மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 5(1)

டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.-டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.

1) அறிவின் உறுதி என்பது 2ம்2ம் 4 என்பதுபோல உறுதியாய் இருக்கவேணும். அரக்கக்கூடாது. தளம்பக்கூடாது.
2) அறிவிற்கான வரையறை என்பது ஒரு பொழுதும் ஐயப்படலாகாது.

ஐயப்படக் கூடிய அறிவு அறிவில்லை என்றார். ஐயவாதத்தின் தந்தை எனவும் அவரை அழைத்தார்கள். ஐயவாதம் அல்லது சந்தேகவாதம் என்பது மிகவும் சுவாரசியமானது.

டேக்காட் சொல்லும் சந்தேகவாதம் இதுதான். நான் எல்லாவற்றையும் ஐயுறுகிறேன். ஐயப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. எல்லா அறிவுமே ஐயுறக்கூடியது. அப்போ என்னதான் ஐயுறமுடியா அறிவு?

இறுதியில் அவர் ஒரு முடிபுக்கு வந்தார். அது என்ன தெரியுமா…  -நான் எல்லாவற்றிலும் ஐயுறுகிறேன். இப்போதைக்கு இதுவே ஐயுறா என் அறிவு- என்றார்.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்-4

பிளேட்டோஅரிஸ்டோட்டில்- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -சோக்கிரடிசு

மூவரைத்தாண்டி மேலைத்தேய மெய்யியல் நகராது.

1. சோக்கிரட்டீஸ்
2. பிளேட்டோ
3. அரிஸ்ரோற்றில்

1) சோக்கிரட்டீஸ்.

இவர் ஒரு பிரசங்கி. இவர் ஒரு நூலையும் எழுதவில்லை. இவரது சீடன் பிளேட்டோ. இவர் சொன்னதாக பிளேட்டோ எழுதியவைகளே இவரது தத்துவம். இவருக்கு என்ன தெரியும் என்று இவரைக் கேட்டபொழுது –எனக்கொன்றும் தெரியாது என்று எனக்குத் தெரியும்- என்று பதிலிறுத்தார்.

அதாவது தெரிந்தவற்றுக்கும் தெரியாதவற்றும் எப்படி ஒரு எல்லையை வகுக்கமுடியும் என்று கேட்டார். அறிவின் வரையறை என்ன? அதன் எல்லை என்ன? ஏன் என்று கேள் என்றார். உன்னை அறி என்றார். ஒரு பொழுதேனும் அவர் தான் சொன்னதிலிருந்து பின் வாங்கவில்லை. தப்புவதற்கு ஏகப்பட்ட வழியிருந்தும் அவர் தப்பவில்லை. நஞ்சைத் தானுண்டார். இறந்து போனார்.

நீதி பற்றி இவர் சொன்னவைகள் ஏராளம். நீதி பற்றித் தெரியாத ஒருவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியாகுமா என்றும் கேட்டார்.

Continue Reading →

இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின் நித்திய வாழ்வு வாழலாம். (Live long enough to live for ever)

இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின்   நித்திய வாழ்வு வாழலாம். (Live long enough to live for ever) - ப.தயாநிதி -தொழில் நுட்ப வளார்ச்சியால் நித்திய வாழ்வைப் பெறாலாம் எனப் பல ஆதாரங்களைக் காட்டிக் கூறுபவர் கூகிளின் (Google) பொறியியல் பணிப்பாளாரில் (director) ஒருவரான றே கேர்ஸ்வில்  (Ray Kurzweil) ஆவர்.  68 வயதான இவர் இன்னும் முப்பது வருடங்களில் இது சாத்தியமாகும் என எதிர்வுகூறி 2045 வரை வாழ்ந்து நித்திய வாழ்வை அடைவதற்காக தனது தேக, மன ஆரோக்கியத்தை மிகக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார்.  அவருடைய முக்கிய கருதுகோள், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி, நேரியல் (linear) வீதத்தில் இல்லாமல் அடுக்கேற்ற (exponential) வீதத்தில் நடைபெற்றாலும் அதனை நாம் உணராமல் இருப்பதே.

