‘தமிழ் இலக்கியத் தோட்டத்தி’ன் ஏற்பாட்டில் தமிழில் ஆராய்ச்சி: ‘கடலோடி’ நரசய்யாவுடன் ஒரு சந்திப்பு!

'தமிழ் இலக்கிய தோட்டத்தி'ன் ஏற்பாட்டில் தமிழில் ஆராய்ச்சி: 'கடலோடி' நரசய்யாவுடன் ஒரு சந்திப்பு! காலம்: நவம்பர் 5, 2011, 6.30 - 8.30 PM;  இடம்: Mid Scarborough Community Centre, 2467 Eglinton Ave, Scarborough, Canada

‘தமிழ் இலக்கியத் தோட்டத்தி’ன் ஏற்பாட்டில் தமிழில் ஆராய்ச்சி: ‘கடலோடி’ நரசய்யாவுடன் ஒரு சந்திப்பு! காலம்: நவம்பர் 5, 2011, 6.30 – 8.30 PM;  இடம்: Mid Scarborough Community Centre, 2467 Eglinton Ave, Scarborough, Canada

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் (79 & 80)

(79) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன்மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று ப்ளாக் வீடுகளைக்கடந்தால் அவன் வீடும்  வரும். ஒழிந்த நேரங்களில் அவன் வீட்டில் தான் என் பொழுது கழியும். அவனோடு ஆர். சுப்பிரமணியன் என்னும் உறவினனும் அந்த வீட்டில் இருந்தான். அக்கா மகன் என்றோ ஏதோ உறவு. இரண்டு பேருக்கும் வீடு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சிந்தாதிரிப் பேட்டை என்றாலே எப்படியோ பெரியார், திராவிட கழகம் என்று தான் சிந்தனை தொடர்கிறது.

Continue Reading →