பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு

- முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர் –முன்னுரை
வயிற்றுப் பசிக்காக உண்ணுகின்ற மனிதன் முதலில் பழங்களையும், பின்னர் கிழங்கு மற்றும் தானிய வகைகளையும் உண்டிருக்க வேண்டும். நெருப்பைக் கண்டறிந்த பின்னர் கிழங்குகளை நெருப்பில் போட்டு வேகவைத்து அதன் சுவையை அறிந்திருக்க வேண்டும். காட்டில் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றி எரிந்தபோது, அங்கு வாழும் விலங்குகள் சில நெருப்பில் சிக்கி இறந்தன. அவற்றைப் பார்த்த மனிதன் கிழங்கு என்றெண்ணி இறைச்சியை உண்டிருக்கிறான். கிழங்கு இல்லை இறைச்சி தான் என்று அறிந்த பழங்கால மனிதர்கள் அவற்றின் சுவையின் காரணமாக அதனை விரும்பித் தின்றிருக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக மனிதன் சைவ உணவில் இருந்து அசைவ உணவுக்கு வந்திருக்கலாம். சைவ உணவை விட அசைவ உணவில் சக்தியும், வலிமையும் அதிகம் இருப்பதாக இன்றளவும் மக்களிடையே ஒருவித மனப்போக்கு காண முடிகிறது.

மீன் உணவு
நெய்தல் நில மக்களின் முக்கிய உணவு மீன் உணவாகும். மீனை உணவாகக் கொள்வதன் வாயிலாகப் பல்வேறு புரதங்கள் உடலில் சேர்கின்றன. நெய்தல் நிலத்தில் பெறப்பட்ட இவ்வுணவு அனைத்து நிலங்களுக்கும் கொண்டு செல்லப்பெற்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆற்றிலே நன்கு கட்டப்பட்ட தூண்டில் கோலினால் பாண்மகள் மீன் பிடிக்கும் காட்சியினைப் பின்வரும் பாடல் காட்டுகிறது.

“நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல்
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்” (அகம்.216:1-3)

என்ற அடிகளில், வஞ்சி ஒருத்தி விறகினால் மீனைச் சுட்டு தன் தந்தைக்குக் கொடுப்பதை அறியலாம். உழவன் ஒருவன் விடியற்காலத்தே எழுந்து வாரல் மீனைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி மணக்கும் குழம்பு வைப்பதையும், அந்தக் குழம்புக்கு ஏற்றப்படி அரிசியால் செய்த சோற்றினைச் சேர்த்து உண்டு மகிழ்ந்ததையும்,

“கருங்கண் வராஅல் பெருந்தடி மளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு” (நற்றி.60:4-6)

என்ற அடிகள் உரைக்கின்றன. இரவில் மீனை உண்ணுதல் (நற்:127), கொழுவிய மீன் உணவை உண்ணுதல் (நற்:159), பரதவர்கள் விடியற்காலையிலே உப்பங்கழியில் சென்று மீனைத் தேடிப் பிடித்தல் (நற்:372) போன்ற செய்திகள் பாடலடிகளில் பயின்று வருவதன் மூலம் பழந்தமிழ் மக்களிடையே மீன் உணவு பெற்றிருந்த செல்வாக்கினை அறியலாம். கடலிலே சென்ற பரதவர்கள் வலைவீசிப் பிடித்து வந்த மீன்களைக் குவியலாக மணலில் குவித்து வைப்பர் அந்த மீன்களை விற்றலும், கருவாடு ஆக்குதலும், மீனில் இருந்து எடுக்கக் கூடிய நெய்யை விளக்கிற்குப் பயன்படுத்தியதையும்,

Continue Reading →

ஆய்வு: புழங்கு பொருள் பண்பாட்டில் கலன்கள் (சங்க பாடல்களை முன் வைத்து)

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலகில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தாங்கள் வாழ்கின்ற புவியியற் சூழலுக்கு ஏற்பத் தங்களைச் சுற்றிலு காணப்படுகின்ற பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றுள் மனிதனின் அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் உணவே முதன்மையாக இருக்கிறது. இக்கட்டுரையானது உணவுகளை உண்பதற்கு மக்கள் பயன்படுத்தி வந்த கலன்களைக் குறித்ததாக அமைகிறது.