சற்றே சிந்தியுங்கள்.  200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது மூதாதையர் ஒருவர் இன்னும் 200 வருடங்களில் 1,000 மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாகக் காண்பது போலக் காணலாம் என்றால் நம்பியிருப்பாரா? அவர் காலத்திற்கு முந்திய பல்லாயிரம் ஆண்டுகளில் நடைபெறாதது, இன்னும் 200 வருடங்களில் நடைபெறும் என்று கூறினால் நம்பக் கூடியதாகவா இருந்திருக்கும்? ஸ்கைப்பில் (skype) நேரில் பார்த்துக் கதைப்பது, ஆகாயத்தில் பறந்து செல்வது, குதிரைகளுக்குப் பதிலாகச் சொந்த இயந்திரக் குதிரையில் (மோட்டார் காரில்) செல்வது எல்லாம் நம்பக்கூடியதாகவா இருந்திருக்கும்?

றே கூறும் விஞ்ஞானவளர்ச்சி தானியங்கியியல் (Robotics), நனோ தொழில்நுட்பம் (Nano technology), மரபுப்பொறியியல் (Genetic engineering)  எனும் மூன்று திசைகளில் நடைபெறும்.  இம்மூன்றும் ஒன்றை ஒன்று வளர்ப்பதற்கு மிகவும் அவசியமாகும்.  மூன்றும் வளர்ச்சி அடையும் பொழுது மொத்த வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.

தானியங்கியியல் (Robotics)
1946 இல் உருவான முதலாவது இலத்திரனியல் கணனி ”எனியாக்’ (ENIAC) இன்,    செயலாக்க வேகம் (processing speed)  0.1 MHz, விலை $ 500,000 ($ 6  மில்லியன்  இன்றைய விலை),  எடை  30  தொன் (ton),  ஆக்கிரமித்த பரப்பு 1,800 சதுரஅடி,   கன அளவு 8’x3’x100′,   இதனை இயக்குவதற்கு தேவையான வலு 150 kW.   ஆனால் தற்பொழுது வெறும் 2 இறாத்தல் நிறையேயுள்ள மடிக்கணினி (Laptop)  20,000  மடங்கு செயலாக்க வேகத்தில் (processing speed) $ 850 இற்கு வாங்கமுடிகிறது.  ஒரு நுண்ணறிபேசி‎ (smart phone) கூட ”எனியாக்’ ஐ விட மிகமிக அதிகமாக வேலை செய்கிறது.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல் -3

உண்மை- என ஒன்று இருப்பதாகவும் அதனைப் பாதுகாப்பதாயும் மெய்யியல் விளங்குகிறது எனச் சொல்லிக்கொண்டு அக்காலத்தில் கிரேக்கர்கள் சிலர் திரிந்தனர். மெய்யியலாளர் என்போர் உண்மையின் காவல் நாய்கள் என்றும்,…

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்–2

. ஃபைதோகிரஸ்! ஒரு செங்கோண முக்கோணத்தின் இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை செம்பக்கத்தின் வர்க்கத்திற்குச் சமனாகும்- என்ற தேற்றத்தை உலகிற்குச் சொன்னவர்.

- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -அப்போ அறிவெனப்படுவது யாது? அதாவது உறுதியான அறிவெனப்படுவது என்ன என்ற கேள்வி அன்றே எழுந்தது.

வரைவிலக்கணம் சொல்வது பற்றிப் பலர் பேசிக் கொண்டனர் பின்னாளில்.-வரைவிலணக்கம்- இதற்கென்ன வரைவிலக்கணம் என்று கேட்டார்கள்.
வரைவிலக்கணம் கூறுவது என்பது……. ஒன்றைச் சுட்டி, இதுவே இதுவென்றும்..இதுவல்லாவிடில் அது என்றும் அதுவல்லாவிடில் இது என்றும் சொல்லப்பட்டது.

-ஒன்றின் பொதுவான இயல்புகளையும் சிறப்பான இயல்புகளையும் சொல்லுதல்- என்பது வரைவிலக்கணமாகும். என்றும் சொல்லப்பட்டது.

மெய்யியல் என்றால் என்ன என்பதற்கு இன்றுவரை வரைவிலக்கணம் இல்லை. தத்துவம் என்றால் சொல்பவனுக்கும் விளங்காமளல், கேட்பவனுக்கும் விளங்காமல் இருக்கும் ஒரு உரைநடை. என்கிற ஒரு பழைய சொல்லாடல் இன்றுவரை இருக்கிறது. அப்போ என்ன செய்யலாம் ? இது என்ன ?

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 1

– ஆதவன் கதிரேசர்பிள்ளை என்னும் பெயர் ஆதவன் என்னும் பெயரில்  தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக , 1981-1983 காலகட்டத்தில் பணி புரிந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், சினிமா, தத்துவம் எனப்பல்துறைகளிலும் தன் பங்களிப்பினைச்செய்து வருபவர். தத்துவம் பற்றிய இவரது கருத்துகளைத் தொடர்ந்தும் ‘பதிவுகள்’ இணைய இதழில் பகிர்ந்து கொள்வார்.


