இலங்கை இன முரண்பாடு : இடதுசாரி பொதுத் தளம் ஒன்றின் உருவாக்கம்!

Marks & Engelsஇலங்கை தேசிய இன ஒடுக்குமுறை குறித்த கருத்துப்பரிமாற்றத்திற்கான சந்திப்பு ஒன்றை பிரான்ஸ் சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (CDS – Comité de Defense Social -France) அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் இணைந்து சனிக் கிழமை 22.10.2011 பாரிசில் ஒழுங்கமைத்திருந்தன . இதில் கலந்துகொள்ள பிரான்சில் இருக்கும் பல்லின இடதுசாரி செயல்பாட்டு ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.  “திட்டமிட்ட இனப்படுகொலை” என்ற எல்லைவரை சென்றிருக்கும் இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை தொடர்பாக சர்வதேச இடதுசாரி அமைப்புக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்படுவது பற்றியும் பிரதானமாக உரையாடப்பட்டது.

Continue Reading →

தமிழகச் செய்திகள் (பிபிசி.காம்): தமிழகத்தில் ஜெயலலிதாவின் அதிமுக அமோகம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ இஅதிமுக பத்து மாநகராட்சிகளையும், 89 நகராட்சிகளையும், 287 பேரூராட்சிகளையும் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. திமுகசென்னையில் கடந்த 5 ஆண்டு காலம் மேயராகப் பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த மா சுப்பிரமணியன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ இஅதிமுகவின் சைதை துரைசாமியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, திமுக, அதிமுக அதேபோல திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் தளமான மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்திலும் அ இஅதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

Continue Reading →

தமிழகச் செய்திகள் (பிபிசி.காம்): 2ஜி வழக்கில் 17பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!

கனிமொழி[அக்டோப்ர் 22, 2011] இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று சனிக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்புடைய விடயங்கள்திமுக பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முதல், திமுக எம்.பி. கனிமொழி வரை 17 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரிமினல் சதித்திட்டம், நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுதவிர, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 409-ன்படி, கிரிமினல் நம்பிக்கை மோசடிப் பிரிவின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.

Continue Reading →

ALJAZEERA.NET Obituary: Muammar Gaddafi

One of the world’s most eccentric and unpredictable leaders, Gaddafi dominated the world stage for decades. After 42 years at the helm of his sparsely populated, oil-rich nation, Muammar Gaddafi – the Arab world’s longest-ruling leader – lost his grip on power after a six-month uprising. Since he lead a successful military coup in 1969, Gaddafi styled himself as Libya’s “brother leader” and the “guide of the revolution”, as an almost paternal figure looking after Libya’s six million inhabitants. His relationship with the rest of the world was erratic. For years, Gaddafi was known in the West as a pariah, blamed for the 1988 bombing of a Pan Am jumbo jet over Lockerbie, Scotland, which killed 270 people. After years of denial, Libya acknowledged responsibility and agreed to pay up to $10m to relatives of victims; Gaddafi also declared he would dismantle all weapons of mass destruction.

Continue Reading →

Global Media & Entertainment / சாதகப்பறவைகள் இணைந்து வழங்கும்.. வணக்கம் ஐரோப்பா

50 ஆண்டுகளாக இசைப்பணியாற்றிவரும் இசைமேதை L.R ஈஸ்வரி கலந்துகொள்ளும் இசைநிகழ்ச்சி. L.R ஈஸ்வரியுடன், ”கோ” ”ரௌத்திரம்” ”சரோஜா” புகழ் ரனீனா ரெட்டி, ”போக்கிரி” ”வில்லு” ”சங்கீத மகாயுத்தம்”…

