனடா தேசீய கீதம்

கனடா தேசீய கீதம்

ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீதான் !
ஒளி நிறைந்த
உள்ளத் தோடு நீ
உயர்வதைக் காண்கிறோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டமே,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது திரு நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !

Continue Reading →

மனக்குறள் (1 – 8) – குறள் வெண்பா –

மனக்குறள்-1: முற்றும் அறத்தின் முடிபே!

பொள்ளாச்சி நல்ல புதுமை மகத்துவங்கள்
இல்லா தொழிந்ததுவோ இன்று?

நாடு நரிகளென்றால் நத்தும் விசுக்கல் என்றால்
ஊடு வலிதானே ஓடும் !

Continue Reading →

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1

பதின் பருவ பள்ளியாய்ப் போன
முள் மரங்களின் குத்தகைத்தாரர் நீ
ஆடுகளின் ஓய்விடங்கள்
கவட்டையோடு உன்னை அடிக்க
அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்

தலை தூக்கி சூரியனோடு நீ பேசும்
உரையாடல் கேட்க காத்திருந்த மணித்துளிகள் பல
எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்

என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்

Continue Reading →

கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் !

கவிஞர் கண்ணதாசன்

– கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம் ஜூன் 24. அதனையொட்டி வெளியாகும் கவிதையிது. –

திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு
நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்
தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்
சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று
சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

Continue Reading →

கவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)

ஶ்ரீராம் விக்னேஷ்

பதியிழந்து   பலமிழந்து,
படைத்துவிட்ட    நாடிழந்து,
கதியிழந்து  வருவரல்ல  அகதி!  –  ஆங்கே
விதியிருந்தும்   கதியிருந்தும்,
விபரமற்றோர்   தமைமிதிக்கும்,
வீணர்களே  உள்ளூரின்   அகதி!

நெற்றிதன்னில்  வழிகின்ற,
நீள்வியர்வை   நிலஞ்சிந்த, 
கஷ்டமுற்று   உழைப்பவனின்  கூலி!  –  அதை
பத்தினுக்கு  எட்டாக்கி,
பகற்கொள்ளை   அடிப்பவரே,
சொத்துசுகம்   வைத்திருந்தும்  அகதி!

Continue Reading →