பண்பாடு
பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை ஆகும் என்கிறார் சீ. பக்தவத்சல பாரதி (1980: 160). மனிதன் சமூக உறுப்பினன் என்ற நிலையில் அவன் பயன்படுத்தும் பொருட்கள் அவை பற்றிய கருத்தாக்கங்கள் இவைகளின் கூட்டுச் சேர்க்கைப் பண்பாடாகும். இது புவியியல் பரப்பு, நாடு, மொழி, இனம் போன்றவற்றிற்கேற்றபடி வழங்கும் இயல்புடையது.பண்பாடு என்னும் சொல் பண்படுத்துதல் என்ற சொல்லிலிருந்து உருவானது எனலாம். ஏனெனில் பண்பாடு என்ற சொல் மனிதனோடு மட்டுமே தொடர்புடையது. இது பிற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது. பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை என்று பக்தவத்சலபாரதி (1980:160) குறிப்பிடுகிறார்.

பண்பாட்டினை மானிடவியலார் இரண்டாக வகைப்படுத்துகின்றனர். அவை, 1. பொருள்சார் பண்பாடு , 2. பொருள்சாராப் பண்பாடு என்பனவாகும். மக்கள் தங்களின் தேவைகளுக்காகச் செய்து கொள்ளும் அனைத்து வகையானப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பொருள்சாராப் பண்பாட்டில் பொருள் வடிவம் பெறாத அனைத்துக்கூறுகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் புழங்குபொருட்கள் அனைத்தும் பொருள்சார் பண்பாட்டினை அடையாளப்படுத்துவனவாக விளங்குகின்றன.

புழங்கு பொருள்
புழங்கு என்பதற்குக் கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழியகராதி (1990:1047) வழங்குதல் என்றும், தமிழ் லெக்சிகன் (1982:2793) கையாளுதல், புழங்குதல் என்றும் விளக்கம் தருகின்றன. எனவே புழங்கு பொருள் என்பது மக்கள் அன்றாடம் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்தி வந்த,வருகின்ற பொருட்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தொன்று தொட்டே செய்துவருகின்ற கைவினைப் பொருட்கள் யாவும் புழங்குபொருள் பண்பாட்டை அடையாளப் படுத்துகின்றன. லூர்து(1997:297), இயற்கை வளங்களைப்பண்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும்  மாற்றிக் கொள்வதையே புழங்கு பொருள்சார் பண்பாடு என்றும்; மானுடக்குழு ஒன்றின் தொழில் நுட்பத்திறனும் புழங்குபொருள் சார்ந்தகலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருட்களும் புழங்குபொருள்பண்பாட்டில் அடங்குகின்றன என்றும் குறிப்பிடுகின்றார்.

புழங்கு பொருட்கள் குறித்து ஆய்வுச் செய்த ரெஜித்குமார் (2009: 2)  மூன்றாக வகைப்படுத்தி கூறியுள்ளார். அவை, 1. உணவு சார்ந்த புழங்குபொருட்கள், 2. வீட்டுஉபயோகப் புழங்குபொருட்கள், 3. தொழிற்கள புழங்குபொருட்கள்என்பனவாகும்.

Continue Reading →

ஆய்வு: அகநானூறும் பாலைத்திணையும்

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 

அகநானூறு
சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:

1.களிற்றியானை நிரை (1 – 20)
2.மணிமிடை பவளம் (121 – 300)
3.நித்திலக்கோவை (301 – 400)

என்பனவாகும். இப்பகுப்பினை, 

“களித்த மும்மதக் களிற்றியானை நிரை
மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு 
அத்தகு பண்பின் முத்திறமாக 
முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை”

என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது.

இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.

