ஆசிரியம் ஒரு ஆச்சரியம்!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அன்பெனும் வழியெடுத்து
அறிவெனும் உளியெடுத்து
சிறந்த சிற்பங்கள் செய்யும்
செம்மையான சிற்பிகள் நீங்கள் !

நாளைய சமுதாயத்தை
நயம்பட படைக்க வேண்டி
நாளும் தவமிருக்கும்
நவயுக பிரம்மாக்கள் நீங்கள் !

தாம் பெற்றதனத்தும்
கசடறக் கற்றதனைத்தும்
தம்மக்கள் பெறவேண்டி
தவங்கிடக்கும் ஏணிப்படிகள் நீங்கள் !

Continue Reading →

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள் மூன்று!

கவிதைகள் படிப்போமா?

1. சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
காற்றின் இருத்தலைப் போல காமம்
வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைத்தேடி
கனவுகளோடு நானும்

தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
பண்பாட்டுப்பாறையின் சுமையில்
நிறம் மாறிய ஓவியமாக மனம்

துணையின் தேவையில் கண்டடைந்த
வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
முதல் காமமுத்தத்திற்காக!

Continue Reading →

காதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

இளமையிலும் காதல் வரும்
முதுமையிலும் காதல் வரும்
எக்காதல் இனிமை என்று
எல்லோரும் எண்ணி நிற்பர்
இளமையிலே வரும் காதல்
முதுமையிலும் தொடர்ந்து வரின்
இனிமை நிறை காதலென
எல்லோரும் மனதில் வைப்போம்

காதலுக்கு கண்ணும் இல்லை
காதலுக்குப் பேதம் இல்லை
காதல் என்னும் உணர்வுதனை
கடவுள் தந்தார் பரிசெனவெ
காதலிலே மோதல் வரும்
காதலிலே பிரிவும் வரும்
என்றாலும் காதல் எனில்
எல்லோரும் விரும்பி நிற்பார்

Continue Reading →

கவிதை : “எந்தன் உயிர்க் காதலியே!”

ஶ்ரீராம் விக்னேஷ்

வீடுகட்ட வாங்கிவைத்த மணலின்மீது,
விளையாட்டாய்க் குழிதோண்டிக் காலைமூடி,
பாதிஉடல் தானெனக்கு என்றேபேச,
மீதிஉடல் “நான்”என்று தோளில்குந்தி,
ஈருடலும் ஒருவரென்று எண்ணும்வண்ணம்,
இனிமையுடன் சிரித்தாயே சின்னஞ்சிறிசில் !
நாள்பொழுது மாதமாகி வருடங்களாச்சு,
நடந்ததெல்லாம் என்னுயிரே மறந்திடுவேனா…!

மணல்மேலே மனைபோட்டு : குடும்பம்போல,
மகிழ்ந்தோமே நான்அப்பா நீஅங்கே அம்மாவாக !
மறுபொழுது சண்டைவர : உருட்டுக்கம்பால், 
மடத்தனமாய் அடித்தேன்உன் தலையில்நானும் !
ஓடிவரும் உதிரமுடன் வீட்டுக்குஓடி,
உண்மைதன்னைச் சொல்லாமல் : “விழுந்தேன்”என்று,
ஆழ்மனதுக் காதலைநீ அறியத்தந்தாய்,
அதன்உண்மை அறியாநாம் இருந்தநாளில்!

Continue Reading →

இளஞ்சேய் வேந்தனார் கவிதைகள்!

- வேந்தனார் இளஞ்சேய் -

1. சிதறிப்போன ஆசைகள்

பனி பொழிந்ததின்று மாலையிங்கு
பள்ளிச்சிறுவர் பனியள்ளி வீசினர்
பார்க்கப் பார்க்க என்நினைவுகள்
புலத்து வாழ்வை எண்ணியேங்கின

சின்னச் சின்ன ஆசைகள்
சிதறிப் போன ஆசைகள்
வாலிபத்தில் இழந்து விட்ட
வசந்த காலப் பொழுதுகள்

ஊர்க்காற்றை சுவாசித்திட ஆசை
உருண்டு மண்ணில்புரள ஆசை
மழையில் கப்பல்விடவும் ஆசை
மாங்காய் எறிந்துவீழ்த்த ஆசை

Continue Reading →

கவிதை: புகையாய்ப் போயிடும் பசி!

கவிதை: புகையா போயிடும் பசி!நடந்து சென்று கொண்டிருந்தோம்
இருவருமே அவரவர் எண்ண ஓட்டத்தின் பாதையில்
வலப்புறம், இடப்புறம் என்று மாறிமாறி

வயிறு சற்று கணத்துப் பசிக்கத் தொடங்கியது.
‘நண்பா பசிக்குதுடா” என்றேன்
‘உம்” என்றான். உம் வலுவாயில்லாதிருந்தது.
அடிவயிற்றை அவ்வப்போது வருடியபடி நடக்கத் தொடங்கினேன்.

Continue Reading →

கவிதை: கவிதை!

- முல்லைஅமுதன்

தேடுவாரற்றுக் கிடந்த
அடர்ந்த மணற்புதருக்குள்
இருந்து எடுத்துவந்தார்கள்.
முகம் சிதைந்திருந்தது.
உடல் அமைப்பைக்கொண்டு
அடையாளம் கண்டு
முடியாமல் இருக்கிறது என்றார்கள்.
அவசரவண்டியுடன்,
காவல்துறையினரும்
வருவதாக
பேசிக்கொண்டார்கள்.
ஆங்காங்கே குண்டுகள் பட்டு
குருதியின் அடையாளத்தையும் கண்டார்கள்..
கள்வனாக இருக்குமோ?

Continue Reading →

கவிதை: என்ன சொல்லிவிடுகிறது மழைத்துளி…!!!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -தனித்தனியாய் விழுகிறோம்
தண்ணீராய் எழுகிறோம்…
வறண்டுவிட்ட பூமிக்காய்
வக்கணையாய் அழுகிறோம்..

வானத்தையும் வையத்தையும்
நீர்நூலால் கோர்க்கிறோம்…
முகிலோடு முகிலுரச
நன்னீராய் வேர்க்கிறோம்…

மெல்லமாய் விழுந்தாலும்
வெள்ளமாய்ப் பெருக்கெடுப்போம்…
ஆறு குளம் அத்தனையும்
செல்லமாய்ச் சிறையெடுப்போம்..

காதலுக்கும் தூது உண்டு
கல்லறைக்கும் தூது உண்டு – இது
சாதிமத பேதமின்றி நாங்கள்
சரிசமமாய்ச் செய்யுந் தொண்டு…

Continue Reading →

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்…

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்...

“கார்மேகமே வண்ண முமானதோ
கருவண்டே யிரு கண்ணென வானதோ
தூம்பு வடிவே சிரம ணிந்த இருகொம்பென யானதொ
முடிசூடிய கோனே யென்றலும் மணிமகுட மொன்றே;
தன்தலை யதனிலே மகுடமென வீற்றிருக்கு மிருகொம்புடனே
முடிசூடா மன்னனென உலவும் கோலங்கொண்டே
புவியழியும் தருண மெனினும் சிறுசலனமே துமற்றே
கூற்றுவனின் ஊர்தியாகிய தென்றதாலெ
தூற்றுவோ ராயிரமிங்கே.

Continue Reading →