கலித்தொகையில் அறக் கருத்துக்கள்

- இரா. முத்துப்பாண்டி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழவேள்; உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் மக்களின் அனுபவத்தால், நெறிமுறையால் விளைந்த கருத்துக்களின் தொகுதி அறமாகும். அறக்கருத்துக்கள் மக்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து வாழ்வை செம்மையுறச் செய்கின்றன. அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்காக வழங்கப்பட்டு வருகின்றன. தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன. வீடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் அறத்தின்படியே விளங்க வேண்டும். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை சிலப்பதிகார பாடல் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

Continue Reading →

What Atwood can teach Ford about Toronto

Doug Ford, the chattier contingent of the Brothers Grim now running Toronto, is itching to close local Toronto libraries. But he has retreated uneasily from his bluff statement about library-defender Margaret Atwood that “If she walked by me, I wouldn’t have a clue who she is.” Now he says, confusedly, “Everyone knows who Margaret Atwood is but if she were to come up to 98 per cent of the people, they wouldn’t know who she was.” Rob and Doug, this is untrue. I have seen Atwood walk down a Toronto street, arm in arm with her daughter. You should have seen the reaction of Torontonians. A gape, a gasp, an elbow in the ribs, a pantomime “Did you see her? It’s Margaret Atwood!” Then they smile proudly, as if they have been given the key to the city of Toronto, which they sort of have been. But that’s not my quarrel with Mayor Ford’s smarter — which is not saying much — sibling. It’s what followed that rankled.Doug Ford, the chattier contingent of the Brothers Grim now running Toronto, is itching to close local Toronto libraries. But he has retreated uneasily from his bluff statement about library-defender Margaret Atwood that “If she walked by me, I wouldn’t have a clue who she is.” Now he says, confusedly, “Everyone knows who Margaret Atwood is but if she were to come up to 98 per cent of the people, they wouldn’t know who she was.” Rob and Doug, this is untrue. I have seen Atwood walk down a Toronto street, arm in arm with her daughter. You should have seen the reaction of Torontonians. A gape, a gasp, an elbow in the ribs, a pantomime “Did you see her? It’s Margaret Atwood!” Then they smile proudly, as if they have been given the key to the city of Toronto, which they sort of have been. But that’s not my quarrel with Mayor Ford’s smarter — which is not saying much — sibling. It’s what followed that rankled.

Continue Reading →

“படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு ஆன்ம பலம் வேண்டும”; நீர்கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் பயணித்த படைப்பாளியின் வாழ்வனுபவம். மணிவிழாக்காணும் முருகபூபதியுடன் நேர்காணல்

எழுத்தாளர் முருகபூபதிஅவுஸ்திரேலியா முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி பிறந்தவர். இன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 ஆம் ஆண்டு விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் தோன்றியபோது அங்கு முதலாவது மாணவனாகச்சேர்ந்து 1963 இல் புலமைப்பரிசில் பெறறு; யாழ். ஸ்ரான்லி கல்லூரியிலும் பின்னர் நீர்கொழும்பு அல்ஹிலால ; மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர். 1972 இல் படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் அறிமுகமானவர்.  சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் இதுவரையில் 18 நூல்களை எழுதியிருப்பவர்.

Continue Reading →

‘பூ வனம்’ வலைப்பதிவு: தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்நெருங்கிய ‘மடத்து’ நண்பர்களுக்கு ஜே.கே. ஊருக்கு, உலகத்துக்கெல்லாம் ஜெயகாந்தன். பெற்றோர் வைத்த பெயரும் அதுவே. இந்த அடலேறு பிறந்த இடம்: மஞ்சக்குப்பம்; கடலூரின் ஒரு பகுதி. ஜெயகாந்தனின் எழுத்துப் பற்றி, தனக்கு வெளியேயான புறவுலகை அவர் பார்த்த பார்வையான அவரின் எழுத்தின் சாதனை பற்றி நிறையப் பேர் நிறைய எழுதிவிட்டார்கள். அவர்களில் வாசகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என்று நிறையப் பேர். பொதுவாக எழுத்தாளர்கள் இன்னொரு எழுத்தாளரைப் பற்றி விமர்சன ரீதியில் எழுத நிறைய யோசிப்பார்கள். இது பொதுவாக ஒரு எழுத்தாளர் குணம். இவர் விஷயத்தில் அவர்களிடையே அந்த யோசிப்பும் இல்லாது போயிற்று நல்லதாயிற்று. அவரது இளமைப் பருவத்தில், விந்தன் நடத்திய ‘மனிதன்’, இஸ்மத் பாஷாவின் ‘சமரன்’, மாஜினியின் ‘தமிழன்’, தோழர் விஜயபாஸ்கரனின் ‘சரஸ்வதி’, மற்றும் ‘தாமரை’ ஆகிய இதழ்களுக்கு தமது எழுத்துக்கள் பிரசுரமாக இலாயக்கான பத்திரிகைகள் இவையே என்று இவரே தெரிவுசெய்து தமது கதைகளைக் கொடுத்திருக் கிறார். இவைகளே எழுதுவதற்கு இவர் நடை பழகிய பத்திரிகை களாகவும் ஆயிற்று.

Continue Reading →

‘தீராத பக்கங்கள்’ வலைப்பதிவிலிருந்து: செகாவுக்கு வயது 150!