மெய்யியலை எவ்வாறு கற்பிக்கலாம்?

சரி,

பிரச்சனைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்த…உங்களால் -பிரச்சினை- என்று கருதப்பட்ட ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்.

மறந்தும் -என்றால் என்ன?- என்கிறதும், -எங்கே?- என்பதுமான கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்க வேண்டாம்.

நீங்கள் இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே.. அக்கணத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டீர்கள் நீங்கள் அறியாமலேயே.

Continue Reading →

கலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கையும் சேவைகளும்

கலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாம்-பேராசிரியர் கோபன் மகாதேவா -கலாம் எம்மைப் போல் ஒரு தமிழர். எம்மைப் போல் மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, பின் விடாமுயற்சியால் இந்திய ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாக உயர்ந்து இளைப்பாறியவர். மேலும் ஒரு விஞ்ஞானியாகக் கற்றுத் தொடர்ந்து அவ்வாறே பணி செய்து, பல வகையில் ஒரு அரிய உதாரணராக, பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத்ரத்ன பட்டங்களுடன் பெரிதான போட்டி இன்றி மிகவிரும்பி எல்லோராலும் ஏற்கப்பட்டு இந்தியாவின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுத் தானாகவே ஒரே ஒரு தவணையின் பின் தன் உயர் பதவியைத் துறந்து பின்னரும் கல்வித் துறையில் தொண்டராகத் தன் மறைவு நாள் மட்டும் வேலை செய்து கொண்டே வாழ்ந்தவர். மேலும்ஒரு பிரமச்சாரியாக நிலைத்து, தன் பிறந்த குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் பழைய ஆசிரியர்களுக்கும் நன்றிக் கடனும் பயபக்தியும் உடையவராகவும் வாழ்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நல்லதையே சிந்தித்து, நல்லதையே செய்து, ஒரு சான்றோராகத் தூய்மையுடன் திகழ்ந்தவர். மனிதருள் ஒரு எடுத்துக் காட்டான மாணிக்கம். சில தடவை இவரை நான் எம் ஈழத்து ஆறுமுக நாவலருக்கு ஒப்பிட்டுச் சிந்தித்தேன். எனினும் கலாம் உலகில் நாவலரிலும் மிகக் கூடிய உயற்சியைப் பெற்றவர்.

பிறப்பும் குடும்பமும்:
ஏபீஜே அப்துல் கலாம் என்று பெயர் சூட்டிய ஆண் குழந்தை பிறந்தது, 1931இன் ஒக்தோபர் 15ந் திகதி அன்று, இந்தியாவின் தமிழ்நாட்டு இராமேஷ்வரம் எனும் தீவின் நடுத்தரக் குடும்பம் ஒன்றில். அவரின் தகப்பனார் பெயர் ஜைனுல்லாபுதீன் மரைக்காயர். தனுஷ்கோடி சேதுக்கரையில் இருந்து இராமேஸ்வரம் சிவன் கோவிலுக்கு வந்து செல்லும் யாத்திரீகர்களின் படகுகளை ஓட்டி ஏற்றிச் சென்றும் திரும்பக் கொணர்ந்தும் உழைத்துத் தன் குடும்பத்தைக் கலாமின் தந்தை வளர்த்து வந்தார். அத்துடன் ஒரு சொந்தத் தென்னங்காணியையும் பராமரித்து வந்தார். அவர்களின் வீடு, 1850களில் சுண்ணாம்பு, செங்கற்கள் முதலியவற்றால் கட்டப் பட்டு மசூதித் தெருவில் இருந்த ஒரு பெரிய பழைய வீடு. அப்துல் கலாமின் தாயார் ஆஷியம்மாவின் மூதாதையரில் ஒருவர் பிரிட்டிஷாரின் இந்திய ஆட்சிக் காலத்தில் பகதூர் பட்டம் பெற்றிருந்தார். கலாமின் பெற்றோர் அதிகம் படித்தவர்களல்ல. எனினும் தங்கள் இஸ்லாம் நெறிமுறையைப் பின்பற்றிக் கொண்டு விருந்தினரை உபசரித்து ஆடம்பரங்கள் இல்லாது வாழ்ந்து உதாரணத் தம்பதிகள் என மதிப்புப் பெற்றவர்கள். கலாமை வீட்டில் அபுல் என்று செல்லமாகக் கூப்பிடுவர். கலாம், மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் மூன்றாவது பிள்ளை. கலாமின் பெற்றோர் உயரமானவர்கள். ஆயினும் அவர் உயரத்தில் குள்ளமானவராகவே இருந்தார்.