Continue Reading →

மீள்பிரசுரம் : பாரதி, மகாகவி: வரலாறு

கோவை ஞானிமகாகவி பாரதியார்[மீண்டும் இணையத்தில் ‘பாரதி மகாகவியா’ என்பது பற்றிய விவாதத்தை பிரபல தமிழ் எழுத்தாளரொருவர் தனது வலைப்பதிவில் ஆரம்பித்து வைத்துள்ளார். ‘பாரதி பற்றிய இத்தகைய விவாதம் தமிழ் இலக்கிய உலகிற்கொன்றும் அந்நியமானதல்ல. 1936இலிருந்து இவ்விதமான விவாதங்கள் தமிழ் இலக்கிய உலகில் நடைபெற்று வந்திருக்கின்றன; இனியும் வரும்.. கோவை ஞானியின் ‘பாரதி, மகாகவி: வரலாறு’ என்னுமிந்தக் கட்டுரை இத்தகைய விவாதங்களுக்கெல்லாம் நல்லதொரு பதிலாக அமைந்திருக்கின்றது. காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ‘ஞானி கட்டுரைகள் – III – தமிழ்க் கவிதை’ என்னும் நூலில் வெளியான இக்கட்டுரையினை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமானதென்பதால் ‘பதிவுகள்’ அதனை மீள்பிரசுரம் செய்கிறது. ]   1936 வாக்கில் தமிழகத்தில் பாரதியார் மகாகவி இல்லையா என்ற விவாதம் எழுந்தது. காரைக்குடியில் வ.ரா. பேசும்போது பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு சேக்ஸ்பியரோ செல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினாராம். பாரதியாரை மகாகவி என்று அடைமொழி தந்து நூல் எழுதியதோடு, தன் காலம் முழுவதும் பாரதி புகழ் பாடுவதையே தன் கடமையாக வ.ரா. கொண்டிருந்தார். வ.ரா.வின் கருத்து கடுமையான சர்ச்சைக்குள்ளாகியது. சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், தினமணி ஆகிய இதழ்களில் ‘நெல்லை நேசன்’ என்ற புனைபெயரில் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் தமிழ்க் கவிதையில் பாரதியின் இடத்தைக் கேள்விக்குரியதாக்கி எழுதினார்கள். பாரதியைத் தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், சேக்ஸ்பியர், செல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்கள்.கு.ப.ராவும் சிட்டியும் விரிவாக மறுப்பு எழுதினார்கள். ஓமர் முதலிய பெரும்கவிஞர்கள்பலரோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு நிகராக பாரதியை மகாகவி என்றார்கள்.

Continue Reading →

மீள்பிரசுரம்: மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

தேசியக் கவி சுப்ரமணிய பாரதி

பாரதியார்‘பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர். பல்துறை அறிஞர், தொலை நோக்கினர், அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய தமிழகத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப் போரில் பாரதியின் பாடல் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தது’. – ச. மெய்யப்பன், எம்.ஏ. [அண்ணாமலைப் பல்கலைக் கழகம்] –

Continue Reading →

மீள்பிரசுரம்: ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள்

ஆய்வின் முன்னுரை
மகாகவி பாரதியார்மகாகவி தாகூர்நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான்.  எளிய சந்தம்.  எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

மீள்பிரசுரம்: ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள்

ஆய்வின் முன்னுரை
மகாகவி பாரதியார்மகாகவி தாகூர்நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான்.  எளிய சந்தம்.  எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

NAPP Canada JOBFAIR: Thurs. Oct. 20 Mississauga International Centre

List of Employers for JOB FAIR and Training Expo THURS. OCT. 20, 2011  International Centre – Mississauga. PLEASE forward this email to friends. NAPP Canada  Jobfair and Training Expo HAPPENING 

DATE:         Thursday Oct 20, 2011
LOCATION:  International Centre, 6900 Airport Road, Mississauga, ON L4V1E8 (corner of Airport and Derry Road) Public transit: Malton GO Trains stop, GO Bus, TTC, Brampton Transit, Mississagua Transit
TIME:         10:00AM – 3:00PM  Lots of Free Parking,  Free Admission, Open to the Public

Continue Reading →