அண்டன் செகாவ்ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டில் பிறந்து 1904 வரை 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் மகத்தான இலக்கியச் சாதனைகளை நிகழ்த்தியவர். எனக்கு செகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான- தேர்ந்த வாகரும், விமர்சகருமான- எஸ்.ஏ.பெருமாள் அவர்களே, இங்கும் செகாவைப் பற்றி சொல்கிறார்…   செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இது வம்ச பரம்பரையாக நீடித்தது. எண்பது ரூபிள் கடனுக்காக அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் அடிமைகளாயினர். கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டு விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ்.

Continue Reading →

மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை அழிக்கமுடியாது : கார்த்திகேசு சிவத்தம்பி

பேராசிரியர் கா.சிவத்தம்பியுடனொரு நேர்காணல்..[நேர்காணல் : கல்பனாதாசன்.  (இந்நேர்காணல் புதிய பார்வை 16 – 31 அக்டோபர், 1-15 நவம்பர் 1997 இதழ்களில் வெளிவந்தது. நன்றி : புதிய பார்வை. மேற்படி நேர்காணல் ‘இனியொரு’ இணையத் தளத்திலும் மீள்பிரசுரமாகியுள்ளது. நன்றி: இனியொரு.காம்]

மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை அழிக்கமுடியாது : கார்த்திகேசு சிவத்தம்பி நீங்கள் ஆய்வு, திறனாய்வுத் துறைக்கு வந்த பின்னணி என்ன?

பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது தான் கைசலாசபதியோடு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழைப் பேசி நடிப்பதில் இருவருக்கும் புகழ் இருந்தது. எனக்கு நாடகங்களின் மூலம் நடிப்புப் பின்புலமும் அமைந்தது.பின்னர் 4 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டு எம்.ஏ.ஆயத்தம். நான், கைலாசபதி, தில்லைநாதன் (பேராதனைப் பல்கலைப் பேராசிரியர்) மூவரும் ஒன்றாக எம்.ஏ. செய்தோம். இது ஐம்பதுகளில் நடந்தது. இந்தக் காலகட்டத்தில் இடதுசாரி எழுச்சி காணப்பட்டது. அந்த எழுச்சியில் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு வந்தது. அந்தச் சமயத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் இருந்தது.

Continue Reading →

“வேதாவின் கவிதைகள்!” ஓர் மதிப்பீடு!

வேதா  இலங்காதிலகம்ஆழ வேரூன்றி! அகலக் கிளைகள் பரப்பி!
வானோக்கி உயர்ந்து! விரிந்து விருட்சமாகி!
விழுதுகள் பல இறக்கி!
எங்குமாய் வியாபித்து
நின்று நிழல் கொடுக்கும்
இந்த ஆலமரத்தின்
அடி முடி தேடுவது என்பது
அவ்வளவு சுலபமானது அல்ல… 

Continue Reading →

பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுக் கட்டுரை: புதிய வார்த்தை

பேராசிரியர் கா.சிவத்தம்பிஅ.முத்துலிங்கம்எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது.   ….   காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவை தள்ளுகிறான்  இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். துங்குபவர்களில் ஒருவர் சிவத்தம்பி, மற்றவர் அவருடைய அறைவாசி. இருவரையும் இளைஞன் உற்றுப் பார்த்தபடி காத்திருக்கிறான். கையை நீட்டி, முறித்து, உறுமி கண்விழிக்கிறார் சிவத்தம்பி. என்னைப் பார்த்ததும் சிரித்து எழும்பி பேசத் தொடங்குகிறார். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். முழுக்க முழுக்க இலக்கியம்தான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அப்படிச் சென்று அதிகாலை உட்கார்ந்திருந்ததற்கு காரணம் இருக்கிறது. காலையில் சிவத்தம்பி யாரை முதலில் சந்திக்கிறாரோ அதன்படியே அன்றைய நாளின் திட்டம் உருவாகும். அன்றைய நாளை நான் கைப்பற்றி விடுகிறேன். நாங்கள் இருவரும் பக்கத்திலே இருக்கும் காந்தி லொட்ஜிற்கு காலை உணவு சாப்பிட நடந்து போகிறோம். வழக்கம்போல சாப்பாட்டுக்கான பணத்தை சிவத்தம்பியே கட்டுகிறார்.

Continue Reading →

“பேராசிரியர் கா.சிவத்தம்பி: ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழின் குறியீடு” சூழலியலாளர் ஐங்கரநேசன் அஞ்சலி!

பேராசிரியர் கா.சிவத்தம்பிபொ.ஐங்கரநேசன்பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பாலும் சென்று உலக அரங்கில் தமிழின் குறியீடாக நிலை பெற்றுள்ளார் என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்களின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில், தமிழ் கூறும் நல்லுலகில் புலமையாளராக, ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக மிளிர்ந்தவர் பேராசிரியர்கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். தமிழ், தமிழர் பற்றிய சமூக வரலாற்றுப் பண்பாட்டுத் தேடுகையில் தனது ஆற்றல்களையும் அறிவுத் திறன்களையும் முழுமையாகக் குவியப்படுத்திச் செயற்படுத்திவந்த இவர், 20ஆம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வுப் போக்கைத் திசைமுகப்படுத்தும் பேராளுமையாக விளங்கி வந்துள்ளார்.

Continue Reading →

பேரறிஞர் சிவத்தம்பி அவர்கட்கு எமது அஞ்சலிகள்… …!

பேராசிரியர் கா. சிவத்தம்பிபண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.   
ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு சார்ந்து பேராசிரியர் சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை.  இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி.  தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் அவர் விட்டுச்சென்ற தடங்கள் ஆழமும் விரிவும் மிக்கவை.

Continue Reading →