Continue Reading →

ஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”

ஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”முன்னுரை:
மின்னல் வேக விரைவு உலகம் தனது அவசர நிலைக்கு ஏற்ப இலக்கியங்களையும் வடிவமைத்துக் கொள்கிறது. உலகின் புதியசூழலுக்கு ஏற்ப கவிதைகள் தனது வடிவத்தின் அளவைச் சுருக்கிக் கொண்டுக் கருத்தைச் செரிவாக்கிக் கொள்கின்றன. இந்த விதத்தில் ஹைக்கூ – சென்ரியூ -குக்கூ என்னும் கவிதை வடிவங்கள் தற்காலச் சூழலில் தோன்றிய வடிவங்களாகும். அந்த வகையில் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. ஆய்வு எல்லை கருதி அவரது
குழந்தைகள் நிறைந்த வீடு என்னும் கவிதைநூல் மட்டும் இங்கு உட்படுத்தப்படுகிறது.

கவிஞர்.நா. முத்துக்குமார் வாழ்க்கைக்குறிப்பு:
கவிஞர் நா.முத்துக்குமார் 1975-ல் பிறந்தார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் ஆகும். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் குறித்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், பாலகாண்டம்; கண் பேசும் வார்த்தைகள், குழந்தைகள் நிறைந்த வீடு, கிராமம், நகரம் மாநகரம் போன்ற பலநூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு மலையாளம், ஜெர்மன் ஆகிய  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப்பாடல்களை எழுதி மூன்று முறை ஃபிலிம்பேர் விருது, தேசிய விருது பெற்றார்.

ஹைக்கூ கவிதைகள் :
”தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.” 1 ஐக்கூ கவிதைகளை எழுதுபவர்கள் தமிழ்க் கவிதை வரலாற்றில் வானம்பாடி இயக்கம் போல அதி தீவிரமாக இக்கவிதை வடிவம் வளர இயங்குகின்றனர். ஐக்கூக்கள் சிற்றிதழ்கள் மூலமாகவும் இணைய இதழ்கள் மூலமாகவும் ஐக்கூத் தொகுப்புகள் மூலமாகவும் மிகப்பெரும் வளர்ச்சியைத் தமிழில் அடைந்திருக்கின்றன.

”ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது. துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது” 2 என .ஐக்கூவின் தன்மைகள் விளக்கப்படுகின்றன. இவ்வாறான இக்கவிதை வடிவில் தமிழில் பலரால் எடுத்துக் காட்டப் பெற்ற கவிதைகளை எழுதியவர் கவிஞர் நா.முத்துக்குமார் ஆவார்.

கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்:
பயணங்களின் ஜன்னல்களே கவிஞர் ஹைக்கூ வானத்தை வர்ணம் மிக்கதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை அவர் டெல்லியில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவிற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணித்து கொண்டிருந்த போது ஜனவரி மாத வடஇந்தியாவின் பருவநிலை எலும்பை உருக்கும் குளிராக கண்முன் விரிகிறது. பனி, பனி எங்கு பார்த்தாலும் பனி, பனியின் வெண் சிறகுகள் ரயிலை மூடுகின்றன. கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பனி அமாந்திருக்கிறது.

Continue Reading →

ஆய்வு: வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

- முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல். -தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம் என பல முகங்களைக் கொண்டது ஆகும். இவற்றுள் இக்கால இலக்கியமும் ஒன்று. கவிதை, சிறுகதை, நாவல் முதலானவை இவ்வகையைச் சாரும். கவிதை படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் வைரமுத்து. இவரது படைப்புகளில் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்னும் நூலில் அமைந்த சமுதாயச் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது

கவிதை
கவிதை என்பது ஒரு கலையாகும். கவிஞர் தான் பெறும் அனுபவங்களைக் கற்பனை நயத்துடனும், கருத்துச் செறிவுடனும் ஒலிநயம், உணர்ச்சி, இனிமை, எளிமை ஆகியவற்றைக் கலந்து கவிதை வடிவங்களாகத் தருகின்றார். கவிதை குறித்து கவிமணி,

உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை (மலரும் மாலையும், ப.51)

என்று கூறுகின்றார். கவிஞரின் கருத்திற்கேற்ப கவிதையின் பாடுபொருள் அமையும்.