Continue Reading →

மரணப் படுக்கைத் தரிசனங்கள்

மரணப் படுக்கைத் தரிசனங்கள்- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -“ஐயா. சந்நிதி கோயிலுக்குப் போறாராம். என்னையும் வரட்டாம்.” என்றார் தீனக் குரலில். காலனின் கயிறு அவரது கழுத்தில் வீசப்பட்டதைக் கண்டதைப் போல அருகில் நின்றவர்களின் முகங்கள் பேயடித்து வெளிறின. உரித்த நார்போல படுக்கையில் கிடந்த அவரது குரல் இரகசியம் போசுவதுபோல ஒலித்தாலும் புரிந்து கொள்ளக் கூடியளவு தெளிவாக இருந்தது. இவரது வயது 75 யை நெருங்கியிருந்தது. ‘ஐயா’ என அழைத்த அவரது தந்தை இறந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல நாட்களாக இவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உணவு உட்கொள்வதைக் கைவிட்டுச் சில நாட்களாகிவிட்டன. நீராகாரம் மட்டும் பருக்குகிறார்கள். இன்றோ நினைவு தப்புவதும் மீள்வதுமாக இருக்கிறது. இது ஒரு மரணப்படுக்கைத் தரிசனம்.(Deathbed Visions) காலாதிகாலமாக இப்படியான விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை விஞ்ஞான பூர்வமான பதிவுகளானது அண்மையில்தான். 1924ம் ஆண்டளவில் பௌதீகவியல் பேராசிரியரான Sir William Barrett தான் இவ்வாறான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலாக ஆவணப்படுத்தினார். பௌதீகப் பேராசிரியருக்கு முற்றிலும் அந்நியமான துறையில்; ஆர்வம் வந்ததற்குக் காரணம் மகப்பேற்று நிபுணரான அவரது மனைவிதான். January 12, 1924 அன்று குழந்தைப் பேற்றின்போது குருதி  இழப்பினால் மரணத்தைத் தழுவிய ஒரு பெண்ணுக்கு கிட்டிய தரிசனம் பற்றிய தகவலை மனைவி வெளியிட்டதாலேயே அவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. (முழமையான விபரங்களை இணையத்தில் தேடுங்கள்)

Continue Reading →

Satyendranath Bose: Higgs-Boson’s Forgotten Hero

Satyendranath BoseJuly 7, 2012- The world is celebrating the discovery of the sub-atomic particle at CERN, Geneva, which many believe could well be the long sought after Higgs-Boson. This particle is also called the ‘God Particle’ because its existence is fundamental to the creation of the universe. School physics teaches us that everything is made up of atoms, and inside atoms are electrons, protons and neutrons. They, in turn, are made of quarks and other subatomic particles. Scientists have long puzzled over how these minute building blocks of the universe acquire mass. Without mass, particles wouldn’t hold together and there would be no matter.

Higgs-Boson
One theory proposed by British physicist Peter Higgs and teams in Belgium and the United States in the 1960s is that a new particle must be creating a “sticky” field that acts as a drag on other particles. The atom-smashing experiments at CERN, the European Center for Nuclear Research, have now captured a glimpse of what appears to be just such a Higgs Boson like particle.

Continue Reading →

Dawn of a new age: The first person to reach 150 is already alive… and soon we’ll live to be a THOUSAND, claims scientist

Dr Aubrey De Grey also believes that the first person to live to 1,000 will be born in the next two decadesDr Aubrey De Grey also believes that the first person to live to 1,000 will be born in the next two decades. It’s a milestone that few, if any, of us expect to reach. But the first person who will live to see their 150th birthday has already been born, according to a leading scientist. Even more incredibly, Aubrey De Grey believes that the first person to live for 1,000 years will be born in the next two decades. The biomedical gerontologist and chief scientist of a foundation dedicated to longevity research claims that within his own lifetime doctors will have all the tools they need to ‘cure’ ageing. This will be done, he believes, by banishing all diseases and extending life indefinitely. Dr De Grey said: ‘I’d say we have a 50/50 chance of bringing ageing under what I’d call a decisive level of medical control within the next 25 years or so. ‘And what I mean by decisive is the same sort of medical control that we have over most infectious diseases today.’ The British scientist sees a time when people will go to their doctors for regular ‘maintenance’, which by then will include gene therapies, stem cell therapies, immune stimulation and a range of other advanced medical techniques to keep them in good shape.

Continue Reading →