ஜூன் 21 தந்தையர் தினக்கவிதை: அப்பா!

ஜூன் 21 தந்தையர் தினச்சிறப்புக்கவிதை:  அப்பா!

கட்டபொம்மனும்
கர்ண மகாராசனும்
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும்
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான்.

Continue Reading →

பேராசிரியர் கோபன் மகாதேவாவின் கவிதைகளிரண்டு!

மந்தாரத்திலும் மகிழ்வற வாழ்வு

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஆற்றலினால் ஆற்றி விட்டு ஆறுதலைத் தேடும் அவர்…

வேற்று நிர்ப்பந்தங்கள் நிதம்நிதம் நிமிர்த்தும் அவர்

கூற்றுக்கள் கவிதைகளைக் கடு கெதியில் பதிவதற்கு

ஊற்றுப் பேனாக்கள் பல உசார்நிலையில் காத்திருந்தும்…

ஏற்றுத் தான் வாழ்ந்து கொண்டு. வந்தபல இடர்களையும்…

நேற்றிருந்த பிரச்சனைகள் நாளைஇரா எனும்படியாய்

மாற்றாரையும் மதிப்பார் சமைக்கும் சிறு கறிகளுடன்

சோற்றையும் குழைத்திடுவார் சேர்ந்துஉண்டு மகிழ்ந்திடுவார்.

கூற்றைப் போல் ஒரு பக்கம் இடுப்பு என்றும் வலித்தாலும்

ஏற்றுப் பொறுத்திடுவார் தனக்கு வரும் நோ(ய்)க்களினை…

ஈற்றுஇருந்து தனிமையிலே ஈழத்தை நினைக்கையிலே

காற்றில்வரும் செய்தி-பல காதுகளைக் கடித்திடினும்…

வீற்றிருந்து படிக்கின்றார் விதம்விதமாம் நூல்களினை.

காற்றும் குளிர்கால மழைகள் புறம் ஊற்றிடினும்…

நோற்று வாழ்ந்துகொண்டு நான்-எனும் திமிர்இன்றிப்

போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்பர் என…

ஆற்றுகின்றார் இன்னும் தன் ஆக்கங்கள் மகிழ்வறத்தில்.

Continue Reading →

துயரச்சித்திரம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அத்தானே அத்தானே!

எந்தன் ஆசை அத்தானே!

கேள்வி ஒன்று கேட்கலாமா…. உனைத்தானே!.. – வான்

ஓலியில் கமழ்ந்து இனித்த  அந்தக் குரலின்

துயரம் என்னை அதிர வைத்தது!

புரட்சியில் வடிவெடுத்து

புது யுகங்களில்…

கலை இலக்கியங்களை

வகைப்படுத்தியவளே!

விதைப்புகள் தகர்ந்ததால்

சடுதியாய்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டு முனகினாயோ…

அதிசயமான அதிசயனின்

அரவணைப்பில் ஆழ்ந்தவளே…

உயர்ந்த கருத்துக்களில்

பொங்கிய விழுமியங்கள்

ஆழ்கடலின் மௌனம்போல்

அகவயத்தில் தொலைத்து

பூமியின் மடியில் மௌனித்து ஆழ்ந்தாயோ!

Continue Reading →

முகநூல்: தமிழினி ஜெயக்குமாரன் கவிதைகள் நான்கு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

1.உத்தரிக்கும் இரவு.

அசமந்தமாக நகரும்

சரக்கு ரயிலாக

எரிச்சலூட்டியபடி

நீளுகின்றது இரவு.

கடைசிக் கையிருப்பும்

முடிந்து போன

அந்தரிப்பில்

முழித்துக் கிடக்கிறது

உறக்கமற்ற விழிகள்.

தீர்ந்து போன

சக்கரை டப்பாவில்

மீதமிருக்கும்

கனவுகளை சேகரிக்கிறது

தவித்துப் போன மனது.

Continue Reading →

முகநூல்: தமிழினி கவிதைகளிரண்டு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

துளி – 02

கட்டளைகள் பறக்கின்றன.

காதோரம் பொருத்திய

சவுக்காரத்துண்டு

“ஹலோ ஹலோ

சொல்லுங்க ஒவர்”

வெலிக்கடைச் சுவர்களையும் கடந்து

விரிகிறது அவளது மனவெளி

Continue Reading →

எழுதுகோல் எடு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஆ வரைந்து மொழியறிந்த காலம்

பூ வரைந்து ரசித்ததொரு காலம்

பா வரைந்து திளைப்பதிக் காலம்.

ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.

எழுதுகோல் எடுத்திடு!எழுதுவோம் கவி.

பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி

கழுவிட வழிகள் பலவாய்க் குவி!

நழுவிடாதே நடுவோம் நற் கவி!

Continue Reading →

ஒரு தீர்மானம்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஒரு தீர்மானத்துடன்

உட்கார்ந்திருந்தேன்.

இன்று

எங்கு செல்வதில்லை..

எதுவும் படிப்பதில்லை..

யுத்தம்,மரணம்,

கொலை,வன்முறை

எது

நடந்தாலும்

தெரியாமலேயே

இருக்கட்டும்..

Continue Reading →

குடிகார அப்பாக்கள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

குடியும் குடித்தனமும்  செந் தமிழும் நாற்பழக்கம்

சில அப்பாக்களின்  மறையா விழுமியங்கள்

வாழ்நாள் முழுதும் சாலையோரம்

வரம் பெற்ற மனிதனாய்

கவலையற்று தூங்குகிறார்கள்

பல அப்பாக்கள்

இவர்களிடம் ஏன்? அப்பா என்றால்?

அகராதியில் இல்லாத செந்தமிழ் பிறந்திடும்

Continue Reading →

ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை 13.5.2015: பாதம் தொட்டு வணங்குவோம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!வாழ்வு பூத்துக் குலுங்கும்

பூஞ்சோலையாய் மணம்

வீச வேண்டுமா?

பூரிப்புடன் வாழ்வில்

நடை பயில வேண்டுமா?

அறிவு தந்து

உலகை காட்டிய ஆத்மாவை

அடி தொட்டு பாதம் வணங்குவோம்

ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.

Continue Reading →

மணிக்குள் நிமிடமாய் மறைந்தவன்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான்

மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான்

பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான்

அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்

Continue Reading →