கவிதையின் வகைகள்
கவிதை இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யாப்பிலக்கணத்தோடு வரையறைக்கு உட்பட்டு அமைவது மரபுக்கவிதை என்றும், இலக்கணமின்றி வரையறையற்று அமைவது புதுக்கவிதை என்றும் வழங்கப்படுகின்றது. புதுக்கவிதைக்கு இலக்கணம் கூறுகையில் பாரதியார்,

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொல் புதிது சோதிமிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை (பாரதியார் கவிதைகள், பக்.318-319)

என்று கூறுகின்றார். பாரதியைத் தொடர்ந்து பல கவிஞர்கள் புதுக்கவிதை இலக்கியத்திற்கு வலுசேர்த்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வைரமுத்து ஆவார்.

கவிஞர் வைரமுத்து
புதுக்கவிதை இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். தற்காலக் கவிஞர் பெருமக்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர். வானம்பாடி இயக்கத்தைச் சார்ந்தவர். இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் படைப்புகளைப் படைத்துள்ளார்.
சமுதாய முன்னேற்றத்தில் இலக்கிய படைப்பாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இலக்கியம் அன்றி மக்களின் வாழ்க்கையையும் கவிஞர் வைரமுத்து தம் கவிதைகள் உலகிற்குப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

Continue Reading →

ஆய்வு: சங்கப் புறப்பாடல்கள் புலப்படுத்தும் தமிழர் பண்பாட்டில் மலர்கள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்திரிக்கும் இலக்கியச் சான்றுகளுள் மிக முக்கியமானவை சங்க இலக்கியங்களாகும். இவை அகம், புறம் என்னும் இருகூறுகளை கொண்டு விளங்குகின்றன. இயற்கையை மையமிட்ட அக்கால வாழ்க்கைச் சூழலில் எங்கும் எழிலுற விளங்கிய இயற்கைவளமே தமிழரின் வாழும் இடமாகவும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்ந்துள்ளது. நாட்டையாளும் வேந்தர்கள் முதல், பொது மாந்தர்கள் வரை இவர்களின் புறவாழ்க்கையை விளக்கும் பகுதியாகச் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எட்டுத்தொகையில் அமையபெறும் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து நூல்களாகும். இவ்விரு புறநூல்களை முதன்மையாகக் கொண்டு வேந்தனின் அடையாளம் மற்றும் போர்குறிப்பு அவனது நாட்டுவளம், கொடைத்தன்மை என மன்னர்களின் புறவாழ்க்கையையும் உணவு, உடை, அணிகலன்களிலும் கணவன் இல்லாதபொழுது பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குமுறைகள் என மாந்தர்களின் புறவாழ்க்கையிலும் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மலர்கள் இருந்துள்ளன என்பதைத் தக்கச் சான்றுகள் கொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேந்தனின் அடையாளம் மற்றும் போர் நிகழ்வுகள்
தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வது அடையாளப்படுத்துதல் என்பதாகும். நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார், முடி ஆகிய ஐந்தும் சின்னங்களாக விளங்கியுள்ளன. இவற்றில் தார், முடி ஆகிய இரண்டும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதன் மூலம் அம்மன்னர்களை அடையாளங் காணும் முறை வழக்கில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் மூவேந்தர்களுக்குள் எழும் பகையின் போது வீரர்களின் போர் நோக்கத்தைப் புலப்படுத்த மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை,

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தே வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறம். 1006)

எனும் தொல்காப்பிய நூற்பாவும்,

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே (புறம். 45)

எனும் கோவூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலும் மூவேந்தர்கள் சூடிய அடையாள மலர்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

Continue Reading →

ஆய்வு: பதிற்றுப்பத்தில் உவகை

- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -இலக்கியம் என்பது கற்பனையால் விளையும் பாடுபொருளை உடையது. இலக்கியம் எனும் சொல் தொகை நூல்களுள் எங்கும் காணப்படவில்லை என்றாலும் பாடல், கவிதை, பாட்டு, செய்யுள்,நூல், பனுவல், ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் இருந்து பெறப்படும் பிற பொருள்களாவன போர், வீரம், கொடை, சமுதாய நடை பற்றிய சான்றோர்களின் அறவுரை, அறிவுரை என்பன. இத்தகைய சிறப்புப் பெற்ற நம் இலக்கியத்தில் இலக்கியக் கோட்பாடுகளும் இயைந்துள்ளன. இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானவை இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள் பலவாகும். இவையே முன்னம்,மரபு, உவமை, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, மெய்பாடு, வண்ணம், வனப்பு, யாப்பு, என்ற இப்பத்துக் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றைத் தனித்தனி இயல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு மெய்பாட்டில் காணலாகும் உவகையினை பதிற்றுப்பத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

