‘தழல்’ இலக்கிய வட்ட ஏற்பாட்டில் மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் – 01.08.2012

மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் - 01.08.2012

மாதந்தோறும் முழுமதித் தினத்திலே நடைபெற்றுவரும் தழல் இலக்கிய வட்டத்தின் இலக்கிய ஒன்றுகூடல் இம்மாதமும்  இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னாரில் உள்ள கலையருவி மண்டபத்தில் 01.08.2012 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.  இவ்வொன்றுகூடலில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இம்மாத நிகழ்வுகள்:
* முதன்மை விருந்தினர்: தொழிலதிபர் திரு.எஸ்.ஏ.மிராண்டா
* சிறப்பு விருந்தினர்: திரு.சி.கா.செந்திவேல், பொதுச் செயலாளர், புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
* கௌரவ விருந்தினர்: திரு.தெ.மதுசூதனன், ஆசிரியர், ‘ஆசிரியம்’ கல்வி இதழ்

இம்மாதச் சிறப்புரைகள்: 
* “இலங்கைத் தமிழர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளும்”
   திரு.சி.கா.செந்திவேல், பொதுச் செயலாளர், புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
* “ ‘ஆசிரியம்’ கல்வி இதழ் – ஒரு நோக்கு” ,திரு.தெ.மதுசூதனன்,  ஆசிரியர், ‘ஆசிரியம்’ கல்வி இதழ்

காலம்: 01.08.2012 (புதன்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: கலை அருவி, இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னார்.

மன்னார் அமுதன்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்
தழல் இலக்கிய வட்டம்
0714442241

amujo1984@gmail.com