கவிதை: அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள்.

- தம்பா (நோர்வே) -முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம் 
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.

அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி 
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.

தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான  ஆயுதம் அதுமட்டுமே.

Continue Reading →

கவிதை: பனிக்காலம்

கவிதை: பனிக்காலம்

டிசம்பர்  மாதத்து
வீட்டு  முற்றங்கள்
கனக்கத்  துவங்கின
மாலை  நான்கிற்கே
கவிகின்ற   காரிருள்
எடை  தாங்காமல் .. …

இலைகள்  உருவி  விடப்பட்ட
மரங்கள்  நிர்வாணமாய்த்  தெருவோரத்தில்
சின்னஞ்சிறு  மின்விளக்கு  போர்த்திய
கிறித்துவ  மரமும்  மான்  பொம்மைகளும்
கதகதப்பில்  அங்கொன்றும்  இங்கொன்றுமாக….

Continue Reading →

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 2!

 

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விளக்கீடு இன்று!

விளக்கீடு இன்றென்றாள் என் மனையாள்
வந்துமோதின அந்நாள் இனிய நினவுகள்
வகை வகையாய் சுட்டிகளை வைத்தே
வரிசையாய் விளக்கேற்றி நாம் மகிழ்ந்தநாள்

வீடெல்லாம் நிறையவே சுட்டி விளக்கேற்றி
வாழைத் தண்டை  வாசலினில் நட்டுவைத்து
வகையாக நன்கே எள்பொதியிட்டு எரித்தநாள்
வாராதோ மீண்டொருநாள் எம் வாழ்வில்

ஒளியேற்றி உறவுடனே கூடி ஒன்றாய்
ஓடியாடி மகிழ்ந்தே வாழ்ந்தவர் அன்றோ
விளக்கீடு வருவதும் தெரியாமல் நாமிங்கே
விரைவான வாழ்வில் வகையாக மாட்டுண்டோம்.

Continue Reading →

கவிதை: காலமும். கோலமும்..

- முனைவர் இரா. இராமகுமார் -

“காலையில் ஆதவன்
கதிரொளியால்
சிரிக்கும் போது
சரீரம் சிணுங்குகிறது.
மாலையில்
சூரியக்காதலன்
மங்கும்போது
மனமும் மயங்குகிறது.
இயற்கையே
உன் படைப்பில்
இன்பமும் இன்னலும்
செயற்கையாய்
கலந்த கலவையா….
இன்பவானில்
சிறகடிக்கும்
மானிடர்களும்
றெக்கை முளைத்த
பறவையா…..”

Continue Reading →

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

அவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்
தற்போது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும்,
என்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.
என்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.
எங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்
அது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.
காமத்தையும் காதலையும் அணுகாமல்
ஊண்ணுன்னும் உடம்பும்
உடலுள்ளிருக்கும் மனதும்
மனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல
உங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது
என்னுளிருப்பவளின் தீர்க்கமான விமர்சனம்.

Continue Reading →

கவிதை: வாழ்த்துதல் நன்றன்றோ!

- வேந்தனார் இளஞ்சேய் -

வாழ்த்துதற்கு நமக்கு நல்மனமது
வேண்டும்
வஞ்சமற்ற நல்ல நெஞ்சமது
வேண்டும்
இதயத்தில் வற்றாத இரக்கமது
வேண்டும்
இன்பமாய் இருந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

பாராட்ட நல்ல உணர்வது
வேண்டும்
பக்குவமான சிறந்த குணமது
வேண்டும்
நல்லதை ரசிக்கும் இயல்பது
வேண்டும்
நலமாய் சிறந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

Continue Reading →

தித்திக்கும் தீபாவளி திருப்பம் பல தந்திடட்டும் !

தித்திக்கும்  தீபாவளி திருப்பம்  பல  தந்திடட்டும்  ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ணவேண்டும் 
கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும்
பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும்
பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும்

உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும்
கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும்
நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும்

Continue Reading →

வைன் பொழுதுகள் (கவிதை)

கவிதை சுவைப்போமா?

கடும் சிவப்பு
திராட்சை ரசமெனும் வைன்
பலவேளைகளில்
சிலகதை சொல்லும்

காதல் என்றும்
காமம் என்றும்
இலக்கியமென்றும்
சினமாவென்றும்
ஏதேனும் சொல்லும்
சிலவேளை அரசியலும்.

வைன் பொழுதுகளில்
அதனுடன் காதலையும் காமத்தையும்
பற்றி பேசவே ஆசை கொள்வேன்.
வைன் பொழுதுகளில்
நீயும் நானும் எப்போதும் நெருக்கமானவர்களாக
இருப்போம்
உனக்கும் அவ்வாறிருக்கும்.

Continue Reading →

நோயும் நீ…! மருந்தும் நீ….! (கவிதை)

ஶ்ரீராம் விக்னேஷ்“பிணிக்கு  மருந்து  பிறமண் : அணியிழை
தன் நோய்க்கு  தானே  மருந்து”      (திருக்குறள் – 1102)

இதயத்தை  நிறைத்து  நோகும்
என்காயம்  மாற  உந்தன்,
அதரத்தின்  அழுத்தல்  அன்றோ
ஒளஷதம்  ஆகும்  கண்ணே…!
உதயத்தின்  தோன்றல்  போலே
உன்துணை  தந்து  என்னை
கதைதன்னில்  நாயக  னாக
கண்ணேநீ  ஆக்கு  ஆக்கு…!

உந்தனைக்  கண்ட  நாளாய்
உள்ளத்தால்  உருகி  நான்தான்
எந்தனை  மறந்தே  போனேன்..,
எதுமறியாப்  பித்தன்  ஆனேன்…!
வந்தெனை  அணைக்க  வேண்டும்,
வாழ்வில்நீ  கலக்க  வேண்டும்..,
சொந்தமாய்  ஆக  வேண்டும்..,
சொர்க்கத்தைக்  காட்ட  வேண்டும்…!

எத்தனையோ  பெண்க  ளோடு,
என்வாழ்வில்  பழகி  யுள்ளேன்..,
சுத்தமாய்  நெஞ்சில்  தொட்டுச்,
சுகித்தவள்  எவளும்  இல்லை…!
பித்தனாய்  ஆக்கி  என்னைப்,
பின்சுற்ற  வைத்தாய் : விந்தை..,
சொத்தென  எனக்கு  வேண்டும்..,
சொந்தமாய்  ஆகு  ஆகு…!

Continue Reading →

மகாகவிக்கு ஒரு மடல்

கால சக்கரத்தின் ஓட்டத்தில் இன்றும் நான் பார்வையாளரே

நன்மைகளை நினைவிலிருந்து எரித்தனர் நாகரிகம் என்று

நீ விதைத்த வார்த்தைகள் வளர்ந்தும் மரமாகவில்லை

இன்று நிமிர்ந்த நங்கைகள் கூட காணப்படுகின்றனர் காந்தமாக

மனமுடைந்து மரணிக்கின்றனர் நீ விளையாட சொல்லிய சிறுவர்கள்

Continue Reading →