மெய்பாடு
மானுடக்குலத்திற்கு உரியது மெய்பாடு. அது உலக முழுமைக்கும் பொதுவானது மனித உணர்வைக் கண்ணால் காணுமாறும், செவியால் கேட்குமாறும், மெய்பட மெய்யியல் படக்காட்டுவது மெய்பாடு. எண்வகை மெய்பாடுகளும் இயல்பில் தோன்றும் இடம் அகம். அகத்தில் ஏற்படும் உணர்வினை மெய்காட்டுகின்றது. இவ்வாறு மெய்பாடுகள் அகவாழ்விற்குப் பொருந்தும் மெய்பாடுகளாகவும் என்றும் புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் காட்டப்படுகின்றன.

மெய்பாட்டினை தொல்காப்பியர் தனியாக ஒரு இயலில் வகுத்துள்ளார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்பாடென்ப”( தொல்:பொருள்:24)

என்று எண்வகை மெய்பாடுகளை உரைக்கிறார். இதில்

நகை – எள்ளல், இளமை, பேதைமை, மடம்
அழுகை – இழிவு, இழவு, அசைவு, வறுமை
இளிவரல்- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை,
மருட்கை- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
அச்சம் – அணங்கு, தெய்வம், விலங்கு, கள்வர்,
பெருமிதம் -கல்வி, தறுகண்மை, புகழ், கொடை
உவகை – செல்வம்,புலன், புணர்வு, இன்பவிளையாட்டு

அகப்பொருட் பாடல்களில் உவகை, அழுகை, இளிவரல், மருட்கை, நகை, என்ற சுவைகளும் புறப்பாடல்களில் நகை, அழுகை, இளிவரல், வெகுளி, மருட்கை பெருமிதம் என்ற சுவைகளும் உணர்த்தப்படுகின்றன.

Continue Reading →

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் அகமரபு மாற்றம்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியங்களோடு செவ்விலக்கியமாகப் போற்றுமளவுக்கு சிறப்புடயது முத்தொள்ளாயிரம். வெண்பா யாப்பில் மூவேந்தர்களின் புகழினைப் பாடுவதற்கென்று எழுந்த நூலாகும். இந்நூல் சேர சோழ பாண்டியர்களின் புகழினைப்பாடும் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகவும் இந்நூலில் மூவேந்தர்களை பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர் சுட்டிப் பாடாமல் வேந்தர்களும் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்நூல் புறத்திரட்டு என்ற தொகுப்பிலிருந்து 108 வெண்பாக்கள் மூவேந்தர்களை ஒவ்வொருவரையும் கூறப்படுவதால் இந்நூல் முத்தோள்ளாயிரம் என்ற பெயர் பெற்றது எனலாம். முத்தொள்ளாயிரத்தின் கால வரையறை மற்றும் பாடல் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு. புறத்திரட்டைப் பதிப்பித்தப் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை இதன் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு என்று முன் வைக்கிறார். இதனை பல்வேறு அறிஞர்கள் பலரும் பல்வேறு தரப்பில் உரைக்கின்றனர். இதை

கா.கோ. வேங்கடராமன்    – கி.பி. 5ஆம் நூற்றாண்டு
வையாபுரிப்பிள்ளை    – கி.பி. 9ஆம் நூற்றாண்டு
வி. செல்வநாயகம்    – கி.பி. 6ஆம் நூற்றாண்டு
நாராயண வேலுப்பிள்ளை    – கி.பி. 5ஆம் நூற்றாண்டு
என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் முத்தொள்ளாயிரக் காலத்தைக் குறிப்பிடுகின்றனர்.

