கவிதை: எனக்குப் பேசத்தெரியும்

கவிதை:  எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
காக்காய் பிடிப்பது போலவும்
சோப்பு போடுவது போலவும்
ஜால்ரா தட்டுவது போலவும்
பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
என் நலன்
என் வீட்டு நலன்
என் நோட்டு நலன்
பற்றி மட்டுமே பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

Continue Reading →

கவிதை : உன் மனம் கல்லோ?

ஶ்ரீராம் விக்னேஷ்

பெண்  கண்ணை  மீன்  என்று,
பெருங்  கவியில்  எழுதிவைத்  தேன் !
உன்  கண்ணோ  தூண்டி  லதாய்,
உடன்  என்னைக்  கவ்விய  தேன் ?

சிலைபோல்  நீ  அழகு  என்று,
சிறப்பாய்  நான்  உவமையிட்  டேன் !
சிலைபோல்  நீ  கல்லு  என்று,
சிரத்தினை  ஏன்  முட்டவைத்  தாய் ?

Continue Reading →

ஞானமே!!!

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -

“ஞானநிலையோடே
அது சிரிக்கின்றது…
பிரிப்படாத
வண்ணங்களில்
புழுதியேறி
அகலத்திறந்த
அதன் வாய்க்குள்
சில கொசுக்களும்
ஈக்களும்
ரீங்காரத்தோடு……
ஈக்கியாய்
உலரும்
பொட்டல்
வெயிலிலும்
அதன் சிரிப்பில்
சிறிதும்
மாற்றமில்லை…

புதிய தலைமுறையை உருவாக்குவோம்

- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -

புதிய தலைமுறையை உருவாக்குவோம்
ஓ இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
புது வருடம் பிறக்கிறது
புது புது சிந்தனைகளோடு
போராட்ட குணங்களோடு
சமூக விஞ்ஞான உணர்வுகளோடு
புது உலகத்தைப் படைத்திடுவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

Continue Reading →

காரிகைக் குட்டி கவிதைகள்!

காரிகைக் குட்டி

காலக் கடிதக் குறிப்புகளின் பயணம்.

சில கடிதங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முன் வந்திருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த
அதே முகவரி.

கடிதம் அடைய வேண்டிய முகவரி மாறாதிருந்தாலும்
அதனை அனுப்பும்
நபர்களின் முகவரிகள் நிச்சயமாய்
வேறாகவே இருந்தது.

அதே போல் மற்றொன்றாக ஒரு தகவல்
அக்கடிதங்கள் வெவ்வேறு காலத்தில்
அதே முகவரியில் வாழ்ந்த வேறு வேறு நபர்களுக்கானது.
எனில், அது வேறு வேறு காலத்தில் எழுதப்பட்டவைகளே.
அவ்வெழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில்
அந்நபரின் குறிப்புகளை முதலில் கண்டடைதல் வேண்டும்.
பழங்கால எகிப்திய நாகரீக ‘கியூனிபார்ம்’ எழுத்துக்களையும்,
சிதைந்த ‘சிந்து எழுத்து’ முறைகளுமாய் இருக்குமெனில்
நைல்நதியின் பாதையோடும்,
தோலால் வரையப்பட்ட மேப்பில் குறிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
ஈரானிய ‘மெசபடோமிய’ நாகரீகத்திற்குள் நுழைந்து
அந்நபர் குறித்த தகவலை நாம் திரட்டியாக வேண்டும்.

இக்கடிதத்தையும் பிரிக்க வேண்டாமென்ற குறிப்புகளோடு
எனது மேசையின் மேல் உறைகிழிக்கபடாமல்
வெறித்தப் பார்த்தன அவ்வெழுத்துகள்…
பெருநாட்டு நீண்ட அலகு பறவையாய்.

* கியூனிபார்ம், சிந்து எழுத்து – இரண்டும் பழங்கால சித்திர எழுத்து முறைகளுள் ஒன்று.

Continue Reading →

முனைவர்.சி.திருவேங்கடம் கவிதைகள்!

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

தள்ளாட்டம் …

உள்ளத்தின்
ரணம் ஆற
அருமருந்தென
கூடா நண்பனின்
பரிந்துரைப்பை
செவிமடுத்து
கேட்டு
கண்ணாடிக்
கோப்பைக்குள்
திரவத்தை
ஊற்றிக் கொஞ்சம்
உறிஞ்சிக் குடித்தேன்.

Continue Reading →

கவிஞர் பூராமின் கவித்துளிகள்!!

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1
வந்து விழுந்த
சூரியக் குழந்தை
அழுது ஆர்ப்பாட்டம் செய்தது,
கண் குளத்தின் தண்ணீர்
ஊற்று பொங்கி வழிய
இதய வானில் அன்பு
ஆவேசமானது
எதையாவது கொடுத்து
அழுகையை நிறுத்திவிட
முயற்சிகள் எல்லாம்
அழுகையின் வீரியத்தில்
அடங்கிப் போயின.
கையறு நிலையோடு நின்ற
என்னைக் கள்ளப் பார்வை
பார்த்து மீண்டும் மீண்டும்
அழுகையின் உச்சத்திற்குச் சென்றது.
உடல் சோர்ந்து மனம் அயர்ந்து
அமைதியின் மடியில் அகப்பட்டு
கண்ணை முடினேன்
காதுகளுக்கு அழும் ஓசையின்
சுவடுகூட தென்படவில்லை
ஆழ்ந்த பெருமூச்சோடு கண் திறக்க
மன மற்று இருக்கும் வேளையில்
பிரகாசமான அகஒளியில் நான்.
வெறுமையின் நிறைகுடத்தில்
ததும்பி வழிகிறேன்.

Continue Reading →

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!

லதா ராமகிருஷ்ணன்

1. ஆறாத்துயர்

ஒரு நம்பிக்கையில் வெளியே வருபவளிடம்
’இருட்டிய பின் ஏன் வருகிறாய்’ என்ற கேள்வி
பகலிலும் அவள் தனது நம்பிக்கையைப் பறிகொடுக்கும்படி
செய்துவிடுகிறது.

பயத்தில் பதுங்கிக்கொள்ள குகை அல்லது பதுங்குகுழி
தார்ச்சாலையில் இருப்பதில்லை.

இருந்தாலும் அங்கிருந்து கைபேசியில் யாரிடமேனும்
உதவிகோர ‘சிக்னல் கிடைக்காது.

’பலாத்காரம் தவிர்க்கப்படமுடியாதபோது
படுத்து அனுபவி’ என்று ‘quotable quote’
பகன்றவனை
நெருப்பில் புரட்டியெடுக்கவேண்டும்.

Continue Reading →

ஓயாமல் எரிகிறது…..

“இரவு முழுக்கவீட்டின்முன்னறையில்விளக்கெரியகுறுக்கும் நெடுக்குமாகஉலாத்திக்கொண்டிருந்தஅப்பாவின்கோபம் குளிர்ந்திருந்தது…..அதே அறையில்கிடத்தி வைக்கப்பட்டிருந்தஅப்பாவின்உடலும்குளர்ந்திருக்கஓயாமல்எரிந்து கொண்டேஇருக்கின்றதுஅவ்வறையின்குண்டு பல்பும்அக்கா எழுதிச் சென்றகடிதமும்……” suniljogheema@gmail.com

Continue Reading →

மனக்குறள்:28 , 29 & 30

மனக்குறள் 9 & 10

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி

வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !

ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !

இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !

சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !

எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !

முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !

கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !

போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !

ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !

மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !

Continue Reading →