முத்தொள்ளாயிரம் சங்ககாலத்தின் பிற்பகுதியில் ஒட்டி எழுந்த நூலாகக் கருதப்படுகிறது. பல தனிப்பாடல்களின் தொகுதியாக அமைகின்றது. சங்க அக மரபு செல்வாக்கை இந்நூல் பெற்று திகழ்கிறது. இன்று முத்தொள்ளாயிர பாடல்கள் 108 பாடல்களே கிடைக்கின்றன. இதனுடன் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என் யூகத்தில் சிலர் சேர்க்கப்பட்டு 130 பாடல்களை முத்தொள்ளாயிரப் பாடல்களாக சேது ரகுநாதன் பின்பு எழுதி கதிர்முருகு போன்றோரால் அடையாளங் காணப்பட்டுள்ளது. முத்தொள்ளாயிர பதிப்புகளை இனங்கண்டு இறுதியாக 109 பாடல்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இதனை சேதுரகுநாதன் மட்டும் சைவசித்தாந்த பதிப்பின் வழியாக 130 பாடல்கள் உடையது என்ற கருத்தை முன்மொழிகிறார். மேலும் பிறர் ஆசிரியர்களின் நூற்பாக்களின் எண்ணிக்கையில் வேறுபட்டு 130 நூற்பாக்களை (பாடல்கள்) உடையது இதனை நோக்கும்போது முத்தொள்ளாயிரத்தின் வளர்ச்சி என்றே எண்ணத்தக்கது கிடைக்கப்பெற்ற 108 பாடல்களில் அகத்திணையின் ஓரே திணை கைக்கிளையில் மட்டும் 65 பாடல்கள் அமைந்ததோடல்லாமல் சங்க அக இலக்கிய மரபின்று பெரும் மாற்றுத்தினைப் பெற்றிருக்கின்றது.

Continue Reading →

ஆய்வு: கம்பகாவியத்தில் கனவு வெளிப்பாடு

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?கனவு மனித மனத்தின் உள்வெளிப்பாடு, மனித வாழ்வில் இது இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதன் கனவுகாண்பதையே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அடக்குகின்றான். இன்றைய நிலையில் கனவினை உளவியல் கோட்பாட்டிற்குள் அடக்குவதை காணமுடிகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை கனவு வருங்காலத்தின் வெளிப்பாடாக இலக்கியத்திலும் காப்பியத்திலும் முன்வைப்பதை அறியலாம். மனிதனே இதற்கு முதன்மையானவனாக உள்ளான். அத்தகைய மனிதன் எக்காலத்திலும் கனவு காணும் இயல்புடையவனாக இருந்துள்ளான். அவர்களுள் அருவமாக கனவினைக் காவியப் புலவர்கள் தம் படைப்புகளில் அழகுறக் கையாண்டுள்ளனர். கனவுகளைப் பற்றியும், அவை கம்பகாவியத்தில் இடம்பெற்றிருக்கும் விதம் பற்றியும் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

கனவுகளைப் பற்றிய அறிஞர்களின் கோட்பாடுகள்:
• கனவுகள் கடவுளாலோ, கடவுட்தன்மை உடையவர்களாலோ ஏற்படுவன அல்ல; மனித உள்ளத்தில் இயல்பாகத் தோன்றுவனவே என்பது அரிஸ்டாட்டிலின் கொள்கை, மேலைநாட்டு உளவியல் அறிஞர்களான சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund Freud), கார்ல் யங் (Carl Jung), ஆல்ஃபிரெட் அட்லர் (Alfred W. Adler) முதலியோர் கனவுகளைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு விதமான முடிவுகளைக் கூறி இருக்கின்றனர். அதில்,

• கனவுகள் வருங்கால வாழ்வின் உருவெளித் தோற்றமே என்றும், ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கைப் போக்கை உய்த்து உணர்ந்து கொள்வதற்கும், அல்லவை கடிந்து தன்னைத் தானே திருத்திக் கொள்வதற்கும் அவை பயன்படுகின்றன என்றும் அட்லர் கருதினார். ஆனால்,

• யங் என்பார் நிகழ்காலத்தில் விளையும் சிக்கல்களால் உருவாக்கப் படுவனவே கனவுகள் என்று கூறுகிறார்.

• அறிஞர் ஃப்ராய்டு இவ்விருவரின் கொள்கைகளையும் மறுத்து, அடக்கப்பட்ட ஆசைகளும் நிறைவேறாத விருப்பங்களும் குறிப்பாகக் காம இச்சைகளே கனவுகள் தோன்றுவதற்குக் காரணம் என்று வலியுறுத்தினார். (The Interpretation of Dreams) இக்கருத்துமிகைப்பட்டது என்பதையும் தனது கொள்கைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பகுதியால் உணரத்தலைப்பட்டார், என்பதையும் 1920க்குப் பிறகு வந்த அவருடைய எழுத்துகள்காட்டும்.

• வடமொழி வாணராகிய கௌடபாதர் என்பார் கனவுகளை இறைவனோடு தொடர்புபடுத்திப் பேசி, அவை மனிதனுக்கு கடவுளால் காட்டப்படும் முன்னறிவிப்பு என்று மொழிகிறார். மேலைநாட்டு அறிவியல் உளவியல் நெறிநின்று ஆராய்ந்து நூல் எழுதிய டாக்டர் ராமநாராயணன் என்பவரும் கௌடபாதரின் கருத்தையே ஒப்புகிறார். “கனவுகள் என்பன தெரியாத மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றது” என்பது சுவாமி சிவானந்தரின் கருத்து; நடைமுறை வாழ்வில் காணப்படும் காரண காரிய நெறியே கனிவலும் அமைந்திருக்கிறது என்று இவர்களின் கூற்றை எடுத்து கூறுகிறார். (மா. இராமலிங்கம் இலக்கியத் தகவு பக்.11)

Continue Reading →

ஆய்வு: பார்வையற்றோருக்கான உதவு தொழில்நுட்பங்கள் – ஒரு பார்வை

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா? என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.

உதவு தொழில்நுட்பம் {assistive technologies}:
“பார்வைக் குறையுடையோர் படித்தல், எழுதுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லுதல், போன்ற செயல்பாடுகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலைப் போக்கி , அவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க உதவுவதற்காக, எளிதில் எடுத்துச்செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே, உதவு தொழிநுட்பமாகும்”. புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}, ஒலி உரை மாற்றிகள், உரை ஒலி மாற்றிகள், எழுத்துணரி, போன்றவைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவுதொழிநுட்பங்களாகும்.

பிரேயில் எழுத்தின் வரலாறு:
பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் இரவு நேரங்களிலும் ரகசியமாய் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கென ஒரு புதிய தொடர்பு முறையைக் கண்டறிந்தார் சார்லஸ் பார்பியர் (1767-1841). Night writing எனப்படும் இந்த முறை, புள்ளிகளும், கோடுகளும் நிறைந்தது. இருட்டிலும் இவற்றை ராணுவத்தினர் கைகளால் தடவிப் பார்த்துத் தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். [ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரளாறு ப. 24] இந்த முறை கடினமாக இருப்பதாகக் கருதப்பட்டு ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம் தளராத பார்பியர் இம்முறையைப் பார்வையற்றோருக்கான தொடர்பு முறையாகப் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். 1822-ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்த பார்வையற்றோர் பள்ளியான The Royal Institute for the Blind-க்குச் சென்று தனது கண்டுபிடிப்புக் குறித்து விளக்கி, தனது ஆசையையும் தெரிவித்தார். அங்குபடித்த மாணவன் லூயி பிரேயில், பார்பியர் முறையில் இருந்த 12 புள்ளிகளை 6-ஆக குறைத்தார். அந்த 6 புள்ளிகளுக்குள்ளேயே அனைத்தையும் அடக்கினார். இன்று உலக மொழிகளின் எழுத்துகள், சுருக்கெழுத்துகள், குறியீடுகள், எண்கள், கணிதக் குறியீடுகள், இசைக் குறியீடுகள் என அனைத்துமே இந்த 6 புள்ளிகளுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த 6 புள்ளிகளைக் கொண்டு 63 வடிவங்களைத்தான் உருவாக்கமுடியும் என்பது சுவாரஸ்யமானதும், சவாலானதும் கூட. இவ்வெழுத்துமுறை பிரேயில் எழுத்து என அழைக்கப்படுகிறது.

Continue Reading →